Posts

Showing posts from 2019

வந்து வந்து வித்தூறி : J R விளக்கவுரை

By Smt Janaki Ramanan, Pune To read the meaning of the song vanthu vanthu ( வந்து வந்து வித்தூறி ) in English, click the underlined hyperlink. முன்னுரை "வந்து வந்து வித்தூறி" என்று தொடங்கும் தில்லைத் திருத்தலப் பாடல். வந்து வந்து பிறக்கிறான் மனிதன். வாழத் தெரியாமல் நொந்து நொந்து வாழ்கிறான். பின் வெந்து வெந்து மடிகிறான். அந்த ஜனன மரண சுழற்சியிலிருந்து தன்னை விடுவிக்கத் தயாளன் முருகன் வர வேண்டும் என அருணகிரியார் ஏங்கிப் பாடும் பாடல். மனித குலமே சம்சார சாகரத்தில் தத்தளித்துக் கொண்டிருப்பதாலே, அருணகிரியார் வேண்டுவது மனித குலம் உய்யத் தான். ஞானிகள், இவ்வாறு, இறைவனுக்கும், மனிதனுக்கும் பாலமாய் அமைந்து நம்மைப் பக்குவப் படுத்தப் பாடு படுகிறார்கள். முருகன் எப்படி தரிசனம் தர வேண்டும் என்பதை வண்ணக் காட்சியாய் நம் முன்னே விரிக்கும் பாடல். கந்தனை வந்தனை செய்து கொண்டு, பாட்டின் பொருள் பார்ப்போமா?

அமுதுததி விடம் : J R விளக்கவுரை

By Smt Janaki Ramanan, Pune To read the meaning of the song amutha uthathi ( அமுத உததி ) in English, click the underlined hyperlink. முன்னுரை அமுதுததி விடம் உமிழு ' என்று தொடங்கும் திருச்செந்தூர் பாடல். தர்மச் செயல்களை தள்ளிப் போட்டுக் கொண்டே போவது எதுவரை? அந்த தர்மதேவனே அழைத்துச் செல்ல வரும் வரையிலா? சிந்திக்கச் சொல்கிறார் அருணகிரியார். வாழ்வு முழுவதும் சுயநலக் கோட்டைகள் கட்டி சுகவாழ்வு வாழ்ந்து விட்டால் இறுதிக் கணங்கள் நெருங்க நெருங்கத் தினைஅளவு கூடத் தான தர்மமோ, மற்ற புண்ணியச் செயல்களோ செய்ய வில்லையே என்ற பதைப்பு வரலாம். அப்பொழுது எதையும் சொல்லவோ செய்யவோ முடியாதபடி காலம் கடந்து விடலாம். அதனால் இன்றே, இப்பொழுதே, நன்றே செய்யத் தொடங்கி விட வேண்டும் என்று குறிப்பால் உணர்த்துகிறார். இறுதிக் கணங்களை ஒளி, ஒலிக் காட்சி போல் விஸ்தாரமாய்ச் சொல்வது நம்மை நடுங்க வைப்பதற்காக இல்லை. அந்தக் கணங்களை நினைத்து, இந்தக் கணமே திருந்தத் தான். இதற்கு மாறாக ஒரு இன்பக் காட்சியாக, சிவனின் ஆனந்த தாண்டவத்தைக் காட்டுவது நம் நெஞ்சில் நம்பிக்கை சேர்க்கத் தான். சிவனை நினைத்தாலே கால

துன்பங் கொண்டு : J R விளக்கவுரை

By Smt Janaki Ramanan, Pune To read the meaning of the song thunbam kondu( துன்பங் கொண்டு ) in English, click the underlined hyperlink. முன்னுரை "துன்பங் கொண்டு " என்று தொடங்கும் திருச்செந்தில் திருத்தலப் பாடல். மாயத் திரையின் பின்னணியில் நடக்கும் நாடகங்களை எல்லாம் "மயக்கம்" என்ற சொற் பிரயோகத்தால் தெளிவு படுத்தி விடுகிறார் அருணகிரிநாதர். வேரோடிய பெண்ணாசை போன்ற ஆசைகளை மனம் எளிதில் விடுவதில்லை தான். ஆனால், இது ஒரு மயக்க நிலை தெளிந்து விடும் பொழுது நெஞ்சத்தில் ஒரு அமைதி பூக்கும். மயக்கம் தெளிவிக்கத் தான் நீலக் கடலோரம் நின்று கஞ்சமலர்ப் பாதம் காட்டுகிறான் கருணையின் வடிவமான கந்தன்.

ஒருவரை ஒருவர் தேறி : J R. விளக்கவுரை

By Smt Janaki Ramanan, Pune To read the meaning of the song oruvarai oruvar ( ஒருவரை ஒருவர் ) in English, click the underlined hyperlink. முன்னுரை "ஒருவரை ஒருவர் தேறி" என்று தொடங்கும் பழனி மலைத் திருப்பாடல். தனிமனிதத் துன்பங்கள் ஒருபுறம் இருக்க, நாகரீகம் அற்று நடக்கும் மனித சமூகம் அல்லவா நல்லவர்களைத் துன்புறுத்துகிறது என்று அங்கலாய்க்கிறர் அருணகிரியார். சமூக இடிபாடுகளைச் சுட்டிக் காட்டுகிறார். மதம் என்ற பெயரில் மதம் கொள்வோரைச் சாடுகிறார். பாவச் சுழலிலிருந்தும், இறுதியில் பிறவிச் சுழலிலிருந்தும் விடுபடுவதற்கு ஞான ஜோதியாம் முருகனை வேண்டுகிறார்.

