tag:blogger.com,1999:blog-19124878025596604312024-03-15T17:39:21.080+05:30The Nectar of ThiruppugazhThiruppugazh Isai Vazhipadu with lyrics, meaning in English and Tamil, and learning audios as taught by Guruji Shri A.S. RaghavanUma Shankarihttp://www.blogger.com/profile/11875827154360557920noreply@blogger.comBlogger759125tag:blogger.com,1999:blog-1912487802559660431.post-66047636697330535802023-12-25T11:36:00.003+05:302023-12-25T14:37:22.679+05:30Symbolism of Murugan Worship<div id="red"; lang="ta">
உருவாய் அருவாய், உளதாய் இலதாய்<br>
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்<br>
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்<br>
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.<br>
</div><br>
<div id="blue">
uruvAi aruvAi uLadhAi iladhAi<br>
maruvAi malarAi maNiyAi oLiyAy<br>
karuvAi uyirAik gadhiyAi vidhiyAi<br>
guruvAi varuvAi aruLvAi guganE!<br>
</div> <br>
<p><i>You are the Supreme Being, who has form, and who has no form! You are an existent being, and You are also an invisible being! You are the fragrance, and You are also the flower having the fragrance! You are the precious gem, and You are also its lustre! You are the cosmic embryo, and You are also the life that moves the embryo! jYou are the ultimate refuge and You lead the path of the destiny of jeevatmas towards salvation. May You be gracious enough to appear before me as the Preceptor, and bestow on me Your grace!</i>
<p>Brahman is the Absolute Reality, the source of all things into which all things will eventually go back. It is a pure, blissful consciousness that is infinite, eternal, and unchanging. Advaita philosophers believe the Brahman to be Nirguna or without attributes. Saiva Siddhanta texts would refer to Brahman as Para Brahman or Para Shivam. Its inherent nature of transcendence and immanence is its swaroopa lakshana. The three basic qualities of Brahman are sat, chit, and ananda. Sat is the being or existence of Brahman, chit is the consciousness Brahman, and ananda is bliss. This is a state of being in which all distinctions between the subject and the object, between the seer and the seen, are obliterated. Because of this, one might say It has all the qualities or has no qualities. This seemingly paradoxical statement explains why Saint Arunagirinathar’s Anubhooti above refers It as ‘uLathaay ilathaay’.
<p>When one tries to ascribe Brahman with descriptive qualities that help us to visualize and communicate with it, we refer to Saguna Brahman. Saguna Brahman is “the Supreme or the universal principle endowed with cosmic functions as creation, maintenance, and dissolution. To create a world of multiplicity and separate selves that we perceive with our senses, Brahman has to become self-aware and superimpose on Itself the illusory maya. The key to understanding the nature of maya from a scientific viewpoint comes from modern Quantum Physics which shuns from using deterministic terminology and talks of probabilities alone. Scientists theorize that matter is not solid at all, being mostly space in which infinitesimally small sub particles are suspended and which behave sometimes as waves and sometimes as particles. Interestingly, sub atomic particles settle down from their constant movements and take on solid shapes only when we observe them. In other words, the world we observe is only an illusion projected by our senses. Thus each of us create our own reality!
<p>To help us visualize such abstruse concepts, sages in ancient times came up with Puranas which are mostly allegorical. Let us understand the metaphysical interpretations of the “birth” and life of Murugan, His consorts, and other symbols such as the vel, the peacock and the rooster banner.
<h3 style="color: brown; font-size: 120%;">Birth of Murugan</h3>
<p>Devas approach Shiva to give them a son who can vanquish the treacherous demons. Shiva’s five heads represent the five elements (Panch Mahabhoota - Earth, Water, Fire, Air and Ether) in nature. Shiva meditates and sparks of divine fire emanate from His third eye (representing the akasha element) as a result of the union of the five elements with Shakti (Pure Consciousness). Agni, representative of the element fire, and Vayu, representative of the element air, carry the fiery sparks and drop them into the sacred river Ganges, representative of the element water. Mother Ganga carries them further to Lake Saravana, which represents the earth element. The sparks then transform into six baby boys lying on lotus flowers growing in the lake. Then Goddess Parvati, consort of Shiva, gathers the babies into her arms and they became one beautiful child with six heads.
<p>We can also look at Murugan’s birth from a yogic view point. Our bodies have seven chakras or energy centers, starting at the base of the spine and moving all the way up to the top of the head through which prana or the life force flows. Ganesha controls the first chakra called muladhara. In passive or sleeping mode, Devi Parvathi also dwells in muladhara as a serpent called kundalini. In the awakened state, this Shakti or energy moves as kundalini power in sushumna. She goes up and merges with her beloved Lord Shiva at sahasrara.. This union of Shiva and Kundalini Shakti (power) leads a sadhaka to turiya state of infinite bliss.
<p>Even the <i>aru-padai veedu</i>us or the six places of military sojourn of the warlord Murugan have a yogic connotation. Each of these camps has a temple and it is said to correspond to a specific chakra in the subtle body of man:
<h3 style="color: brown; font-size: 120%;">Consorts of Murugan</h3>
<p>Murugan is the very embodiment of knowledge. For utilizing that knowledge, one needs will power and determination as well as the strength or capability of action. Murugan’s consorts Valli and Deyvayanai represent Iccha-shakti and Kriya-shakti, the two energies which come together with the Kundalini shakti of Murugan to bring knowledge to fruition.
<h3 style="color: brown; font-size: 120%;">Symbolism of Vel, Mayil and Seval</h3>
<p>A peacock dances, spreading its beautiful plumes in a circular form that is reminiscent of the pranava manta AUM. Being a very heavy bird, it has to strive to maintain its balance on its two slender feet. Thus we can also interpret the peacock as symbolizing mental equipoise, where the sattva guna predominates over the rajas and tamas gunas and facilitates the acquisition of True Knowledge, which is the Lord Himself. In fact, Mayurasana is said to kindle kundalini shakti.
<p>Humans pride themselves on the transient beauty of their body and their sharp intellect. Because of maya they are unable to identify themselves with the unchanging and eternal Atman dwelling within. That can happen only when the lord rides on our vain and egoistic mind like He rides the peacock and keeps it under check. The subordinated serpent under the peacock’s feet shows that the power of Pranava has overpowered the Maya impurity completely.
<p>If peacock is the visual symbol of Pranava, the crowing of the cock is its aural representation. It crows in the morning and heralds the rise of the sun that dispels the darkness of ignorance.
<p>Vel is the divine weapon Devi bestowed on Her son. It is indeed with this Gnana Shakti that Murugan could conquer evil forces. Vel is synonymous with victory. It is also a symbol of Knowledge, and is often used as a metaphor for Murugan himself. Vel removes the limiting conditions of malas created by samskaras/vasanas of our past and present lives. Malas are the reason we believe ourselves to be the body and we attribute all our actions to the limited "I" consciousness of our own ego. By destroying the malasVel helps us to see ourselves as we truly are – as Pure Consciousness
<!-- Go to www.addthis.com/dashboard to customize your tools --> <script type="text/javascript" src="//s7.addthis.com/js/300/addthis_widget.js#pubid=ra-5a756e49e8eaa960"></script>
Uma Shankarihttp://www.blogger.com/profile/11875827154360557920noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1912487802559660431.post-21879554568767012122023-12-24T17:59:00.007+05:302023-12-29T18:18:04.577+05:30மன்மதன் தத்துவம் <div LANG="ta">
<h3 style="font-size: 120%; color: brown;">மன்மதன் என்றால் என்ன?</h3>
<p>‘மன்மதன்’ என்றால் ‘மனதை கடைபவன்’ என்று அர்த்தம். ‘மதனம்’ என்றால் கடைவது. காதல் வயப்பட்ட ஒருவரின் மனதை மதனம் பண்ணுவதால் மன்மதனுக்கு இந்த காரண பெயர். திருமாலின் மனத்தில் இருந்து உண்டான மன்மதன், திருமாலின் நாபிக் கமலத்தில் இருந்து எழுந்த பிரம்மாவுக்கு தம்பிமுறை.
<p> மன்மதனுடைய புஷ்ப பாணங்கள் தாமரை, மல்லிகை, கருங்குவளை (நீலோத்பலம்), மாம்பூ, அசோக புஷ்பம் ஆகியவை தான்; நாணோ புஷ்பங்களில் ரீங்காரமிடும் வண்டுகள்; அவனுடைய தென்றல் தேரை இழுப்பது கிளி! மலர் அம்புகளை செலுத்தும் வில்லாகிய மனம் பஞ்சேந்திரியங்களால் ஆளப்படும் சமஸ்த ஜீவப் பிரபஞ்சத்தை காமத்தில் கட்டிப் போடுகிறது.
<p> அது எப்படி?
<p>ஐந்து பாணங்கள் ஐம்புலனைக் குறிப்பன. பஞ்ச இந்த்ரியங்களால் அநுபவிக்கப்படும் ஐந்து ஸூக்ஷ்ம பூதங்களான சப்தம், ஸ்பர்சம், ரூபம், ரஸம், கந்தம் என்கிறவை தன்மாத்ரை எனப்படும். லலிதா சஹஸ்ரநாமத்தில் பஞ்ச தன்மாத்ர சாயகம் என்று இவை குறிப்பிடப்படுகின்றன. ரூபம், ரஸம், கந்தம், ஸ்பரிசம் ஆகிய நான்கால் நம்முடைய நான்கு இந்திரியங்களை ஆகர்ஷிப்பது புஷ்பம். அதன் அழகு கண்ணுக்கும், அதில் சுரக்கிற தேனின் ரஸம் நாக்குக்கும், வாசனை மூக்கிற்கும், மென்மை தொடு உணர்ச்சிக்கும் இன்பம் தருகின்றன. நாணாக இருக்கும் ரீங்காரம் செய்யும் வண்டுகள் செவிக்கு இன்பம் தருகின்றன.
<p>ஆசையே (காமம்) பிரபஞ்சத்தின் வித்து. லீலா விநோதமாய் இறைவனின் மனதில் எழுந்த ஆசையே பிரபஞ்சமாக உருவானது. அத்வைதத்திலிருந்து த்வைதமாய், பரம்பொருளுக்கு அன்னியமாய் காணப்படும் பிரபஞ்சம் காமத்தால் (இச்சையால்) உண்டானது. பின்னர் பரம்பொருளுடன் ஜீவன்களை ஒன்ற செய்து த்வைதத்தை அத்வைதமாக்குவதும் இறைவனின் லீலை — அவனது சக்தியான அம்பாளின் சொரூபமுடைய காமாக்ஷியின் லீலை. காமாக்ஷி அன்னை மோகத்தைத் தூண்ட வல்ல கரும்பு வில்லையும் புஷ்ப பாணங்களையும் மன்மதனுக்கு தந்து சிருஷ்டி லீலை நடக்க அனுகூலமான சூழ்நிலையை ஏற்படுத்த பணித்தாள். அம்பாள் தந்த உபகரணங்களை சிவபெருமானிடம் அன்புடனும் பக்தியுடனும் சமர்ப்பிக்காமல் அகம்பாவத்துடன் அவர் மேலேயே உபயோகித்த காரணத்தால் அவற்றை இழக்க நேரிட்டு பின்னர் அதை அம்பாள் கருணையால் திரும்பவும் பெற்ற கதை சுவாரசியமானது. .
<h3 style="font-size: 120%; color: brown;">காம தகனம் </h3>
<p>தாரகாசுரன், சூரபத்மன் போன்ற அவுணர்களால் நாடிழந்து துன்பப்பட்ட தேவர்கள் அவ்வசுரர்கள் அழிக்கவல்ல மகனை தருமாறு சிவ பெருமானை நாட திட்டமிட்டார்கள். அந்த சமயம் சிவ பெருமான் தக்ஷிணாமூர்த்தியாக தபஸில் இருந்ததால் தேவர்கள் பிரம்மாவை சரணடைய, பிரம்மா தயங்கி நின்ற தன் மகன் மன்மதனான காமனை மசிய வைத்தார்.
<p>மன்மதனுக்கு தன் அழகில் அஹம்பாவம் இருந்தது. பரமேச்வரன் மனதை ஜயிக்கக்கூடிய மஹாசக்திமான் என்ற தொழில் திறனில் கொண்ட மமதையுடன் யோக நிலையிலுள்ள சிவன் மீது பாணம் விட்டான். கைலாயத்தில் மன்மதன் விட, சிவபெருமானின் யோகம் கலைந்து பார்வதி அன்னை பற்றி ஆசை எண்ணம் இமைப்பொழுது தோன்றியது. கோபப்பட்ட அவர் நெற்றிக்கண்ணால் மன்மதனை எரித்தார்.
<p>ஞான சாகரமாக இருந்த தக்ஷிணாமூர்த்தியை கிருபாசாகரமாக்கி ஜீவராசிகளின் துயர் தீர்க்க வைக்க அம்பிகை நிச்சயித்தாள். அது தாரகாதிகளின் வதத்துக்காக மட்டுமல்ல, ஜீவர்களின் கஷ்டங்களையும், அஞ்ஞானத்தையும் போக்குவதற்காக. ஏனென்றால் கர்மா பாக்கியோடு மரணம் அடைந்த பெருவாரியான மக்களுக்கு மறுபடி ஜன்மா எடுத்தால்தான் சித்தசுத்தி செய்து கொண்டு, கர்மாவை தீர்த்துவிட்டு ஜனன நிவிருத்தி பெறமுடியும். அம்பாள் மன்மதனுக்குத் தந்திருந்த கரும்பு வில்லையும், புஷ்ப பாணங்களையும் ஈஸ்வரனுடைய பாதத்தில் அர்ப்பணம் செய்து நமஸ்கரித்து அன்புமயமாக அவரைப் பார்த்தாள். கரும்பு வில்லும், மலரம்பும் தரித்து, இப்படி அன்பு பொங்கப் பார்த்தபோதுதான் அவளுக்கு காமாக்ஷி என்று பேர் வந்தது.
<p> அவள் வேறு, ஈஸ்வரன் வேறு அல்ல, ஒன்றேதான். ஈஸ்வரனுடைய ஞானத்திலேயே காருண்யமும் பொங்கியிருக்க வேண்டும் என்று அம்பாள் எண்ணினாள். சிவபெருமானும் நடந்த நிகழ்வுகளை ஞான திருஷ்டியால் அறிந்து, உலக நன்மைக்காக பர்வத மலைக்கு சென்று பார்வதிதேவியை மணம் புரிந்தார். இந்த நிலையில் ரதி தன் கணவனைத் திரும்ப தரும்படி அழுது புலம்பவே ரதியின் கண்களுக்கு உருவமாகவும், மற்றோர்க்கு அரூபமாகவும் அனங்கனாகவும் இருக்கும்படி வரமருளினார். பிறகு பார்வதி கல்யாணம் – அதன்பின் குமார ஸம்பவம் அதாவது முருகக் கடவுளின் உற்பத்தி, அப்புறம் சுப்பிரமணியரால் தாரகன், சூரபத்மா ஆகியோரின் சம்ஹாரம் எல்லாம் நடந்தன.
<h3 style="font-size: 120%; color: brown;">காம தகன தத்துவம் </h3>
<p>அனங்கன் என்ற சம்ஸ்கிருத்ச் சொல்லுக்கு அங்கம்/ உடல் அற்றவன் எனப் பொருள். உடல் ரீதியான கீழ்த்தரக் காமத்தை ஒழித்தால் மனைவியரிடத்தே அன்புடன் கூடிய அக நட்பு மலரும் என்பதே இதில் அடங்கிய தத்துவம். சிவன் எரித்தது காம வெறியைத் தான்; உள்ளன்பு பூர்வமான காமத்தை அன்று. மோட்சத்தை அடைய ஈசனை வேண்டுவோர் முதலில் ஒழிக்க வேண்டியது காமமே. மனதின் காமத்தை வெல்ல நாம் நெற்றிக் கண்ணை திறந்து மனதை முழுமையாக அழிக்க வேண்டும்.
<h3 style="font-size: 120%; color: brown;">மன்மதன் தவம் </h3>
<p> காஞ்சீ மண்டலத்தின் மத்ய பாகத்தில் கம்பா நதி, வேகவதி நதி இவ்விரு ஆறுகளுக்கும் இடையில் உள்ள புண்ணிய பிரதேசமான காமகோஷ்டம் / காமகோட்டத்தில் பிலாகாச ரூபிணியான அம்பிகை காமனின் கரும்பு வில்லையும், மலர் பாணங்களையும் தாங்கிக் காமாக்ஷியாக வீற்றிருக்கிறாள். பரதேவதை இந்தப் பஞ்ச பாணங்களைத் தன் திருக்கரங்களில் பிடித்து நம்முடைய இந்திரியங்களை ஒடாமல் தன் பிடிப்பில் வைத்துக் கொண்டு ரக்ஷிக்கிறாள். அவளுடைய கையில் மனோரூபமான கரும்பு இருப்பதால் நம் சித்த விவகாரங்கள் எல்லாம் நசிக்கின்றன. பூலோகத்தை ஒரு ஸ்திரீயாகப் பாவித்தால் அதன் பிலாகாசம் என்ற நாபி ஸ்தானத்தில் காமாக்ஷியின் வாஸஸ்தானமான கர்ப்பகிருஹம் இருக்கிறது. பிலம் என்றால் குகை. கர்ப்பத்திலிருக்கிற குழந்தை பெறும் ஆகாரம் போல் சகல ஜீவராசிகளும் இந்த பிலாகாசத்திலிருந்துதான் அம்பாளின் சகல சக்திகளையும் பெறுகிறார்கள்.
<p>காஞ்சியின் சிறப்பை அறிந்த மன்மதன் காஞ்சிபுரத்திற்கு வந்து தபஸ் செய்து மக்களிடையே தான் முந்தைய அந்தஸ்தை பெற வேண்டும் என்று வேண்டினான். அம்பாள் உடனே கைலாஸத்திலும், மற்ற எல்லா சிவாலயங்களில் உள்ள அம்பாள் சந்நிதிகளிலும் இருக்கிற தன்னுடைய சக்தியையெல்லாம் இந்த பிலாகாசத்துக்குள் அடைத்துக் கொண்டு விட்டாள். இதை பார்த்த பிரம்மா காமாக்ஷியிடம் ஈஸ்வரனுக்காகப் பரிந்து தூது பேசினார். அம்பாள் மறுபடியும் தன் ஜீவசக்தியை கைலாசத்துக்கும் மற்ற க்ஷேத்ரங்களுக்கும் அனுப்பி வைத்தாள். காமனும் தான் இழந்த அந்தஸ்தை மீண்டும் பெற்றான்.
</div>
<!-- Go to www.addthis.com/dashboard to customize your tools --> <script type="text/javascript" src="//s7.addthis.com/js/300/addthis_widget.js#pubid=ra-5a756e49e8eaa960"></script>
Uma Shankarihttp://www.blogger.com/profile/11875827154360557920noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1912487802559660431.post-15239763475604446292023-12-14T21:21:00.001+05:302023-12-14T21:21:21.358+05:30பாற்கடல் கடைதல் - தத்துவ விளக்கம்<div lang="ta">
<span id="red">ஆடக மந்தர நீர்க்கு அசையாமல் உரம் பெற நாட்டி</span> : பொன் மயமான மந்தர மலையை பாற்கடல் நீரில் அசையாதபடி வலிமையுடன் மத்தாகப் பொருத்தி வைத்து, <br>
<span id="red">ஒரு ஆயிரம் வெம் பகுவாய்ப் பணி கயிறாக </span>: ஒப்பற்ற ஆயிரக் கணக்கான வெப்பம் மிகுந்த பிளவான நாக்குகளை உடைய பாம்பாகிய வாசுகியை (மத்தின்) கயிறாகச் சுற்றி, <br>
<span id="red">ஆழி கடைந்து அமுது ஆக்கி </span>: பாற்கடலைக் கடைந்து அமுதத்தை வரவழைத்து,<br>
<span id="red">அநேகர் பெரும் பசி தீர்த்து அருள் ஆயன் </span>: இந்திராதி தேவர்களுடைய மிகுந்த பசியை நீக்கி (மோகினியாக) அருள்புரிந்தவனும், ஆயர் குலத்தில் அவதரித்தவனுமான திருமால் <br> (திருப்புகழ் பாடல் <a href="https://thiruppugazh-nectar.blogspot.com/2016/11/420.vedar-sezhumthinai.html" target="_blank">420. வேடர் செழுந்தினை</a>)<br><br>
<h3 style="font-size: 120%; color: brown;">பாற்கடல் கடைந்த கதை</h3>
<p>ஒரு காலத்தில் இந்திரன் துர்வாச முனிவர் அளித்த மலர் மாலையை அலட்சியமாக தன்னுடைய யானைக்கு அணிவித்தான். யானை அதை தன் தும்பிக்கையால் பிய்த்து எறிந்ததை பார்த்த முனிவர் கடுங்கோபம் கொண்டு தேவர்களின் வலிமையும் அதிர்ஷ்டமும் மறைந்து போகும்படி சாபம் அளித்தார். அந்த சாபத்தின் மூலம் தேவர்கள் மிகவும் வலிமை குறைந்தவர்கள் ஆகி விட்டனர். எல்லா அண்ட சராசரமும் அசுரர்கள் ஆட்சிக்கு கீழ் வந்தது.
<a name='more'></a>
<p>தோற்று போன தேவர்களின் வலிமையை மறுபடியும் மீட்டு கொண்டு வர திருமால் அவர்களுக்கு பாற்கடலை கடைந்து அமிர்தத்தை பெறுமாறு பரிந்துரைத்தார். மேலும், தான் ஆமை அவதாரம் கொண்டு மந்திர மலை பாற்கடலுள் மூழ்காமல் இருக்க அதை தாங்கி நிலை பெற செய்து, ஆதிசேஷனின் சகோதரனான வாசுகி எனும் பாம்பை கயிறாக பிணைத்து, தேவர்கள் வாலையும் அசுரர்கள் பாம்பின் தலையையும் பிடித்து பாற்கடலை கடையுமாறு பணித்தார்.
<p>ஏகாதசியன்று இரவு முழுவதும் தூங்காமல், பாற்கடலைக் கடைந்தார்கள். கடல் கடையப்படும் போது, பல பொருட்கள் வெளிவர தொடங்கின. முதலில் மிகவும் கொடிய ஆல கால விஷம் வெளி வந்து தன் நெடியால் எல்லோரையும் தாக்கி பலரை மயக்கமடைய செய்தது. தேவர்களின் துன்பங்களை போக்க, சற்றும் யோசிக்காமல் சிவ பெருமான் ஆல கால விஷத்தை தன் வாய் வழியே பருக ஆரம்பித்தார். பார்வதி தேவி சிவபெருமானின் கழுத்து பகுதியை பிடிக்க, அந்த விஷம் சிவபெருமானின் கழுத்துலேயே தங்கியது.
<p> மறுநாள் காலை துவாதசியன்று உச்சிஷிரவஸ், கௌச்துபம், சந்திரன், லக்ஷ்மி தேவி, அப்சரஸ் தேவதைகள், காம தேனு, பாரிஜாதம், கற்பகவிருக்ஷம், ஐராவதம், எல்லாம் கடலிலிருந்து வெளிப்பட்டன. கடைசியாக, தன்வந்திரி தேவன் அமிர்த குடுவையுடன் வெளியே வந்தார். அந்த அமிர்தத்தை உண்ணவேண்டும் என்று தேவர்களும், அசுரர்களும் போட்டியிட்டனர். <p>விஷ்ணு பகவான் அழகிய "மோகினி" என்ற பெண் வடிவம் எடுத்து அமிர்தம் பகிர்ந்து கொடுக்க முன் வந்தாள். மோகினி தேவர்கள் மெலிந்து கிடப்பதை காரணம் காட்டி முதலில் தேவர்களுக்கு அமிர்தம் கொடுத்து விட்டு பின் அசுரர்களுக்கு அமிர்தம் கொடுப்பது போல ஒரு பிரமையை ஏற்படுத்தி, அமிர்தத்தை தேவர்களுக்கு மட்டுமே கொடுத்தாள். அமிர்தத்தை உண்ட தேவர்கள் புதிய வலிமையும், பொலிவும் பெற்று பரமேஸ்வரனை மறந்து போதையில் இருந்தனர். அவர்களை எதிர்க்க முடியாத அசுரர்கள் ஓடி ஒளிந்தனர். மறுநாள் திரயோதசி அன்று தேவர்கள் செய்த தவறை உணர்ந்து வெட்கம் மேலிட்டு ஈஸ்வரனிடம் மன்னிப்பை வேண்டினர். ஈசனும் அவர்கள் செய்த தவறை மன்னித்தார்.
<h3 style="font-size: 120%; color: brown;">பாற்கடல் தத்துவ விளக்கம் </h3>
<p>அமிர்தம் கடைதல் என்ற கதை வாசி யோகம் பற்றிய விபரங்கள் சொல்கிறது. இந்த கதையில் வரும் எல்லா கதா பாத்திரங்களும் ஒரு உருவகம். பாற்கடல் போல அலை பாய்ந்துக்கொண்டே இருக்கும் நம் மனம் மற்றும் உடல் (இந்திரன்) துர்வாசர் போன்ற சான்றோர்களின் சொற்களை புறக்கணித்து தாழ்ந்த கீழான நிலை பெற்று பலவீனம் அடைகிறது. நம் புலன்களை அடக்காமல் மனதை ஆராய்வது (கடைவது) என்பது இயலாத காரியம். ஏனென்றால் அதில் நல்லவை கெட்டவை என்று எல்லா எண்ணங்களும் ஒளிந்து கொண்டு உள்ளன; 5 புலன்களும் கட்டுப்பாடு என்னும் கூர்மத்தால் அடக்கப்பட்டு மனது கடையப்படும் போது அவை ஒவ்வொன்றாக வெளிவருகின்றன.
