Posts

Showing posts from November, 2015

187. பாட்டிலுருகிலை

ராகம் : சங்கரானந்தப்ரியா தாளம் : மிஸ்ரசாபு (2 + 1½) பாட்டி லுருகிலை கேட்டு முருகிலை கூற்று வருவழி பார்த்து முருகிலை பாட்டை யநுதின மேற்று மறிகிலை தினமானம் பாப்ப ணியனருள் வீட்டை விழைகிலை நாக்கி னுனிகொடு ஏத்த அறிகிலை பாழ்த்த பிறவியி லேற்ற மனதுநல் வழிபோக மாட்ட மெனுகிறை கூட்டை விடுகிலை யேட்டின் விதிவழி யோட்ட மறிகிலை பார்த்து மினியொரு வார்த்தை அறைகுவ னிதுகேளாய் வாக்கு முனதுள நோக்கு மருளுவ னேத்த புகழடி யார்க்கு மெளியனை வாழ்த்த இருவினை நீக்கு முருகனை மருவாயோ

186. சாந்தமில்

ராகம் : ஷண்முகப்ரியா தாளம் : சங்கீர்ண சாபு (4½) 2 + 1½ + 1 சாந்தமில் மோகவெரி காந்திய வாவனில மூண்டவி யாதசம யவிரோத சாங்கலை வாரிதியை நீந்தவொ ணாதுலகர் தாந்துணை யாவரென மடவார்மேல் ஏந்திள வார்முளரி சாந்தணி மார்பினொடு தோய்ந்துரு காவறிவு தடுமாறி ஏங்கிட ஆருயிரை வாங்கிய காலன்வசம் யான்தனி போய்விடுவ தியல்போதான்

185. சரவண பவநிதி

ராகம் : பிருந்தாவன சாரங்கா தாளம் : ஆதி சரவண பவநிதி யறுமுக குருபர சரவண பவநிதி யறுமுக குருபர சரவண பவநிதி யறுமுக குருபர எனவோதித் தமிழினி லுருகிய வடியவ ரிடமுறு சனனம ரணமதை யொழிவுற சிவமுற தருபிணி துளவர மெமதுயிர் சுகமுற வருள்வாயே கருணைய விழிபொழி யொருதனி முதலென வருகரி திருமுகர் துணைகொளு மிளையவ கவிதைய முதமொழி தருபவ ருயிர்பெற வருள்நேயா கடலுல கினில்வரு முயிர்படு மவதிகள் கலகமி னையதுள கழியவும் நிலைபெற கதியுமு னதுதிரு வடிநிழல் தருவது மொருநாளே

184. கறுத்ததலை

Image
ராகம் : முகாரி அங்க தாளம் (6½) 3 + 2 + 1½ கறுத்ததலை வெளிறு மிகுந்து மதர்த்த இணை விழிகள் குழிந்து கதுப்பிலுறு தசைகள் வறண்டு செவிதோலாய்க் கழுத்தடியு மடைய வளைந்து கனத்தநெடு முதுகு குனிந்து கதுப்புறுப லடைய விழுந்து தடுநீர்சோர உறக்கம்வரு மளவி லெலும்பு குலுக்கிவிடு மிருமல் தொடங்கி உரத்தகன குரலு நெரிந்து தடிகாலாய் உரத்தநடை தளரு முடம்பு பழுத்திடுமுன் மிகவும் விரும்பி உனக்கடிமை படுமவர் தொண்டு புரிவேனோ

183. கரிவாம்பரி (வரிசேர்ந்திடு)

ராகம் : சக்ரவாஹம் திஸ்ர த்ரிபுட கரிவாம்பரி தேர்திரள் சேனையு முடனாந்துரி யோதன னாதிகள் களமாண்டிட வேயொரு பாரத மதிலேகிக் கனபாண்டவர் தேர்தனி லேயெழு பரிதூண்டிய சாரதி யாகிய கதிரோங்கிய நேமிய னாமரி ரகுராமன் திரைநீண்டிரை வாரியும் வாலியும் நெடிதோங்கும ராமர மேழொடு தெசமாஞ்சிர ராவண னார்முடி பொடியாகச் சிலைவாங்கிய நாரண னார்மரு மகனாங்குக னேபொழில் சூழ்தரு திருவேங்கட மாமலை மேவிய பெருமாளே. எனதாந்தன தானவை போயற மலமாங்கடு மோகவி காரமு மிவைநீங்கிட வேயிரு தாளினை யருள்வாயே