குரம்பை மலஜலம்: JR விளக்கவுரை

By Smt Janaki Ramanan, Pune To read the meaning of the song kurambai malasalam ( குரம்பை மலஜலம் ) in English, click the underlined hyperlink. முன்னுரை "குரம்பை மலஜலம் வழுவழு நிணமொடு" என்று தொடங்கும் பழனி திருத்தலப் பாடல். அருணகிரியாரின் சரவண தரிசனம் பற்றிச் சொல்லும் அற்புதமான பாடல். அமுத முகமும், குமுத விழியும் கொண்டு, கருணா மூர்த்தியவன் அருணகிரியாருக்குக் காட்சி தருகின்றான். அந்த உன்னத தரிசனத்திற்கு முன், ஆன்மாவை மறந்த உடல் என்ற வெறும் குடிசை பற்றிச் சொல்கிறார்.குருதி, நிணம், கழிவுகள் நிரம்பிய ஒரு குடியிருப்பு அது; அங்கே புகுந்து அட்டகாசம் புரியும் ஐந்து கசடர்களாம் பொறிகள், என துன்பத்தின் நிலைக்களனைப் பற்றிச் சொல்லி எச்சரிக்கை விடுகிறார். எத்தனையோ திருப்புகழ் பாடல்களில் முதல் பகுதி எச்சரிக்கையாகவும், பின்பகுதி நம்பிக்கை ஒளிவீசி வரும் கந்தன் கருணையாகவும் இருக்கக் காண்கிறோம். எச்சரிக்கை நிலைகுலையச் செய்கிறது; நம்பிக்கை தூக்கி நிறுத்துகிறது.

இரவியும் மதியும் : J R விளக்கவுரை

By Smt Janaki Ramanan, Pune To read the meaning of the song iravium mathiyum ( இரவியும் மதியும் ) in English, click the underlined hyperlink. முன்னுரை "இரவியும் மதியும்" என்று தொடங்கும் திருவருணைத் திருத்தலப் பாடல். ஜாஜ்வல்யமாய் எழுகின்ற சூரியனும், அமுதம் பொழியும் சந்திரனும் விழி முன்னே பிரத்யட்சம் அல்லவா! இயற்கை எழில் எல்லாம் நிதர்சனம் அல்லவா!இவற்றோடு இயைந்த வாழ்க்கையும் நிரந்தரம் அல்லவா! அப்படியானால் அந்த வாழ்க்கை என்பதன் அர்த்தமாய் விளங்கும் குலமும் குடும்பமும் பொய்யெனத் தள்ளிவிட முடியுமோ, என மனம் இன்பங்களை எண்ணி, எண்ணிப் பார்த்து ஆட்டம் போட்டுக் கொண்டிருக்க, இன்னொரு புறம் கணத்துக்குக் கணம் நம் கைவிட்டு நழுவும் காலம் சொல்லும் கதை வேறாக இருக்கிறது. இந்தக் காலத்தின் முடிவு, காலனின் வருகை என தீர்ந்து தெளிந்து விட்டால், மிச்சம் இருப்பது அச்சம் அல்லவா ! அதற்குள் எமைக் காக்க நீ வந்து விட்டால், அந்த ஞானம் தருவது எல்லையற்ற ஆனந்தம் அல்லவா ஆறுமுகா, என அருணகிரியார் உருகும் பாடல். மயில்வாகனின் மகிமைகள் சொல்லாமல் திருப்புகழ் பாடல் நிறைவு பெறுவதில்லை. இந்தப் பாடலும் விதிவிலக்கில

அபகார நிந்தை : J R விளக்கவுரை

By Smt Janaki Ramanan, Pune To read the meaning of the song abakaara ninthai ( அபகார நிந்தை ) in English, click the underlined hyperlink. அபகார நிந்தைப் பட்டுழலாதே சுவரில் எறிந்த பந்து போல் செய்த பாவம் தண்டனையாக, பழியாகத் திரும்பி வந்து தாக்கும் என்பதை இயற்கை நியதியாக வகுத்து வைத்தவனே! மனதாலும், வாக்காலும், செயலாலும் மற்றவரை வருத்தும் அபகாரம் நான் செய்துவிடாமல், பாவத்தின் நிழல் என்னைத் தீண்டி விடாமல், பழிச் சொல் ஏதும் அண்டி விடாமல் காத்து நிற்பாய் கந்தா. அறியாத வஞ்சரைக் குறியாதே விளக்கம் : பாவம் செய்யத் தூண்டுகின்ற கீழான மனிதருடன் நான் சேர்ந்து விடாமல், தற்காத்துக் கொள்ளும் பக்குவம் தருவாய். அவர்கள் அறியாதவர்கள் என்பதை உள்வாங்கிக் கொண்டு, அவர்கள் பாதையிலிருந்து விலகும் பண்பை நான் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

வலிவாத பித்தமொடு : J R விளக்கவுரை

By Smt Janaki Ramanan, Pune To read the meaning of the song valivaatha pitthamodu ( வலிவாத பித்தமொடு ) in English, click the underlined hyperlink. முன்னுரை "வலிவாத பித்தமொடு " என்று தொடங்கும் திருவண்ணாமலைத் திருத்தலப் பாடல். ஆன்மாவின் ஒளியாய் அறுமுகவன் அகத்தில் வீற்றிருக்கிறான். அஞ்ஞான இருள் அடர்ந்து இருக்கும் வரை ஜீவன் அவனைக் கண்டு கொள்ளாமல் இருக்கிறது. பஞ்சபூதங்களால் ஆன உடல், பஞ்ச இந்த்ரியங்களின் 'உதவியுடன், ஆசைகளை, வேண்டாத வினைகளை, நோய்களை தன்னுளே இழுத்துக் கொண்டு அவதிப் படுகிறது. ஒன்றல்ல, இரண்டல்ல, எண்ணிலா நோய்கள். மருத்துவ உலகத்தையே மலைக்க வைக்கும் நோய்கள். புதிது, புதிதாய் நுழைந்து விடும் நோய்கள். இவற்றிலிருந்து எப்போது விடுதலை என, மனித குலத்தின் சார்பில், வினா எழுப்பி, விடையாக வருபவன், விடையேறும் விமலனின் புதல்வன், முருகன் என்று தீர்ந்து தெளிகிறார் அருணகிரியார். அந்த இன்ப வாரிதிக்கு நம்மை அழைக்கும் பாடல். நம் துன்பத்தை எல்லாம் தீர்ப்பதல்லவா திருப்புகழ்!