<p> பாற்கடலிலிருந்து அமிர்தம் கடைந்து எடுக்கும் புராணக்கதை ஸூக்ஷ்மமாக தெரிவிக்கும் தத்துவம் என்னவென்றால் யோக மார்கத்தால் நற்குணங்களையும் தீய குணங்களையும் சீர்படுத்தினால் மரணத்தை வென்று பெருவாழ்வு பெறலாம் என்பதே. பிரபஞ்ச வெளியில் இருந்து உடலுள் மூச்சாக வரும் காற்றை நெறிபடுத்தி மூலாதாரத்தில் பாம்பாக சுருண்டு கிடக்கும் குண்டலினி என்னும் சக்தியை ஆதாரத் தளங்களில் நிறுத்தி உரிய முறைப்படி அஷ்டாங்க யோகமாக செய்வது வாசி யோகம். மேருமலை முதுகுத்தண்டைக் குறிக்கிறது. முதுத்தண்டின் இரு பக்கமும் செல்லும் இடகலை - பிங்கலை நாடி வழியே மூச்சுக்காற்று சதா ஓடிக்கொண்டிருக்கிறது. மந்திர மலை என்பது பிரணவ மந்திரம் அல்லது குண்டலினி சக்தியை மேல் நோக்கி எழச் செய்யும் மந்திரம். இதன் உச்சரிப்பால் இடகலை பிங்கலை வழியே மாற்றி மாற்றி ஓடும் மூச்சுக்காற்று சுஷுமுனை நாடி வழியாய் மேல் எழுகிறது. குண்டலினி ஸ்வாதிஷ்டானத்தை கடக்கும் போது காம இச்சைகள் விஷமாக வெளி வந்து நற்குணங்களான தேவர்களுக்கு ஊறு விளைவிக்கின்றன. அவர்கள் <a href="https://areshtanaymi.in/?p=1555" target="_blank">ஆக்ஞா சக்கரத்தில் இருக்கும் சிவ</a>த்திடம் முறையிட்டு அவர் அருளை பெறுகிறார்கள். மந்திர மலையை தாங்கி பிடிக்கும் மணிபூரக சக்கரத்தில் இருக்கும் திருமால், ஆமை போல் லோக மாயையை அடக்கி, அந்த மந்திரத்துள் மனதை நிலை நிறுத்துகிறார். குண்டலினி சக்தி மேலே ஏறி சகஸ்ராரத்தை அடைகிறது; அசுரர்கள் வெளியேறுகிறார்கள்; மனம் பஞ்சேந்திரியங்கள் சிவத்திடம் ஒடுங்க, காமம் அடங்கி, சக்தி எழும்பி, அமுதம் சுரக்கிறது.
<p> மேலும் பாற்கடலை கடையும்போது லட்சுமி, தன்வந்திரி, சந்திரன், கற்பக விருட்சம், காமதேனு, ஐராவதம் போன்றவை வந்தது என்பது வாசியோகத்தில் சித்தி பெற்ற ஒருவனுக்கு முறையே செல்வம் (நிறைவு), ஆரோக்கியம், சித்தத் தெளிவு, நினைத்தது கைகூடும் ஆற்றல், தேக பலம் கிடைக்கும் என்பதற்கான உருவகம். இதில் அமிர்தம் என்பது, முக்தி நிலை என்றும் பொருள் கொள்ளலாம். அல்லது, நிலையான வாழ்க்கை என்றும் பொருள் கொள்ளலாம்.
</div>
<!--
இந்தக் கதை என்ன சொல்ல வருகிறது? அசுரர் - தேவர் என்பவை எதைக் குறிக்கின்றன? பிரபஞ்சத்தின் உருவாக்கம், அல்லது வெளிப்பாடு சில இலக்கணங்களின்படி நடக்கிறது. பிரபஞ்சத்தில் அடிப்படையாக இரண்டு சக்திகள் இயங்குகின்றன. ஒரு சக்தி அனைத்தையும் ஒன்றிணைத்து ஒருமை நிலையை(Oneness) நோக்கி கூட்டிச் செல்கிறது. மற்றொரு சக்தி அனைத்து அம்சங்களையும் பிரித்துப் பன்மையின்(Multiplicity) விரிவுக்கு இட்டுச் செல்ல விழைகிறது. இவை இரண்டுமே முக்கியமானவை.
பிரபஞ்சத்தின் தொடர்ந்த இருப்புக்கு அவசியமானவை. இரண்டாவது சக்தி இல்லையென்றால் எல்லாம் ஒன்றுகூடி ஒரு பரமாணுவுக்குள் (State of Singularity) முழுப் பிரபஞ்சமும் சென்று அடங்கிவிடும். காலம்-வெளி எல்லாம் இல்லாமல் போய்விடும். மறுபுறம் முதல் சக்தி இலையென்றால் அனைத்தும் முடிவற்று விரிந்துபோய்ப் பிரபஞ்சம் வெறும் சக்திப் படலமாகிவிடும். இந்த இரண்டு சக்திகள்தாம் தேவர்களும் அசுரர்களும். ஒருமை நோக்கிச் செல்வது தேவசக்தி. பிரிவை நோக்கி இட்டுச்செல்வது அசுரசக்தி.
பிரபஞ்சம் நிலைத்து இருப்பதற்கு இந்த இரண்டு சக்திகளின் சமநிலை அவசியமானது. இந்தச் சமநிலை அசைவற்ற விறைப்பான நிலை அல்ல; மிகவும் இயக்கபூர்வமான சமநிலை அது. எந்த ஒரு கணத்திலும் இரண்டு சக்திகளும் ஒன்றையொன்று மேற்சென்று ஆதிக்கம் செலுத்தும் விழைவுடனேயே இயக்கம் கொள்கின்றன. எந்நேரமும் ஒரு இழுபறி இந்த இரண்டு சக்திகளுக்கிடையில் இயங்கிக்கொண்டேதான் இருக்கிறது.
புறப் பிரபஞ்சத்தில் மட்டுமில்லாமல் அகத்திலும் இந்த இரண்டு சக்திகளும் இதேபோல் இயங்கிக்கொண்டு இருக்கின்றன. கவனத்துடன் பார்த்தால் நம் மனத்தில் இது நிகழ்ந்துகொண்டிருப்பதை நாம் உணர முடியும். அணுக்கள் சேர்ந்து ஒரு பொருள் உருக்கொள்வதும், காலத்தின் போக்கில் அந்தப் பொருள் உருவிழந்து இல்லாமல் அழிந்துபோவதும் இந்தச் சக்திகளால்தான்.
மரணத்துக்கு அப்பாற்பட்டது
பாற்கடல் கடைவது என்னும் நிகழ்வு எப்போதோ இறந்தகாலத்தில் நடந்த ஒரு சம்பவமல்ல; பிரக்ஞையின் ஆழத்தில் இது இப்போதும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. இந்த இரண்டு சக்திகளும் நாம் அல்ல. இந்த இரண்டு சக்திகளையும் சமநிலைக்குக் கொண்டுவருவது நம் வேலை.
அதற்கு நாம் இவற்றில் எந்த ஒன்றுடனும் சேர்ந்துகொள்ளாமல், இந்த இயக்கத்துக்கு வெளியில் ‘நான்’ என்ற சுத்தப் பிரக்ஞையாக நின்று கவனத்தில் மையம் கொண்டால், அமிர்தம் வெளிப்படும். மரணம் என்பதன் உண்மையான அர்த்தம் துலங்கும். நம்மிடத்தில் எது மரணத்துடன் முடிந்து போகும், எது மரணத்துக்கு அப்பாற்பட்டது என்னும் தெளிவு கிடைக்கும்.
மரணத்துடன் முடிந்துபோகும் அம்சங்களான உடல், மனம் இவற்றையே ‘நான்’ என்று இப்போது கருதிக்கொண்டிருக்கிறோம். இவை இரண்டும் ஒவ்வொரு கணமும் உருக்கொண்டு அடுத்த கணமே இல்லாமல் போகும் அணுக்களையும் எண்ணங்களையும் சார்ந்து இருப்பவை. தமக்கெனத் தனி இருப்பு இல்லாதவை. இருப்பவை போன்ற தோற்றம் மட்டுமே கொண்டிருப்பவை.
ஆனால், உடல், மனம் இரண்டையும் அறியும் அறிவுணர்வான ‘நான்’ என்னும் ஆன்ம சக்தியே மரணத்தினால் அழியாதது. ஏனெனில் அது பொருளாலோ எண்ணத்தாலோ உருக்கொண்டிராதது. பிரபஞ்சத்தின் ஆதாரமான உயிர்சக்தியே ஒவ்வொரு உயிரிலும் ‘நான்’ என்ற உள்ளொளியாக விகசிக்கிறது.
உருக்கொண்டு நிலைக்கும் பிரபஞ்ச தத்துவமே விஷ்ணு என்று கொள்ளப்படுகிறது. இந்தப் பிரபஞ்சத்தின் எல்லைகளுக்கு அப்பால் காலதேசமற்று விரியும் உருக்கடந்த ஆதார தத்துவமே சிவன் என்று சொல்லப்படுகிறது. தேவ சக்தியும் அசுர சக்தியும் ஒவ்வொரு கணமும் சமநிலைக்கு வருகின்றன. உடனே மீண்டும் சமநிலையிழந்து போகின்றன. இந்த இரண்டிலும் சிக்கிக்கொள்ளாமல் தனித்து நின்று, ‘நான்’ என்னும் சுயவுணர்வில் நிலைகொண்டால், அந்தச் சமச்சீர்நிலையில் வெளிப்படும் உன்னதமே அமிர்தம். அதுவே மரணம் கடந்த பெருநிலைக்கு இட்டுச் செல்லும். இதுதான் வாழ்வின் பயன்.
-->
<!-- Go to www.addthis.com/dashboard to customize your tools -->
<script type="text/javascript" src="//s7.addthis.com/js/300/addthis_widget.js#pubid=ra-5a756e49e8eaa960"></script>
Uma Shankarihttp://www.blogger.com/profile/11875827154360557920noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1912487802559660431.post-40762732566618074642022-06-06T08:03:00.006+05:302022-06-08T21:03:58.053+05:30Jambukeswarar Temple At Thiruvanaikaval
<style>
blockquote {
width : 40%;
float : right;
color: #ff99aa;
font-weight: bold;
font-style: italic;
margin: 1em 2em;
border-left: 4px solid #999;
padding-left: 1em;
position: relative;
}
blockquote p:first-letter {
float: left;
margin: .2em .3em .1em 0;
font-size: 110%;
font-weight: bold; }
blockquote::after{
content: "\201D"; /*Unicode for Left Double Quote*/
/*Font*/
font-size: 60px;
font-weight: bold;
color: #999;
/*Positioning*/
position: absolute;
right: 2px;
bottom: -.75em;
}
</style>
<p>Jambukeswarar Temple at Thiruvanaikaval, a Suburb of Tiruchrirapalli, is on the northern bank of the river Kaveri at the Srirangam river island, being surrounded by the Kaveri and the Kollidam river, which splits itself here from the Kaveri. It was built by an early Chola King called Kochengat Cholan.
<p>According to the legend, Lord Shiva sent Goddess Parvati to perform ‘tapasya’ at the Jambu forest of Thiruvanaikaval, as He was offended by her mocking light heartedly his austerity. Parvati built a Shivalinga under the ‘venn naaval’ (white Jambu fruit) tree, with the water from River Ponni. After years of tapasya, Shiva appeared before Akilandeswari and gave her Shiva gnana (knowledge). Shiva stood facing west and gave Upadesa to Akilandeswari who stood facing east.
<p>Another legend says that two Shiva <i>gana</i>s, Malyavan and Pushpadanta, always fought with each other. Once, both of them cursed each other out of rage, as a result of which both descended onto earth, Malyavan as a spider and Pushpadanta, an elephant. Both of them worshipped Lord Shiva at Jambukeswaram. The spider would build a web over the top of the Shivalinga to protect it from adverse weather. Similarly, the elephant would anoint the Shivalinga with water from the Cauvery, thus inadvertently destroying the web made by the spider. This continued for a long time, much to the exasperation of the spider.<a name='more'></a>
<p>One day, the spider caught the elephant in the act. Incensed, the spider crawled into the elephant's trunk and bit him to death. The spider died too, having been trapped inside. Their devotion pleased Lord Shiva, and He granted both their original forms. Since then the place came to be known as ‘Thiru Aanai Kaa’, which can be translated as the holy forest ('kaa') of the elephant ('aanai'). <blockquote><p>Enacting the penance of Parvati as Akil-andeswari, the temple priest dresses as a woman in a sari and offers prayer every day at noon to Lord Jambukeswarar </blockquote>
<p> The spider was reborn as the King Kochengan Chola, who built several temples, including the Jambukeswarar temple. The entrance of the sanctum sanctorum was made small enough to avoid entry to even a small-sized elephant! The innermost anctum housing the Shivlinga is the Appu Lingam (water Lingam) underneath which is a subterranean spring that bathes the lingam perennially. One of the special special feature of the temple is that the temple priest dresses as a woman in a sari and offers prayer every day at noon to Lord Jambukeswarar.
<div class="separator" style="clear: both;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiyrWoVLlqK5x3hc8hm2p-zcfufFJX-vWU3cgnB1OnKr2NN0K3l7SRDeaRpENboQywgj0tbg_dlyMxDBPiGHwYdeOiNVflM7r8GH85DiosGUtNoyvGOuW4Ctj-YSkm4PATCoIqBqfyoHl1WWh-AfXstYBs91x28RIZa0f5kyizooubMXyoz9IvcBGUm/s960/thiruvanaikkaval%20temple.jpg" style="display: block; padding: 0.75em; text-align: center; clear: left; float: left;"><img alt="" border="0" width="320" data-original-height="960" data-original-width="960" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiyrWoVLlqK5x3hc8hm2p-zcfufFJX-vWU3cgnB1OnKr2NN0K3l7SRDeaRpENboQywgj0tbg_dlyMxDBPiGHwYdeOiNVflM7r8GH85DiosGUtNoyvGOuW4Ctj-YSkm4PATCoIqBqfyoHl1WWh-AfXstYBs91x28RIZa0f5kyizooubMXyoz9IvcBGUm/s320/thiruvanaikkaval%20temple.jpg"/></a></div><p>There is no Thiru Kalyanam conducted in this temple for Shiva and Parvathi, as it is a Upathesa sthalam. It is believed that the Amman in the temple was in deep anger hence during one of Adi Sankara’s visit he installed the Prasanna Ganapathy idol right opposite to her Sannathy and installed a pair of Sri Chakra thaatankas to reduce her anger.
<div class="separator" style="clear: both;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGNrW4nTx4gDeC1JgKO22cuAQNw8USjIi-ZkRI7rFFO2d3UVMCUjSr5TPEzJWWIt9vu5EDZ-o1kkvZ9jyv_41VqeWjcquO4crOIPI5BlHXC6UzXXky9-MtzsnGZYVOoc90SnQSlRhP4HfCLsrTPe9DYWDB6tvJMS_Ghn2t1dfeq1FouhFKoLqHl_Ti/s960/thirvan%20temple2.jpg" style="display: block; padding: 0.75em; text-align: center; clear: left; float: left;"><img alt="" border="0" width="320" data-original-height="645" data-original-width="960" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGNrW4nTx4gDeC1JgKO22cuAQNw8USjIi-ZkRI7rFFO2d3UVMCUjSr5TPEzJWWIt9vu5EDZ-o1kkvZ9jyv_41VqeWjcquO4crOIPI5BlHXC6UzXXky9-MtzsnGZYVOoc90SnQSlRhP4HfCLsrTPe9DYWDB6tvJMS_Ghn2t1dfeq1FouhFKoLqHl_Ti/s320/thirvan%20temple2.jpg"/></a></div>
<p>The temple is well known for its stupendous, towering and exquisitively carved, monolithic stone pillars. The four pillars which are found immediately after entering the temple are most decorated.
<!-- Go to www.addthis.com/dashboard to customize your tools --> <script type="text/javascript" src="//s7.addthis.com/js/300/addthis_widget.js#pubid=ra-5a756e49e8eaa960"></script>
Uma Shankarihttp://www.blogger.com/profile/11875827154360557920noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1912487802559660431.post-26500702104885455662022-05-27T19:42:00.015+05:302022-05-31T05:29:34.000+05:30 உயிர்கள் அனுபவிக்கும் ஐந்து உணர்வு நிலைகள்<style>
ul {
background: #773300;
padding : 2px;
list-style-type: none;
}
ul li {
background: floralwhite;
color: darkblue;
margin: 1px;
padding: 5px;
}
</style>
<div lang="ta">
<h3 style="color: chocolate; font-size: 16px; filter: brightness(0.4);">காரிய அவத்தைகளும் காரண அவத்தைகளும்</h3>
<p>அவத்தை / அவஸ்தை என்பது உணர்வு நிலை. அநாதியாகவே ஆணவ மலத்துடன் கூடியிருத்தலால் தானே சுயமாக அறிய முடியாத ஆன்மா உடலில் கருவி கரணங்களுடன் கூடி ஐந்து உணர்வு நிலைகளில் நின்று அறிகின்றது; செயலாற்றுகின்றது. உயிர் அடையும் ஐந்து நிலை வேறுபாடுகள் <b><u>காரிய அவத்தைகள்</u></b> எனப்படும். <a name='more'></a> இவை பின்வருமாறு :<br>
<ul>
<li><h3 style="color: chocolate; font-size: 16px; filter: brightness(0.4); display: inline;">நனவு</h3>– சாக்கிரம், பிரக்ஞை நிலை, <h6>Conscious mind linked to gross body or sthoola sharira :</h6> விழிப்புநிலையில் நாம் நம்மையும் நம் மனதில் பொதிந்திருக்கும் விருப்பங்கள், கவலைகள், எதிர்ப்பார்ப்புகள், ஆகிய எல்லாவற்றையும் உணர்கிறோம். ஜாக்ரத் என்பது முழுமையான தன்னுணர்வு நிலை. காது முதலான ஞானேந்திரங்களால், ஒலி முதலான விஷயங்களை அறிந்து வெளிப்பொருட்களுடன் தொடர்பு கொள்ளப்படுகிறது.
</li>
<li><h3 style="color: chocolate; font-size: 16px; filter: brightness(0.4); display: inline;">கனவு </h3>– ஸ்வப்னம், <h6>subconscious mind linked to subtle body :</h6> கனவுநிலை என்பது பாதி தன்னுணர்வு அழிந்த நிலை. விழிப்பு நிலையில் எது பார்க்கப்பட்டதோ, எது கேட்கப்பட்டதோ அதனால் ஏற்படும வாசனை மூலம் உறக்கத்தில் தோன்றும் பிரபஞ்சமே கனவு நிலை எனப்படும். </li>
<li><h3 style="color: chocolate; font-size: 16px; filter: brightness(0.4); display: inline;">உறக்கம்</h3>– சுஷுப்தி/சுழுத்தி, ஆழ்நிலை, <h6>unconscious mind linked with causal body : </h6>கனவுநிலையில் ஆழ்ந்து செல்லும் நிலை சுஷுப்தி. எதுவும் அறியப்படாது, ஆனந்தமாக தூங்கும் அனுபவ நிலையே தூக்கமும், முற்றிலும் தானற்ற நிலையும் ஆகும். </li>
<li><h3 style="color: chocolate; font-size: 16px; filter: brightness(0.4); display: inline;">பேருறக்கம்</h3> – துரியம், <h6>self-consciousness with pure awareness of their own non-dual Self and correspons to total silence/stillness of mind and body :</h6> தன்னிலையை இழந்து எல்லா உயிர்களின் ஒட்டுமொத்த தன்னிலையின் ஒரு பகுதியாக இயல்பாகத் திகழும் நிலை </li>
<li><u>உயிர்ப்பு அடங்கல் – துரியாதீதம்</u> </li>
</ul>
<p>ஒருவன் விழித்திருக்கும் பொழுது அவன் கனவு நிலையிலோ அல்லது உறக்க நிலையிலோ இல்லை; ஆழ்ந்து தூங்கும் பொழுது விழிப்பு அல்லது கனவு நிலையிலோ இல்லை; கனவு காணும் போது விழிப்பிலோ அல்லது ஆழ்ந்த தூக்கத்திலோ இல்லை; ஆனால் இம்மூன்று நிலையிலும் அடித்தளமாக துரிய நிலை இருக்கிறது. இந்நிலை விழிப்பும் ('பகலும்') இல்லை, ஆழ்ந்த தூக்கமும் ('இரவும்') இல்லை. கனவு கண்டு விழித்தவுடன் கனவில் கண்டதை நினைவு கூறுகிறோம். கனவு நிலையில் 'நான்' என்ற உள் உணர்வு அடித்தளமாக இருந்து கொண்டு எல்லாவற்றையும் ஒரு சாட்சி போல பார்த்து கொண்டிருக்கிறது. கனவில்லாத ஆழ்ந்த தூக்கத்தில் 'நான்' என்கிற உணர்வு இல்லாதிருந்தாலும், ஆழ்ந்த ஒரு உணர்வு விழித்திருப்பதால் நாம் விழித்தவுடன் 'நன்றாக தூங்கினோம்' என்று உணர்கிறோம். இந்த நிலையில் அறிந்து கொள்பவன், அறிவு, அறியப்படு பொருள் என்று எந்த பாகுபாடும் இல்லை. கனவற்ற தூக்கம் நமக்கு 'நான்' என்ற உணர்வைத் தாண்டி ஒரு எல்லையற்ற ஆத்ம உணர்வு இருக்கிறது என்று உணர்த்துகிறது. ஆழ்ந்த தூக்கத்தில் உணர்வற்று இருக்கிறோம்; ஆனால் துரிய நிலையில் வெளி உலக பிரக்ஞை இல்லாமல் முழு உள் விழிப்புடன் ஆத்ம உணர்வில் ஒன்றி இருக்கிறோம்.
<p>இவற்றுக்குக் காரணமாக விளங்குபவை <b><u>கேவலம், சகலம், சுத்தம்</u></b> என்ற மூன்றும் <b><u>காரண அவஸ்தைகள்</u></b>. கனவு காலத்தில் உயிர் உடல் முதலிய கருவிகள் இல்லாமல் முற்றிலும் ஆணவ மலத்தால் மறைக்கப்பட்டு இருக்கின்ற நிலையைக் 'கேவலம்' என்பர். விழித்துக்கொண்டிருக்கும் 'சகலம்' என்று வழங்கப்படும் நிலையில் உயிரின் வினைக்கு ஏற்ற உடல் கருவிகளை இறைவன் அதற்குக் கூட்ட, அதன் அறிவு ஆற்றல்கள் ஓரளவு விளங்கும். அதன் பின்னர் உயிர் பக்குவம் பெற்று ஐந்து மலங்களிலிருந்தும் நீங்கிப் பிறவியை அழித்துத் தூய்மை எய்திய நிலை 'சுத்தம்' எனப்படும்.
<p>இருள் செறிந்த அறையில் உள்ள ஒருவனது கண் இருள் வயப்பட்டு இருளில் மூழ்கி ஒன்றையும் அறியமாட்டாது நிற்றலைப் போன்றது கேவல நிலை. அவ்விருட்டு அறையில் கை விளக்கு ஒன்றை ஏற்றி வைத்தால் அதன் ஒளியில் அங்குள்ள பொருள்கள் ஓரளவு புலப்பட்டுத் தோன்றுதலைப் போன்றது சகல நிலை எனலாம். இவ்வுவமையை மேலும் சிறிது நுணுகி நோக்குவோம்.
<p>விளக்கொளியில் அறையிலுள்ள பொருள்கள் உள்ளவாறு புலப்படுவதில்லை. பொருள்களின் வண்ணமும் வடிவும் மாறித் தோன்றுதல் உண்டு. ஒரு மூலையில் வளைந்து கிடக்கின்ற கயிறு பாம்பாகத் தோன்றுதல் கூடும். இவ்வாறு பொருளியல்பு மாறுபட்டுத் தோன்றுவதற்கு எது காரணம்? விளக்கொளி காரணமா? இருள் காரணமா? விளக்கொளி எப்பொழுதும் பொருள்களை விளக்கிக் காட்டுமேயன்றி வேறுபடுத்திக் காட்டாது. பொருள்கள் வேறுபட்டுத் தோன்றுதல் இருளினால் விளைவதேயாகும்.
<p>விளக்கொளி வராதபோது பொருள்களை முழுதுமாக மறைத்து நின்ற இருளே விளக்கொளி வந்த காலத்தில் அவ்வாறு மறைக்க மாட்டாமல் அவ்வொளியின் சார்பினால் பொருள்களை மாறித் தோன்றும்படியாகச் செய்கிறது, அதுபோலவே, கேவல நிலையில் உயிரை முற்றிலுமாக மறைத்து நின்ற ஆணவ மலமாகிய இருள் சகல நிலையில் விளக்கொளி போன்றதாகிய மாயையின் சார்பினால் இழிந்த பொருளை உயர்ந்த பொருள் போலவும், துன்பப் பொருளை இன்பப் பொருள் போலவும் மாறித் தோன்றும்படியாகச் செய்கிறது.