182. ஒருபதும் இருபதும்

ராகம் : பிலஹரி தாளம் : ஆதி ஒருபது மிருபது மறுபது முடனறு முணர்வுற இருபத முளநாடி உருகிட முழுமதி தழலென வொளிதிகழ் வெளியொடு வொளிபெற விரவாதே தெருவினில் மரமென எவரொடு முரைசெய்து திரிதொழி லவமது புரியாதே திருமகள் மருவிய திரள்புய அறுமுக தெரிசனை பெறஅருள் புரிவாயே

181. புற்புதம்

ராகம் : நவரச கன்னடா தாளம் : ஆதி புற்புதமெ னாம அற்பநிலை யாத பொய்க்குடில்கு லாவு மனையாளும் புத்திரரும் வீடு மித்திரரு மான புத்திசலி யாத பெருவாழ்வு நிற்பதொரு கோடி கற்பமென மாய நிட்டையுடன் வாழு மடியேன்யான் நித்தநின தாளில் வைத்ததொரு காதல் நிற்கும்வகை யோத நினைவாயே

180. பத்தர் கணப்ரிய

ராகம் : பீம்ப்ளாஸ் தாளம் : ஆதி பத்தர்க ணப்ரிய நிர்த்தந டித்திடு பட்சிந டத்திய குகபூர்வ பச்சிம தட்சிண வுத்தர திக்குள பத்தர்க ளற்புத மெனவோதுஞ் சித்ரக வித்துவ சத்தமி குத்ததி ருப்புக ழைச்சிறி தடியேனுஞ் செப்பென வைத்துல கிற்பர வத்தெரி சித்தவ நுக்ரக மறவேனே கத்திய தத்தைக ளைத்துவி ழத்திரி கற்கவ ணிட்டெறி தினைகாவல் கற்றகு றத்திநி றத்தக ழுத்தடி கட்டிய ணைத்தப னிருதோளா சத்தியை யொக்கஇ டத்தினில் வைத்தத கப்பனு மெச்சிட மறைநூலின் தத்துவ தற்பர முற்றுமு ணர்த்திய சர்ப்பகி ரிச்சுரர் பெருமாளே.

179. கொடிய மறலியும்

ராகம் : சந்த்ரகௌன்ஸ் அங்கதாளம் (7½) 1½ + 2 + 2 + 2 கொடிய மறலியு மவனது கடகமு மடிய வொருதின மிருபதம் வழிபடு குதலை யடியவ னினதருள் கொடுபொரு மமர்காண குறவர் மகள்புணர் புயகிரி சமுகமு மறுமு கமும்வெகு நயனமும் ரவியுமிழ் கொடியு மகிலமும் வெளிபட இருதிசை யிருநாலும் படியு நெடியன எழுபுண ரியுமுது திகிரி திகிரியும் வருகென வருதகு பவுரி வருமொரு மரகத துரகத மிசையேறிப் பழய அடியவ ருடனிமை யவர்கண மிருபு டையுமிகு தமிழ்கொடு மறைகொடு பரவ வருமதி லருணையி லொருவிசை வரவேணும்

178. காலனிடத்து

ராகம் : சங்கராபரணம் தாளம் : திச்ர ஏகம் (3) காலனிடத் தணுகாதே காசினியிற் பிறவாதே சீலஅகத் தியஞான தேனமுதைத் தருவாயே மாலயனுக் கரியானே மாதவரைப் பிரியானே நாலுமறைப் பொருளானே நாககிரிப் பெருமாளே.

177. அன்பாக வந்து

ராகம் : ஆஹிரி தாளம் : ஆதி அன்பாக வந்து உன்றாள் பணிந்து ஐம்பூத மொன்ற நினையாமல் அன்பால் மிகுந்து நஞ்சாரு கண்க ளம்போரு கங்கள் முலைதானும் கொந்தே மிகுந்து வண்டாடி நின்று கொண்டாடு கின்ற குழலாரைக் கொண்டே நினைந்து மன்பேது மண்டி குன்றா மலைந்து அலைவேனோ

176. வாசித்துக் காணொணாதது

ராகம் : பூர்வி கல்யாணி தாளம் : அங்க தாளம் (3+ 1½ +2) வாசித்துக் காணொ ணாதது பூசித்துக் கூடொ ணாதது வாய்விட்டுப் பேசொ ணாதது நெஞ்சினாலே மாசர்க்குத் தோணொ ணாதது நேசர்க்குப் பேரொ ணாதது மாயைக்குச் சூழொ ணாதது விந்துநாத ஓசைக்குத் தூர மானது மாகத்துக் கீற தானது லோகத்துக் காதி யானது கண்டுநாயேன் யோகத்தைச் சேரு மாறுமெய்ஞ் ஞானத்தைப் போதி யாயினி யூனத்தைப் போடி டாதும யங்கலாமோ