நினது திருவடி : J R விளக்கவுரை

By Smt Janaki Ramanan, Pune To read the meaning of the song ninathu thiruvadi ( நினது திருவடி ) in English, click the underlined hyperlink. முன்னுரை அருணகிரிநாதர் திருவண்ணாமலை கோபுரத்தின் மீது ஏறி தனது உயிரை மாய்த்துக் கொள்ள கீழே விழுந்த பொழுது காப்பாற்றி, 'முத்தைத்தரு' என்று அடி எடுத்துக் கொடுத்த முருகப்பெருமான், அவரை 'வயலூருக்கு வா!' என்று பணித்தார். மகிழ்ச்சி அடைந்த அருணகிரியார் இத்தலத்திற்கு வருகை புரிந்தார். அங்கு முருகன் காட்சி தராததால் அசரீரி பொய்யோ? என்று உரக்கக் கூறினார். அவர் முன் முருகபெருமானின் அண்ணன் விநாயகர், பொய்யா கணபதி தோன்றி, சுப்ரமணியசுவாமியை திருக்கல்யாணக் கோலத்தில் காட்சி தரும்படி அருளினார். அருணகிரிநாதருக்காக முருகன் தன் வேல் கொண்டு குத்தி ஒரு தீர்த்தக் குளம் ஏற்படுத்தினார். அதில் தீர்த்தமாடிய அருணகிரி நாதருடைய நாவில் முருகன் வேல் கொண்டு ஓம் என்ற பிரணவ மந்திரம் எழுதிய பின்னர் அவர் கவிபாடும் ஆற்றலும் அறிவும் பெற்றார். இன்ப மயமான இளங்குமரனைப் பாடும் சந்தமயமான "நினது திருவடி" என்னும் திருப்புகழின் ஊற்றுக் கண் திறக்கிறது.

இருக்கும் காரண மீறிய : J R விளக்கவுரை

By Janaki Ramanan, Pune. For a complete paraphrase of the song, with its meaning in English, click the underlined hyperlink : இருக்கும் காரண மீறிய முன்னுரை திருச்செந்தூரில் மேவிய எம்பெருமானே சரணம். "இருக்கும் காரண மீறிய" என்று தொடங்கும் இனிய பாடல். "உருக்கம் பேசிய" என்ற பாடலின் பகுதி. எவருக்கும் அடங்காத தீய சக்திகளின் ஒட்டுமொத்த வடிவங்களான அசுரர்களை அழிக்க மூர்த்திகள் அம்பிகை இவர்களின் ஆற்றலை எல்லாம் உள்ளடக்கிய சிவசக்தி அம்சமாக அவதாரம் செய்தவன் முருகன் அவர்களின் தனித்தனி ஆற்றல்களை எல்லாம் இணைத்துக்கொண்டு தனிப்பெரும் ஆற்றலாய் வந்ததாலே எல்லா கடவுளரும் இவனை மையப்புள்ளியாக கொண்டிருப்பதால் வேதத்தின் சாரமான மெய்ப்பொருள் முருகன் தான் எனத் தெளிவு படுத்துகிறார் அருணகிரியார். பெரும்பான்மையான பாடல்களில் அசுரர்களை வென்று தேவர்களை காத்தவன் என்றும் பிரணவப் பொருள் சொன்னவன் என்றும் இந்தக் கருத்தைத்தான் அவர் வலியுறுத்துகிறார்.

நால்வர் வரலாறு: விகடன் பத்திரிகையிலிருந்து

திருத்தொண்டர்கள் அறுபத்து மூவரில் சைவ நால்வர் எனும் சிறப்புக்கு உரியவர்கள் அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர். இந்த நால்வரில், தொண்டு வழியைக் காட்டியவர்- அப்பர் ஸ்வாமிகள். குழந்தையாக இருந்து, இறைவனை அடையும் வழியைக் காட்டியவர்- சம்பந்தர். தோழனாக இருந்து, தோழமை வழியைக் காட்டியவர்- சுந்தரர். அடிமையாக இருந்து, இறைவனை அடையும் 'தாஸ’ மார்க்கத்தைக் காட்டியவர்- மாணிக்கவாசகர். இந்த நான்கு வழிகளில் எந்த வழியைப் பின்பற்றினாலும், அங்கே நம்மை எதிர் கொள்ள ஆண்டவன் தயாராக இருப்பான். அதை நமக்கு உணர்த்துவதே நால்வர் வரலாறு.

மக்கட்கு கூற : J.V விளக்கவுரை

By Smt Janaki Ramanan, Pune To read the meaning of the song makkatkku koora ( மக்கட்கு கூற ) in English, click the underlined hyperlink. முன்னுரை "மக்கட்கு கூற அரிதானது" என்று தொடங்கும் காஞ்சிபுரம் திருத்தலப் பாடல். சிவனார் மனம் குளிர ப்ரணவத்தின் பொருளை அவருடைய இரு செவியிலும் உபதேசம் செய்துவிட்டான் பால குமாரன். வேதனாராய் இருந்தும், அதன் சாரமான "ஓம்" காரத்தின் பொருள் தெரியாமல் பிரம்மன் இருந்தது, வெட்கமும், வேதனையும் தரும் விஷயம் என்று விட்டான். அந்த ப்ரணவப் பொருள்தான் என்ன? அது ஏட்டிலே படிக்கக் கிடைப்பதில்லை. உடற் கூட்டின் தத்துவங்களுக்கும், புற உலகின் தத்துவங்களுக்கும் அப்பாற்பட்டதாய் இருக்கிறது. அதையே உபதேசம் செய்து விட்ட முருகன்தான் பரப்ரம்மமான, முழுமுதற்கடவுள் என உணர்த்தும் பாடல். "நான்" என்பதெல்லாம் கரைந்த பின் கிடைக்கும் மோட்சமே அவன்தான் என அறுதியிட்டுச் சொல்லும் பாடல்.