</div>
<!-- Go to www.addthis.com/dashboard to customize your tools --> <script type="text/javascript" src="//s7.addthis.com/js/300/addthis_widget.js#pubid=ra-5a756e49e8eaa960"></script>
Uma Shankarihttp://www.blogger.com/profile/11875827154360557920noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1912487802559660431.post-12019257162840746742022-05-27T04:33:00.013+05:302022-05-31T05:33:07.561+05:30மும்மலங்கள் <div lang="ta">
<h3 style="color: maroon; font-size: larger;">மும்மலங்கள் என்றால் என்ன?</h3>
<p>சைவ சித்தாந்தத்தின்படி இறைவனைச் சென்றடைவதே உயிர்களின் நோக்கம். ஆயினும் உயிர்கள் இறைவனைச் சேரவிடாமல் அவற்றின் அறிவை அறிவற்ற சடப்பொருள்களான ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்கள் மறைத்துக் கொண்டிருக்கின்றன. இதனால் ஏற்படுகின்ற அறியாமையே உயிர்களின் துன்பங்களுக்குக் காரணம் என்பது சைவ சித்தாந்தக் கருத்து. உயிர்களை மலங்களின் பிணைப்பிலிருந்து விடுவித்துத் தன்னுடன் சேர்த்துக்கொள்ள இறைவனின் அருள் வேண்டும்.<a name='more'></a>
<ul>
<li>ஆணவம் :
மலங்களுள் முதன்மையானது மூல மலம் எனப்படும் ஆணவ மலம். ஆணவம் உயிரின் அறிவை முற்றாக மறைத்து அவற்றின் அறிவைக் கீழ் நிலைக்குக் கொண்டு செல்கிறது.</li>
<li>கன்மம் : செய்யும் கன்மம் /வினை நல்வினை அல்லது தீவினை எதுவாக இருந்தாலும் அவற்றுக்குரிய பலனை உயிர்கள் அடைந்தே தீரும்; பலன்களை நுகர்வதற்காக உயிர்கள் மீண்டும் மீண்டும் பிறக்கும்.<br>வினைகளிலும் மூன்று வகை உண்டு. <ul>
<li>பழவினை (சஞ்சிதம்) : முன்னைய பிறவிகளில் செய்த வினைகளுக்கான பலன்களாகும். </li>
<li>நுகர்வினை (பிராரத்தம்)</li>
<li>ஏறுவினை (ஆகாமியம்)</li>
</ul>
என்பனவாம். இவற்றுள், பழவினை என்பது நுகர்வினை; அந்தப் பிறவியிலேயே சேர்த்துக்கொணட வினைப் பயன்கள். ஏறுவினை என்பது வினைப்பயனை அனுபவிக்கும் போது உருவாகும் வினைப்பயன்களாகும். </li>
<li> மாயை : ஒரு சிறு விதை எவ்வாறு பெரும் மரங்கள் உருவாவதற்குக் காரணமாக அமைகின்றதோ அது போலவே மிக நுண்ணியதான இந்தப் மாயையும் பெரும் அண்டத்தின் உற்பத்திக்குக் காரணமாக அமைகின்றது. மாயை என்பது உயிர்களின் நுகர்ச்சிக்குத் தேவையானவற்றைப் படைத்துக் கொடுப்பதற்காக உள்ளது. இது ஒரு மலம் என்றவகையில் உயிர்களுக்குப் பகையாகக் கருதப்பட்டாலும், ஆணவ மலத்தின் பீடிப்பினால் முழுதுமாக மறைக்கப்பட்டுள்ள அறிவைச் சிறிதளவு வெளிப்படுத்த மாயை உதவும். சூரியன் இல்லாத இருட்டில் வழிகாட்டும் சிறிய விளக்கின் ஜ்வாலையை இதற்கு உவமையாகக் கூறுகின்றன சித்தாந்த நூல்கள்.</li>
</ul>
<p>
நெருப்பு விறகில் மறைந்து அப்பொருளாகவே நிற்குமன்றி வெளிப்பட நில்லாது. அது அதுவாய் நிற்றல் அதன் இயல்பு. நெருப்பினைப் போன்றது உயிர். தான் சார்ந்த பொருளோடு ஒன்றித் தான் என்பது தோன்றாது அப்பொருளாகவே நிற்பது உயிரின் இயல்பு. அத்தகைய உயிரை ஆணவ மலம் தன்னுள் பொதிந்து கொண்டு, தன்னை மறைத்து நிற்கும். ஆணவமாகிய இருளில் நிற்கின்ற உயிர் மாயையின் காரியமாகிய உடம்பை விளக்காகக் கொண்டு பொருள்களை அறியும். அவ்விளக்கு இல்லாவிடின் அஃது அறியாமை உடையதாகவே இருக்கும்.
<p>கன்மத்தினாலேயே கருவிகள் செயற்படுவதால், மாயையைப் போன்றே கன்மமும் அறிவை விளக்கும்.
<p>இருள் செறிந்த அறையில் உள்ள ஒருவனது கண் இருள் வயப்பட்டு இருளில் மூழ்கி ஒன்றையும் அறியமாட்டாது நிற்றலைப் போன்றது கேவல நிலை. கேவல நிலையில் மாயையின் செயற்பாடு இன்மையால் ஆணவம் தனது மறைத்தல் தொழிலை முழுமையாகத் தடையின்றிச் செய்கிறது. அதனால் உயிர் தனது அறிவை முற்றிலும் இழந்து சட்பபொருள் போலவே கிடக்கிறது.
<p>அவ்விருட்டு அறையில் கை விளக்கு ஒன்றை ஏற்றி வைத்தால் அதன் ஒளியில் அங்குள்ள பொருள்கள் ஓரளவு புலப்பட்டுத் தோன்றுதலைப் போன்றது சகல நிலை எனலாம்.
விளக்கொளியில் அறையிலுள்ள பொருள்கள் உள்ளவாறு புலப்படுவதில்லை. ஒரு மூலையில் வளைந்து கிடக்கின்ற கயிறு பாம்பாகத் தோன்றுதல் கூடும். இவ்வாறு பொருளியல்பு மாறுபட்டுத் தோன்றுவதற்கு விளக்கொளி காரணமாகாது. விளக்கொளி எப்பொழுதும் பொருள்களை விளக்கிக் காட்டுமேயன்றி வேறுபடுத்திக் காட்டாது. பொருள்கள் வேறுபட்டுத் தோன்றுதல் இருளினால் விளைவதேயாகும்.
<p>இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால், கேவல நிலையில் உயிரை முற்றிலுமாக மறைத்து நின்ற ஆணவ மலமாகிய இருள், சகல நிலையில் விளக்கொளி போன்றதாகிய மாயையின் சார்பினால் இழிந்த பொருளை உயர்ந்த பொருள் போலவும், துன்பப் பொருளை இன்பப் பொருள் போலவும் மாறித் தோன்றும்படியாகச் செய்கிறது.
<h3 style="color: maroon; font-size: larger;">ஆணவ இருளும், திருவருள் ஒளியும்</h3>
<p> ஆணவம் அறிவை மறைக்கின்ற அக இருள். உயிரிடத்து இறைவனும் அவனுக்கு எதிராகிய ஆணவ மலமும் ஒரே நேரத்தில் இருக்கின்றன. ஒளியும் அதற்கு எதிரான இருளும் ஓரிடத்தில் தான் உள்ளன. ஒன்று மேலிடும் போது மற்றொன்று மடங்கி நிற்கும். அதுபோலத் திருவருள் ஒளியும், ஆணவமாகிய இருளும் உயிரிடத்திலேயே உள்ளன. உயிர் தன் பக்குவக் குறைவினால் தன்னிடத்தே உள்ள திருவருள் ஒளியை உணராமல் ஆணவமலத்தையே பற்றி நின்று எல்லா வகைத் துன்பங்களையும் அனுபவிக்கிறது. உயிர் பக்குவம் பெற்ற காலத்தில் அஞ்ஞானமாகிய இருள் மறைந்து மெய்ஞ்ஞானமாகிய திருவருள் மேற்படும்.
</div>
<!-- Go to www.addthis.com/dashboard to customize your tools --> <script type="text/javascript" src="//s7.addthis.com/js/300/addthis_widget.js#pubid=ra-5a756e49e8eaa960"></script>
Uma Shankarihttp://www.blogger.com/profile/11875827154360557920noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1912487802559660431.post-7303047485634863422022-05-26T07:44:00.013+05:302023-07-11T20:52:51.302+05:30சைவ சித்தாந்தம் பகுதி 3 : பதியின் இயல்பு <style>
:lang(en){ font-family: TimesNewRoman, "Times New Roman"; font-size: 16px; }
</style>
<div lang="ta">
<h3 style="color: maroon; font-size: larger;">இறைவனின் இயல்பு </h3>
<p>என்றும் எக்காலத்தும் விளங்கிக் கொண்டும், நிலையானதாகவும், எல்லா அண்டங்களையும் பொருள்களையும் உயிர்களையும் படைத்து தன் அருளால் இயக்கிக் கொண்டும் இருப்பவர் இறைவன். அந்த ஒப்பற்ற உயர்ந்த இறைவனை சொல்லாலும் பொருளாலும் மனித அறிவாலும் கருவிகளாலும் அளக்கவோ கணக்கிடவோ முடியாது. அந்த பரம்பொருள் எல்லா ஆன்மாக்களிலும் உள் ஒளியாக இயங்கிக் கொண்டுள்ளது. சிருஷ்டி முழுவதிலும் ஊடுருவி நின்றும், அதே நேரம் அனைத்துக்கும் அப்பால் காலமற்று நிற்கும் பிரக்ஞையாக செயல் படுகிறது.
<p>சைவ சித்தாந்தம் எவ்வித மாற்றமும் அடையாமல், என்றும் ஒரு தன்மை உடையதாய் நிற்கும் பொருளான சத்தாய் நிற்பதையே இறைவனின் உண்மை இயல்பு என்று கூறுகிறது. அறிவுடைப் பொருள் 'சித்து' என்றும், அறிவில்லா பொருள் 'அசித்து' என்றும் சொல்லப் பெறும். உலகம் தோன்றுவதற்குக் காரணம் மாறாத இருப்புடன், தோற்றமும் மறைவும் அற்ற அனந்தமாக, ஆகாசம் போல் சர்வ வியாபகமாக, எங்கும் நீக்கமற நிறைந்து இருப்பது ஸத்/சத்து தான். <a name='more'></a>
<p>சத் தன்னுள் சித் அல்லது பிரக்ஞை என்னும் அறிவுப் பொருளை கொண்டது. இதை 'ஆதி - அந்தம்' இல்லாத ஒரு அருட்பெருஞ்சோதி என்கிறார் ராமலிங்க வள்ளலார். 'சத்' தன்மையும் 'சித்' தன்மையும் சேர்ந்த தன்மைகளை உணரும் தருணம் தான் ஆனந்தம். சத், சித் 'பரம்பொருள்' ஆக இணைந்திருப்பதை உணருவதே சச்சிதானந்தம். இதுவே இறைவனின் மூல சொரூபம்; ஆகாயம் போல் எங்கும் பரந்து ஒன்றாயிருக்கும் தன்மை. இது நிர்குணப்ரம்மம் எனப்படுகிறது. இந்த சொரூப இயற்கை நிலையில் இறைவன் எவ்வித குணங்களும் அற்றவராக உருவமும் அற்றவராக எங்கும் நிறைந்திருக்கின்ற இயல்பு சொரூபம் கொண்டவர். நெருப்பிற்கு வெம்மை தன்மையும் பிரகாச தன்மையும் எப்படி சொரூபமாக இயல்பாக இருக்கின்றதோ அதைப் போல இறைவனின் சொரூபம் சத் சித் ஆனந்தம் (<span lang="en">eternal cosmic mind immersed in bliss</span>). பிரம்மம் சச்சிதானந்தமாகிய <b>சொரூபம் அல்லது நிர்க்குண நிலை</b>யில் அனைத்து ஆளுமைகளையும் கொண்டும் எத்தொழிலும் செய்யாது ஆளுமையற்று இருக்கிறது.
<!--more-->
<p>"தனியே சிவபெருமானைப் பற்றிக் கருதினால் : அவர் உருவம், அருவுருவம், அருவம் எனும் வடிவங்கள் அற்றவர். அறிவுள்ள பொருட்களாகவும் அறிவற்ற பொருட்களாகவும் உள்ள எந்த உலகப்பொருட்களாகவும் இல்லை. படைப்பு முதலான தொழில்களைத் தானே செய்பவனாகவும் இல்லை. தவம், யோகம், போகம் ஆகிய எதனையும் அவர் மேற்கொள்வதில்லை. இவை அவரோடு பொருந்தினாலும், அவர் பற்றப்படுவதில்லை" என்பதே சைவசித்தாந்த சாத்திர நூலாகிய சிவஞானசித்தியார் இறைவனின் சொரூப இயல்புக்கு தரும் இலக்கணம்.
<p>எண்ணற்ற சக்திகளை உடைய சிவம் சக்திகள் வெளிப்பட்ட நிலையில் உருவமாக ஈஸ்வரனாக காட்சி அளிக்கின்றார்.
இந்த நிலை எல்லாவற்றிலும் கலந்த தடஸ்தம் அல்லது இயற்கையோடு இயைந்து நிற்கும் சகுண நிலை. "சும்மா" இருக்கும் நிர்க்குண சிவப்பரம்பொருள் தடத்தநிலையில் எண்குணனாக, ஐந்தொழில்கள் பண்ணும் ஈஸ்வரனாக பரிணமிக்கிறார்.
<h3 style="color: maroon; font-size: larger;">சிவபெருமானின் எண்குணங்கள் </h3>
<ol>
<li>தன்வயத்தனாதல் - சுதந்திரம் உடையவனாக இருத்தல். அதாவது பிறர் வயப்பட்டு தொழிற்படாது, அனைத்திலும் சுதந்திரம் உடையவன். </li>
<li>தூய உடம்புடைமை - தூய உடம்பு என்றால், உடலிலிருந்து வெளியேரும் மலம் தனக்கும் பிறருக்கும் தீங்கு விளைவிக்காமல் இருக்கும் உடல் என்று அர்த்தம். இப்படிப்பட்டது, இத்தகையது என்ற வர்ணனைகளுக்குள் அடங்காத அருளையே தனது உடலாகக் கொண்டிருப்பவன். அருளே அவனது திருமேனி. </li>
<li>அளவிலா ஆற்றல் உடையவன் - அறிவித்தாலன்றித் தாமே அறியமாட்டாத உயிர்களையும் அசைவித்தாலன்றி தாமே அசையமாட்டாத பிரபஞ்சங்களையும் ஏககாலத்தில் அறிவித்து, அசைவித்து அனைத்தையும் ஆளுகின்ற ஆற்றல். எச்செயலையும் எக்காலத்திலும் செய்ய வல்லமை உடைவனாக இருத்தல்.</li>
<li>இயல்பாகவே பாசங்களில் இருந்து நீங்கியவன் - இறைவன் இயல்பாகவே ஆணவம், கன்மம், மாயை என்னும் பாசத்தில் இருந்து விலகி; தூய்மையானவனாக இருப்பவன்.</li>
<li>பேரருள் உடையவன் - ஆன்மாக்கள் தங்களைப் பிடித்துள்ள ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களாகிய பாசங்களை நீக்கி பேரின்பம் அனுபவிக்கச் செய்வது இறைவனின் பேரருள். உயிர்களுக்கு பிறவிகள் தந்து, வினைகளைப் போக்கி, ஆன்மாவை மெதுவாக பக்குவப்படச்செய்து, பாசங்களிலிருந்து நீக்கி விடுவித்து முக்தி வழங்குகிறார்.</li>
<li>இயற்கை உணர்வினன் - ஆன்மா கருவி கரணங்களின் துணையினால் அறிவிக்க அறிவது (ஐம்புலன்களின் துணையோடும் ஐம்பொறிகளின் மூலம் அறிந்து கொள்வது). ஆனால் இறைவன் தன்னியல்பால் அறிவுடையவானாக விளங்குதல். அனைத்தையும் இயல்பாகவே தானே அறியும் தன்மை உடையவன்.</li>
<li>முற்றுணர்வினன் - ஏக காலத்தில் அனைத்தையும் உணருகின்ற முற்றறிவு உடையவன். அதாவது ஒவ்வொரு பொருளையும் ஒவ்வொன்றாக அறியாமல் எல்லாப் பொருள்களையும் ஒரே நேரத்தில் அறிதல்.</li>
<li>வரம்பிலா இன்பம் உடையவன் / அளவிலா ஆனந்தம் உடையன் - பேரின்பம் உடையனாக யாதொரு குறையும் இல்லாதவன்.</li>
</ol>
<ul>
<li style="list-style-type: none;">தன்வயத்தனாதல், தூய உடம்புடைமை, முடிவிலா ஆற்றல் உடைமை, இயல்பாகவே பாசங்களில் இருந்து நீங்கிய தன்மை ஆகிய நான்கும் இறைவனின் சத்து தன்மைக்குள் அடங்கும். </li>
<li style="list-style-type: none;">முற்றுணர்வு உடைமை, பேரருள் உடைமை, இயற்கை உணர்வுடமை ஆகிய மூன்றும் சித்து தன்மைக்குள் அடங்கும்.</li>
<li style="list-style-type: none;">வரம்பிலா இன்பம் உடைமை ஆனந்தத்தன்மைக்குள் அடங்கும். </li>
</ul>
<p>சொற்பதம் கடந்த சொரூபநிலையில் (<span lang="en">potential state</span>/நிலை சக்தி) உள்ள சிவபெருமான் தனது எண்குணங்களில் ஒன்றாகிய பேரருள்/பெருங்கருண உடைமையால் தடத்தநிலைகளை (<span lang="en">dynamic state</span>/இயங்கு சக்தி) பூணுகின்றார்.
<h3 style="color: maroon; font-size: larger;">தடத்தநிலையில் மூவகை வடிவம்</h3>
அருவம், அருவுருவம், உருவம் என்னும் மூவகை வடிவம் தாங்குதல்.
<ol>
<li> அருவம் = கண்ணிற்கு புலனாகாது ஞானசக்தியுடன் மட்டுமே பொருந்தியிருந்து அருவ வடிவம் தாங்கி காரியங்களை செய்வது.</li>
<li>அருவுருவம் = ஞானசக்தியையும் கிரியாசக்தியையும் சம அளவில் கொள்வதன் மூலம் பூணுகின்ற வடிவம். ஒருமுறை புலனாகியும், புலனாகாமலும் இருப்பது இவ்வடிவமாகும். புலனாகும்போது முகம், கை, கால் போன்ற உறுப்புக்கள் ஏதுமின்றி காட்சியளிப்பது. ஒளி, இலிங்கம் ஆகியன அருவுருவத் திருவடிவங்களாகும். </li>
<li>உருவம் = ஞானசக்தியைவிட கிரியாசக்தியை மிகுவித்து, அதன்மூலம் கண்களுக்கு புலனாகும் வகையில் முகம், கை, கால் போன்ற உறுப்புகளுடன் தெளிவாகத் தோன்றுவது உருவத் திருவடிவமாகும்.</li>
</ol>
<h3 style="color: maroon; font-size: larger;">ஐந்தொழில் ஆற்றுதல்</h3>
<p>சிவபெருமானின் ஐந்து முகங்களான சத்யோ ஜாதம், வாமதேவம், அகோரம், தற்புருடம், ஈசானம் ஆகியவை படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் (ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம், திரோதானம், அநுக்ரஹம்) ஆகியவற்றை செய்வதாக சைவ நூல்கள் கூறுகின்றன. சிவபெருமான் நான்முகன், திருமால், ருத்ரன், மகேசுவரன், சதாசிவன் என்று ஐந்து திருவடிவங்களை எய்திப் பல உலகங்களையும் அவ்வுலகங்களில் உள்ள உயிர்களையும் இயக்குகிறான்.
<p style="margin-left: 3em;">திரோதானம் என்றால் மறைப்பது. நம்முடைய நிஜ ஸ்வரூபமேயான ஆத்ம ஸ்வரூபத்தை மறைத்து, ஜீவ-ஜகத்துக்களை உண்டாக்கி ஸ்ருஷ்டி-ஸ்திதி-லயத்துக்கு இடம் கொடுக்கிற கார்யத்தைச் செய்யும் மாயையே திரோதானம்.
<p style="margin-left: 3em;">அருளல் என்பது கர்ம வினைகளினால் ப்ரபஞ்சத்தில் உழலும் உயிர்களுக்கு தன்னுடைய பூர்வகர்மாவைத் தீர்த்துக் கொள்வதற்காக தநு-கரணம்-புவனம்-போகம் (உடம்பு, இந்திரியம், ஜகத் என்ற ஒரு வாழுமிடம், உயிர் வாழும் பொருட்டு அவசியமான போகங்கள்) படைத்து விட்டு, பக்குவப்பட்ட ஆன்மாக்களுக்கு ஸம்ஸாரத்திலிருந்து கடைத்தேற்றி மோக்ஷத்தை அளிப்பது.
<h3 style="color: maroon; font-size: larger;">சைவ சித்தாந்தம் கூறும் அத்துவிதம் : ஒன்றாய் வேறாய் உடனாய் நிற்றல்</h3>
<div class="separator" style="clear: both;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhxP8Sit0ygtN-KV_tZkcMLg8fKh5emao1y7qVz-k_ShOg_T4vpqMuYmsZGsQSHoK3TtWFKYu1uGfC9Jqg2YfbZN4aBI2PX1WfrGNfaXQZhOZwcH7CkShXq6MdNUUuDDTOy-Gv4N5JiVILlJlTTLnBOEMZACQkruYuUMS9tojBlhu4QS0cOkl6J_hRu/s874/%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%20.jpg" style="display: block; padding: 0.75 em; text-align: center; clear: left; float: left;"><img alt="" border="0" width="320" data-original-height="445" data-original-width="874" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhxP8Sit0ygtN-KV_tZkcMLg8fKh5emao1y7qVz-k_ShOg_T4vpqMuYmsZGsQSHoK3TtWFKYu1uGfC9Jqg2YfbZN4aBI2PX1WfrGNfaXQZhOZwcH7CkShXq6MdNUUuDDTOy-Gv4N5JiVILlJlTTLnBOEMZACQkruYuUMS9tojBlhu4QS0cOkl6J_hRu/s320/%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%20.jpg"/></a></div>இறைவன் உலகிற்கு மூன்று விதக் காரணங்களாகவும் உள்ளான். இறை பொருள் உலகிற்கு முதற்காரணமாக இருந்து பின் அது காரியப் பொருளாக மாறுகிறது. உயிர் உலகோடு கலப்பினால் ஒன்றாயும், பொருள் தன்மையினால் வேறாயும், இயங்கும் பொருட்டு உடனாயும் நின்று சேதன அசேதனப் பிரபஞ்சங்களைச் சிவன் தோற்றுவிக்கின்றான் என சைவசித்தாந்தம் உரைக்கிறது. இதனை உமாபதி சிவம் பின்வருமாறு குறிக்கின்றார்: "உடலில் உயிர் போலக் கலப்பினால் ஒன்றாயும், கண்ணில் அருக்கன் போலப் பொருள் தன்மையில் வேறாயும், ஆன்ம போதமும் கண்ணொளியும் போல உயிர்க்கு உயிராதல் தன்மையால் உடனாயும் இவ்வாறு இருபொருள் பிரிப்பின்றி உடனாய் நிற்றல்.”
<ul>
<li> ஒன்றாய் — இறைவன் எல்லா உயிர்களிடத்திலும் வேற்றுமையின்றிக் கலந்து அவ்வுயிர்களேயாகி நிற்கிறான். உயிரின் கலப்பு இல்லாமல் உடல் தனித்து நிற்றல் இயலாது. உயிரற்ற உடலால் அத்தனை உறுப்புகள் இருந்தும் இயங்க இயலாது. கடல் வெளி நீர்ப் பரப்பைத் தன்னுள் அடங்கக் கொண்டுள்ளது போல் இறைவன் தன்னுள் அடங்கி நிற்கும் உயிர்களோடு உடன் கலந்து பிரிப்பின்றி அத்துவிதம் அல்லது அத்வைதமாக நிற்கின்றான். இருந்தும் சீவனும் சிவமும் ஒன்றென்னும் கூற்றைச் சைவம் மறுக்கின்றது. முக்தனான ஆத்மா சிவமாகும் தன்மை பெற்று அவ்வனுபூதியைத் துய்க்குமே அன்றிச் சிவத்தைப் போல ஐந்தொழில் நடத்துவது இல்லை. </li>
<li>வேறாய் — பொருள் தன்மையினால் அவற்றின் வேறாகி நிற்பான். உலகப் பொருள்களில் இறைவன் வேறாய் நின்று அவற்றை இயக்குபவனாகி நிற்கிறான்.<br>
வேறாய் என்பது ஒளி காணும் கண்ணுக்கு ஒளி காட்டும் சூரியன் வேறாயிருந்து உதவுவது போல் இறைவன் வேறாயிருந்து அருள்புரியும் நிலை. சூரிய ஒளி தன் ஒளியை யாவருக்கும் கொடுத்து, எல்லா பொருட்களையும் கண்ணுக்கு காண வைக்கிறது. </li>
<li> உடனாய் — உடனாதல் என்பது உயிர் ஒன்றை அறியும் பொழுது இறைவனும் அதனோடு உடன் சென்று அறிதலாகும். கண்ணொளி பொருளைக் காண்பதற்கு உயிரறிவும் உடன் நின்று காணல் வேண்டும். இறைவன் வேறாய் நின்று உணர்த்துவதனால் பொருளை அறியும் தகுதியை அடைந்த உயிருக்கு அதற்கு பின்னும் இறைவனது உதவி வேண்டும். இறைவன் உடனிருந்து அறிவிக்கவில்லை என்றால் உயிர்களும் அறிய மாட்டா.
</li>
</ul>
</div>
<!-- Go to www.addthis.com/dashboard to customize your tools --> <script type="text/javascript" src="//s7.addthis.com/js/300/addthis_widget.js#pubid=ra-5a756e49e8eaa960"></script>
<!-- Go to www.addthis.com/dashboard to customize your tools --> <script type="text/javascript" src="//s7.addthis.com/js/300/addthis_widget.js#pubid=ra-5a756e49e8eaa960"></script>
<!--
கடவுள் உயிரோடு தோய்ந்திருந்து கலப்பினால் ஒன்று போலவும், பொருள் வகையால் வேறாகவும், தொழிலியற்றும் போது எல்லாவற்றின் உடனாக தொழிலியற்றுவதாகவும் இருப்பார். உயிரும் அப்படியே ஒன்றாய், வேறாய், உடனாய் உலகத்தோடு தோய்ந்திருக்கும். கடவுள் உயிரோடு மேற்கூறியபடி தோய்ந்திருந்தாலும் உயிர் அதை உணராமல் உலகத்தோடு மூவகையாய் மேற்கூறியபடி தோய்ந்திருக்கும். அதாவது கடவுள் உயிரோடு தோய்ந்திருப்பார்; உயிர் உலகத்தோடு தோய்ந்திருக்கும். உயிரின் குணம் என்னவென்றால் அது எதனோடு உணர்வினால் தோய்ந்திருக்கிறதோ அதன் வண்ணமாகவே மாறி நிற்கும். உயிரின் உணர்வு உலகத்தோய்வில் பாய்ந்து நிற்பதால் உயிர் உலகில் வண்ணமாகவே மாறிவிடுகிறது. ஒரு பக்குவம் ஏற்பட்டு உயிர் உலகத்தின் பால் பாயும் உணர்வை வெட்டிவிட்டு கடவுளின் பால் உணர்வைப் பாய்ச்சுமானால் உயிர் கடவுளின் வண்ணமாகவே மாறி நிற்கும்
----
அகரம் உயிரெழுத்து, மெய்யெழுத்து ஆகிய எல்லா எழுத்துக்களிலும் கலந்து அவ்வவ்வெழுத்துக்களை இயக்கி, அவ்வெவ் வெழுத்தாகவே இருக்கும். மெய்யெழுத்துக்கள் அகரவொலியுடன் கூடியே ஒலிக்க வேண்டும். அகரவுயிர், அனைத்து உயிரெழுத்துக்களுடனும் தனி மெய்யெழுத்துக்களுடனும் கலந்து அவற்றின் தன்மையேயாய் நிற்கும். சுருங்கச் சொன்னால், அகரவுயிர் தனித்துத் தானே இயங்கும்; பிற உயிர், மெய்யெழுத்துக்களுடன் உடனாகி அவற்றை இயக்கும்; அவற்றுடன் கலந்து நின்று அவையாகவே இருக்கும். முதன்மைத் தன்மை உடைய அகரவுயிர் கலத்தல் இல்லையேல் ஏனைய வுயிரெழுத்துக்களுக்கும் இயக்கம் இல்லை. அவ்வாறே இறைவன் உயிருக்குயிராய் உயிர்களுடன் உடனாய் நின்று கண்டும் காட்டியும் உதவாவிடில் உயிர்களுக்கு அறிவிச்சைசெயல்கள் நிகழா. மெய்கண்டார் அகரமும் ஏனைய எழுத்துக்களும் போல வேறாய் என்றார். அகரவுயிரின்றேல் ஏனைய எழுத்துக்கள் இல்லை. ஆயினும் அகரம் வேறு; ஏனைய எழுத்துக்கள் வேறு.