175. புவனத்தொரு

ராகம் : பெஹாக் தாளம் : ஆதி புவனத் தொருபொற் றொடிசிற் றுதரக் கருவிற் பவமுற் றுவிதிப் படியிற் புணர்துக் கசுகப் பயில்வுற் றுமரித் திடிலாவி புரியட் டகமிட் டதுகட் டியிறுக் கடிகுத் தெனஅச் சம்விளைத் தலறப் புரள்வித் துவருத் திமணற் சொரிவித் தனலூடே தவனப் படவிட் டுயிர்செக் கிலரைத் தணிபற் களுதிர்த் தெரிசெப் புருவைத் தழுவப் பணிமுட் களில்கட் டியிசித் திடவாய்கண் சலனப் படஎற் றியிறைச் சியறுத் தயில்வித் துமுரித் துநெரித் துளையத் தளையிட் டுவருத் தும்யமப் ரகரத் துயர்தீராய்

174. பகலிரவினில் தடுமாறா

ராகம் : மோகனம் தாளம் : திச்ர ஏகம் (3) பகலிரவினிற் றடுமாறா பதிகுருவெனத் தெளிபோத ரகசியமுரைத் தநுபூதி ரதநிலைதனைத் தருவாயே இகபரமதற் கிறையோனே இயலிசையின்முத் தமிழோனே சகசிரகிரிப் பதிவேளே சரவணபவப் பெருமாளே.

கந்தர் அநுபூதி 46-51

Image
Learn The Song ராகம் : சுருட்டி எந்தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ சிந்தாகுலமானவை தீர்த்து எனை ஆள் கந்தா! கதிர்வேலவனே! உமையாள் மைந்தா! குமரா! மறைநாயகனே! 46 enthAyum enakku aruL thandhaiyum nee! sindhAkulamAnavai theerththu enai AL kandhA! kadhirvElavanE! umaiyAL maindhA! kumarA! maRainAyaganE! 46 You are my mother and my merciful father. Wipe out all my turmoils and take possession of me. O Lord Skanda! O Lord with the luminous Vel! O Son of Uma Devi! O Kumara! O Lord of the Vedas!

கந்தர் அநுபூதி 41-45

Image
Learn The Song ராகம் : மோகனம் சாகாது, எனையே சரணங் களிலே கா கா, நமனார் கலகம் செயும் நாள் வாகா, முருகா, மயில் வாகனனே யோகா, சிவ ஞான உபதேசிகனே. 41 sAgAdhu enaiyE saraNangkaLilE kAgA namanAr kalagam seyum nAL vAgA murugA mayil vAganaNE yOgA siva njAna ubadhEsiganE! 41

கந்தர் அநுபூதி 36-40

Image
Learn The Song ராகம் : காபி நாதா குமரா நம என்று அரனார் ஓதாய் என ஓதியதெப் பொருள்தான் வேதா முதல் விண்ணவர் சூடும் மலர்ப் பாதா குறமின் பதசே கரனே! 36 nAdhA kumarA nama endRu aranAr OdhAi ena Odhiyadhu epporUl thAn? vEdhA mudhal viNNavar sUdumalarp pAdhA kuRamin pAdhasEgaranE! 36

கந்தர் அநுபூதி 31-35

Image
Learn The Song ராகம் : சிந்துபைரவி பாழ்வாழ்வு எனும் இப் படுமாயையிலே வீழ்வாய் என என்னை விதித்தனையே தாழ்வானவை செய்தன தாம் உளவோ? வாழ்வாய் இனி நீ மயில் வாகனனே. 31 pAzhvAzhvu enum ippadumAyaiyilE veezhvAi ena ennai vidhiththanaiyE thAzhvAnavai seidhavaithAm uLavO vAzhvAi ini nee mayilvAgananE! 31

கந்தர் அநுபூதி 26-30

Image
Learn The Song ராகம் : ஹம்சானந்தி ஆதாரம் இலேன் அருளைப் பெறவே நீதான் ஒரு சற்று நினைந்திலையே வேதாகம ஞான விநோதமநோ தீதா சுரலோக சிகாமணியே! 26 AdhAram ilEn aruLaip peRavE needhAn oru satRu ninaindhilaiyE vEdhAgama njAna vinOdha manO theedhA suralOga sigAmaNiyE! 26 I have no basis to receive Your grace (I have no support other than You) and You haven't thought favorably about me for a moment! Oh Crest Jewel of the celestial world! You are the personification of spiritual wisdom that is the essence of vedas and agamas. You are beyond the comprehension of the mind.