சேவல் விருத்தங்கள் : பதவுரை

By Devaki Iyer, Pune காப்பு : கொந்தார் குழல் பதவுரை கொந்தார் குழல் பூங்கொத்துக்கள் சூடிய கூந்தலில் வண்டு ஓடும் வட்டமிடுகின்ற வண்டுகளின் இயல் கொண்டே ரீங்காரத்தையே சுருதியாகக்கொண்டு ஏழ் இசை மருள இசைக்கு அடிப்படையான ஏழு ஸ்வரங்களும் அதன் இனிமையில் மயங்கும்படியாக குதலை மொழிந்து அருள் மழலை போல் பேசுகின்ற கவுரி வெண்மை நிறம் கொண்ட பார்வதி சுதந்தரி இன்னொருவருக்குக் கட்டுப்படாதவள் குமாரன் பெற்ற மகன் இதம் பெறு மனம்மகிழ்கின்ற பொன் செந்தாமரை கடம் பொன்போன்ற அழகும் மேன்மையும் பொருந்திய சிவந்த தாமரை மலர்ந்துள்ள குளங்களையும் நந்தாவனம் உள மலர்ச்சோலைகளையும் உடைய செந்தூர் திருச்செந்தூர் (முதலிய) எங்கும் உளான் தலங்களில் உறைபவன் திலக மயிலில் பறவைகளிலே முதன்மையான மயிலை வாகனமாக உடைய குமரன் என்றும் இளையோனாகிற முருகனின் வரிசை பெறு/td> கொடியில் இடம்பெற்ற பெருமையை உடைய சேவல் தனைப்பாட அந்தச்சேவலின் புகழைப் பாடுவதற்கு வந்தே சமர் பொரு எதிர்த்துப் போராட வந்த மிண்டாகிய கய மா முக னைக் கோறி கஜ முகாசுரனைக் வஞ்சகனான கஜ முக அசுரனைக்கொன்று வன் கோடு ஒன்றை ஒடித்து வலிமையான இரண்டு தந்தங்க

மயில் விருத்தங்கள் : J R விளக்கவுரை

By Janaki Ramanan, Pune Click on the panel link to expand it and click once again to collapse. காப்பு : சந்தன பாளித வேல் விருத்தம், மயில் விருத்தம் படைப்புக்குக் கவசமாக வேண்டும் என்று வேலனையும், விக்ன விநாயகனையும் துதிக்கும் பாடல். மணமிக்க சந்தனம் பூசப்பட்டு, பரவசம் தரும் மங்கல குங்குமப் பூச்சால் அலங்கரிக்கப்பட்டு. எழிலான சண்பக மாலைகள் சூட்டப்பட்டு, வீரக் கடகம் அணிந்து மின்னும் திண்தோள்களுடன், வண்ணமயில் ஏறி வருகின்ற இளங் குமரா, ஆறுமுகா சரவணபவா!! குரா மலர் மாலைகள் சூடி கருமேகம் போன்ற அளகபாரத்துடன் எழில் சிந்தி நிற்பவளும், நாரதரமிருந்து ஷடாட்சர மந்திர உபதேசம் பெற்றவளும், இச்சா சக்தி ஸ்வரூபணியும், திருமால் திருமகளாய் உதித்து, வேடர் குலத்தில் வளர்ந்தவளும் ஆன முருக பக்தையாம் வள்ளியின் மணவாளா! கிரியா சக்தியாம் தெய்வானையின் நாயகா, கந்தனெனும் கருணைக் கடலே, உன் தண்மலர்ப் பாதங்கள் சரணம். கவசமாய் காப்பாய். எழிலாய் உயர்ந்து நிற்கும் க்ரிடம் போன்ற மத்தகத்துடன், அழகாக அசையும், துதிக்கையுடன் சாமரம் போல் வீசி வரும் செவிகளும் கொண்டு, பரந்த கன்னத்தில் மதநீர் பெருக வரும் கணபதியே! எம் தந்த

பஞ்ச பாதகன் : J R விளக்கவுரை

By Smt Janaki Ramanan, Pune To read the meaning of the song pancha paathagan ( பஞ்ச பாதகன் ) in English, click the underlined hyperlink. முன்னுரை "பஞ்ச பாதகன் " என்று தொடங்கும் பழநித் திருத்தலப் பாடல். சிறிதாகவோ, பெரிதாகவோ பாவங்கள் செய்வதையே மனித குலம் வழக்கமாகக் கொண்டிருக்கிறது. கலி முற்ற முற்ற இது கூடிக்கொண்டே போகிறது. மனிதர்கள் திருந்துவதற்காக, மகான்கள் உபதேசம் செய்வதும், அவர்களுக்காக இறைவனிடம் மன்றாடுவதுமாக இருக்கிறார்கள். அருணகிரியார் மனிதர்கள் செய்யும் ஒட்டுமொத்தப் பாவங்களையும் தன் மேல் இழுத்து போட்டுக்கொண்டு இறைவனிடம் மனித குலத்தின் சார்பில் மன்னிப்பு வேண்டுகிறார். தன்னைப் பஞ்ச பாதகன் என்றே சொல்லிக் கொள்கிறார். ஒரு தனி மனிதர், அதுவும்முருகனின் அருட்பார்வை பெற்றவர் அப்படி அத்தனை பாவங்களையும் செய்திருக்கவே முடியாது என்று நினைக்கிறார்கள் ஆன்றோர்கள். அவர் வேண்டுவதெல்லாம் மற்றவர்களுக்காகத்தான். கடந்த காலங்களில் கறைகள், குறைகள் அவருக்கும் இருந்தன. அவை கந்தன் கருணையால் களையப்பட்டன. அடிமனதில் அமைதியோடு தான் மேற்பரப்பின் கொந்தளிப்புகளை நாம் புரிந்து கொள்ளும் வகைய