கண்ணும் சூரியனும் போல’ என்பது. கண் காணும் ஆற்றல் உடையது. என்றாலும் இருளில் காண இயலாது. சூரியனின் கதிரொளி பொருள்களின் மேற்படர்ந்து கண்ணொடு கலந்தால்தான் கண் காண இயலும். ஒளியின்றேல் கண் காண இயலாது. கதிரொளி கண்ணுக்கு அந்நியமாக நின்று காட்டுதலைச் செய்கின்றது.
இந்த சம்பந்தத்தைத் திருஞான சம்பந்தர், ‘வேறாய்” என்றார். உயிர் வினை அனுபவம் பெறும் பொருட்டு, இறை, உலகுயிர்களுக்கு வேறாக நின்று காட்டும் உபகாரத்தைச் செய்கின்றது; சூரியன் கண்ணுக்கு வேறாக இருந்து காட்டுதல் போல. பிறர் ‘பேதம்’ என்பதனைச் சைவசித்தாந்தம் திருஞானசம்பந்தர் வாக்கில் ‘வேறாய்’ என்றுகூறுகின்றது.
சைவசித்தாந்தம் பேதாபேத சம்பந்தம் கூறாமல் ‘உடனாதல்’ என்னும் சம்பந்தத்தைக் கூறும். இதற்கு மெய்கண்டார்,’கண்ணொளியும் ஆன்மபோதமும்’போல் என உதாரணம் கூறினார். கண் ஒருபொருளைக் காணும்போது ஆன்ம சிற்சத்தியும் உடனாய் நின்று காணுகின்றது. காணுவது கண் என்றாலும் கண் சடம், அதற்கு அறிய இயலாது. கண்ணோடு உடனிருந்து காண்பது ஆன்ம சிற்சத்தி. கண்ணின் செயலும் ஆன்மசிசத்தியின் செயலும் முன் பின் அன்றி இரண்டின் செயலும் உடன் நிகழ்கின்றன. இறைவன் வேறாய் நின்று காட்டுகின்றான்; உடனாய் நின்று காணுகின்றான். ஆன்ம முன்னேற்றத்திற்கு இறைவன் இவ்வாறு காட்டும் உபகாரத்தையும் காணும் உபகாரத்தையும் செய்தருளுகின்றான்.
சைவசித்தாந்தம் பேசும் சுத்தாத்துவிதத்தில் சிவமும் உயிரும் ‘ஒன்றாய், வேறாய், உடனாய்’ இருக்கும் சம்பந்தம் உண்டு; ‘பேதம், அபேதம், பேதா பேத’ சம்பந்தம் இல்லை. சிவத்துக்கும் உயிருக்கும் இடையே உள்ள இந்த ‘ ஒன்றாய், வேறாய், உடனாய்’ அமைந்துள்ள இந்த அத்துவித சம்பந்தத்தை உமாபதி சிவாச்சாரியார் ‘ பிறிவரும் அத்துவிதம்’ என்று கூறுவார்.
மாயாகாரியமான உலகத்தில் காணப்பெறும் பொருள்களில் இறைவன் அவையே தானேயேயாய்ப் பிரிப்பின்றி உடலும் உயிரும் போல் ஒன்றாயிருந்து அருள் புரியும் நிலையையும், காணும் ஒளியாகிய கண்ணுக்குக் காட்டும் ஒளியாகிய சூரியன் வேறாயிருந்து உதவுவது போல் இறைவன் வேறாயிருந்து அருள்புரியும் நிலையையும், கண் ஒளி ஒரு பொருளைப் பார்த்தாலும் அக்கண் ஒளியுடன் உடனாய் உயிர் கலந்தாலன்றி, கண் காணாதவாறு போல இறைவன் உயிர்களுடன் உடனாயிருந்து அருள்புரியும் நிலை
-->Uma Shankarihttp://www.blogger.com/profile/11875827154360557920noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1912487802559660431.post-18187244294984586002022-05-26T07:39:00.020+05:302023-08-23T18:18:20.267+05:30சைவ சித்தாந்தம் பகுதி 2 : முப்பொருள் இயல்பு <div lang="ta">
<h3 style="color: maroon; font-size: larger;">அனாதி முப்பொருள்</h3>
<p>உலகில் உள்ள அனைத்துப் பொருள்களும் அழியும். அழியக் கூடிய அனைத்தும் பொய். அழியாதது பரம்பொருள் ஒன்றே. அதுவே மெய். அது தோன்றுதல், அழிதல், வளர்தல், தேய்தல் முதலிய மாற்றங்களுக்கு உட்படாது. சைவ சித்தாந்தம் நிலையில்லா உலகில் அனாதியான அடிப்படை பொருளாக, அழியாப் முப்பொருள்களாக <b>பதி, பசு, பாசம்</b> விளங்குகின்றன என்று கருதுகிறது. இந்த முப்பொருள்களுள் ஒன்றை மற்றொன்றின் காரியம் என்று இல்லாமல் மூன்றும் தனித் தனிப் பொருள்களே என்று சைவ சித்தாந்தம் உரைக்கிறது. மாறுபட்ட மூன்று தன்மைகளால் வேறுவேறாகத் தோன்றும் முப்பொருள்களும் தொடக்கம் இல்லாதவைை; தோன்றாமல், அழியாமல், எப்போதும் இருக்கின்றன. இதற்கு மூலக்ககூறாக இருப்பது <a href="http://thiruppugazh-nectar.blogspot.com/2022/04/saivasiddhantam-part1.html" target="_blank">சற்காரிய வாதம்</a>. <a name='more'></a>
<p>என்றும் நிலைத்திருக்கும் முப்பொருள்கள் வெவ்வேறு இயல்புகளைக் கொண்டவை. இவற்றில் பதி என்பது இறைவனையும், பசு என்பது உயிர்களையும், பாசம் என்பது உயிரைப் பிணிக்கும் கட்டு அல்லது தளையையும் குறிப்பிடுகின்றன.
<ul class="list-group list-group-flush">
<li class="list-group-item">பதி / இறைவன் என்னும் சத்துப் பொருள் அறியாமையால் பற்றப்படாத, பாசம் என்னும் தளைகள் அணுக முடியாத, தூய முழுமையான அறிவினைக் கொண்டவன். அவன் ஐம்பொறி-புலன்கள் கொண்ட உடல் இல்லாமல் பிறர் அறிவிக்காமலே தானே எல்லாவற்றையும் அறிபவன். சூக்ஷ்மப் பொருளாகவும், பரந்தும், ஸ்தூலப் பொருள் உள்ளடங்கியும் (வியாபியாகவும் வியாபகமாகவும்) இருப்பவன். கடல் போன்ற பதியில் கடல்நீர் போன்று பசுவும் நீரில் கலந்துள்ள உவர்ப்பு போன்று பாசமும் கலந்துள்ளது.</li>
<li class="list-group-item">பசு / உயிர் சிற்றறிவுடைய ஆன்மா. இறைவன் உயிர்களோடு உடலில் உள்ள உயிர் போல ஒன்றாய் கலந்து நின்றாலும் இறைவன் உயிர் ஆகமாட்டான். உயிர்கள் இயல்பாகவே அறிவுள்ளவை. ஆனால் மலங்களினால் பிணைக்கப்படும் போது அவற்றின் அறிவு மறைக்கப்படுகின்றது. மலங்களின் பிணைப்பிலிருந்து தாங்களாகவே விடுபடுவதற்கு உயிர்களால் முடியாது. இறைவன் துணையுடனேயே மலங்களின் பிணைப்பிலிருந்து உயிர்கள் விடுபட முடியும். பசு அறிவற்ற சடமும் அன்று, அறிவுடைய பொருளுமன்று. எதைச் சார்ந்ததோ அதன் தன்மையைப் பெறுவதால் அது சதசத்து பொருளாகின்றது. பதியைச் சார்ந்தால் சத்தெனவும் பாசத்தைத் சார்ந்தால் அசத்து எனவும் நிலை பெறுகின்றது. பசுவாகிய உயிர் பாசத்தோடு கூடி அறிவு மறைந்தும் தோன்றியும் மாறுதல் அடைந்தாலும் முத்திநிலையில் பதியைச் சேர்ந்த பின் ஒரு நிலையாய் நிற்கிறது.</li>
<li class="list-group-item">தளை / பாசம் சடப்பொருள். அசத்து பொருள். அறிவற்றது. உயிர்களுக்குக் கருவியாக உடம்பையும், களமாக உலகத்தையும், படைத்துக் கொடுக்கப் பயன்படும் மூலப் பொருள் தான் பாசம் என்ற மும்மலங்களாகிய ஆணவம், கன்மம், மற்றும் மாயை. உயிர்களைப் பிணித்து அவற்றின் அறிவை மறைக்கும் வல்லமை கொண்டது. கானல் நீர் போல் இல்லாததை இருப்பதாகக் காட்டும் மாயையினால் கட்டுண்ட ஆன்மாவை இயக்குவது ஆணவ மலம். ஆணவ மலம் உயிருடன் இணைந்துள்ள, காலம் கடந்த இயற்கை மலம். இது செம்பில் களிம்பு போல ஆன்மாவில் பற்றி இருக்கும். இதனை இருள் மலம் என்பர். இதனை அழிக்க முடியாது, அடக்க முடியும்.</li>
</ul>
<ul>சுருக்கமாக கூறின்
<li>இறைவன் - தாமே அறியும் பேரறிவு உடையவன்.</li>
<li>உயிர்கள் - அறிவிக்க அறியும் சிற்றறிவு உடையவன்.</li>
<li>மலங்கள் - அறிவித்தாலும் அறியாத சடப்பொருள்கள்.</li>
</ul>
<p>ஒரு பொருள் தோன்றுவதற்கு மூன்று காரணங்கள் வேண்டும். அவற்றை முதற்காரணம், துணைக்காரணம், நிமித்த காரணம் என்பர். சான்றாக ஒரு குடம் தோன்றுவதற்கு முதற்காரணம் மண். அதற்கு உதவியாக இருக்கிற சக்கரம் போன்றன துணைக்காரணம். குடத்தை தோற்றுவிக்கும் குயவன் நிமித்த காரணன். தேர்ந்து பார்த்தால் இவ்வுலகம் முதலிய எல்லாப் பொருள்களையும் தோற்றுவிப்பதற்கு உரிய முதற்காரணம் மாயை ஆகும். எனவே அது மண் போன்றது. இறைவனுடைய சத்தி, சக்கரத்தைப் போன்று துணைக் காரணம் ஆகும். சிவபெருமான் குயவனைப் போன்று நிமித்த காரணன் ஆவான்.
<p> மும்மலங்களும் ஆன்மாவுடன் சேர்ந்திருப்பதை நெல்லிலே முளை, தவிடு (bran) உமி (husk) சேர்ந்திருப்பதைக் காட்டி விளக்குவர் உமாபதி சிவம். அரிசி என்ற ஆன்மாவின் சுகதுக்கங்களுக்கு ஆணவம் கன்மம் மாயை ஆகிய மூன்று மலங்களும் நிமித்தம், முதல், துணை ஆகிய மூன்று காரணங்களாக அமைகின்றன. <!--முளையைப் போன்றது கன்மம். தவிட்டைப் போன்றது மாயை உமியைப் போன்றது ஆணவம். எனவே, அரிசி ஆன்மாவிற்கு உவமையாகின்றது. நெல்லிலுள்ள முளைத்தல் எனும் ஆற்றல் முளையைத் தோற்றுவிப்பதுபோலக் கன்ம மலம் உயிரினிடத்துச் சுகதுக்கங்ளை முதற் காரண மாய் நின்று தோற்றுவிக்கும்; தவிடு முளைத் தற்கு அநுகூலம் செய்து உடன் நிற்குமாறுபோல, மாயா மலம் அச் சுகதுக்கங்கள் தோன்றுவதற்குத் துணைக்காரணமாய்த் தன் காரியமாகிய தனு கரணம் முதலியவற்றையும் உயிரை யும் அசைவித்து நிற்கும். உமி அம்முளை தோன்றுவதற்கு நிமித்த காரணமாயிருப்பதுபோல ஆணவ மலம் அச்சுக துக்கத் தோற்றத்திற்கு நிமித்த காரணமாய் நின்று அவற்றை முறுகுவித்து உயிர் நுகருமாறு நிலை பெறுத்தும். இங்கு ஆன்மாவின்சுகதுக்கங்களுக்கு ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று மலங்களும் நிமித்தம், முதல், துணை ஆகிய மூன்று காரணங்ககள் -->நெல்லில் அரிசி என்ற உயிர்/ஆன்மாவாகிய முளையைத் தோற்றுவிக்க கன்ம மலம் சுகதுக்கங்களை முதற்காரணமாக நின்று தோற்றுவிக்கும். மாயாமலம் அந்தத் துக்கங்கள் தோன்றுவதற்குத் துணைக்காரணமாய்த் தன் காரியமாகிய தனு கரணம் முதலியவற்றையும் உயிரையும் அசைவித்து நிற்கும். உமி அம்முளை தோன்றுவதற்கு நிமித்த காரணமாய் இருப்பது போல் ஆணவமலம் அந்தத் துக்கத் தோற்றத்திற்கு நிமித்த காரணமாக நின்று அவற்றை நிலைபெறச் செய்யும்.
<p>இறைவன் உயிர்களை பிடித்து இருக்கும் பாசம் என்ற அறியாமையைப் போக்கவே, உடல்களுக்கு கருவிகளை தந்திருக்கிறான் உடல்கள் மூலம் மெய் அறிவு பெற்றால், உடல்களை விட்டு நீங்கும்போது உயிர்களுக்கு பிறவிகள் நீங்கிவிடும்!
<p> இந்த முப்பொருள்களின் விளக்கமாக திருக்கோயில்களில் மூலவர் (பதி), நந்தி (பசு), பலி பீடம் (பாசம்) என்று அமைக்கப்பட்டிருக்கின்றன. நந்தி எனும் ஆன்மாவில் உள்ள ஆணவம், மாயை, கன்மம் ஆகிய மும்மலங்களையும் மூலவ மூர்த்தியின் பாதங்களை தாமரை வடிவில் தாங்கியதாக இருக்கும் பலிபீடம் அருகில் நின்று பலியிட்டு விழுந்து வணங்க வேண்டும் என்பது தான் இதன் தத்துவம்.
<!--
ஒருபொருள் தோன்ற மூன்று காரணங்கள் வேண்டும். அவை 1.முதற்காரணம்,(material cause) 2.நிமித்தகாரணம் அல்லது கருத்தா,. 3.துணைக்காரணம் அல்லது கருவி காரணம்.(instrumental cause) என்பன.
குடத்திற்கு மண் முதற்காரணம்;. குயவன் நிமித்த காரணம்;. தண்டசக்கரம் துணைக்காரணம்.
அதுபோல, பிரபஞ்சத் தோற்றத்துக்கு மாயை முதற்காரணம்;. சிவம் நிமித்தகாரணம்;. சிவசத்தி துணைக் காரணம்.
---
கடவுள் உயிரோடு தோய்ந்திருந்து கலப்பினால் ஒன்று போலவும், பொருள் வகையால் வேறாகவும், தொழிலியற்றும் போது எல்லாவற்றின் உடனாக தொழிலியற்றுவதாகவும் இருப்பார். உயிரும் அப்படியே ஒன்றாய், வேறாய், உடனாய் உலகத்தோடு தோய்ந்திருக்கும். கடவுள் உயிரோடு மேற்கூறியபடி தோய்ந்திருந்தாலும் உயிர் அதை உணராமல் உலகத்தோடு மூவகையாய் மேற்கூறியபடி தோய்ந்திருக்கும். அதாவது கடவுள் உயிரோடு தோய்ந்திருப்பார்; உயிர் உலகத்தோடு தோய்ந்திருக்கும். உயிரின் குணம் என்னவென்றால் அது எதனோடு உணர்வினால் தோய்ந்திருக்கிறதோ அதன் வண்ணமாகவே மாறி நிற்கும். உயிரின் உணர்வு உலகத்தோய்வில் பாய்ந்து நிற்பதால் உயிர் உலகில் வண்ணமாகவே மாறிவிடுகிறது. ஒரு பக்குவம் ஏற்பட்டு உயிர் உலகத்தின் பால் பாயும் உணர்வை வெட்டிவிட்டு கடவுளின் பால் உணர்வைப் பாய்ச்சுமானால் உயிர் கடவுளின் வண்ணமாகவே மாறி நிற்கும்
-->
</div>
<p style="text-align: center;"> <a class="btn btn-outline-primary" href="https://thiruppugazh-nectar.blogspot.com/2022/05/saivasiddhantam-part3.html" role="button">பதியின் இயல்பு</a>
<!-- Go to www.addthis.com/dashboard to customize your tools --> <script type="text/javascript" src="//s7.addthis.com/js/300/addthis_widget.js#pubid=ra-5a756e49e8eaa960"></script>
Uma Shankarihttp://www.blogger.com/profile/11875827154360557920noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1912487802559660431.post-1005636572087658032022-05-24T05:15:00.007+05:302022-07-11T05:22:13.164+05:30திருவிளையாடல் புராணம்<div lang="ta">
<p>திருவிளையாடல் புராணம் என்பது சிவபெருமான் பாண்டியர்களின் தலைநகரான கூடல்மாநகராம் மதுரையில் நிகழ்த்திய 64 அற்புத லீலைகளைப் பற்றிக் கூறும் நூலாகும். இறைவனார் உலக உயிரிகளிடத்து அன்பு கொண்டு அவர்களுக்கு அருள் செய்த கருணையை இந்நூலில் வரும் கதைகள் அழகாக விவரிக்கின்றன. திருவிளையாடல் புராணமானது தமிழ்கடவுளான முருகப்பெருமானால் அகத்தியருக்கு அருளப் பெற்றது. பின் அகத்தியரின் மூலம் இறைவனின் திருவிளையாடல்களை மற்ற முனிவர்கள் அறிந்து கொண்டனர் என்று இந்நூல் இறைவனின் திருவிளையாடல்கள் வெளிவந்த விதத்தை விளக்குகிறது. <a name='more'></a>
<p>தமிழ் மொழியில் உள்ள புராணங்களுள் மூன்றினை சிவபெருமானின் மூன்று கண்களாகப் போற்றுகின்றனர். சேக்கிழாரின் பெரியபுராணம் சிவனின் வலக்கண்ணாகவும், பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் புராணம் இடது கண்ணாகவும், கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்தபுராணம் சிவனின் நெற்றிக் கண்ணுடன் போற்றி சிறப்பிக்கப்படுகின்றன. இதை வியாசர் இயற்றிய ஸ்கந்த புராணத்தில் உள்ள ஹாலாஸ்ய மகாத்மியம் என்னும் வடமொழி நூலிலிருந்து தமிழில் மொழி பெயர்த்தவர் பரஞ்சோதி முனிவர்.
<h3 >பரஞ்சோதி முனிவர்</h3>
<p >திருவிளையாடல் புராணத்தை இயற்றிய பரஞ்சோதி முனிவர் (பெரிய புராணத்தில் கூறப்படும் அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவரான சிறுதொண்டராகிய பரஞ்சோதியார் அல்ல) வேதாரணியம் எனப்படும் திருமறைக்காட்டில் வசித்த மீனாட்சி சுந்தர தேசிகரின் மகன். தந்தையிடம் சைவ சித்தாந்த கருத்துக்களைப் பயின்று, திருமறைக்காட்டில் கோவில் கொண்டுள்ள சிவனைத் துதித்து வந்த பரஞ்சோதி முனிவர், புனித யாத்திரை மேற்கொண்டு, மதுரைக்கு வந்தார். அப்போது அவரது கனவில் தோன்றிய மீனாட்சியம்மன், அந்நகரில் சிவன் நிகழ்த்திய திருவிளையாடல்களை அழகு தமிழில் பாடும்படி உத்தரவிட்டாள். அன்னையின் திருக்காட்சி கண்ட பரஞ்சோதி முனிவர் தெள்ளுதமிழில் 64 படலங்களைக் கொண்ட 3363 செய்யுள்களாக வடித்தார். அதுவே திருவிளையாடல் புராணம். திருவிளையாடல் புராணம் மதுரைக்காண்டம், கூடற்காண்டம், திருவாலவாய் காண்டம் என்று மூன்று காண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
கி.பி.16-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் மதுரை மாநகரை ஆண்ட வீரசேகர சோழன் என்பவர் பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணத்தை மதுரையில் அரங்கேற்றினார்.
<p>சிவபெருமானிடம் உபதேசம் பெற்று தெளிந்த நந்திஎம்பெருமான் அதனை சனகர் குமாரருக்கு உணர்த்த, உள்நிறை அன்பின் ஆய்ந்து வியாசனுக்கு உணர்த்தினர். வியாச முனிவர் அவற்றைச் சூதமுனிவர்க்கு (மூஆறு) பதினெட்டு புராணங்களாக எடுத்துரைத்தார். சிறப்பு மிகுந்த இந்த இவ்வடநூல் தன்னை தமிழில் சொல்ல வேண்டுமென்ப் பெரியோர் கூறினர். அதனால் மொழிபெயர்த்துத் தமிழில் பாடுகிறேன் என்றும் ஈச சங்கிதை, சங்கர சங்கிதை என்ற வடநூலில் உள்ளதை மொழிபெயர்த்துப் பாடுகிறேன் என்றும் பரஞ்சோதி முனிவர் கூறுகிறார்.
அண்ணல் பால் தெளிந்த நந்தி அடிகள் பால் சனற்குமாரன்<br>
<p >உள் நிறை அன்பின் ஆய்ந்து வியாதனுக்கு உணர்த்த வந்தப்<br>
புண்ணிய முனிவன் சூதற்கு ஒதிய புராணம் மூ ஆறு<br>
எண்ணிய இவற்றுள் காந்தத் தீச சங்கிதையின் மாதோ. (திருவிளையாடற் புராணம் பாடல் எண் 24)<br>
(காந்தத் தீச — (ஸ்)காந்தத்து ஈச; மூ ஆறு = 18; வியாதன் = வியாசன்;)
<p>அறைந்திடப் பட்டது ஆகும் ஆலவாய் புகழ்மை அந்தச்<br>
சிறந்திடும் வடநூல் தன்னைத் தென் சொலால் செய்தி என்று இங்கு<br>
உறைத்திடும் பெரியோர் கூறக் கடைப் பிடித்து உறுதி இந்தப<br>
பிறந்திடும் பிறப்பில் எய்தப் பெறுதும் என்று உளம் தேறா. (திருவிளையாடற் புராணம் பாடல் எண் 25)<br>
( தென் சொலால் = தமிழில்; )
<p>இன்ன ஆறனுள் சங்கர சங்கிதை என்று<br>
சொன்ன நூலினை உணர்த்தினான் சங்கரன் துணைவிக்கு <br>
அன்ன போது அவள் மடியினில் இருந்து கேட்டு அதனை<br>
மின்னு வேல் பணி கொண்ட வேள் வெளிப்பட உணந்தான். (திருவிளையாடற் புராணம் பாடல் எண் 221 )
</div>
<!-- Go to www.addthis.com/dashboard to customize your tools --> <script type="text/javascript" src="//s7.addthis.com/js/300/addthis_widget.js#pubid=ra-5a756e49e8eaa960"></script>
Uma Shankarihttp://www.blogger.com/profile/11875827154360557920noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1912487802559660431.post-60554838501985806712022-05-20T10:27:00.027+05:302023-08-29T19:32:22.769+05:30சைவ சித்தாந்தம் : அறிமுகம் (பகுதி 1)<style>
:lang(en){ font-family: TimesNewRoman, "Times New Roman"; font-size: 16px; }
</style>
<div lang="ta">
<h3 style="color: maroon; font-size: larger;">சைவ சித்தாந்தம் என்றால் என்ன? </h3>
<p>சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடுகின்றது சைவ சமயம். தன்னுள் இருக்கும் சிவத்தை அறிந்து மலநீக்கம் பெற்று சிவனடியை சேரும் வழி காட்டுவதே சைவ சித்தாந்ததின் நோக்கம். சித்தாந்தம் என்பது ஆராய்ந்து சிந்தித்து முடிந்த முடிவு. சைவ சித்தாந்தம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமூலரால் ஒரு தத்துவப் பிரிவாக உருவானது. சைவ சித்தாந்தம் வேதங்களையும், ஆகமங்களையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது.