கந்தர் அநுபூதி 21-25

Image
Learn The Song ராகம் : பாகேஸ்வரி கருதா மறவா நெறிகாண, எனக்கு இருதாள் வனசம் தர என்று இசைவாய் வரதா, முருகா, மயில் வாகனனே விரதா, சுர சூர விபாடணனே. 21 arudhA maRavA neRikANa enakku iruthAL vanasam thara endRu isaivAi varadhA murugA mayilvAgananE viradhA sura vibAdaNanE! 21 When will you graciously grant Your twin feet so that I can attain the nirvikalpa state that transcends memory and forgetfulness? You liberally grant all the boons Your devotees seek; Your vehicle is the peacock; You slayed the obnoxious demon Soorapanman! (Nirvikalpa refers to a state in which there is no differnce between one's own spirit and the divine essence. It means being totally absorbed in the self without a distinct and separate consciousness of the knower, the known, and the knowing).

கந்தர் அநுபூதி 16-20

Image
Learn From Guruji ராகம் : கேதாரம் பேராசை எனும் பிணியில் பிணிபட்டு ஓரா வினையேன் உழலத் தகுமோ? வீரா, முது சூர் பட வேல் எறியும் சூரா, சுர லோக துரந்தரனே. 16 pEraasai enum piNiyil piNipattu Oraa vinaiyEn uzhala thagumO veeraa muthusoor padavEl eRiyum sooraa sura lOka thutanDaranE 16 Should I get muddled in inappropriate acts because of greed, which makes me unable to discriminate between what is good and what is bad? You are gallant; You are the protector of the celestial world who hurled the lance at the ancient demon Soorapanman! ஓரா வினையேன் ( Oraa vinaiyEn ) : incapable of discerning between right and wrong acts;

கந்தர் அநுபூதி 11-15

Image
Learn From Guruji ராகம் : ஆரபி கூகா என என் கிளை கூடி அழப் போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா நாகாசல வேலவ நாலு கவித் தியாகா சுரலோக சிகாமணியே. 11 kookaa ena en kiLai koodi azha, pOgaa vagai mey poruL pEsiyavaa naagaasala vElava naalu kavith thyaaga a suralOka sikhaamaNiyE 11 Oh, the vel-wielding lord of Tiruchengodu (Nagaachala Velava), You are the Supreme and Eternal Substance who preached me Real Knowledge to help me escape the misery of dying, with wailing kinsmen gathered around me. You taught me how to compose and sing Your Sacred praise in four kinds of Tamil verses (known as aasu, mathuram, chiththiram and viththaaram). (Or, You are the great Lord who graciously grants the devotees the ability to sing of Your Sacred praise by composing four kinds of [Tamil] verses [known as aacu, mathuram, ciththiram and viththaaram]. You are the Foremost Gem of the celestial world!) You are the Foremost Gem of the celestial world (suraloka sikhamaNi)!

கந்தர் அநுபூதி 6-10

Image
Learn From Guruji ராகம் : கௌளை திணியான மனோ சிலை மீது, உனதாள் அணியார், அரவிந்தம் அரும்பு மதோ? பணியா? ..என, வள்ளி பதம் பணியும் தணியா அதிமோக தயா பரனே. 6 thiNiyaana manO chilai meeth- una thaaL, aNiyaar aravinDa- marumbu mathO paNiyaa ena vaLLi paDam paNiyum, thaNiyaa athi mOha Dayaa paranE 6 Would thy beautiful lotus-like feet bloom in my heart that is hard as a stone? You have so much unquenchable love for Valli that you show reverence to her feet and ask her, "What service can I do for you?". (meaning, with so much compassion that You display, is it any wonder that that Your lotus feet has gracefully bloomed on my hard heart.) கல் போன்று இறுகிய என்னுடைய நெஞ்சத்தில், உனது அழகிய தாமரை போன்ற தாள் மலருமோ! (மலர்வதற்கு அருள் புரிவாயாக) ‘நான் என்ன பணி செய்ய வேண்டும்’ என்று கேட்டு, வள்ளியின் பாதங்களைப் பணியும், மற்றும் வள்ளி மீது தணியாத அன்பு கொண்ட எல்லையற்ற பரிவின் உறைவிடமுமான பெருமானே! கெடுவாய் மனனே, கதி கேள், கரவாது இடுவாய், வடிவேல் இறைதாள் நினைவாய்

