Posts

Showing posts from March, 2015

117. இருமலு ரோக

ராகம் : அசாவேரி மிஸ்ர சாபு (3½) 2 + 1½ இருமலு ரோக முயலகன் வாத மெரிகுண நாசி விடமேநீ ரிழிவுவி டாத தலைவலி சோகை யெழுகள மாலை யிவையோடே பெருவயி றீளை எரிகுலை சூலை பெருவலி வேறு முளநோய்கள் பிறவிகள் தோறு மெனைநலி யாத படியுன தாள்கள் அருள்வாயே

116. இருப்பவல் திருப்புகழ்

ராகம் : வசந்தா ஆதி கண்ட நடை(20) இருப்பவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர் இடுக்கினை யறுத்திடு மெனவோதும் இசைத்தமிழ் நடத்தமி ழெனத்துறை விருப்புட னிலக்கண இலக்கிய கவிநாலுந் தரிப்பவ ருரைப்பவர் நினைப்பவர் மிகச்சக தலத்தினில் நவிற்றுத லறியாதே தனத்தினில் முகத்தினில் மனத்தினி லுருக்கிடு சமர்த்திகள் மயக்கினில் விழலாமோ

115. அரகர சிவன்

ராகம் : நாதநாமக்ரியா / ஷண்முகப்ரியா தாளம் : ஆதி அரகர சிவனரி அயனிவர் பரவிமு னறுமுக சரவண பவனேயென் றநுதின மொழிதர அசுரர்கள் கெடஅயில் அனலென எழவிடு மதிவீரா பரிபுர கமலம தடியிணை யடியவர் உளமதி லுறவருள் முருகேசா பகவதி வரைமகள் உமைதர வருகுக பரமன திருசெவி களிகூர

114. அமைவுற்றடைய

ராகம் : காபி ஆதி திச்ர நடை (12) அமைவுற் றடையப் பசியுற் றவருக் கமுதைப் பகிர்தற் கிசையாதே அடையப் பொருள்கைக் கிளமைக் கெனவைத் தருள்தப் பிமதத் தயராதே தமர்சுற் றியழப் பறைகொட் டியிடச் சமனெட் டுயிரைக் கொடுபோகுஞ் சரிரத் தினைநிற் குமெனக் கருதித் தளர்வுற் றொழியக் கடவேனோ

113. ஓருருவாகிய

Image
ராகம் : தர்பாரி கானடா தாளம் : ஆதி (எடுப்பு 3/4 இடம்) ஓருரு வாகிய தாரகப் பிரமத் தொருவகைத் தோற்றத் திருமர பெய்தி ஒன்றா யொன்றி யிருவரிற் றோன்றி மூவா தாயினை இருபிறப் பாளரி னொருவ னாயினை ஓராச் செய்கையி னிருமையின் முன்னாள் நான்முகன் குடுமி இமைப்பினிற் பெயர்த்து மூவரும் போந்து இருதாள் வேண்ட ஒருசிறை விடுத்தனை ஒருநொடி யதனில் இருசிறை மயிலின் முந்நீ ருடுத்த நானிலம் அஞ்ச நீவலஞ் செய்தனை நால்வகை மருப்பின் மும்மதத் திருசெவி ஒருகைப் பொருப்பன் மகளை வேட்டனை ஒருவகை வடிவினி லிருவகைத் தாகிய மும்மதன் தனக்கு மூத்தோ னாகி நால்வாய் முகத்தோன் ஐந்துகைக் கடவுள் அறுகு சூடிக் கிளையோ னாயினை ஐந்தெழுத் ததனில் நான்மறை யுணர்த்து முக்கட் சுடரினை இருவினை மருந்துக் கொருகுரு வாயினை ஒருநாள் உமையிரு முலைப்பா லருந்தி முத்தமிழ் விரகன் நாற்கவி ராஜன் ஐம்புலக் கிழவன் அறுமுக னிவனென எழில்தரு மழகுடன் கழுமலத் துதித்தனை அறுமீன் பயந்தனை ஐந்தரு வேந்தன் நான்மறைத் தோற்றத்து முத்தலைச் செஞ்சூட் டன்றி லங்கிரி யிருபிள வாக ஒருவேல் விடுத்தனை காவிரி வடகரை மேவிய குருகிரி இருந்த ஆறெழுத் தந்

112. மகரகேதனத்தன்

ராகம் : அமிர்தவர்ஷிணி திச்ர துருவம் (16½) திச்ர நடை மகர கேத னத்த னுருவி லானெ டுத்து மதுர நாணி யிட்டு நெறிசேர்வார் மலைய வேவ ளைத்த சிலையி னூடொ ளித்த வலிய சாய கக்கண் மடமாதர் இகழ வாச முற்ற தலையெ லாம்வெ ளுத்து இளமை போயொ ளித்து விடுமாறு இடைவி டாதெ டுத்த பிறவி வேர றுத்து னினிய தாள ளிப்ப தொருநாளே