<p> சைவ சமயத்தில் சமயக் குரவர் நான்கு பேர்களும் சந்தான குரவர்கள் நான்கு பேரும் உள்ளனர். சமயக்குரவராகிய நால்வர் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி, மாணிக்கவாசகர் ஆகியோர் ஆவர். இவர்கள் சைவ சமயத்தின் தேவாரம் மற்றும் திருவாசகத்தினை எழுதியவர்கள். சந்தான குரவர்கள் மடங்கள் ஸ்தாபித்து வழிமுறை பாடங்கள் வகுத்தார்கள். அந்த நால்வரில் முதலாமவர் மெய்கண்டார்; அவரின் சீடர் அருள் நந்தி சிவம்; அவரின் சீடர் மறைஞான சம்பந்தர். கடைசியாக உமாபதி சிவம். சைவ சமயத்தை விளக்கும் நூல்களில் சிறப்பானதாகக் கருதப்படுவது மெய்கண்டார் எழுதிய சிவஞான போதம் ஆகும். மெய்கண்டார் கிபி 13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பரஞ்சோதி முனிவர் (பிற்காலத்தில் திருவிளையாடல் புராணத்தின் ஆசிரியரான பரஞ்சோதி முனிவர் அல்ல) என்னும் பெரியாரிடம் ஞானோபதேசம் பெற்றவர். சிவஞான போதத்துடன் சேர்த்து பல ஆசிரியர்களால் எழுதப்பட்ட 14 நூல்கள் சைவ சித்தாந்தத் தத்துவ விளக்க நூல்களாகும். மேலும், சைவ நாயன்மார்களின் தமிழ்ப் பாசுரங்களான தேவாரம், திருவாசகம், திருமந்திரம் உள்ளிட்ட பக்தி இலக்கியங்கள் பன்னிரு திருமுறைகளாக தொகுக்கப் பட்டிருக்கின்றன. <a name='more'></a>
<h3 style="color: maroon; font-size: larger;">சைவ சித்தாந்தத்தின் அடிப்படை: சற்காரிய வாதம்</h3>
<p>ஒவ்வொரு காரியத்துக்கும் ஒரு காரணம் இருந்தாக வேண்டும்."எள்" காரணம் "எண்ணெய்" காரியம், "மண்" காரணம் "பானை" காரியம். ஒரு பொருள் எங்கிருந்து வந்தது என கேள்விக்கான விடை காணும் தத்துவ விளக்கம் காரண காரிய வாதம். எந்த ஒரு காரண நிலையிலும் காரியம் உண்டு என எடுத்துரைப்பது சத்காரிய வாதம் ஆகும். அதாவது காரியம் புதிதாக தோன்றுவது அல்ல அது காரண நிலையில் உறைந்துள்ளது என்கிறது சத்காரியவாதம். பானை என்பது ஏற்கனவே மண்ணிலுள் உள்ளது, இல்லை எனில் மண்ணிலிருந்து பானையை உருவாக்க முடியாது என்பதே "சத்காரியவாதம்" ஆகும்.
சற்காரிய வாதம் கூறும் '<b><u>உள்ளது அழியாது, இல்லது தோன்றாது</u></b>' என்ற கருத்து இயற்பியல் அடிப்படையில் உள்ள 'ஆற்றல் மாறாக் கோட்பாட்டை' (<span lang="en">Law of Conservation of Energy</span>) ஒத்துள்ளது. சத் = என்றும் உள்ள பொருள்; காரியம்- செயற்படுவது; வாதம் = கொள்கை.
<p>"உள்ளது அழியாது, இல்லது தோன்றாது" என்பதை "<b><u>உள்ளதே தோன்றும்; இல்லது தோன்றாது</u></b>" என்றும் சொல்லாம். உள்ளது அழியாது. அழிதல் என்பது பரு பொருளாக விளங்கியிருந்த ஒன்று நுண்மையாகக் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து போயிற்றே தவிர அடியோடு ஒன்றும் இல்லாமல் அழியவில்லை. மண் குடம் அழிந்தது என்றால் அது குடமாக இருந்த நிலை அழிந்து, உடைந்த துண்டுகளாக மாறி இருக்கிறது. மண் குடத்தில் மண் மூலப்பொருளாக மறைந்து இருக்கிறது. ஒரு பொருள் கண்ணால் கண்டு, கையால் தொட்டு உணர்ந்து அறிய வேண்டும் என்றால் அது நுண்மையான நிலையில் பொருளுக்கு உள் இருந்திருக்க வேண்டும். அங்ஙனம் இல்லாவிட்டால் ஒருபோதும் தோன்றாது.
<p>மண் குடமாக விளங்கித் தோன்ற, குடத்தைச் 'செய்பவன்' ஒருவன் கட்டாயம் வேண்டும். அதாவது, மூலப்பொருளான (காரணம்) மண்ணிலிருந்து இருந்து செயப்படுபொருளாக (காரியம்) விளங்கித் தோன்றுவதற்கு 'செய்பவன்' (நிமித்த காரணன்) ஒருவன் கட்டாயம் வேண்டும். அதே போல், 'உலகம்' தோற்றமுள்ள பொருள் என்பதால் உலகமும் 'செயப்படுபொருள்'தான். அதற்கு மூலப்பொருள் 'மாயை'. அந்த செயப்படுபொருளை மாயை என்னும் மூலப்பொருளில் இருந்து உருவாக்க, 'செய்பவன்' ஒருவன் உறுதியாக இருக்கிறான். அவனையே நாம் இறைவன் என்கிறோம்.' என்று நிறுவுகிறார் மெய்கண்டார்.
<p>இன்னோர் உண்மையையும் சற்காரிய வாதம் தெரிவிக்கின்றது. அறிவும் அறிவில்லாததும் வேறு வேறு. அறிவில்லாத பொருளில் அறிவு என்றும் தோன்றுவதில்லை. மேலும் அறிவில்லாத பொருள் தானாகவும் செயல்படுவதில்லை என்று தெளிவு படுத்துகிறது.
<p>அத்வைதவாதிகள் பிரம்மம் என்கிற ஒரே சத்திய வஸ்து மாயா சக்தியினால் எண்ணற்ற ஜீவராசிகளாக தோன்றுகிறது என்றும் பிரம்மத்திற்கு புறம்பாக இரண்டாவது வஸ்து எதுவுமே இல்லை என்று கூறுகின்றனர்.
<p>பிரகிருதி அல்லது இயற்கை எனும் அறிவற்ற சடப்பொருளும் புருஷன் எனும் அறிவுள்ள பொருள் ஆகிய இரு பொருட்கள் பற்றி மட்டுமே சாங்கியம் பேசும். பிரகிருதி என்ற பொருளை முதன்மையானதாகவும், புருசனை இரண்டாவதாகவும் வைத்துக் கொண்டதால் சாங்கியம் முதன்மை காரணவாதம் எனப்பட்டது. உலக நிகழ்ச்சிகள் அனைத்தும் மாயை; புருசன் தான் இறுதியான உண்மை என்று கூறும் வேதாந்தவாதமான பிரம்ம காரணவாதத்தை மறுக்கும் நோக்கத்தில் சாங்கியவாதிகள் இரண்டாவதாக புருசனை ஏற்கவேண்டிய தேவை ஏற்பட்டது.‘புருசன்’ என்பது முதன் முதலான பொருளின், மூலப் பொருளின் பெருக்கம் தான் எனக் கூறப்பட்டது. கண்களுக்குப் புலனாகும் உலகத்திற்கு அடிப்படை “பொருள்தான்”; புருசன் உலகத் தோற்றத்திற்கான காரணமல்ல. உலகமானது முக்குணங்களின் சேர்க்கையினால் உருவானது; மூலப் பிரகிருதி இயக்கமுற்று பலவாக வளர்ச்சி அடைந்து புருசன் ஆனது.
<p>அத்வைத வேதாந்திகள், ஸாங்கியர்களின் பரிணாமவாத கூற்றாகிய பிரகிருதியின் பரிணாம மாற்றமே ஜகத் – பிரகிருதியே ஸ்ருஷ்டியாகப் பரிணமித்திருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்வதில்லை. ஏனென்றால் பால் தயிராகப் பரிணமித்தது என்றால் பால் தயிரானபின் தயிரில் பால் இல்லாததை போலவே பரமாத்மா ஜகத்து பரிணமித்தபின் இல்லாமல் போய் விடுவார் என்று கூறுவதை போல ஆகும். மாறாக அவர்கள் இறைவன் சுத்த ஞான ஸ்வரூபமாக இருந்துகொண்டே மாயையால் ஜீவ-ஜகத்துக்களாகத் தோன்றுகிறார்; இதெல்லாம் ஒரே ஸத்வஸ்துவின் தோற்றம்தான் என்ற விவர்த்த வாதத்தை முன் வைக்கிறார்கள்.
<p> நியாய- வைசேஷிகக் கொள்கையாளர்கள் சற்காரிய வாதத்தை மறுப்பவர்கள். அவர்கள் வாதப்படி வெறும் மண்ணிலே பானை இல்லை. இல்லாத பானை அதிலிருந்து விளைந்தது. மண்ணைப் பானையாக்கும் குயவன் இல்லாத பானை என்ற விளைவை மண்ணிலிருந்து உண்டாக்குகிறான். இதற்கு ஆரம்பவாதம் என்றும், அஸத்-கார்ய-வாதம் என்றும் பெயர். ‘ஸத்’ என்றால் இருப்பது. ‘அஸத்’ இல்லாதது. ஈச்வரன் அணுக்களைக் கொண்டே அணுக்களில் இல்லாத சிருஷ்டியைப் பண்ணியிருக்கிறான்.
<p>பெளத்தர்கள் கர்ம விதிகளுக்கு ஏற்பவே உலகம் இயங்குகின்றது என்றும் அழியாத ஒன்றாகக் கருதப்படும் ஆன்மா என்பது கிடையாது என்றும் உரைப்பர். உடம்பில் உள்ள ஒவ்வோர் உறுப்பையும் பகுத்துப் பகுத்து ஆராய்ந்து பார்த்தும் ஆன்மா இன்னது என அறிய வாராமையால் ஆன்மா சூனியமே என்பர். அவர்கள் கூறுவது சூனிய ஆன்மவாதம் எனப்படும். இதை மறுக்கும் சைவ சித்தாந்தம் இவ்வாறு ஆராய்ந்து ஆன்மா சூனியமே எனக் கூறும் அறிவே ஆன்மா என்கிறது. இறைநிலை என்பது எங்கும் நிரம்பியள்ள சுத்தவெளி; அந்த பேரறிவான பேறாற்றலே எல்லாத் தோற்றப் பொருட்களுக்கும் உயிரினங்ககளுக்கும் மூலம் என்று சைவ சித்தாந்தம் தெளிவு படுத்துகிறது.
</div>
<h3 style="color: maroon; font-size: larger;">Saiva Siddhanta Explained</h3>
<p>Saiva Siddhanta is the canonical text-book of Saivites who worship Shiva as the first and foremost God and whose ultimate goal in life is to experience union with Shiva. It outlines the settled view of Shaiva doctrine or siddhanta. It is based on Tamil devotional hymns known as as Tirumurai, written by Shaiva saints from the 5th to the 9th century. The chief amongst these saints was Meykanda Devar who wrote Sivagyana Bodham; the lineage of disciples following him being Arul Nandi Sivam, Maraigyana Sambandar and Umpapati Sivam.
<p>In Saiva Siddhanta, unlike in Advaita, maya is considered the real matrix of the world. It is the material cause of the world, thereby subscribing to the theory of Satkaryavada, i.e., the effect is really contained in the cause.
<p>According to <i>satkaryavada</i> theory, the manifested effect is pre-existent in the cause in a potential state prior to its production. Nothing new is created; it is only an explicit manifestation of what was implicit in the material cause. If the effect did not pre-exist in the material cause, then no amount of effort on part of any agent could bring it into existence. Curd can be got only from milk and a cloth only from threads. Effects can be produced only from what is capable of producing them. Thus we can say that the effect must be potentially contained in the cause. In the case of a clay pot, the potter and his tools are only efficient causes which are necessary to manifest the effect — the pot, from the material cause — the clay. If the effect were not already existent in its cause, then something would have to come out of nothing. The original cause of everything that is perceived is the eternal consciousness. Sankhya, Yoga, and the Vedanta schools are <i>satkaryavadins</i>. In Saiva Siddhanta, Shiva is the efficient cause; shakti is the instrumental cause for the creation of the universe.
<p>Another important question arises: Is the effect a real transformation of the cause or just an unreal appearance? The Advaita Vedantins who advocate <i>Vivartavada</i> believe that the manifestation of the effect is merely an illusion. Sankhya system, the advocates of Parinamavada, believe that the effect is a real modification of prakriti, the cause. Sankhya is a dualistic school which believes in two independent ultimate principles, puruṣa ('consciousness' or spirit); and prakṛti, (nature or matter). When prakṛti comes into contact with Purusha, Prakriti becomes manifest, or evolves into the world/universe. The effect thus pre-exists in prakriti; it come out at the time of creation and returns back to it at the time of dissolution.
<p>Those who do not subscribe to the view that effect pre-exists in its material cause are called asatkaryavadins. Nyaya-Vaisheshika and the Buddhist schools believe in asatkaryavada. </p>
<!--<p>As the material cause of the world, maya is threefold – suddha (pure) maya, asuddha (impure) maya and suddha-asuddha (pure – impure) maya. Saiva Siddhanta accounts for three kinds of selves such as vijnanakalars (with anava only), pralayekalars (with anava and karma only) and sakalars (with anava, karma and maya). Accordingly, there are three kinds of worlds (to accommodate the three kinds of selves) known as suddha prapanaca (pure world), asuddha prapana (impure world) and misra prapanca (pure – impure world).
From the suddha maya, two kinds of worlds come into existence: sabda prapancha (the world of sound) and the world of objects. Sabda prapancha consists of four kinds of vaks – madhyamh, vaikari, pasyanti and sukshma.
The world of objects comprises five sivatattvas such as Siva, Shakti, Sadashiva, Ishwara and Suddha Vidya. These five categories are functioning under the direct control of Shiva and hence they are called Shivatattva; since they are the products of shuddha Maya, they are known as suddhatattvas. These categories are timeless and eternal.-->
<p style="text-align: center;"> <a class="btn btn-outline-primary" href="https://thiruppugazh-nectar.blogspot.com/2022/05/saivasiddhantam-part2.html" role="button">முப்பொருள்களின் தன்மை </a>
</div>
<!-- Go to www.addthis.com/dashboard to customize your tools --> <script type="text/javascript" src="//s7.addthis.com/js/300/addthis_widget.js#pubid=ra-5a756e49e8eaa960"></script>
Uma Shankarihttp://www.blogger.com/profile/11875827154360557920noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1912487802559660431.post-24725724816414143202022-04-25T07:59:00.003+05:302022-10-19T00:50:04.131+05:30 பன்னிரு சைவம் மற்றும் முருகவேள் திருமுறைகள் <div lang="ta">
<h3 style="font-size: 14px; color: blue">சைவத் திருமுறைகள்</h3>
<p>பன்னிரு திருமுறைகள் தமிழ் சைவ சமயத்தின் அடிப்படை நூல்கள். இவை பல்லவர் காலத்திலும் அதன் பின்னரும் தோன்றிய சைவ சமய நூல்களின் தொகுப்பாகும். 10 ஆம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனின் ஆட்சியின்போது இவற்றை தொகுத்தவர் திருநாரையூரில் பிறந்த நம்பியாண்டார் நம்பி. இவர் மன்னனின் வேண்டுகோளின் பேரில் சிதம்பரம் கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த தேவாரங்களையும், வேறுபல சமய இலக்கியங்களையும் பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை பதினொரு திருமுறைகளாகத் தொகுத்தார். <a name='more'></a>
<p>நம்பியாண்டார் நம்பி திருஞானசம்பந்தரால் பாடப்பட்ட தேவாரப் பாடல்களை முதல் மூன்று திருமுறையாகவும், திருநாவுக்கரசா் பாடிய தேவாரப் பாடல்களை 4 முதல் 6 திருமுறைகளாகவும், சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடிய தேவாரத்தை ஏழாம் திருமுறையாகவும் தொகுத்தார். பின்னா் சமயக்குரவா்களில் நாலாவதாக இருக்கும் மாணிக்கவாசகா் அருளிய திருவாசகம் மற்றும் திருக்கோவையாரை எட்டாம் திருமுறையாக சோ்த்தார். திருமாளிகைத்தேவா் முதலான சிலா் அருளிய திருவிசைப்பா, திருப்பல்லாண்டு ஆகியவற்றை ஒன்பதாம் திருமுறையாக இணைத்தார். திருமூலா் அருளிய திருமந்திரம் பாடல்கள் பத்தாம் திருமுறையானது. பதினொன்றாம் திருமுறையில் திருவாலவாயுடையார் பாடிய திருமுகப்பாசுரம் உள்ளிட்ட 12 போ் அருளிய பிரபந்தங்களயும் காரைக்கால் அம்மையார் பாடிய பாடல்கள் திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் மற்றும் தன்னுடைய பிரபந்தங்களும் சோ்த்தார். பிற்காலத்தில் சேக்கிழார் பாடிய சைவ அடியார்களின் வாழ்க்கையை விவரிக்கும் நூலான பெரியபுராணம் பன்னிரண்டாம் திருமுறையாக சேர்க்கப்பட்டது.
<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/iMAuv58v05s" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>
<p>அருணகிரிநாதரின் திருப்புகழை ஓலைகளில் இருந்து தேடி எடுத்துப் பதிப்பித்தவர் தென் ஆற்காடு பகுதியில் வாழ்ந்த வடக்குபட்டு சுப்பிரமணிய பிள்ளை என்பவர். அவர் மகன் தணிகைமணி வ. சு. செங்கல்வராய பிள்ளை அவர்கள் சிவபெருமானது புகழைப் பாடும் அருள் நூல்கள் பன்னிரு திருமுறைகளாக தொகுக்கப்பட்டிருப்பது போல, முருகப் பெருமானது புகழைப் பாடும் அருள் நூல்களையும் பன்னிரு திருமுறைகளாக – முருகவேள் பன்னிரு திருமுறை என்று தொகுத்து பொருளுரையோடு வெளியிட்டார்.
<p> முருகவேள் பன்னிரு திருமுறையில் ஆறுபடை வீடுகளை அடிப்படையாக வைத்துப் பாடப்பெற்ற திருப்புகழ்ப் பாடல்கள் முதல் ஆறு திருமுறைகளாக வகுக்கப்பட்டிருக்கிறது. ஏழாம் திருமுறை பிற பதிகளைப் போற்றிய திருப்புகழ்ப் பாடல்களால் தொகுக்கப் பெற்றது. கந்தரலங்காரம் கந்தரந்தாதி ஆகியன எட்டாம் திருமுறைகளாயின. திருவகுப்பு ஒன்பதாம் திருமுறை ஆகியது. கந்தரனுபூதி பத்தாம் திருமுறைப் பகுப்பாகியது. முற்கால அடியார்கள் பாடிய முருகனைப் பற்றிய பாடல்களின் தொகுப்புகள் பதினோராம் திருமுறையாயின. பன்னிரண்டாம் திருமுறை சேய்த்தொண்டர் புராணம் ஆகும்.
</div>
<!-- Go to www.addthis.com/dashboard to customize your tools --> <script type="text/javascript" src="//s7.addthis.com/js/300/addthis_widget.js#pubid=ra-5a756e49e8eaa960"></script>
Uma Shankarihttp://www.blogger.com/profile/11875827154360557920noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1912487802559660431.post-71091664073352362112022-04-12T10:51:00.002+05:302022-07-15T04:22:31.581+05:30ஆதிமூலமே என்று கஜேந்திரன் அலறிய பொழுது ....To read the story in English, click <a href="http://thiruppugazh-nectar.blogspot.com/2013/02/story-of-gajendra-and-lord-vishnu.html" target="_blank">Story of Gajendra and Lord Vishnu</a>
<div lang="ta">
<p>பாற்கடலால் சூழப்பட்ட பர்வதம் த்ரிகூடம். அம்மலையின் அடிவாரத்தில் வருணன் உருவாக்கிய ருதுமத் என்ற ஒரு அழகிய தோட்டம். அதன் அருகில் மிக அழகிய குளம். அங்கு கம்பீரமும் வீரமும் மிகுந்த யானைகளின் அரசனான கஜேந்திரன் பெண் யானைகளுடனும் குட்டிகளுடனும் வசித்து வந்தது.
<p>முற்பிறவியில் அந்த யானை பாண்டிய மன்னன் இந்திரதும்யுனாக பிறந்து மஹாவிஷ்ணு மீது மிகவும் அதீத பக்தி கொண்டு வாழ்ந்து கொண்டிருந்தான். ஒரு சமயம் அவன் பூஜை செய்து கொண்டிருந்த போது காண வந்த அகத்திய முனிவரை வெகுநேரம் காக்க வைத்துவிட்டான். அதனால் கோபமடைந்த அகத்தியர், தன்னை மதிக்காமல் மதம் கொண்டு நடந்தலால் மதம் கொண்ட யானையாக மாறக்கடவது என்று சாபம் கொடுத்தார். மன்னன் முனிவர் தாள் படிந்து வேண்டி, அடுத்த பிறவியிலும் தான் பெருமாள் மேல் கொண்ட பக்தி தொடர வேண்டும் என்று வேண்ட, முனிவரும் அவ்வாறே அருளி, ஸ்ரீமந் நாராயணனே அவன் சாபத்தை தீர்ப்பார் என்று வரம் கொடுத்தார்.
<a name='more'></a>
<p>இதே போல் முதலையும் முற்பிறவியில் ஹூஹூ என்னும் கந்தர்வனாக இருந்தான். பொய்கைக்குக் கால் கழுவ வருபவர்களின் விளையாட்டாக காலைப் பற்றி இழுப்பான். ஒரு சமயம் ஒற்றைக் காலால் தவம் செய்துகொண்டு இருந்த தேவலர் என்ற முனிவர் காலை இவ்வாறு இழுத்த போது முனிவர் வெகுண்டு அவனுக்குத் தண்ணீரில் கிடந்து தவிக்கும் முதலையாக ஆகும் சாபம் அளித்தார். அவன் தன் தவறை உணர்ந்து சாபவிமோசனம் வேண்ட, மஹாவிஷ்ணுவின் சுதர்சன சக்கரம் பட்டு அவனுக்குச் சாபவிமோசனம் ஏற்படும் என்றார்.
<p>ஒரு நாள் தாமரை மலரை தான் வணங்கும் பெருமாளுக்கு சமர்ப்பிக்க பறிக்கப் பொய்கைக்குள் காலை வைத்த போது அந்த பொய்கையிலிருந்த முதலை கஜேந்திரனின் காலைக் கவ்விக்கொண்டு கஜேந்திரனை தண்ணீருக்குள் இழுத்தது. கஜேந்திரன் தன்னை தானே காத்துக்கொள்ள முடியும் என்ற தைரியத்தில் மணிகணக்காக போராடியது. இறுதியில் மரணத்தின் வாயிலில் நின்ற அந்த வேளையில் முன் ஜென்மத்தில் தான் அந்த ஆதிமூலத்தை துதித்த துதிகள் அவனுக்கு ஞாபகம் வந்தன. அவன் அவற்றை பாராயணம் செய்து பூரண சரணாகதியுடன் "ஆதிமூலமே" என்று அலறினான். அடுத்த கணமே கருடன் மேல் ஆரோகணித்துக் கையில் சுதர்சன சக்கரத்துடன் வந்து யானையின் துயர் தீர்த்தான் பக்தவத்சலனான மஹா விஷ்ணு.
<p> பூரண சரணாகதியை விளக்குவதே இந்தக் கஜேந்திர மோக்ஷம். உலக இன்பமாகிய மலர்களை பறிக்க இறங்கிய யானை கஜேந்திரனை உலக பற்றும் கர்ம வினைகளுமாகிய முதலை பற்றிக் கொண்டு முக்தி அடைய முடியாமல் தடுக்கின்றது. சரணாகதி அடைந்த ஜீவாத்மாவான கஜேந்திரனுக்கு மோக்ஷம் அருள விரும்பும் பரம்பொருள் உலக பற்றாகிய முதலையை அழித்து மறைத்து இன்பமாகிய வீட்டை அருளுகிறது .