இருளும் ஓர் கதிர் : J R விளக்கவுரை

By Smt Janaki Ramanan, Pune To read the meaning of the song iruLumor kathir ( இருளும் ஓர் கதிர் ) in English, click the underlined hyperlink. முன்னுரை "இருளும் ஓர் கதிர் அணுகொணாத" என்று தொடங்கும் சிதம்பரம் திருத்தலப் பாடல் ஞானியரும் யோகியரும் மெய் ஞான ஒளியில் குளித்தாலும், முந்திய வினைகளின் இருள் படலம் அவ்வப்பொழுது அவர்கள் வாழ்க்கையிலும் குறுக்கிடுவது உண்டு. இறைவனின் அளப்பரிய கருணை துணைக்கு வர அந்தக் காலக்கட்டங்களை – கஷ்டங்களை – எளிதாக அவர்கள் கடந்து விடுகிறார்கள். அப்படி இருளுக்கும் ஒளிக்கும் இடையே பந்தாடப்படும் பொழுது அறுமுகனின் அருள் வேண்டி அருணகிரியார் பாடும் பாடல். முருகன் முன்னே இருள் என்றும், ஒளி என்றும், இன்பம் என்றும், துன்பம் என்றும், நல்வினை என்றும், தீவினை என்றும் இரு துருவங்கள் ஏதுமே இல்லை. அந்தத் தெளிந்த நிலைக்குத் தன்னைக் கொண்டு சேர்க்க வேண்டுகிறார். யோக மார்க்கத்தின் ஆனந்த நிலைகளைச் சுட்டிக் காட்டி வழிகாட்டுவது அந்த யோகிக்குக் கை வந்த கலையல்லவா!

வந்து வந்து முன் தவழ்ந்து : J R. விளக்கவுரை

By Janaki Ramanan, Pune. For a complete paraphrase of the song, with its meaning in English, click the underlined hyperlink : வந்து வந்து முன் தவழ்ந்து முன்னுரை "வந்து வந்து முன் தவழ்ந்து" என்று தொடங்கும் திருச்செந்தூர் திருத்தலப் பாடல். சாஸ்வதம் என நம்பி உலகப் பற்றுக்களை உடும்புப் பிடியாக பிடித்துக் கொண்டிருக்கிறோம். அழகிய குழந்தை, அன்பான மனைவி, மாடமாளிகை, பரிவோடு கூடிநின்று அரண் அமைக்கும் சொந்த பந்தம், என்று வண்ணமயமாய் நிறைந்திருக்கும் வாழ்வை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இவற்றையெல்லாம் மறக்கும் அளவுக்கு நினைவாற்றல் இழப்பதற்கு முன் முருகன் கழல் பற்றத் தவிக்கும் அருணகிரியார், அந்தத் தவிப்பை நமக்குள்ளும் செலுத்தும் பாடல். ஒருநாள் இந்த உலக நினைவுகள் மங்கி மறந்து போகலாம், அந்த சுந்தரக் கந்தனையும் நினைக்காமல் விட்டுவிட்டால் அந்தரத்தில் அல்லவா ஊசலாட நேரிடும் என்று குறிப்பால் உணர்த்துகிறார்.

கொம்பனையார் : J R விளக்கவுரை

By Smt Janaki Ramanan, Pune To read the meaning of the song kombanaiyar ( கொம்பனையார் ) in English, click the underlined hyperlink. முன்னுரை அந்த ஆதிசக்தி நாயகி, போருக்குத் தயாராகும் செல்வப் புதல்வன் சரவணனுக்கு சக்திவேலாம் ஞானவேல் தந்து வாழ்த்தும் அற்புதமான பாடல். சிவசக்தி, தன் தாண்டவ ஜதிகளில் சிலம்புகளின் வேக கதிகளில் தீயோரைக் கலங்க வைப்பதை தீந்தமிழில் சொல்லும் பாடல், ஒருபுறம் தெய்வீகம், மறுபுறம் மானுடத்தின் மதியீனம், இறைவியை, இணையிலா வேலவனைத் தூய தமிழில் பாடிப் பக்தியில் திளைப்பதை விட்டு, அப்படியும், இப்படியுமாய், எப்படியெல்லாமோ வாழ்ந்ததை எண்ணி அருணகிரியார் வருந்தும் பாடல், மனித குலம் திருந்தத் தான் பாடுகிறார்.

புடவிக்கு அணி துகில் : J R விளக்கவுரை

By Janaki Ramanan, Pune. For a complete paraphrase of the song, with its meaning in English, click the underlined hyperlink : புடவிக்கு அணி துகில் முன்னுரை பன்னிரு கை வேலவனின் பால லீலைகள் ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல! அவன் நடத்திய அந்த நாடகங்களின் திருப்புமுனையாக அமைந்தது அவன் மேரு மலை விட்டுப் பழனிமலை வந்தது. அது பக்தர்களின் நம்பிக்கை மலையாய் உயர்ந்து என்றும் உலகத்தை காத்துக்கொண்டிருக்கிறது. இன்று பழனிமலையில் கூடும் கூட்டமே அதற்கு அத்தாட்சி. காரண காரியங்களைக் கடந்தவன் ஒரு காரணம் காட்டி பழனிமலை வந்ததைச் சொல்லும் அருமையான பாடல்.

கட்டி முண்டக : J R விளக்கவுரை

By Janaki Ramanan, Pune. For a complete paraphrase of the song, with its meaning in English, click the underlined hyperlink : கட்டி முண்டக எட்டு இரண்டு என்ற இரண்டு எண்களை வைத்துக் கொண்டு அருணகிரியார் சொற்சிலம்பம் ஆடி இருக்கிறார். அர்த்தம் பொதிந்த தரமான பகுதி. எட்டும் இரண்டும் பத்து என்பது கூட தெரியாத பேதையாக நான் இருந்தேன். உன் அருளால் எண்ணும் எழுத்தும் கற்ற பின், அடியார்களின் பக்தியின் வெளிப்பாடாக வரும், பரவசம், குரல் தழுதழுத்தல், விழிநீர் அரும்புதல், மெய் விதிர்விதித்தல், முதலான எட்டும் இரண்டும் ஆன பத்து பேரின்ப நிலைகள் பற்றி அறிந்தது இல்லையே முருகா ! எட்டும் இரண்டும் சேர்ந்த பத்து என்ற எண்ணுக்கு உரிய எழுத்து "ய". அது பஞ்சாட்சரத்தில் – நமச்சிவாய நாமத்தில் – ஆன்மாவைக் குறிக்கும் என்பதை அறிந்தவன் இல்லையே! அப்படி ஏதும் அறியாதவனாய் இருந்தவனை படிப்படியாய் உயர்த்தினாய். இந்த ஏழையின் செவியில், எட்டிற்கு உரிய எழுத்து அ, இரண்டிற்கு உரிய எழுத்து உ, இரண்டும் சேர்ந்து தருவது அ+ உ+ ம் – ஓம் என்னும் பிரணவப் பொருள், அதுதான் லிங்கம் எனப்படும் சிவலிங்கக் குறி, என்று தெளிந்த தேனாக ஞான உ