111. பாதிமதி நதி

ராகம் : காபி தாளம் : மிஸ்ர சாபு (1½ + 2) பாதி மதிநதி போது மணிசடை நாத ரருளிய குமரேசா பாகு கனிமொழி மாது குறமகள் பாதம் வருடிய மணவாளா காது மொருவிழி காக முறஅருள் மாய னரிதிரு மருகோனே கால னெனையணு காம லுனதிரு காலில் வழிபட அருள்வாயே

110. நிறைமதி

ராகம் : ஹம்சானந்தி தாளம் : ஆதி நிறைமதி முகமெனு மொளியாலே நெறிவிழி கணையெனு நிகராலே உறவுகொள் மடவர்க ளுறவாமோ உனதிரு வடிவியினி யருள்வாயே

109. நாவேறு பாம ணத்த

ராகம் : யதுகுல காம்போதி அங்க தாளம் 2½ + 1½ + 1½ நாவேறு பாம ணத்த பாதார மேநி னைத்து நாலாறு நாலு பற்று வகையான நாலாரு மாக மத்தி னூலாய ஞான முத்தி நாடோறு நானு ரைத்த நெறியாக நீவேறெ னாதி ருக்க நான்வேறெ னாதி ருக்க நேராக வாழ்வ தற்கு னருள்கூர நீடார்ஷ டாத ரத்தின் மீதேப ராப ரத்தை நீகாணெ னாவ னைச்சொ லருள்வாயே

108. நாசர்தம்

ராகம் : காபி அங்க தாளம் (13½) (2½ + 2½ + 2½ + 1½ + 1½ + 3) நாசர்தங் கடையதனில் விரவிநான் மெத்த நொந்து தடுமாறி ஞானமுங் கெடஅடைய வழுவியா ழத்த ழுந்தி மெலியாதே மாசகந் தொழுமுனது புகழினோர் சொற்ப கர்ந்து சுகமேவி மாமணங் கமழுமிரு கமலபா தத்தை நின்று பணிவேனோ

107. தெருவினில்

Image
ராகம் : ஆனந்தபைரவி தாளம் : சதுஸ்ர த்ருவம் தெருவினில் நடவா மடவார் திரண்டொ றுக்கும் வசையாலே தினகர னெனவே லையிலே சிவந்து திக்கும் மதியாலே பொருசிலை வளையா இளையா மதன்தொ டுக்குங் கணையாலே புளகித முலையா ளலையா மனஞ் சலித்தும் விடலாமோ

106. செகமாயை

ராகம் : சுநாத வினோதினி தாளம் : ஆதி செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த திருமாது கெர்ப்ப முடலூறித் தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில் திரமாய ளித்த பொருளாகி மகவாவி னுச்சி விழியாந நத்தில் மலைநேர்பு யத்தி லுறவாடி மடிமீத டுத்து விளையாடி நித்த மணிவாயின் முத்தி தரவேணும்

105. சுத்திய நரப்புடன்

ராகம் : மாயாமாளவ கௌளை தாளம் : சதுஸ்ர த்ருவம் சுத்தியந ரப்புடனெ லுப்புறுத சைக்குடலொ டப்புடனி ணச்சளிவ லிப்புடனி ரத்தகுகை சுக்கிலம்வி ளைப்புழுவொ டக்கையும ழுக்குமயிர் சங்குமூளை துக்கம்விளை வித்தபிணை யற்கறைமு னைப்பெருகு குட்டமொடு விப்புருதி புற்றெழுதல் முட்டுவலி துச்சிபிள வைப்பொருமல் பித்தமொடு றக்கமிக வங்கமூடே எத்தனைநி னைப்பையும்வி ளைப்பையும யக்கமுற லெத்தனைச லிப்பொடுக லிப்பையுமி டற்பெருமை எத்தனைக சத்தையும லத்தையும டைத்தகுடில் பஞ்சபூதம் எத்தனைகு லுக்கையுமி னுக்கையும னக்கவலை யெத்தனைக வட்டையுந டக்கையுமு யிர்க்குழுமல் எத்தனைபி றப்பையுமி றப்பையுமெ டுத்துலகில் மங்குவேனோ

104. சரணகமலாலயம்

ராகம் : கல்யாணி தாளம் : 2½ + 1½ + 1½ சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில் தவமுறைதி யானம் வைக்க அறியாத சடகசட மூட மட்டி பவவினையி லேச னித்த தமியன்மிடி யால்ம யக்க முறுவேனோ கருணைபுரி யாதி ருப்ப தெனகுறையி வேளை செப்பு கயிலைமலை நாதர் பெற்ற குமரோனே கடகபுய மீதி ரத்ந மணியணிபொன் மாலே செச்சை கமழுமண மார்க டப்ப மணிவோனே தருணமிதை யாமி குத்த கனமதுறு நீள்ச வுக்ய சகலசெல்வ யோக மிக்க பெருவாழ்வு தகைமைசிவ ஞான முத்தி பரகதியு நீகொ டுத்து தவிபுரிய வேணு நெய்த்த வடிவேலா