</div>
<!-- Go to www.addthis.com/dashboard to customize your tools --> <script type="text/javascript" src="//s7.addthis.com/js/300/addthis_widget.js#pubid=ra-5a756e49e8eaa960"></script>
Uma Shankarihttp://www.blogger.com/profile/11875827154360557920noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1912487802559660431.post-72975254050409107822022-02-05T09:00:00.011+05:302022-05-23T23:48:32.338+05:30மூல மந்திரம் — பதவுரை <style>
table {
border-collapse: collapse;
border-spacing: 0;
width: 100%;
border: 1px solid #ddd;
}
td {
text-align: left;
padding: 10px;
}
td:nth-child(1) {
width: 40%;
}
td:nth-child(2) {
width: 60%;
}
tr:nth-child(even) {
background-color: #f2f2f2;
}
</style>
By Mrs Devaki Iyer, Pune<br /><br /> For a translation of this song in English, click the link <a href="https://thiruppugazh-nectar.blogspot.com/2014/05/moolamandiram.html" target="_blank"><u>moolamanthiram</u></a><br /><br />
<table lang="ta">
<tr><td>மூலமந்திரம் </td><td> வேதத்தின் மூலமான மூலமந்திரமான சிவ பஞ்சாக்ஷரமோ, முருகனின் ஷடாக்ஷரத்தையோ </td></tr>
<tr><td>ஓதல் இங்கு இலை </td><td> நியமமாக செபிக்கும் பழக்கம் என்னிடம் இல்லை </td></tr>
<tr><td>ஈவது இங்கு இலை </td><td> பிறருக்கு, தேவை என்று வருபவர்க்குக் கொடுக்கும் பழக்கமும் இல்லை </td></tr>
<tr><td>நேயம் இங்கிலை </td><td> உன்னிடம் மாறாத அன்பு ( அல்லது எவரிடத்தும் அன்பு செய்யும் பாங்கு) என்னிடத்தில் இல்லை </td></tr>
<tr><td>மோனம் இங்கு இலை </td><td> மனம் அடங்கியதன் அடையாளமான மௌனம் (மனன சீலம்) என்னிடம் இல்லை </td></tr>
<tr><td>ஞானம் இங்கு இலை </td><td> (ஞானத்தின் வெளிப்பாடான மேற்சொன்ன எதுவும் இல்லை ஆதலால்) மெய் உணர்வு இல்லவே இல்லை என்பது வெளிப்படை </td></tr><a name='more'></a>
<tr><td colspan="2" style="text-align: center; ">(என்ன உள்ளது என்றால்)</td></tr>
<tr><td>மடவார்கள் மோகம் உண்டு </td><td> தணியாத பெண் ஆசை இருக்கிறது </td></tr>
<tr><td>அதி தாகம் உண்டு </td><td> இது வேண்டும் அது வேண்டும் என்று அதிக உலக இச்சைகள் இருக்கிறது </td></tr>
<tr><td>அபசாரம் உண்டு </td><td> தீய வழிகளைப் பின்பற்றுவது இருக்கிறது </td></tr>
<tr><td>அபராதம் முண்டிடு </td><td> குற்றங்கள்/ பாபங்கள் மிகுந்த </td></tr>
<tr><td>மூகன் என்று ஒரு பேரும் உண்டு</td><td>மூர்க்கன் என்கிற 'நற்' பெயர் இருக்கிறது.</td></tr>
<tr><td>அருள் பயிலாத </td><td> உன் அருளைப் பெறுவதற்கான வழிகள் எதையும் கற்காத</td></tr>
<tr><td>கோலமும் </td><td> நிலைமையும்</td></tr>
<tr><td>குண ஈன </td><td> நல்ல குணம் ஏதும் இல்லாத</td></tr>
<tr><td>துன்பர்கள் </td><td> துன்பம் தரக்கூடியவர்கள்</td></tr>
<tr><td>வார்மையும்</td><td> சேர்க்கையும்</td></tr>
<tr><td>பலவாகி வெந்து எழு </td><td> பலவிதமான துன்பங்கள்தர என்று ஏற்படுத்தப்பட்ட</td></tr>
<tr><td>கோர கும்பியிலே</td><td> பயங்கரமான நரகங்களில் </td></tr>
<tr><td>விழுந்திட நினைவாகி</td><td> சென்று விழுவதற்குரிய செயல்களையே நினைத்து</td></tr>
<tr><td>கூடு கொண்டு </td><td> மனிதருக்குரிய அறிவு, குணம் இவை இல்லாத வெற்றுக்கூடு போன்ற இந்த உடலைச் சுமந்துகொண்டு</td></tr>
<tr><td>உழல்வேனை </td><td> திரிகின்ற என்னை</td></tr>
<tr><td>அன்பொடு </td><td> கருணை கூர்ந்து</td></tr>
<tr><td>ஞான நெஞ்சினர்</td><td> ஞானம் அடைந்த மனத்தவர்கள்</td></tr>
<tr><td>பால் இணங்கிடும்</td><td> இடம் சேரும்படியான </td></tr>
<tr><td>கூர்மை தந்து இனி</td><td> அறிவுக்கூர்மை இனிமேலாவது கொடுத்து</td></tr>
<tr><td>ஆள வந்து </td><td> எனை அடிமையாக்கிக் கொள்ள வந்து </td></tr>
<tr><td>அருள் புரிவாயே </td><td> அருள் செய் (முருகா)
<tr><td>பீலி வெந்து </td><td> (அமணத் தலைவர்கள் கையில் பிடித்திருந்த) மயில் பீலி பொசுங்கி</td></tr>
<tr><td>உயர் ஆலி வெந்து </td><td> ஆலிலையும் எரிந்து</td></tr>
<tr><td>அவ் அசோகு வெந்து </td><td> அசோகமரக் கொம்பும் எரிந்து</td></tr>
<tr><td>அமணர் மூகர் </td><td> அந்த அமணர்களாகிய மூர்க்கர்கள்</td></tr>
<tr><td>நெஞ்சிடை பீதி கொண்டிட</td><td> மனதில் பயம் அடையும் படி</td></tr>
<tr><td>வாது கொண்டு அருள் </td><td> அவர்களோடு அனல் வாதம் புனல் வாதம் செய்து அருளி</td></tr>
<tr><td>எழுது ஏடு </td><td> சைவ மந்திரம் எழுதிய ஏடானது </td></tr>
<tr><td>பேணி அங்கு </td><td> பாதுகாப்பாக </td></tr>
<tr><td>எதிர் ஆறு சென்றிட</td><td> ஆற்றின் ஓட்டத்தை எதிர்த்து நீந்திச் செல்ல</td></tr>
<tr><td>மாறனும் பிணி தீர</td><td> பாண்டிய மன்னனுக்கு வந்த சுரநோயோடு அவன் முதுகு கூனும் சரியாகிவிட</td></tr>
<tr><td>வஞ்சகர் </td><td> வஞ்சனை எண்ணம் கொண்ட (ஞான சம்பந்தரைக் கொல்லத்துணிந்த) சமணர்கள்</td></tr>
<tr><td>பீறு வெங்கழு ஏற</td><td> கொடிய கழு மரத்தில் தாமே ஏறும்படி</td></tr>
<tr><td>வென்றிடு முருகோனே</td><td> வாதில் வென்ற ஞான சம்பந்தராய் வந்து அவதரித்த முருகப்பெருமானே</td></tr>
<tr><td>ஆலம் உண்டவர் </td><td> கடலிலிருந்து வந்த நஞ்சை உண்டவரும்</td></tr>
<tr><td>சோதி அங்கணர் </td><td> நெருப்பை உமிழ் அழகிய நெற்றிக்கண்ணை உடையவர்</td></tr>
<tr><td>பாகம் ஒன்றிய </td><td> ஆன சிவபெருமானின் இடப்பாகத்தில் சேர்ந்திருக்கும்</td></tr>
<tr><td>வாலை அந்தரி </td><td> இளமையும் அழகும் உள்ள</td></tr>
<tr><td>ஆதி அந்தமுமான</td><td> இவ்வுலக னைத்தும் தோன்றுவதற்கும் முடிவதற்கும் இடமான</td></tr>
<tr><td>சங்கரி </td><td> சங்கரரின் துணைவியான உமாதேவியின்</td></tr>
<tr><td>குமரேசா </td><td> புதல்வனே</td></tr>
<tr><td>ஆரணம் பயில் </td><td> வேதங்கள் ஓதும் (வேதத்தால் அறியப்படும்)</td></tr>
<tr><td>ஞான புங்கவ </td><td> அறிவில் சிறந்தவனே</td></tr>
<tr><td>சேவல் அம் கொடி</td><td> அழகான சேவல் கொடி </td></tr>
<tr><td>ஆன பைங்கர </td><td> தரித்த அழகிய கை உடையவனே</td></tr>
<tr><td>ஆவினன் குடி வாழ்வு கொண்டு </td><td> ஆவினன்குடி எனும் தலத்தில் வந்து வாழ்ந்து</td></tr>
<tr><td>அருள் பெருமாளே </td><td> அருள் புரியும் பெருமானே.</td></tr>
</table>
<!-- Go to www.addthis.com/dashboard to customize your tools --> <script type</td><td>"text/javascript" src</td><td>"//s7.addthis.com/js/300/addthis_widget.js#pubid</td><td>ra-5a756e49e8eaa960"></script>
Uma Shankarihttp://www.blogger.com/profile/11875827154360557920noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1912487802559660431.post-55939921747706055882022-02-05T08:24:00.006+05:302022-02-09T06:26:34.818+05:30 வசனமிகவேற்றி — பதவுரை<style>
table {
border-collapse: collapse;
border-spacing: 0;
width: 100%;
border: 1px solid #ddd;
}
td {
text-align: left;
padding: 10px;
}
td:nth-child(1) {
width: 40%;
}
td:nth-child(2) {
width: 60%;
}
</style>
By Mrs Devaki Iyer, Pune
<p> For a translation of this song in English, click the link <a href="https://thiruppugazh-nectar.blogspot.com/2014/05/vachanamiga.html" target="_blank"><u>vachana miga</u></a>
</p>
<table lang="ta">
<tr><td>வசனம் மிக ஏற்றி </td><td>வாக்கால் உச்சரித்து பல ஆவ்ருத்திகள் (எண்ணிக்கையில்) உரு ஏற்றி </td></tr>
<tr><td>மறவாதே </td><td> (அம்மந்திரத்தால்
குறிக்கப்படும் இறைவடிவத்தை)
மனதை விட்டு அகலாமல்தியானித்து</td></tr>
<tr><td>மனது துயர் ஆற்றில் </td><td> ஆற்றின்
ஓட்டம்போலத் தொடர்ந்து வரும்
துன்பங்களாலான இவ்வுலக
நினைவுகளில் மனம் </td></tr>
<tr><td>உழலாதே </td><td> சென்று துன்பப்படாமல் (காத்து, அடக்கி) </td></tr>
<tr><td>இசைபயில் </td><td> புகழ்வாய்ந்த/
ப்ரசித்தமான</td></tr>
<tr><td>ஷடாக்ஷரம் </td><td> ('சரவண பவ'
எனும்முருகனுக்கு உரிய) ஆறு
எழுத்து </td></tr>
<tr><td>அதாலே </td><td> மந்திரத்தை மேற்சொன்ன முறையில் ஜபிப்பவர்க்கு </td></tr>
<tr><td>இக பர சௌபாக்கியம்</td><td> இவ்வுலக
வாழ்க்கை இன்பங்களும் அதோடு
கூட மோக்ஷத்தையும் </td></tr>
<tr><td>அருள்வாயே </td><td> கொடுத்து விடுகிறவன்
அல்லவா நீ (நாம ஜபத்தின் பலனை, "எந்தை புகலூர் பாடுமின் புலவீர்காள் / இம்மையே தரும் சோறும் கூறையும் ஏத்தினால் இடர் கெடலும் ஆம்/ அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே" என்பார் சுந்தர மூர்த்தி நாயனார்.)</td></tr>
<tr><td> பசு பதி </td><td> உடல் பற்று/ உலகப்பற்று
க்களால் கண்டுண்ட இவ்வுயிர்களு
க்கெல்லாம் தலைவனான (அக்கட்டுக்
களை அறுக்கவல்ல) </td></tr>
<tr><td>சிவாக்யம் உணர்வோனே </td><td> சிவ
பெருமானிடம் சென்று சேர்க்கும்
நூல்களை (சைவாகமங்களை) நன்கு
அறிந்தவனே (உபதேசம் புரிய
வல்லவனே.) </td></tr>
<tr><td>பழநி மலை வீற்று </td><td> இந்தப் பழநி எனும் சிவமலையில் அமர்ந்து</td></tr>
<tr><td>அருளும் வேலா </td><td> பக்தர்களுக்கு அருள் புரியும் வேலவனே</td></tr>
<tr><td>அசுரர்கிளை வாட்டி </td><td> தாரகன், சூரபத்மன், சிங்கமுகன் போன்ற அசுரர்களுடைய குலத்தையே போரில் வதைத்து அழித்து
</td></tr>
<tr><td>மிக வாழ </td><td> நன்றாக மீண்டும் வாழும்படி</td></tr>
<tr><td>அமரர் </td><td> தேவர்களை</td></tr>
<tr><td>சிறைமீட்ட </td><td> அவ்வசுரர்களின் பிடியில் இருந்து விடுவித்த</td></tr>
<tr><td>பெருமாளே </td><td> தலைவனே</td></tr>
</table>
<!-- Go to www.addthis.com/dashboard to customize your tools --> <script type</td><td>"text/javascript" src</td><td>"//s7.addthis.com/js/300/addthis_widget.js#pubid</td><td>ra-5a756e49e8eaa960"></script>
Uma Shankarihttp://www.blogger.com/profile/11875827154360557920noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1912487802559660431.post-1298605661232269322022-01-20T23:30:00.011+05:302022-02-09T06:30:05.975+05:30சரக்கேறி — பதவுரை<head>
<body>
<style>
table {
border-collapse: collapse;
border-spacing: 0;
width: 100%;
border: 1px solid #ddd;
}
td {
text-align: left;
padding: 10px;
}
td:nth-child(1) {
width: 35%;
}
td:nth-child(2) {
width: 65%;
}
tr:nth-child(even) {
background-color: #f2f2f2;
}
</style>
By Mrs Devaki Iyer, Pune
<p> For a translation of this song in English, click the link <a href="https://thiruppugazh-nectar.blogspot.com/2017/01/471.sarakkeri.html" target="_blank"><u>sarakkeri</u></a>
</p>
<table lang="ta">
<tr><td>சரக்கு ஏறி</td> </td><td>96 மூலப்பொருள்கள், 36 கட்டு/மூட்டைகளாகக் கட்டி வைக்கப்படட்டுள்ள</td></tr>
<tr><td>இத்தப்பதி வாழ் </td><td> இந்த (பதி என்பது ஆன்மாவின் ஆன்மா) உயிர் குடி கொண்டுள்ள</td></tr>
<tr><td>தொந்த</td></td><td> குளிர்-வெப்பம், இன்பம்_-துன்பம்,மானம்-அவமானம் முதலிய இருமைகளுக்கு</td></tr>
<tr><td>பரிவோடு ஐந்து</td><td> அன்புற்றவர் போலத் தோன்றுகின்ற ஐந்து புலன்களாகிற</td></tr>
<tr><td>சதிகாரர் புக்கு</td><td> ஆன்மாவை முக்தி நெறியில் செல்லவிடாது தடுக்கும் வஞ்சனையாளர் புகுந்து கொண்டு</td></tr>
<tr><td>உலைமேவு</td><td> நெருப்பின் மீது இருப்பது போன்ற
அழிவுக்கு வழியான</td></tr>
<tr><td>இந்தச்செயல் மேவி</td><td> புலன் இன்ப நுகர்ச்சிகளில்/உலகவியலில் ஈடுபட்டு
</td></tr>
<tr><td>சலித்தே மெத்த </td><td> அங்குமிங்கும் ஓடி (சலித்தல் = அசைதல்)</td></tr>
<tr><td>சமுசாரம்,பொன் </td><td> உலக இன்பங்களையும், பொன் பொருளையும்</td></tr>
<tr><td>சுகித்தே</td><td> நன்றாக அனுபவித்து</td></tr>
<tr><td>சுற்றத்தவரோடு </td><td> மனைவி மக்கள் மற்றும் உறவினரோடு</td></tr>
<tr><td>இன்பத்தழைத்தே</td><td> நாளும் பெருகும் சந்தோஷத்தோடு</td></tr> <a name='more'></a>
<tr><td>மெச்ச </td><td> அனைவரும் கொண்டாடும்படி</td></tr>
<tr><td>தயவோடு</td><td> மிகுந்த பரிவோடு</td></tr>
<tr><td>இந்தக்குடி பேணி</td><td> இந்தசொந்தபந்தங்களைப் பாதுகாத்து (முடிவில்)</td></tr>
<tr><td>குரக்கோணத்தின்</td><td> கூர்மையான அலகை உடைய (கோணம் = மூக்கு)</td></tr>
<tr><td>கழு, நாய் உண்ப </td><td> பிணம்தின்னிக் கழுகுகளும், நாய், நரி போன்ற விலங்குகளும் உண்ணும்படி</td></tr>
<tr><td>குழிக்கே வைத்து</td><td> குழி தோண்டிப்புதைக்கப்படும்</td></tr>
<tr><td>சவமாய் நந்து </td><td> பிணமாகி அழுகக்கூடிய</td></tr>
<tr><td>இக்குடில்கேநத்தி</td><td> இந்த மாய உடல் மீதே பற்று வைத்து</td></tr>
<tr><td>பழுதாய்</td><td> வீணாக</td></tr>
<tr><td>மங்கப்படுவேனோ </td><td> அழிந்து விடுவேனோ</td></tr>
<tr><td colspan="2" style="text-align: center;">(முருகா அப்படி ஆகி விடாமல்)</td></tr>
<tr><td>குறித்தே முத்திக்கு </td><td> வீடு பெறுவதையே குறிக்கோளாகக் கொண்டு,</td></tr>
<tr><td>மறா (மாறா) இன்ப </td><td> அழியாத/குறையாத ஆனந்தமாம்</td></tr>
<tr><td>தடத்தே பற்றி </td><td> முக்தி வழியைப்பிடித்துக்கொண்டு</td></tr>
<tr><td>சக மாயம்</td><td> இவ்வுலகம் சார்ந்த</td></tr>
<tr><td>பொய்க்குலக்கால்</td><td> பொய்யான, இன்று இருப்பது போல் தோன்றி நாளை மறையும்உலக விஷய பற்றுக்கள்</td></tr>
<tr><td>வற்ற</td><td> வற்றி இல்லாமல் தொலையும் படி</td></tr>
<tr><td>சிவஞானம்</td><td> சிவ ஞானம் ஆகிற (அதாவது சீவனே
சிவன் எனும் முற்றிய அறிவு)</td></tr>
<tr><td>பொன் கழல் தாராய் </td><td> உன்னுடைய மேலான திருப்பாததரிசனம் தந்து அருள்வாய்</td></tr>
<tr><td>புரக்காடு </td><td> முப்புரங்கள் (காட்டில் பிடித்த தீ போல்)</td></tr>
<tr><td>அற்றுப்பொடியாய் மங்க </td><td> எரிந்து சாம்பலாகி அழியச்செய்தவர்</td></tr>
<tr><td>கழைச்சாபத்து </td><td> கரும்பை வில்லாக உடைய</td></tr>
<tr><td>ஐச்சடலான் உங்க</td><td> அழகிய மேனி உடைய மன்மதனும் அழிய</td></tr>
<tr><td>புகைத்தீ பற்ற </td><td> அவனையும் தீயில் எரித்தவர்</td></tr>
<tr><td>புகலோர்</td><td> என்று பேசப்படும் சிவபெருமானார்</td></tr>
<tr><td>அன்புற்று</td><td> இந்திரன் முதலிய தேவர்கள்தாரகாசுரனுக்கு அஞ்சியபொழுது அவர்கள் மீது கருணை கொண்டு</td></tr>
<tr><td>அருள்வோனே </td><td> தோற்றுவித்தவனே</td></tr>
<tr><td>புடைத்தே </td><td> நன்றாக அடித்து
</td></tr>
<tr><td>எட்டுத் திசையோர்</td><td> எட்டுத் திசையிலும்/எல்லா இடங்களிலும் இருப்பவர்கள் (திக்பாலர்கள் என்றும் ஆம்)</td></tr>
<tr><td>அஞ்ச </td><td> பயம் அடையும் படி</td></tr>
<tr><td>தனிக்கோலத்துப் புகு</td><td>ஒப்பற்ற (பயங்கர) வடிவெடுத்து நினைத்த இடத்தில் செல்லக்கூடிய</td></tr>
<tr><td>சூர் மங்க</td><td> சூர பத்மன் அழியும்படி</td></tr>
<tr><td>புகழ்ப்போர் சத்திக்கு</td><td>போர் புரிவதில் வல்லமை பெற்ற அந்த உன் வேல் ஆயுதத்துக்கு</td></tr>
<tr><td>இரை ஆனந்தத்து</td><td> (அவன் சதையை) உணவாக மிகவும் மகிழ்சியடையும்படி</td></tr>
<tr><td>அருள்வோனே </td><td> கொடுத்தவனே</td></tr>
<tr><td>திருக்கானத்தில் </td><td> அழகான அந்தத்தினைப்புனத்தில்</td></tr>
<tr><td>பரிவோடு </td><td> மிகுந்த அன்போடு,</td></tr>
<tr><td>அந்தக் குறக்கோலத்து</td><td>குற வேடத்தில் வந்த</td></tr>
<tr><td>செயலாள் அஞ்ச </td><td> லக்ஷ்மியான வள்ளி பயமுறவும்</td></tr>
<tr><td>திகழ் சீர் அத்திக்கு </td><td> பெருமை பொருந்திய (தன் தமையனான) யானைக்கு</td></tr>
<tr><td>அழல், வா என்ப</td><td> பயந்து அழாதே, நான் இருக்கிறேன் வாஎன்று கூறி</td></tr>
<tr><td>புணர்வோனே</td><td> அவளை அணைத்துக்கொண்டவனே</td></tr>
<tr><td>சிவப்பேறுக்கு </td><td>(அது போல) சிவப்பேறு எனும் முக்தி,</td></tr>
<tr><td>கடையேன்</td><td> மிகவும் கீழ் நிலையில் உள்ள நானும்</td></tr>
<tr><td>வந்து உள் புக</td><td> கூட (எப்படியோ) வந்து சேர்ந்து விடுமாறு</td></tr>
<tr><td>சீர் வைத்துக்கொளு</td><td>செய்து உன் புகழை (அடியார்க்கு எளியன் கருணை வடிவினன் என்னும்) தக்க வைத்துக்கொள்வாயாக</td></tr>
<tr><td>ஞானம் பொன்</td><td>ஞானமாகிய செல்வத்துக்குப்பெயர் பெற்ற</td></tr>
<tr><td>திருக்காளத்தி </td><td> திருக்காளஹஸ்தியில் எழுந்தருளி இருக்கும்</td></tr>
<tr><td>பெருமாளே </td><td> முருகப்பெருமானே</td></tr>
</table>
</body>Uma Shankarihttp://www.blogger.com/profile/11875827154360557920noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1912487802559660431.post-69667190728508867342022-01-20T23:17:00.001+05:302022-01-20T23:17:55.819+05:30உடுக்கத் துகில் — பதவுரை<head>
<style>
.td1 {
text-align: left;
width: 40%;
padding: 1.5 em 1.5em 1.5em 0;
}
.td2 {
width: 60%;
padding: 1.5 em 1.5em 1.5em 0;
}
</style>
</head>
<body>
By Mrs Devaki Iyer, Pune
<p> For a translation of this song in English, click the link <a href="https://thiruppugazh-nectar.blogspot.com/2015/07/udukkathugil.html" target="_blank"><u>udukka thugil</u></a>
</p>
<table lang="ta">
<tr><td class="td1">உடுக்க</td><td class="td2">உடலை மூடவும், குளிர் வெம்மையில் இருந்து பாதுகாத்துக்கொள்ளவும்</td></tr>
<tr><td>துகில் வேணும்</td><td>ஆடைகள் வேண்டும் </td></tr>
<tr><td>நீள் பசி </td><td>தொடர்ந்து துன்புறுத்தும் பசி நோயை</td></tr>
<tr><td>அவிக்கைக்கு</td><td>நீக்குவதற்கு</td></tr>
<tr><td>அ(ன்)ன </td><td>அன்னமும்</td></tr>
<tr><td>பானம் வேணும் </td><td>நீர், திரவ பதார்த்தங்களும் வேண்டும்</td></tr>
<tr><td>நல் ஒளிக்கு </td><td>நன்கு ப்ரகாசிப்பதற்கு/அழகாகத் தோன்றுவதற்கு</td></tr>
<tr><td>புன (பின்) நல்லாடை வேணும் </td><td>மீண்டும்(பின்னும்) நல்ல (பட்டு முதலிய) ஆடைகள்/
(ஏற்கெனவே ஆடை தேவை என்பது சொல்லியாயிற்று எனவே, அத்தியாவசிய தேவைக்கு மட்டுமல்ல, கொஞ்சம் பகட்டுக்கு
“பின்னும்” பட்டு ஆடை வேண்டும் என்பதே புனலாடை, (வடமொழியில் புன: பின்னும்) வேண்டும் </td></tr>
<tr><td>மெய் உறு நோயை</td> <td>உடம்புக்கு ஏற்படும் பல பிணிகளை</tr>
<tr><td>ஒழிக்க </td><td>இல்லாமல் செய்ய</td></tr>
<tr><td>பரிகாரம் வேணும்</td><td>மாற்று/ மருந்துகள் வேண்டும்</td></tr>
<tr><td>உள் இருக்க</td><td>அகத்தில் /வீட்டில் குடும்பத்தைப்பராமரிக்க</td></tr>
<tr><td>சிறு நாரி வேணும் </td> <td>ஒரு இளம் பெண் தேவை</td></tr>
<tr><td>ஒர் படுக்க தனி வீடு வேணும்</td><td>அப்படி இல்லறத்தனாக வாழ தனிமை தேவை. எனவே ஒரு எனக்கென்று தனியான, தொந்தரவு இல்லாத இல்லமும் தேவை </td></tr><a name='more'></a>
<tr><td>இவ்வகை யாவும் கிடைத்து <td>என்றெல்லாம் வேண்டியும், தேடியும் கிடைக்கப்பெற்று</td></tr>
<tr><td>க்ருஹவாசி ஆகி</td> <td>ஒரு இல்லறத்தான் ஆகி</td></tr>
<tr><td>அம்மயக்ககடல் ஆடி</td> <td>அந்த, மாயையாகிய அலைகள் ஓயாத கடலில் திளைத்துக்குளித்து</td></tr>
<tr><td>நீடிய கிளைக்கு </td><td>அதனால் வளர்ந்து கொண்டே போகும் சுற்றத்தினருக்கு</td></tr>
<tr><td>பரிபாலனாய்</td><td>பாதுகாவலானக இருப்பதிலேயே</td></tr>