வேல் விருத்தம் விளக்கவுரை

By Mrs Shyamala Ramamurthy, with introduction by Mrs Janaki Ramanan முன்னுரை வேலனையும் , அவன் கை வேலயும் வேறுபடுத்திப் பாரப்பதற்கில்லை. மயில் வாகனனையும், அவன் மயிலையும் பிரித்துப் பார்ப்பதற்கில்லை. வேல் என்பது ஓர் ஆயுதம். மயில் என்பது ஒரு பட்சி என்று அவன் வேலையும், மயிலையும் எளிதாக எண்ணி விடுவதற்கில்லை. அவன் வேல் என்பது ஞானம். ஞானசக்தியை அதில் தேக்கி வைத்திருக்கிறான் தயாபரன். மயில் என்பது மந்திர ரூபம். தோகை விரிக்கும் பொழுது ப்ரணவத்தின் வடிவம். உயிர்களின் ப்ராண சக்தியை அதில் நிரப்பி இருக்கிறான் சரவணன். அவன் சங்கல்பமாக ஒன்றை நினைத்து விட்டால் வேலும் மயிலும் நொடியில் அதைச் செயல் படுத்தி விடுகின்றன. அவற்றின் வலிமைக்கும், வேகத்துக்கும் முன்னால் எந்த தீய சக்தியும் நிற்க முடிவதில்லை. அதே நேரம் பக்தர்களுக்குப் பரிவுடன் பரிந்து வருவதில், அவன் அபரிமிதக் கருணையின் வெளிப்பாடகவே அவை விளங்குகின்றன. ஆயிரம் ஆயிரம் திருப்புகழ் பாடல்களில் வேலையும், மயிலையும் குறித்து அருணகிரியார் பாடி இருந்தாலும், சிறப்புப் பாயிரமாய் வேல் விருத்தம், மயில் விருத்தம், என்ற பாமாலைகள் சூட்டிப் பரவசமாகிறார்.

உனைத் தினம் : J R விளக்கவுரை

By Smt Janaki Ramanan, Pune To read the meaning of the song unai thinam ( உனைத் தினம் ) in English, click the underlined hyperlink. முன்னுரை "உனைத் தினம்" என்று தொடங்கும் திருப்பரங்குன்றம் திருத்தலப் பாடல். மீண்டும், மீண்டும் அருணகிரிநாதர் மனித மனத்தில் பதிக்க நினைப்பது என்ன? எப்படி வாழ வேண்டும், எப்படி வாழ்கிறோம் என்ற துல்லியமாக எடை போட்டு ,நம்மை நாமே திருத்திக் கொள்ள வேண்டும் என்ற வேண்டுதல். அவர் வாழ்க்கையையே படம் பிடித்துப் பாடம் நடத்தும் பாடல்கள். இந்தப் பாடலிலும் கடந்த காலக் கரடு முரடான வாழ்வைச் சொல்கிறார். பக்திப் பாதையில் நடந்ததில்லை. சக்தி பாலனை நெஞ்சில் வைத்து துதித்ததில்லை. சத்சங்கம் எதிலும் சேர்ந்ததில்லை. இடிபாடுகளுக்கிடையில், தரு ஒன்று துளிர்த்தது போல், முருக பக்தி உதிக்கிறது. ஆனால் அதற்குள் மரண பயம் எதிர்கொள்கிறது. முருகனை முழுவதுமாகச் சரண் அடைகிறார்.

எனக்குச் சற்று: J.R. விளக்கவுரை

By Smt Janaki Ramanan, Pune To read the meaning of the song enakku chattru ( எனக்குச் சற்று ) in English, click the underlined hyperlink. முன்னுரை "எனக்குச் சற்று உனக்குச் சற்று" என்று தொடங்கும் காஞ்சிபுரம் திருத்தலப் பாடல். ஆசைகள் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்திருப்பவை. பெண்ணாசை, எப்படியெல்லாமோ பொருள் தேடும் ஆசையில் கொண்டு சேர்க்கிறது. இப்படிச் சேர்த்த பொருளை பங்கிட்டுக் கொள்ள, கழுகாய் காத்திருக்கும் கூட்டம் இருக்கும். எந்த ஆசையும் முழுவதுமாய் நிறைவேறப் போவதுமில்லை. தளர்ந்து முடியும் உடலின் பற்றுக்களை விட்டு, முருகனைப் பற்றச் சொல்கிறார். அவன் அடியார்க்கு எளியவன். ஜீவனைக் கடத்தேற்றக் காத்திருப்பவன் என்பதை நமக்குள்ளே பதிய வைக்கத் தான் நிலையாமை பற்றி மீண்டும் மீண்டும் சொல்கிறார்.