கந்தர் அநுபூதி 1-5

Image
கந்தர் அநுபூதி பத்தாம் திருமுறை திருமந்திரம் நூலுக்கு ஒப்பாக கருதப்படுகிறது. இடையன் உடலுக்குள் திருமூலர் புகுந்து திருமந்திரம் சொன்னது போல அருணகிரிநாதர் கிளி உடலுக்குள் இருந்துகொண்டு இந்த நூலைச் சொன்னார் எனக் கூறுவர். “அநுபூதி” என்றால் நேரடியான ஜீவாத்மா பரமாத்மாவுடன் ஐக்கியத்தை அடையும் சுய-அநுபவம். இதுவே இரண்டற்ற அல்லது அத்வைத ஐக்கியநிலையான ஆத்ம-சாக்ஷாத்காரம். மனமும், அஹமும் ஓடுங்கும் பொழுது ஆத்ம ஞானம் ஒளி விட ஆரம்பிக்கின்றது. விளக்கத்திற்கு அப்பாற்பட்ட, எதோடும் ஒப்பிட இயலாத, ஒரு அனுபவம் தான் ஆத்ம சாக்‌ஷாத்காரம். இந்த நிலையில் இறைவனையே எல்லாவற்றிலும் காண்பதோடல்லாமல், அவனை எல்லாமுமாகப் பக்தன் காண்கிறான். அவனுக்கு, இறைவன் அனைத்திலும் இருக்கிறான்; இறைவனே அனைத்துமாக இருக்கிறான்; உள்ளேயும் இறைவனே, வெளியிலும் இறைவனே, அனைத்தும் இறைவனே, எங்கும் இறைவனே. இறைவனே வழியும் (மார்க்கமும்), இலக்கும் (முடிவும்). இது ஒரு ஜீவன்முக்தர்களால் அநுபவிக்கப்படும் சகஜ அவஸ்தை என்று குறிப்பதான தெய்வீகமயமான அனுபவம். இது விவரிக்கக்கூடிய ஒன்று அல்ல, அநுபவிக்கப்பட வேண்டிய ஒன்று. Learn From Guruji ராகம்: ஹம்

மயில் விருத்தம் – 11 : எந்நாளும் ஒருசுனையில்

ராகம் : மத்யமாவதி எந்நாளும் ஒருசுனையில் இந்த்ரநீ லப்போ திலங்கிய திருத்த ணிகைவாழ் எம்பிரான் இமையவர்கள் தம்பிரான் ஏறும்ஒரு நம்பிரா னான மயிலைப் பன்னாளும் அடிபரவும் அருணகிரி நாதன் பகர்ந்தஅதி மதுர சித்ரப் பாடல்தரு மாசறு வேல்விருத்தம் ஒருபத்தும் படிப்பவர்கள் ஆதி மறைநூல் மன்னான் முகம்பெறுவர் அன்னம் ஏறப்பெறுவர் வாணிதழு வப்பெ றுவரால் மகரால யம்பெறுவர் உவணம் ஏறப்பெறுவர் வாரிச மடந்தை யுடன்வாழ் அந்நாயகம் பெறுவர் அயிராவ தம்பெறுவர் அமுதா சனம்பெ றுவர்மேல் ஆயிரம் பிறைதொழுவர் சீர்பெறுவர் பேர்பெறுவர் அழியா வரம்பெ றுவரே.

மயில் விருத்தம் – 10 : நிராசத விராசத

ராகம் : மத்யமாவதி தாளம் : கண்டசாபு நிராசத விராசத வரோதய பராபர னிராகுல னிராமய பிரா னிலாதெழு தலாலற மிலானெறி யிலானெறி நிலாவிய உலாசஇ தயன் குராமலி விராவுமிழ் பராரை யமராநிழல் குராநிழல் பராவு தணிகைக் குலாசல சராசரம் எலாமினி துலாவிய குலாவிய கலாப மயிலாம் புராரிகும ராகுரு பராஎனும் வரோதய புராதன முராரி மருகன் புலோமசை சலாமிடு பலாசன வலாரிபுக லாகும் அயி லாயுதனெடுந் தராதல கிராதர்கள் குலாதவபி ராமவல சாதனன் விநோத சமரன் தடாரி விகடாசுரன் குடாரித படாதிகழ் ஷடாநநன் நடாவு மயிலே.