<tr><td>உயிர் அவமே போம்</td><td>இந்த ஜீவன் வீணாகிப்போகும்</td></tr>
<tr><td colspan="2" style="text-align: center;">(எனவே என்னை மாயையில் இருந்து மீட்டு)</td></tr>
<tr><td>க்ருபைச்சித்தமும்</td> <td>உன்னுடைய கருணை வடிவான சித்ததையும் </td></tr>
<tr><td>ஞான போதமும்</td> <td>(அதன் பயனாக) ஞான உபதேசமும்</td></tr>
<tr><td>அழைத்து தர வேணும் </td> <td>நீயாகவே என்னைத் தன்பால் ஈர்த்து எனக்கு அருள வேண்டும்</td></tr>
<tr><td>ஊழ் பவ</td><td>என்னுடைய வினைப்பயன் என்னும்</td></tr>
<tr><td>கிரிக்குள் </td> <td>காடுகள் அடர்ந்த மலையினுள்</td></tr>
<tr><td>சுழல்வேனை</td><td>வெளியேற வழிதெரியாது சுற்றிச் சுழல்கின்ற என்னை</td></tr>
<tr><td>ஆள்வது ஒரு நாளே </td> <td>அப்படி நீயாக மனம் இரங்கி ஆட்கொள்ளும் ஒரு நாளும் வருமோ</td></tr>
<tr><td colspan="2">(எப்படி என்றால் வெளி ஏற வழி தெரியாமல் இராவணனிடம் சிறைப்பட்டிருந்த சீதையை மீட்க, சுக்ரீவனின் மந்திரியாகஇருந்த, குறிப்பறியும் சாமர்த்தியமும் வீர தீரமும் உடைய அனுமனைத் தன் பெயர் பொறித்த உயர்ந்த கணையாழியை அடையாளமாகக்கொடுத்து அனுப்பி, அவன் இலங்கையைப் பொசுக்கி, மீண்டும் தன்னிடம் வந்து அவள் சேதி சொல்ல ராமன் தானே சென்று மீட்டுக்கொண்டது போல. தக்க ஒரு குருநாதரை அனுப்பி என் வினைகளைப்பொசுக்கி, நீயும் என்னை மீட்டெடுத்துக்கொள்ள வேண்டும் ஸ்வாமி.)</td></tr>
<tr><td>குடக்குச்</td> <td>மேற்கு திக்கில் சென்று</td></tr>
<tr><td>சிலதூதர் தேடுக </td> <td>சில வானர தூதர்கள் தேடட்டும்</td></tr>
<tr><td>வடக்குச் சிலதூதர் நாடுக </td> <td>வடக்குப்புறம் சென்று சில வாரன வீரர்கள் தேடட்டும்.</td> </tr>
<tr><td>குணக்குச்</td> <td>கிழக்கே சென்று</td></tr>
<tr><td>சிலதூதர் தேடுக</td> <td>ஒரு வானரப்படை தேடுங்கள்</td></tr>
<tr><td>வென மேவி<td>என்று ஏவ, அவர்களும் அப்படியே செல்லவும்</td></tr>
<tr><td>குறிப்பில்</td><td>இவனால்தான் காரியம் ஆகும் என்னும் குறிப்புத் தோன்றும்படி </td></tr>
<tr><td>குறிகாணும்மாருதி</td><td> உள்ளக்குறிப்பைச்சொல்லாமல் உணரும் வாயு குமாரனே</td></tr>
<tr><td>இனித்தெற்கு </td><td> வானரங்கள் காண, ராவணன் ஒரு பெண்ணை (சீதையை) வலுவில் கொண்டு சென்ற திசையான தெற்கில்</td></tr>
<tr><td>ஒரு தூது போவது</td> <td>ஒப்பற்றவனான நீ போவாய் </td></tr>
<tr><td>குறிப்பிற் குறி </td> <td>குறிக்கோளான சீதை பற்றிய தகவல் </td></tr>
<tr><td>போன போதிலும் வரலாமோ</td> <td> கிடைக்காமல் நீ திரும்பி வரலாகுமா (ஆகாது- எப்படியும் நீ செய்வாய் எனவும்)</td></tr>
<tr><td>அடிக் குத்திரராகிய</td> <td>அடியோடு, அறவே வஞ்சகர்களான</td></tr>
<tr><td>அரக்கர்க்கு</td></td><td> அந்த ராவணாதி அசுரர்களுக்கு</td></tr>
<tr><td>இளையாத </td> <td>சற்றும் சளைக்காத (அஞ்சாத)</td></tr>
<tr><td>தீரனும் </td><td>வீரத்தில் மிக்க அனுமனும் சென்று </td></tr>
<tr><td>அலைக்கு </td> <td>அலைகடலை </td></tr>
<tr><td>அப்புறம் மேவி </td> <td>தாண்டிச்சென்று </td></tr>
<tr><td>மாது உறு </td><td>சீதையாகிற பெண் இருக்கும்</td></tr>
<tr><td>வனமே சென்று </td><td>அந்த அசோக வனத்தை அடைந்து </td></tr>
<tr><td>அருள் பொன்</td> <td>இராமனால் கொடுக்கப்பட்ட</td></tr>
<td>திருவாழி மோதிரம்</td> <td>அந்த உயர்ந்த கணையாழியை</td></tr>
<tr><td>அளித்து உற்ற அவர் மேல் </td><td> சீதையிடம் கொடுத்து விட்டு வந்த மாருதியின் மீது </td></tr>
<tr><td>மனோகரம் அளித்து </td><td> உன் வாஞ்சையை/அனுக்ரஹத்தை கொடுத்து </td></tr>
<tr><td>கதிர்காமம் </td><td> கதிர்காமத்தலத்தில்</td> </tr>
<tr><td>மேவிய பெருமாளே </td></td><td> வீற்றிருக்கின்ற பெருமானே</td> </tr>
</table>
<!-- Go to www.addthis.com/dashboard to customize your tools --> <script type</td>"text/javascript" src</td>"//s7.addthis.com/js/300/addthis_widget.js#pubid</td>ra-5a756e49e8eaa960"></script>
Uma Shankarihttp://www.blogger.com/profile/11875827154360557920noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1912487802559660431.post-83581774561640047072021-09-28T17:06:00.008+05:302022-02-09T06:32:20.677+05:30விடுங்கை பதவுரை<head>
<style>
table {
border-collapse: collapse;
border-spacing: 0;
width: 100%;
border: 1px solid #ddd;
}
td {
text-align: left;
padding: 10px;
}
td:nth-child(1) {
width: 40%;
}
td:nth-child(2) {
width: 60%;
}
tr:nth-child(even) {
background-color: #f2f2f2;
}
</style>
</head>
<body>
By Mrs Devaki Iyer, Pune
<p> For a translation of this song in English, click the link <a href="http://thiruppugazh-nectar.blogspot.com/2017/02/493.vidungai.html" target="_blank"><u>vidungai</u></a>
<table lang="ta">
<tr><td> விடும் கைக்கு ஒத்த </td><td>உயிர்களைச் சற்றும் இரக்கம் இன்றி விட்டுப் பறிக்கின்ற (அல்லது தன்னைச் செலுத்துகின்ற) கையைப் போன்ற வலிமையானதும் கருத்ததும் ஆன) </td></tr>
<tr><td>கடா உடையோனிடம் அடங்கி </td><td> எருமைக் கடாவைத் தன் வாகனமாக உடைய எமனிடத்து அகப்பட்டு, </td></tr>
<tr><td>கைச்சிறையான அநேகமும் </td><td> கை வசப்பட்ட பலவித செல்வங்களும் </td></tr>
<tr><td>விழுங்கப்பட்டு அறவே</td><td>முற்றிலுமாக உணவு முதலியவற்றில் செலவழிந்து/ அல்லது பொது மகளிரால் கவரப்பட்டு</td></tr>
<tr><td>அறல் ஓதியர் விழியாலே</td><td>ஆற்றுப் படுகையில் காணப்படும் கரிய நெளிந்த கோடுகள் போல உள்ள கூந்தலை உடைய பெண்களின் கண்களால் (ஈர்க்கப்பட்டு)</td></tr>
<tr><td>விரும்பத்தக்கன போகமும் மோகமும் </td><td>விரும்பியவாறு அனுபவித்த இந்திரிய சுகங்களும் </td></tr>
<tr><td>விளம்பத்தக்கன</td><td>பெருமையாகச் சொல்லிக் கொள்ளக்கூடிய </td></tr>
<tr><td>ஞானமும் மானமும்</td><td>கல்வி, கேள்வியினால் அடைந்த அறிவும் குடிப்பிறப்பு முதலான பல பெருமைகளும், தலை நிமிர்ந்து நடக்கக்கூடிய பெருமிதமும் எல்லாம்</td></tr> <a name='more'></a>
<tr><td>வெறும் சுத்த சலமாய்</td><td>விலையில்லாத வெறும் தண்ணீர் போல மதிப்பு இழந்து விடுமாறு</td></tr>
<tr><td>வெளியாய் உயிர் விடுநாளில்</td><td> இந்த உயிர் உடலை விட்டு வெளியே போய்விடும் சமயத்தில்</td></tr>
<tr><td>இடும் கட்டைக்கு</td><td> சிதை எனப்படும் அடுக்குக்கட்டைகளுக்கு</td></tr>
<tr><td>இரையாய் அடியேன் உடல் கிடந்திட்டு </td><td>உணவாக இந்த என் உடம்பை அதில் படுக்க வைத்து </td></tr>
<tr><td>தமரானவர் கோ என </td><td>என் உறவினர் ஓலமிட்டு அழுது</td></tr>
<tr><td>இடம் கட்டிச் சுடுகாடு புகா முனம்</td><td>பாடை முதலியவற்றைக்கட்டி சுடுகாட்டுக்கு எடுத்துக்கொண்டு போவதற்கு முன்பாகவே (நான் உயிரோடு வாழும் போதே)</td></tr>
<tr><td>மனதாலே இறந்திட்டு</td><td>விருப்பு வெறுப்புக்களுக்கு இடமான மனம் இறந்து விட (விருப்பு வெறுப்பற்று) அதனால்</td></tr>
<tr><td>பெறவே கதியாயினும்</td><td>இந்த உலக நடப்பில் இருந்து விலகிய ஜீவன் முக்தி நிலையோ அல்லது</td></tr>
<tr><td>இருந்திட்டுப் பெறவே மதியாயினும்</td><td> அதனினும் உயர்ந்ததான இவ்வுலகத்தில் இருந்து கொண்டே அனைத்தையும் உனது செயலாக, விளையாட்டாகக் காணும் பக்குவமாகிய விஞ்ஞானத்தையோ </td></tr>
<tr><td>இரண்டில் தக்கது ஒர் ஊதியம்</td><td>இவ்விரண்டில் எனக்குத் தகுந்த ஒரு சம்பளம் </td></tr>
<tr><td>நீ தர இசைவாயே</td><td>எனக்குத்தர சம்மதிப்பாயாக</td></tr>
<tr><td>கொடுங்கைப்பட்ட </td><td>மிக உறுதியான</td></tr>
<tr><td>மரா மரம் ஏழுடன்</td><td>ஏழு ஆச்சா மரங்களோடு</td></tr>
<tr><td>நடுங்க சுக்ரீவனோடு அமராடிய</td><td>பயந்த தன் தம்பி சுக்ரீவனோடு போர்புரிந்த</td></tr>
<tr><td>குரங்கை செற்று</td><td>வாலி என்னும் வானரத்தையும் வீழ்த்தி,</td></tr>
<tr><td>மகா உததி தூள் எழ</td><td>பெரும் கடல் வற்றி மணல் ஆகும்படிச் செய்த (இராமன் சமுத்திர ராஜன் வழிவிட இணங்காத போது, வில்லை வளைத்ததுமே கடல் வற்ற, பின் அவன் வெளிப்பட்டு நள நீலர்கள் வரத்தைக்கூறிப் பாலம் கட்டும் வழி சொன்னதனால் சமுத்திரம் பழையபடி ஆனது)</td></tr>
<tr><td>நிருதேசன் குலம் கண் பட்ட</td><td>அசுரேசனான ராவணனின் குலத்தைச் சேர்ந்தவர்கள் </td></tr>
<tr><td>நிசாசரர் கோ என</td><td>இரவில் (அதிக பலம் பெற்று) நடமாடும் ராட்சசர்கள் கதறும்படியும்</td></tr>
<tr><td>இலங்கைக்குள் தழலோன் எழ</td><td>அவன் தலைநகரான இலங்காபுரியில் அக்னி பகவான் ஓங்கி எழும்படியும்</td></tr>
<tr><td>நீடிய குமண்டை</td><td>பெரும் கர்வம் கொண்ட</td></tr>
<tr><td>குத்திர ராவணனார்</td><td>(கீழான) வஞ்சகம் உடைய ராவணன், அவனைச்சேர்ந்தவர்கள்</td></tr>
<tr><td>முடி அடியோடே பிடுங்க</td><td> தலைகள் மீதி இல்லாமல் விழுந்துபடவும்</td></tr>
<tr><td>தொட்ட சர அதிபனார்</td><td>தொடுக்கப்பட்ட அம்புகளுக்கு உரியவரான இராமபிரானான திருமால்</td></tr>
<tr><td>அதி ப்ரியங்கொள்</td><td>மிகுந்த அபிமானம் கொள்ள</td></tr>
<tr><td>தக்க நன் மா மருகா</td><td>தகுதியான (வீரத்தில் அவருக்குக் குறையாத, மேலான) நல்ல பெருமை பொருந்திய மருமகனே</td></tr>
<tr><td>இயல் ப்ரபஞ்சத்துக்கு</td><td>இந்தப் பெரிய அண்டத்திலே</td></tr>
<tr><td>ஒரு பாவலனார் என விருது ஊதும்</td><td>ஒப்பற்ற தனித்துவம் வாய்ந்த புலவர் என்று கட்டியம் கூறிப் போற்றப்படும்</td></tr>
<tr><td>ப்ரசண்ட சொல்</td><td>தங்கு தடை இன்றி அருவியாய்ப்பாயும் நாவன்மை பெற்ற ஞான சம்பந்தராய் வந்த </td></tr>
<tr><td>சிவ வேத சிகாமணி</td><td>சைவத்துறையின் தலை ஆபரணமாய் திகழும்</td></tr>
<tr><td>ப்ரபந்தத்துக்கு ஒரு நாதா</td><td>சைவ நூல்களுக்கு ஒப்பற்ற தலைவனே </td></tr>
<tr><td>சதாசிவா</td><td>உண்மையில் நீ வேறு சிவன் வேறு அல்ல, நீயே அனுக்ரஹ மூர்த்தியான சதாசிவன் ஆவாய்</td></tr>
<tr><td>பெரும்பற்றப்புலியூர்தனில் மேவிய பெருமாளே </td><td> சிதம்பரத்தில் பெருமையோடு உறையும் எம் தலைவா</td></tr>
</table>
<!-- Go to www.addthis.com/dashboard to customize your tools --> <script type="text/javascript" src="//s7.addthis.com/js/300/addthis_widget.js#pubid=ra-5a756e49e8eaa960"></script>
</body>Uma Shankarihttp://www.blogger.com/profile/11875827154360557920noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1912487802559660431.post-28626006957531341922021-09-28T15:48:00.006+05:302021-11-15T16:50:25.609+05:30பிறவியலை — பதவுரை<head>
<style>
.td1 {
width: 25%;
}
.td2 {
width: 75%;
padding: 0.75em;
}
</style>
</head>
<body>
By Mrs Devaki Iyer, Pune
<p> For a translation of this song in English, click the link <a href="http://thiruppugazh-nectar.blogspot.com/2016/11/398.piraviyalai.html" target="_blank"><u>piraviyalai</u></a>
<table lang="ta">
<tr><td class="td1">பிறவி </td><td class="td2">பிறவிகள் நடைபெறுகின்ற</td></tr>
<tr><td class="td1">அலை</td><td class="td2">அலைகள் நிரம்பிய, அலை எப்படி மேலும் கீழுமாக அசைகிறதோ அதுபோல் இன்பம் துன்பம் மாறி மாறி ஏற்படுகின்ற</td></tr>
<tr><td class="td1">ஆற்றினில்</td><td class="td2">(நதிநீர் கடலில் கலந்தாலும் அதே நீர் ஆவியாகி மேகமாய் மழையாய்ப்பொழிந்து ஓய்வில்லாது ஓடிக்கொண்டே இருப்பது போல் திரும்பத் திரும்ப அதே சுழற்சியில் மறுபடி சேருகின்ற) நதியாகிய உலகத்தில்</td></tr>
<tr><td class="td1">புகுதாதே</td><td class="td2">மறுபடியும் வந்து சேராத வண்ணம்</td></tr>
<tr><td class="td1">பிரகிருதி</td><td class="td2">ஆசைகளைத் துறந்து, நிவ்ருத்தி மார்கம் எனப்படும் ஞானமார்கத்தைக் கடைப்பிடிக்காமல், ஆசைவாய்ப்பட்டு மீண்டும் மீண்டும் பல செயல்கள் புரிந்து மேலும் கர்மாவைச் சேர்த்துக் கொள்வதைத் தவிர்ப்பதை விட்டு, மாந்தர் இயற்கையான ப்ரவ்ருத்தி</td></tr>
<tr><td class="td1">மார்கம் உற்று</td><td class="td2">எனும் உலகாயத வழியைப் பின்பற்றி</td></tr>
<tr><td class="td1">அழியாதே</td><td class="td2">முக்திக்கு எதிரான திசையில் சென்று மனிதப்பிறவி வீணாகி விடாமல்</td></tr>
<tr><td class="td1">உறுதி குரு வாக்கிய</td><td class="td2">நிச்சயமான (முக்தி தரவல்ல) (நல்ல) குருவின் உபதேச வாக்கின் (மந்திரம் என்றும் கொள்ளலாம்)</td></tr><a name='more'></a>
<tr><td class="td1">பொருளாலே</td><td class="td2">பொருளை த்யானித்து கடைப்பிடித்து</td></tr>
<tr><td class="td1">உனது பத காட்சியை</td><td class="td2">உன் மேலான நிலை (திருவடி)யின் தரிசனம்</td></tr>
<tr><td class="td1">தருவாயே</td><td class="td2">நான் பெற அருள்வாய்</td></tr>
<tr><td class="td1">அறு சமய</td><td class="td2">ஆறாக (காணபத்யம், கௌமாரம், சைவம், சாக்தம், வைணவம், சௌரம் என்னும் அல்லது ஞான,கர்ம பக்தி, யோக, சாங்க்கிய என்றெல்லாம்) வகுக்கப்பட்ட மார்கங்களிலும் </td></tr>
<tr><td class="td1">சாத்திர </td><td class="td2">முடிந்த முடிவாக/இலக்காக</td></tr>
<tr><td class="td1">பொருளோனே</td><td class="td2"> கூறப்படும் (பரம்) பொருள் ஆனவனே</td></tr>
<tr><td class="td1">அறிவில்</td><td class="td2">தம் உள் உணர்வால்</td></tr>
<tr><td class="td1">அறிவார் </td><td class="td2">உன்னை உணர்ந்த அதாவது அனுபூதி அடைந்தவர்கள்</td></tr>
<tr><td class="td1">குணக்கடலோனே</td><td class="td2">(அன்பு முதலிய) நல்ல குணங்களில் எல்லை இல்லாதவனாக அறியப்படுபவனே</td></tr>
<tr><td class="td1">குறு முனிவன்</td><td class="td2">குள்ள வடிவம் உள்ள அகஸ்த்ய ரிஷி</td></tr>
<tr><td class="td1">ஏத்தும்</td><td class="td2">குருவாகப் பூஜிக்கும் (முருகன் அகஸ்த்யருக்கு தமிழ் இலக்கணம் முதலியன போதித்ததோடு யோகமும் உபதேசித்தார் என்பதை "சுப்ரமண்யம்" எனும் தன் நூலில் அகத்தியரே சொல்கிறார்.)</td></tr>
<tr><td class="td1">முத்தமிழோனே </td><td class="td2">இயல், இசை, நாடக மூன்று வடிவில் விளங்கும் தமிழில் வல்லவனே</td></tr>
<tr><td class="td1">குமர குரு</td><td class="td2">என்றும் இளமையானவனே, குருவாக விளங்குபவனே (ஆதி குருவாம் சிவனுக்குக் குமாரனாகவும் குருவாகவும் திகழும் ஸ்வாமி நாதனே) </td></tr>
<tr><td class="td1">கார்த்திகை பெருமாளே</td><td class="td2">கார்த்திகை ஆறு கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்ட பெருமாளே</td></tr>
</table>
<!-- Go to www.addthis.com/dashboard to customize your tools --> <script type="text/javascript" src="//s7.addthis.com/js/300/addthis_widget.js#pubid=ra-5a756e49e8eaa960"></script>
</body>Uma Shankarihttp://www.blogger.com/profile/11875827154360557920noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1912487802559660431.post-30565333423281405742021-09-25T22:48:00.005+05:302021-09-25T23:08:32.927+05:30பருத்த பல் — பதவுரை<head>
<style>
.td1 {
width: 25%;
}
.td2 {
width: 75%;
padding: 0.75em;
}
</style>
</head>
<body>
By Mrs Devaki Iyer, Pune
<p> For a translation of this song in English, click the link <a href="http://thiruppugazh-nectar.blogspot.com/2015/05/parutthapalsiraththinai.html" target="_blank"><u>paruththa pal</u></a>
<table lang="ta">
<tr><td class="td1">பருத்த</td><td class="td2">பெரிய (சிரத்தில் மூளை இருப்பதால் பெருமைக்குரிய - எண் சாண் உடம்புக்கு பிரதானம் என்று கூறப்படும்- என்றும் கொள்ளலாம். )</td></tr>
<tr><td class="td1">பல்</td><td class="td2">பல் (முதலிய அவயங்கள் கொண்ட)</td></tr>
<tr><td class="td1">சிரத்தினை</td><td class="td2">தலையையும்</td></tr>
<tr><td class="td1">குரு</td><td class="td2">கனத்த, பெரிய</td></tr>
<tr><td class="td1">திறல் கரத்தினை</td><td class="td2">வலிமை உடைய கைகளையும்</td></tr>
<tr><td class="td1">பரித்த அப் பதத்தினை</td><td class="td2">இவற்றோடு கூடிய உடலைத் தாங்குகின்ற அந்தக் கால்களையும்</td></tr>
<tr><td class="td1">பரிவோடே படைத்த பொய்க்குடத்தினை</td><td class="td2"> அன்போடு பெற்றிருக்கின்ற ஓட்டைக்குடம் போன்ற (கணத்துக்குக்கணம் மரணத்தை நெருங்கிக்கொண்டிருக்கும்)</td></tr>
<tr><td class="td1">பழிப்பு அவத்து இடத்தினை</td><td class="td2">பழிக்கும் (இகழ்ச்சிக்கும்) பாபங்களுக்கும் உறைவிடமான</td></tr>
<tr><td class="td1">பசிக்குடல் கடத்தினை </td><td class="td2">பசி நோய்க்குக்காரணமான குடலும் உணவை விழுங்கிச் சேர்க்கும் பானையுமான</td></tr>
<tr><td class="td1">பய(ம்) மேவும்</td><td class="td2">எப்போது மரணம் நேருமோ அல்லது வேறு துன்பம் தாக்குமோ என்ற அச்சத்திற்கு இடமானதும்</td></tr>
<tr><td class="td1">பெருத்த பித்து உரு(த்) தனை</td><td class="td2">கவலையால் பித்தம் அதிகம் சுரக்கின்ற இந்த உடலை</td></tr> <a name='more'></a>
<tr><td class="td1">கிருத்திம</td><td class="td2"> தோலால் ஆன (கிருத்தி தோலைக்குறிக்கும் வடமொழிச்சொல் எனவேதான் கிருத்திவாசன் என்று சிவபெருமான் பெயர்; ஆனைத்தோலை உடுத்தி இருப்பதால். தீய செயல்களுக்குக்காரணமான எனலும் ஆகும்.) </td></tr>
<tr><td class="td1">துருத்தியை</td><td class="td2">காற்றை ஊதி நெருப்பை வளர்க்கும் கருவி போல மூச்சுக்காற்றால் ஜடராக்னியைக் காப்பாற்றும் இவ்வுடலை,</td></tr>
<tr><td class="td1">பிணித்த முக்கு(ற்)றத்து ஒடு</td><td class="td2"> சேர்த்து வைத்த ஆசை கோபம் அல்லது விருப்பு, வெறுப்பு, பொய்யை மெய் எனக்கருதும் மயக்கம் இம்மூன்று குற்றங்களும் (அல்லது ஆணவம் கர்மம் மாயை ஆகிற மூன்று)</td></tr>
<tr><td class="td1">ஐ(ம்)புலன் ஆலும்</td><td class="td2">காணுதல், கேட்டல், முகர்தல், சுவைத்தல், தொடு உணர்ச்சி ஆகியவற்றுக்குக் காரணமான ஐந்து தன்மாத்திரைகளையும்</td></tr>
<tr><td class="td1">பிணித்த இப் பிணிப் பையை</td><td class="td2">சேர்த்துக்கட்டிய இந்த நோய்களுக்கு இருப்பிடமானதொரு பை போன்ற உடலை (ஆணவ கர்ம மாயையும் ஐம்புலன் விஷயங்களின் சேர்க்கையுமே மனிதனைக் கர்மங்களைச்செய்யத்தூண்டுகின்றன, பெரும்பாலும் மீண்டும் பிறக்க ஏதுவான)</td></tr>
<tr><td class="td1">பொறுத்து</td><td class="td2">சுமந்து</td></tr>
<tr><td class="td1">அமிழ் பிறப்பு அற </td><td class="td2">பின் மரணத்தில் மூழ்கடித்து தொடர்ந்து நடைபெறுகின்ற இந்தப் பிறப்பு இறப்புச் சுழற்சி இனி இல்லாமல் செய்வதையே</td></tr>
<tr><td class="td1">குறிக்கருத்து</td><td class="td2">பிறப்பின் நோக்கமாகக்கொள்ளும் எண்ணத்தை</td></tr>
<tr><td class="td1">எனக்கு அளித்து அருள்வாயோ</td><td class="td2">இச்சிறியேனுக்கு கொடுத்து அருளல் ஆகாதோ </td></tr>
<tr><td class="td1">கருத்தில் உற்று உரைத்த</td><td class="td2"> தம் சிந்தையில் உன்னை நிறுத்தி உன் திருப்பெயர், திருக்குணங்கள், திருப்புகழ் இவற்றைக் கூறும்</td></tr>
<tr><td class="td1">பத்தரை</td><td class="td2">அடியவர்களை/ அன்பர்களை</td></tr>
<tr><td class="td1"></td><td class="td2"></td></tr>
<tr><td class="td1">தொறுத் திருக்கரைக் கழித்த</td><td class="td2"> மிகுந்த வஞ்சனை உள்ளவர்களை அழித்துவிடும் (அல்லது தவிர்த்து விடும்)</td></tr>