ஓலமறைகள்: JR கருத்துரை

By Smt Janaki Ramanan, Pune To read the meaning of the song Olamaraigal ( ஓலமறைகள் ) in English, click the underlined hyperlink. முன்னுரை திருவானைக்காவின் திருப்புதல்வா சரணம். "ஓலமறைகள் " என்று தொடங்கும் திருவானைக்கா திருத்தலப் பாடல். ஜம்புகேஸ்வரர் - அகிலாண்டேஸ்வரி என்ற இணையற்ற தாய் தந்தையரின் அருமைப் புதல்வனாய் திருவானைக்காவில் கோயில் கொண்டிருக்கும் முருகன், ஐந்து சன்னிதிகளில் வள்ளி தெய்வானை சமேதராகவும, ஒரு சன்னிதியில் பால தண்டாயுதபாணியாகவும், இன்னொரு புறம் ஒரு சிற்ப அற்புதமாகவும், ஒரே கோவிலில் ஏழு விதமாகத் தரிசனம் தருவது பக்தர்கள் செய்த தவமல்லவா! வெள்ளை யானை வழிபட்ட தலம். வெண் நாவல் மரத்தடியில் ஈஸ்வரனின் திருக்கோலம் என்ற சிறப்புக்கள் கொண்ட இந்தப் புனிதத் தலத்தில் அருணகிரியார் கண்டது தயாபரனின் தண் தேனாம் கருணை ததும்பும் அவன் தாமரைப் பாதங்கள் தானோ! அந்தச் சிலிர்ப்பிலே பிறந்தது இந்தப் பாடலோ! உவமைகளுக்கு அப்பாறபட்டதாய், அந்தக் கழல்கள் இருப்பதாலே கவித்துவத்தை மட்டும் கைக்கொளாமல் தத்துவார்த்தமாக கந்தன் கழலின் அருமைகளைப் பெருமைகளைக் காட்டுகிறார் அருணகிரிநாதர். வேதநாதம் அத

கனி தரும் கொக்கு: J R கட்டுரை

By Smt Janaki Ramanan, Pune To read the meaning of the song kanitharum kokku ( கனி தரும் கொக்கு ) in English, click the underlined hyperlink. முன்னுரை குமரக் கோட்டத்தின் கொஞ்சும் எழிலே சரணம். " கனிதரும் கொக்கு" என்று தொடங்கும் காஞ்சிபுரம் திருத்தலப் பாடல். மனிதகுலம் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறது; எப்படி வாழவேண்டும் என்று வரைமுறை கற்றுத்தரும் பாடல். வழக்கம்போல் தன் பிழைகளையே பட்டியலிட்டுப் பாடம் கற்றுக் கொடுக்கும் அருணகிரியாரின் தனித்துவம். முருகனின் புனிதத் திருத்தலங்களாம், திருச்செந்தூர், திருவேரகம். திருப்பழனி, திருச்செங்கோடு, கதிர்காமம் என்ற நாவுக்கினிய நாமங்களை எல்லாம் கனவில் கூடச் சொல்லி அறியாத வீணான தன் வாழ்நாளைச் சொல்கிறார். அம்பிகையின் பவித்திரத்தை, கங்கையின் புனிதத்தை அறியாமல் வாழ்ந்த அவலநிலை சொல்கிறார். அந்தப் பெரும் பிழைகளை மன்னித்த முருகையனின் பெருங்கருணை சொல்கிறார். காஞ்சியின் தலைவியான அம்பிகையின் மகிமைகளை நினைந்து நினைந்து உருகுகிறார்.

கறை இலங்கும் : J R கட்டுரை

By Smt Janaki Ramanan, Pune To read the meaning of the song karai ilangum ( கறை இலங்கும் ) in English, click the underlined hyperlink. முன்னுரை கறை இலங்கும் என்று தொடங்கும் காஞ்சிபுரம் திருத்தப் பாடல். ஒரு புறம் ஒளிமயமாய் நிற்கும் முருகன். மறுபுறம், இருள் மண்டிய, தீய குணங்கள் நிரம்பிய மனதுடன் இருக்கும் மனித குலம். தன்னை அந்த மனிதர்களில் ஒருவராகவே நிறுத்திக் கொண்டு. மனிதர்களின் சார்பில் முருகன் என்னும் ஒளிவெள்ளத்தில் திளைக்க விரும்பும் அடங்காத் தாகத்தை இந்தப் பாடலில் வெளிப்படுத்துகிறார் அருணகிரியார். இந்த ஆன்மிக தாகம் தான் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்கும் என உறுதியாய்ச் சொல்கிறார். தமஸ்,ரஜஸ் என்பவற்றை விடுத்து, சாத்வீக குணத்தின் பக்கம் சென்று விடுவதே நோக்கமாக இருக்க வேண்டும் என்கிறார்.

எழுபிறவி — JR விளக்கவுரை

By Smt Janaki Ramanan, Pune To read the meaning of the song ezhu piravi ( எழுபிறவி ) in English, click the underlined hyperlink. முன்னுரை எழுபிறவி என்று தொடங்கும் திருப்புகழ் பொதுப் பாடல். திருத்தல யாத்திரை சென்று அந்தந்தத் தலங்களின் முருகனை திருப்புகழ் பாடல்களால் போற்றி வணங்கிய அருணகிரிநாதர், தல யாத்திரை முடித்துக் கொண்டு , திருவண்ணாமலை திரும்பிய பின்னரும், ஆர்வம் அடங்காமல், முருகனைப் பாடிய பாடல்கள், பொதுப் பாடல்களில் அடங்கும்.

முட்டுப் பட்டு — JR விளக்கவுரை

By Smt Janaki Ramanan, Pune To read the meaning of the song muttup pattu ( முட்டுப் பட்டு ) in English, click the underlined hyperlink. முன்னுரை "முட்டுப் பட்டுக் கதிதோறும் " என்று தொடங்கும் காஞ்சிபுரம் திருத்தலப் பாடல். ஞானவெளியில் சிறகடிக்கத் துடிக்கும் ஆன்மாவின் தாகமாய், ராகமாய் ஒலிக்கும் பாடல். பட்டுத் துடித்த பின் விட்டு விடுதலையாக நினைக்கும் பக்தியின் உச்சம். முருகனை உணர்ந்து கொண்டு விட்ட உன்னத நேரத்தில் உதிக்கின்ற வரிகள். இழுத்துச் செல்லும் பிறவிச் சுழலிலிருந்து விடுபடக் கதறும் அபயக்குரல். காஞசியாயிருந்தாலும், கைலாசமாகவே இருந்தாலும், அவனை எட்டிவிடாதோ பக்தனின் குரல்! இதயத் தாமரைக்குள் எழுந்தருளிவிட மாட்டோனோ எம் பெருமான்!