103. குமர குருபர

ராகம் : பிலஹரி தாளம் : 2 + 1½ (3) குமர குருபர முருக சரவண குகசண் முககரி பிறகான குழக சிவசுத சிவய நமவென குரவ னருள்குரு மணியேயென் றமுத இமையவர் திமிர்த மிடுகட லதென அநுதின முனையோதும் அமலை அடியவர் கொடிய வினைகொடு மபய மிடுகுர லறியாயோ

102. காமியத்து அழுந்தி

காமியத்து அழுந்தி ராகம் : பீம்பளாஸ் தாளம் : ஆதி காமியத் தழுந்தி யிளையாதே காலர்கைப் படிந்து மடியாதே ஓமெழுத்தி லன்பு மிகவூறி ஓவியத்தி லந்த மருள்வாயே தூமமெய்க் கணிந்த சுகலீலா சூரனைக் கடிந்த கதிர்வேலா ஏமவெற் புயர்ந்த மயில்வீரா ஏரகத் தமர்ந்த பெருமாளே.

101. கறைபடும் உடம்பு

ராகம் : யமுனா கல்யாணி தாளம் : 2½ + 1½ +2 கறைபடுமு டம்பி ராதெனக் கருதுதலொ ழிந்து வாயுவைக் கருமவச னங்க ளால்மறித் தனலூதிக் கவலைபடு கின்ற யோககற் பனைமருவு சிந்தை போய்விடக் கலகமிடு மஞ்சும் வேரறச் செயல்மாளக் குறைவறநி றைந்த மோனநிர்க் குணமதுபொ ருந்தி வீடுறக் குருமலைவி ளங்கு ஞானசற் குருநாதா குமரசர ணென்று கூதளப் புதுமலர்சொ ரிந்து கோமளப் பதயுகள புண்ட ரீகமுற் றுணர்வேனோ

The Story of Nakkeerar and Thirumurugatruppadai

Nakkeerar lived in the 9th century AD during the Sangam period. His devotion for Lord shiva and Murugan are depicted in ThiruviLaiyAdal purANam and are enacted as a part of the Meenakshi Sundareswarer Temple festival celebrations at Madurai. As related in Tiruvilaiyadal Puranam, the Pandiyan king was strolling in the royal garden. As he smells the flowers, he wondered whether women had naturally fragrant hair or whether the fragrance came from the flowers. He announces a prize of 1000 gold coins for anyone who could resolve his doubt. A poor poet named Tharumi prays to Lord Shiva to make him get the reward. The Lord gives him a poem and asks him to take it to the King. கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோ பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல் செறியெயிற் றரிவை கூந்தலின் நறியவும் உளவோ நீயறியும் பூவே.

2. தேவேந்திர சங்க வகுப்பு

தரணியில் அரணிய முரண் இரணியன் உடல்தனை நக நுதிகொடு சாடோங்கு நெடுங்கிரி ஓடேந்து பயங்கரி தமருக பரிபுர ஒலிகொடு நடநவில் சரணிய சதுர்மறை தாதாம்புய மந்திர வேதாந்த பரம்பரை சரிவளை விரிசடை எரிபுரை வடிவினள் சததள முகுளித தாமாங்குசம் என்றிரு தாளாந்தர அம்பிகை தருபதி சுரரொடு சருவிய அசுரர்கள் தடமணி முடிபொடி தானாம்படி செங்கையில் வாள்வாங்கிய சங்கரி இரண கிரண மடமயில் ம்ருகமத புளகித இளமுலை இள நீர் தாங்கி நுடங்கிய நூல்போன்ற மருங்கினள் இறுகிய சிறுபிறை எயிறுடை யமபடர் எனதுயிர் கொளவரின் யான் ஏங்குதல் கண்டெதிர் தான் ஏன்று கொளும் குயில்

Sevagan Vaguppu

Image
இருபிறை எயிறு நிலவெழ உடலம் இருள் படு சொருபம் உடைக் கோ விடவே இறுகிய கயிறு பட வினை முடுகி எமபடர் பிடரி பிடித்தே கொடு போய் அருமறை முறையின் முறை முறை கருதி அதரிடை வெருவ ஒறுத்தால் வகையால் அறிவொடு மதுர மொழியது குழறி அலமரு பொழுதில் அழைத்தால் வருவாய் ஒருபது சிரமும் இருபது கரமும் விழ ஒரு பகழி தொடுத்தோன் மருகா உரமது பெரிய திரிபுரம் எரிய உயர்கன கிரியை வளைத்தோர் புதல்வா மருவளர் அடவி வனிதையர் பரவ மரகத இதணில் இருப்பாள் கணவா வளைகடல் கதற நிசிசரர் மடிய மலையொடு பொருத முழுச்சே வகனே.