அனித்தமான : JR கருத்துரை

By Smt Janaki Ramanan, Pune To read the meaning of the song aniththamaana ( அனித்தமான ) in English, click the underlined hyperlink. முன்னுரை "அனித்தமான ஊனாளும்" என்று தொடங்கும் திருவானைக்கா திருத்தலப் பாடல். ஞானிகளின் யோக நிலைகள் என்பது வேறு; அஞ்ஞானிகளாம் சாதாரண மனிதர்களின் யோகப் பயிற்சிகள் என்பது வேறு. உடல் தான் நிரந்தரம்; அதைப் பேணுவது என்பது தான் வாழ்வின் நோக்கம் என்பது போன்ற யோகப் பயிற்சிகளை அருணகிரிநாதர் சாடுகிறார். சிவயோக நிலை நின்று, மெய்ப்பொருளாம் முருகனை உணரும் சிவஞானம் நாடுகிறார். அந்த ஞானம் அருளுமாறு முருகனை வேண்டிப் பாடுகிறார். எந்த நிலையில் இருக்கிறோம், எந்த நிலைக்கு உயர வேண்டும் எனத் தெளிவாகக் காட்டும் பாடல். முருகன் புகழ் அமுதமாய்ப் பொங்கி வரும் பாடல்.

திருவாதவூரார் வரலாறு

By Mrs Devaki Iyer, Pune. மாணிக்கவாசகர் என்று அறியப்படுகிற சைவ சமயக்குரவர்களில் காலத்தால் கடையவர், கி.பி. ஏழாம் நூற்றாண்டில் கூடற்பதிக்கருகில் வாதவூரில் அவதரித்தார். திருவாதவூரார் என்றே பெயர் காணப்படுகிறது. ஆமாத்திய ப்ராம்மணகுலத்தில் பிறந்து கல்வி கேள்விகளில் சிறந்து மதி நுட்பத்திற்கும் நெறி திட்பத்திற்கும் பெயர்பெற்று விளங்கினார். திருவாதவூரார் அரிமர்த்தன பாண்டிய மன்னனால் மதிமந்திரியாக வரிக்கப்பட்டு அப்பதவியைச் சிறந்த முறையில் வகித்து வந்தார். ஆனால் மனம் ஈசனையே நாடிற்று. பணியிலிருந்து ஓய்வு விரும்பியவருக்குக் குதிரை வாங்கி வரும் பணி கொடுத்துச் சோழ நாட்டுத்துறை முகத்துக்கு அனுப்பினான் அரசன்.

திருஞானசம்பந்தர் வரலாறு

By Mrs Shyamala, Pune. திருஞானசம்பந்தர் சைவம் தழைக்க பாடுபட்டவர்களில் ஒருவர். மிக சிறு வயதிலேயே பதிகம் பாட ஆரம்பித்தார். நமக்கு 368 பதிகங்களே கிடைத்துள்ளன. திருஞானசம்பந்தர் சீர்காழியில் சிவபாதருக்கும் பகவதி அம்மாவுக்கும் கிபி 637ல் மகனாய் தோன்றினார். மூன்று வயது குழந்தையாக இருந்த போது தந்தை தோணியப்பர் ஆலய குளக்கரையில் குழந்தையை அமர்த்தி விட்டு நீராடச் சென்றார். குழந்தைக்கு பசி. அம்மா அம்மா என்று அழ உமையவள் பாலுடன் சேர்த்து ஞானத்தையும் ஊட்டினாள். திரும்பி வந்த தந்தை குழந்தை வாயில் பால் வழிவது கண்டு பிள்ளையிடம் வினவ "தோடுடைய செவியன்" என பாடி, மேலே கை தூக்கி பரம் பொருளை அடையாளம் காட்டினார். இவர் முருகனின் அவதாரம் என்கிறார் அருணகிரிநாதர்.

அற்றைக் கிரை — JR விளக்கவுரை

By Smt Janaki Ramanan, Pune To read the meaning of the song atraikku irai ( அற்றைக் கிரை ) in English, click the underlined hyperlink. முன்னுரை "அற்றைக் கிரை தேடி" என்று தொடங்கும் காஞ்சி மாநகர் திருத்தலப் பாடல். எளிமை போல் தோன்றும் வலிமையான பாடல். ஞானச் சாற்றினை அல்லவா பிழிந்து தருகிறார்! அது அருணகிரிநாதரின் அனாயாசம். சுற்றி வளைக்காமல், முதிர்ந்த, முழுமையான வெற்றிக் கனி பறிக்க வேலனை வேண்டும் பாடல். இகத்திலிருந்து பரத்துக்கு ஏற்றிவிடும் பாடல். இப்படித் திருப்புகழ் எங்கும் மணம் மிகுந்த ஞானப் பூக்களைத் தூவி விடுகிறார் அருணகிரிநாதர். நம் மனதும் மணம் பெறுமோ!

நச்சரவ மென்று — JR விளக்கவுரை

By Smt Janaki Ramanan, Pune To read the meaning of the song nachcharava mendru ( நச்சரவ மென்று ) in English, click the underlined hyperlink. முன்னுரை "நச்சரவ மென்று" என்று தொடங்கும் காஞ்சிபுரம் திருத்தலப் பாடல். மற்றுமொரு அகத்துறைப் பாடல். அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகனைத் தலைவனாகவும், முருக பக்தனை தலைவியாகவும் உருவகம் செய்துச் செந்தமிழ்த் தேனாய் மலரும் திருப்புகழ் பாடல். முருகனுக்காக பக்தன் ஏங்கும் ஏக்கத்தை ஓரளவுக்குக் காட்டுகின்ற வழிமுறை தான் இந்த அகத்துறை. சிற்றின்பம் சொன்னால் "சட்"டெனப் புரிந்துவிடுவதாலே இதைச் சொல்லிப் பேரின்ப நிலைக்குக் கூட்டிச் செல்லும் முயற்சி. திரும்பத் திரும்ப எடுத்துச் சொன்னால் தானே மனித மனம் திருந்துகிறது! அதனால், வெவ்வேறு பாடல்களில், வெவ்வேறு விதமாகச் சொல்கின்ற நயம்.