<tr><td class="td1">மெய்ப்பதத்தில்</td><td class="td2">உன்னுடைய நிலையான பாதங்களில்</td></tr>
<tr><td class="td1">வைத்திடு வீரா </td><td class="td2">சேர்த்துக்கொள்ளும் வீரனே</td></tr>
<tr><td class="td1">கதித்த நல் தினைப்புன</td><td class="td2">நன்கு விளைந்த தினைப்புனத்தில்</td></tr>
<tr><td class="td1">கதித்த நல் குறத்தியை</td><td class="td2">விளங்கும் நற்குணங்கள் கொண்ட குறப்பெண்ணாம் வள்ளியை</td></tr>
<tr><td class="td1">கதித்த நல் திருப்புயத்தில் அணைவோனே</td><td class="td2"> உயர்ந்த வீர லக்ஷ்மி பொருந்திய உன் தோள்களால் தழுவிக் கொள்பவனே</td></tr>
<tr><td class="td1">செருத்தெறுத்து எதிர்த்த </td><td class="td2">போரில் சாகசத்துடன் நெருங்கி வந்து எதிர்த்து நின்ற</td></tr>
<tr><td class="td1">முப்புரத்து </td><td class="td2">மூன்று புரங்களை உடைய (ஸத்வ, ரஜஸ், தமஸ் என்கிற மூன்று குணங்களாகிய தங்கம் வெள்ளி இரும்பாலான கோட்டைகள்/மதில்கள் கொண்ட மூன்று அசுரர்கள்)</td></tr>
<tr><td class="td1">உரத்து அரக்கரை</td><td class="td2">வலிமை உடைய அசுரர்களை</td></tr>
<tr><td class="td1">சிரித்து எரித்த நித்தர் </td><td class="td2">தன் புன் சிரிப்பாலேயே எரித்து அழித்த சாவா மூவாப் பெரியோன் ஆன சிவபெருமானின்</td></tr>
<tr><td class="td1">பொன் குமரேசா</td><td class="td2">பொன்போன்ற மேன்மை பெற்ற திருக்குமாரா</td></tr>
<tr><td class="td1">சிறப்பு உறப் பிரித்து </td><td class="td2"> இது அறம் இது அறம் அன்று என்று மிக அழகாகப் பிரித்து</td></tr>
<tr><td class="td1">அறத் திறத்து</td><td class="td2">நீதி நெறிகளை விரிவாகச் சொல்லும் திறம் படைத்த; (தமிழில் பக்தி இலக்கியம் அல்லாமல் வெறும் நீதி நெறிகளை மட்டும் சொல்லும் நூல்கள் ஆத்திச்சூடி, கொன்றை வேந்தனில் தொடங்கித் திருக்குறள் முடிய எண்ணில் அடங்கா.) </td></tr>
<tr><td class="td1">தமிழ்க்கு உயர்த்திசை </td><td class="td2">தமிழ் மொழி வழங்கும் தேசத்திற்கு வடக்குப்புறத்தில்</td></tr>
<tr><td class="td1">சிறப்புடை திருத்தணிப் பெருமாளே</td><td class="td2">சிறப்பாக விளங்கும் திருத்தணிப் பதியில் இருக்கும் எம் தலைவனே.</td></tr>
</table>
<!-- Go to www.addthis.com/dashboard to customize your tools --> <script type="text/javascript" src="//s7.addthis.com/js/300/addthis_widget.js#pubid=ra-5a756e49e8eaa960"></script>
</body>Uma Shankarihttp://www.blogger.com/profile/11875827154360557920noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1912487802559660431.post-1955272240660164532021-09-25T21:42:00.003+05:302022-02-09T06:34:37.666+05:30புவிக்கு உன் பாதம்— பதவுரை<head>
<style>
table {
border-collapse: collapse;
border-spacing: 0;
width: 100%;
border: 1px solid #ddd;
}
td {
text-align: left;
padding: 10px;
}
td:nth-child(1) {
width: 40%;
}
td:nth-child(2) {
width: 60%;
}
tr:nth-child(even) {
background-color: #f2f2f2;
}
</style>
</head>
<body>
By Mrs Devaki Iyer, Pune
<p> For a translation of this song in English, click the link <a href="http://thiruppugazh-nectar.blogspot.com/2016/11/401.buvikkun.html" target="_blank"><u>buvikkun patham</u></a>
<table lang="ta">
<tr><td>புவிக்கு</td><td>இந்த பூமிக்கு உள்ளே இருந்தாலும் (மானுடராக)</td></tr>
<tr><td>உன் பாதம் அதை நினைபவர்க்கும்</td><td>உன் திருப்பாதங்களை இடையறாது தியானம் செய்பவர்களுக்கும் கூட (தேவர்களை, ரிஷிகளைப்போல)</td></tr>
<tr><td>கால தரிசனை</td><td> இறந்த நிகழ் வரும் என மூன்று கால நிகழ்வுகளும்</td></tr>
<tr><td>புலக்கண்கூடும் </td><td>கண்கூடாகப் புலப்படும் ( தெரியும்)</td></tr>
<tr><td>அது தனை அறியாதே</td><td>என்பது தெரியாமல் (அவர்கள் காட்டிய நல் வழிகளை விட்டு விட்டு)</td></tr>
<tr><td>புரட்டும் பாத சமயிகள் </td><td>பொய்யை மெய் போல நாவன்மையால் காட்டும் பாவத்தில் சேர்க்கும் மார்கங்களைக் கடைப்பிடிப்பவர்</td></tr>
<tr><td>நெறிக்கண் பூது படிறரை</td><td> கூறும் வழிகளில் சேரும் வஞ்சகர்களை</td></tr>
<tr><td>புழுக்கண் பாவம்</td><td>புழுக்கள் நிறைந்த நரகம் சேர்வதற்கான பாபம்</td></tr>
<tr><td>அது கொளல் பிழையாதே</td><td>வந்து சேர்வது தவிர்க்க முடியாதது</td></tr> <a name='more'></a>
<tr><td>கவிக்கொண்டாடு புகழினை</td><td> பெரும் ஞானிகள் உன்னைக்கொண்டாடிப் பாடின உன் குணங்களை</td></tr>
<tr><td>படிக்கும் பாடு திறம் இலி </td><td>படிக்கவோ இசையால் பாடவோ திறமை, சாமர்த்யம் இல்லாதவன்</td></tr>
<tr><td>களைக்கும் பாவச் சுழல் படும்</td><td>சோர்வை உண்டாக்கும் பாபச்செயல் எனும் சுழியில் வீழ்ந்த (பாபத்தின் காரணம் பிறவி, பின்னும் நல்லோர் இணக்கம் இல்லாமையால் பாபம் என்று தொடர்வதனால் வெளி ஏற வழி இல்லாத சுழி என்றார்.)</td></tr>
<tr><td>அடி நாயேன் </td><td>நாயினும் கீழான நான்</td></tr>
<tr><td>கலக்கு உண்டாகு புவிதனில்</td><td>மனக்கலக்கத்தை உண்டு பண்ணும் கவர்ச்சிகள் நிறைந்த இவ்வுலகில்</td></tr>
<tr><td>எனக்கு உண்டாகு பணிவிடை</td><td> எனக்கு ஏற்பட்டு இருக்கும் நல்ல செயல்கள், இறைத்தொண்டு இவை என் புண்ணியத்தின் அளவே ஆம்</td></tr>
<tr><td>கணக்கு உண்டாதல் திரு உ(ள்)ளம் அறியாதோ</td><td> என்ற கணக்கு இருப்பதை உன் திருவுள்ளம் அறிந்ததுதானே (என் கணக்கில் அதிக புண்ணியம் இல்லை என்பதை நீ அறிவாய் அல்லையோ)</td></tr>
<tr><td>சிவத்தின் சாமி </td><td>எல்லா நன்மை (மங்களங்களுக்கும்) சொந்தக்காரனே (சிவன் மகனே என்றும் பொருள் கூறுவர்)</td></tr>
<tr><td>மயில் மிசை நடிக்கும் சாமி</td><td> மயில் வாகனம் ஏறும் ஆனந்தமாய் நடனம் ஆடும் தலைவனே</td></tr>
<tr><td>எமது உ(ள்)ளே (ஏகாரம் குறுகி வந்தது) சிறக்கும் சாமி</td><td>என் இதயத்தின் உள்ளே சிறப்பாக விளங்கும் ஸ்வாமி</td></tr>
<tr><td>சொருபம் இது ஒளி காண செழிக்கும் சாமி</td><td>உள்ளத்தில் உன் ஒளி பொருந்திய சொரூபத்தைக்காணும் தோறும் மேலும் விகசித்து தழைக்கும் தலைவா (ஞானிகள் உள்ளத்தில் இது என் வடிவம் என தெளிவாகத் தெரியும் ஸ்வாமி என்றும் பொருளாம்)</td></tr>
<tr><td> பிறவியை ஒழிக்கும் ஸ்வாமி</td><td> தன்னைத்தஞ்சம் என்று அடைந்தவர்க்கு முக்தி அளித்து இனிப்பிறவி இல்லாமல் செய்து விடும் ஸ்வாமி</td></tr>
<tr><td>பவம் அதைத் தெறிக்கும் சாமி</td><td> வினைகள் என்னும் சங்கிலித் தொடரை உடைத்து எறியும் ஸ்வாமி</td></tr>
<tr><td>முனிவர்கள் இடம் மேவும்</td><td>முனிவர்கள் தவம் புரியும் இடங்களில் இருக்கும் (அல்லது முனிவர்கள் புரியும்)</td></tr>
<tr><td>தவத்தின் சாமி</td><td>அவர்கள் தவம் செய்து அடைய விரும்பும் பொருளான (முக்தி/ஆத்ம ஆனந்தமான) ஸ்வாமி</td></tr>
<tr><td>புரி பிழை பொறுக்கும் சாமி</td><td>நான் (அல்லது அடியவர்) செய்யும் தவறுகளைப் பொறுத்து மன்னிக்கும் ஸ்வாமி (கோடி பிழை கருதினாலும் முனிய அறியாத பெருமாள்) </td></tr>
<tr><td>குடி நிலை தரிக்கும் சாமி</td><td>தேவ லோகத்தில் தேவர்களைக் குடி ஏற்றி அங்கு நிலை பெறச்செய்த ஸ்வாமி</td></tr>
<tr><td>அசுரர்கள் பொடியாக சதைக்கும் சாமி</td><td>அந்த தேவர்களைத்துன்புறுத்திய சூர பத்மன் தாரகாசுரன் போன்ற பல கோடி அசுரர்கள் மண்ணாகும்படி சிதைத்த/ அழித்த ஸ்வாமி</td></tr>
<tr><td>எமைப்பணி விதிக்கும் ஸ்வாமி</td><td> எம்மை அடிமை கொண்டு எம்மிடம் ஏவல்கள் செய்து கொள்ளும் தலைவர்</td></tr>
<tr><td>சரவண தகப்பன் சாமி</td><td>சரவணத்தில் தோன்றிய தந்தைக்கு உபதேசம் செய்த ஸ்வாமிநாத ஸ்வாமி</td></tr>
<tr><td>என வரு பெருமாளே</td><td>என்றெல்லாம் புகழ் பெற்ற எம் ஐயனே. (போற்றி)</td></tr>
</table>
<!-- Go to www.addthis.com/dashboard to customize your tools --> <script type="text/javascript" src="//s7.addthis.com/js/300/addthis_widget.js#pubid=ra-5a756e49e8eaa960"></script>
</body>Uma Shankarihttp://www.blogger.com/profile/11875827154360557920noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1912487802559660431.post-74481511425859720172021-09-25T20:10:00.008+05:302022-02-09T06:35:46.734+05:30நரையொடு— பதவுரை<head>
<style>
table {
border-collapse: collapse;
border-spacing: 0;
width: 100%;
border: 1px solid #ddd;
}
td {
text-align: left;
padding: 10px;
}
td:nth-child(1) {
width: 40%;
}
td:nth-child(2) {
width: 60%;
}
tr:nth-child(even) {
background-color: #f2f2f2;
}
</style>
</head>
<body>
By Mrs Devaki Iyer, Pune
<p> For a translation of this song in English, click the link <a href="http://thiruppugazh-nectar.blogspot.com/2016/10/383.naraiyodu.html" target="_blank"><u>naraiyodu</u></a>
<table lang="ta">
<tr><td>நரையொடு பல் கழன்று</td><td>வயோதிகத்தால் முடிகள் வெளுத்தும், பற்களும் விழுந்து,</td></tr>
<tr><td>தோல் வற்றி</td><td>தோலும் எண்ணெயின்றி வற்றிச் சுருக்கம் எடுத்து</td></tr>
<tr><td>நடை அற மெத்த நொந்து கால் எய்த்து</td><td>நடக்கமுடியாது முடங்கிப் போய் கால்கள் வலி மிகுந்துக களைத்து விட</td></tr>
<tr><td>நயனம் இருட்டி நின்று</td><td>கண்கள் ஒள் இழந்து பார்வை போய்</td></tr>
<tr><td>கோல் உற்று நடை தோயா</td><td>கையில் கம்பு ஒன்று துணையாகி, (பழைய கம்பீர) நடை தொய்ந்து/ தளர்ந்து போய்விட</td></tr>
<tr><td>நழுவும் விடக்கை</td><td>நாள் தோறும் நம் கைப்பிடியில் இருந்து தப்பி ஓடும் (நம் கட்டுப்பாட்டுக்கு அப்பால்) இந்த மாமிச உடலை</td></tr>
<tr><td>ஒன்று போல் வைத்து </td><td>அப்படி நேராமல் ஒரேபோல் (இளமையாக) வைக்க முயன்று</td></tr>
<tr><td>நமது என மெத்த வாழ்வு உற்று</td><td>என்னுடையது என்று அபிமானித்த தேகமும் சேர்த்த செல்வங்களுமாக வாழ்ந்து,</td></tr><a name='more'></a>
<tr><td>பின் நடலை படுத்தும் இந்த மாயத்தை</td><td>இயலாமையால் துன்பப்படும் இந்த மாயையான / நிரந்தரம் இல்லாத வாழ்க்கையை</td></tr>
<tr><td>நகையாதே</td><td>நம்பி ஏமாறாமல் இதன் நிலையாமை கண்டு இது வெறும் விளையாட்டு என்று இகழாமல் (மெய் என்று எண்ணி)</td></tr>
<tr><td>விரையொடு பற்றி</td><td>நல்ல தேன் உண்டு மலரின் மணத்துடன்</td></tr>
<tr><td>வண்டு பாடுற்ற</td><td>தேனுண்ட களிப்பில் வண்டுகள் ரீங்காரமாய் வட்டமிடும்</td></tr>
<tr><td>மிருக மதம் அப்பி வந்த ஓதிக்கும் </td><td>கஸ்தூரி பூசிய (மனதை மயக்கும் மணமுடைய) கூந்தலையும்</td></tr>
<tr><td>மிளிரும் மையைச் செறிந்த</td><td>ஒளி பொருந்திய, மை இட்ட</td></tr>
<tr><td>வேல் கண்கும்</td><td>வேலைப் போன்று அகன்றும் நுனியில் கூரியவையுமான கண்களையும்</td></tr>
<tr><td>வினையோடு </td><td>மனதில் கபடத்தோடு</td></tr>
<tr><td>மிகு கவின் இட்டு </td><td>மிகவும் அழகு செய்து கொண்டு</td></tr>
<tr><td>நின்ற மாதர்க்கு </td><td>தெருவில் வந்து நிற்கும் விலை மாதர்கள்</td></tr>
<tr><td>இடை படு சித்தம் ஒன்றுவேன்</td><td>நடுவே மனம் லயிக்கப்பெறும் நான்</td></tr>
<tr><td>உற்று உன் விழுமிய</td><td>அவற்றில் மனம் செலுத்தி மேலான உன்</td></tr>
<tr><td>பொன் பாதங்கள் பாடல்கு</td><td>பொன் போன்ற திருவடிகளைப் போற்றிப் பாடுவதற்கு</td></tr>
<tr><td>வினவாதோ </td><td>முனையும்படிச் செய்வாயா</td></tr>
<tr><td>உரையொடு சொல் தெரிந்த மூவர்க்கும் </td><td>பொருளும் சொல்லும் நன்கு அறிந்த (சொற்களை அழகுறப் பொருள் படுமாறு கவி புனையும் திறன் உடைய) திருமுறைகள் அளித்த அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவருக்கும்</td></tr>
<tr><td>ஒளி பெற </td><td>மிகுந்த புகழைப் பெறும் வண்ணம்/(ஞானம் அடையும்படி)</td></tr>
<tr><td>நல் பதங்கள் போதித்தும்</td><td>அந்த மூவருக்கும் தானே தன் பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசித்ததோடு, பாடல் முதலடியும் எடுத்துக் கொடுத்து ( திரு நாவுக்கரசரை சமணமதத்தில் இருந்து சூலை கொடுத்து மீட்டார். "கூற்று ஆயினவாறு" முதல் பாடலுக்கு முன் அவர் பாடியதே இல்லை. சம்பந்தரை 2 1/2 வயதில் உமை அன்னையின் பாலைக்கொடுத்து " தோடு உடைய செவியன்- என் உள்ளம் கவர் கள்வன்" என அக்குழந்தையைப்பாட வைத்தார். சுந்தரரை திருநாவலூரில் திருமணப்பந்தலில் ஓலை காட்டித் தடுத்து ஆட்கொண்டு, திருவெண்ணெய் நல்லூர் அருள் துறையில், அவர் தன்னைக்கூறிய வசைச்சொல்லான "பித்தா" என்றே தொடங்கப்பணித்தார்.) </td></tr>
<tr><td>ஒரு புடை</td><td>தன் இடப்பக்கத்தில்</td></tr>
<tr><td>பச்சை நங்கையோடு உற்று </td><td>பச்சை நிறத்து மங்கையான உமையோடு சேர்ந்து</td></tr>
<tr><td>உறுபலி கொண்டு போய் உற்றும்</td><td>வீடு தோறும் பிச்சை ஏற்றுத் திரிந்தும்</td></tr>
<tr><td>உவரி விடத்தை உண்டு சாதித்தும்</td><td>கடலில் (அமிர்தத்தை வேண்டி பால் கடலை தேவர் -அசுரர் கடைந்தபோது முதலில்) வந்த ஆலகால விஷத்தை உட்கொண்டு சாகாமல் வாழ்ந்து காட்டித்தன்னை நிலை நிறுத்தியும்</td></tr>
<tr><td>உலவிய முப்புரங்கள் வேவித்தும்=</td><td>நில்லாமல் சஞ்சரிக்கக்கூடிய மூன்று மதில்களையும் ஒரே அம்பு எய்தி ஒரே சமயத்தில் அழிந்து போகும்படி எரித்தும்</td></tr>
<tr><td>உறநாகம் அரையொடு கட்டி</td><td>தாருகா வனத்து ரிஷிகள் ஏவிய கொடிய விஷ நாகத்தை அடக்கித்தன் இடுப்பில் கட்டிக்கொண்டு</td></tr>
<tr><td>அந்தமாய் வைத்தும்</td><td>அதையே தனக்கு அலங்காரமாக்கியும்</td></tr>
<tr><td>அவிர்சடை வைத்த கங்கையொடு ஒக்க</td><td>விரிந்த தன் ஜடையில் தேவநதி கங்கையோடுகூட</td></tr>
<tr><td>அழகு திருத்தி இந்து மேல் வைத்தும்</td><td>அதை முடிந்து அழகாக அதன் மேல் பிறைச்சந்திரனையும் சூடி</td></tr>
<tr><td>அரவு ஓடே அறுகு ஒடு நொச்சி தும்பை மேல் வைத்த</td><td>அங்கும் ஒருபாம்பும் அருகம்புல், நொச்சி, தும்பைப்பூ என்று எளிதில் எங்கும் கிடைக்கும் புல், இலை, பூ இவை சூட்டிக்கொள்ளும் (பரம வைராகி யான)</td></tr>
<tr><td>அரி அயன் நித்தம் வந்து பூசிக்கும்</td><td>(செல்வத்துக்கு அதிதேவதை லக்ஷமியின் கணவரான) திருமாலும் (கல்விக்கு அதிதேவதையான சரஸ்வதியின் கணவர்) பிரம்மாவும் தினமும் வந்து வழிபாடு செய்யும்</td></tr>
<tr><td>அரன் நிமலர்க்கு</td><td>குற்றமே அணுகாத தூயவரான பரம சிவனுக்கு</td></tr>
<tr><td>நன்றி போதித்த </td><td>நல்ல உயர்ந்த தத்துவங்களை உபதேசித்த</td></tr>
<tr><td>பெருமாளே </td><td>எங்கள் பிரானே.</td></tr>
</table>
<!-- Go to www.addthis.com/dashboard to customize your tools --> <script type="text/javascript" src="//s7.addthis.com/js/300/addthis_widget.js#pubid=ra-5a756e49e8eaa960"></script>
</body>Uma Shankarihttp://www.blogger.com/profile/11875827154360557920noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1912487802559660431.post-16693283578352258412021-09-25T14:24:00.004+05:302021-09-25T14:24:32.394+05:30திடமிலி சற்குணமிலி—பதவுரை<head>
<style>
.td1 {
width: 25%;
}
.td2 {
width: 75%;
padding: 0.75em;
}
</style>
</head>
<body>
By Mrs Devaki Iyer, Pune
<p> For a translation of this song in English, click the link <a href="https://thiruppugazh-nectar.blogspot.com/2013/07/thidamilisargunamili.html" target="_blank"><u>thidamili saRguNamili</u></a>
<table lang="ta">
<tr><td class="td1">திடம் இலி </td><td class="td2">நல்ல மன உறுதி இல்லாதவன்; இருந்தால் அன்றோ வலிமையான புலன்களை அடக்க முடியும்!</td></tr>
<tr><td class="td1">சத் குணம் இலி</td><td class="td2">நல்ல குணங்கள், பகவத்கீதையில் "தெய்வீ சம்பத்" என்று ஸ்ரீ கிருஷ்ண பகவான் வர்ணிக்கும் பொறுமை, கருணை, ஈகை போன்ற நல்ல பண்புகளில் ஒன்று கூட இல்லாதவன் </td></tr>
<tr><td class="td1">நல் திறம் இலி</td><td class="td2">வேறு ஏதாவது செயல் திறம், சாமர்த்தியம், கலை என்று ஏதாவது உண்டோ என்றால் "இல்லை" தான் பதில்</td></tr>
<tr><td class="td1">அற்புதமான செயல் இலி</td><td class="td2">பிறரால் செய்ய முடியாத அரிய காரியம் ஏதாவது செய்து இருக்கிறேனோ என்றால், அதுவும் இல்லை</td></tr>
<tr><td class="td1">மெய்த்தவம் இலி</td><td class="td2">உண்மையாக மனதை உன்னிடத்தில் செலுத்தித் தவம் செய்திருக்கிறேனோ என்று கேட்டால், அப்படிப் பாசாங்கு வேண்டுமானால் செய்திருக்கிறேன்</td></tr>
<tr><td class="td1">நல் செபம் இலி</td><td class="td2">மனம் ஒருமித்து உன் திருநாமமோ, வேறு மந்திரச்சொற்களையோ ஜபித்து இருக்கிறேனோ என்று பார்த்தால், இல்லை தான் பதில்.</td></tr>
<tr><td class="td1">சொர்க்கமும் மீதே இடமிலி</td><td class="td2">எனவே, இப்படிப்பட்ட எனக்கு மேலான சொர்க்க லோகத்தில் இடம் ஒதுக்கப்பட வாய்ப்பில்லை.</td></tr><a name='more'></a>
<tr><td class="td1">கைக் கொடை இலி</td><td class="td2">கர்ணனைப் போல உடம்பில் இருந்து கவச குண்டலங்களை அறுத்துக் கொடுப்பது இருக்கட்டும், கையில் இருப்பதைக்கூடத் தேவை என்று கேட்பவருக்குக் கொடுத்து அறியாத கருமி,
</td></tr>
<tr><td class="td1">சொல்கு இயல்பு இலி</td><td class="td2">பொருள் அறிந்து சொற்களை அழகாகக் கோர்த்து கவி இயற்றும் திறமை இல்லை என்னிடம்</td></tr>
<tr><td class="td1">நல் தமிழ் பாட</td><td class="td2">உன்னைத்தமிழால் அழகுறப் போற்றிப் பாடுவதற்கு</td></tr>
<tr><td class="td1">இருபதம் உற்று</td><td class="td2">(இவை எல்லாம், இந்தக்குறைகளே என்னிடம் நிறைந்து இருந்த போதும், ஐயனே) உன் பொன்னார் இணை அடிகளைச் சேர்ந்து</td></tr>
<tr><td class="td1">இருவினை அற்று</td><td class="td2">நல்வினை (புண்ணியம்), தீய வினை (பாபம்) இவற்றைத் தொலைத்து, கடந்து சென்று</td></tr>
<tr><td class="td1">இயல் கதியை</td><td class="td2">ஆத்மாவின் இயல்பான நிலையை (கர்மம், மாயை அகங்காரம் அகன்ற முக்தி)</td></tr>
<tr><td class="td1">பெற வேண்டும்</td><td class="td2">நானும் அடைந்து விட விழைகிறேன். (அது எப்படிச் சாத்தியம் என்பாயேல்)</td></tr>
<tr><td class="td1">கெடு மதி உற்றிடும் </td><td class="td2">தீய புத்தி கொண்ட</td></tr>
<tr><td class="td1">அசுரக்கிளை மடிய</td><td class="td2">அரக்கர்கள் கூட்டம் முழுதும் இறந்து படுமாறு</td></tr>
<tr><td class="td1">பொரும் வேலா</td><td class="td2">போர் செய்த வேல் வீரனே!</td></tr>
<tr><td class="td1">கிரண குறைப் பிறை</td><td class="td2">கலைகள் குறைவான (16ல் இரண்டே கலை உள்ள இரண்டாம்) பிறைச் சந்திரனையும்,</td></tr>
<tr><td class="td1">அறுகு</td><td class="td2">எங்கும் காலின் கீழ் முளைத்து இருக்கும் அருகம்புல்,</td></tr>
<tr><td class="td1">அக்கு</td><td class="td2">(எத்தனையோ கல்பங்களில் மடிந்த பிரம்மாதி தேவர்களின்) எலும்பு (அல்லது ருத்திராக்ஷம் என்றும் கொள்ளலாம்)</td></tr>
<tr><td class="td1">இதழ்</td><td class="td2">வில்வ இலை</td></tr>
<tr><td class="td1">மலர்</td><td class="td2">(வேறு தெய்வங்கள் சூடிக் கொள்ளாத எளிமையான) கொன்றை மலர்</td></tr>
<tr><td class="td1">கொக்கிறகு</td><td class="td2">கொக்கின் இறகு (கொக்கிறகு என்பது கொக்கின் இறகை ஒத்த மலரை உடைய ஒரு தாவரம் என்றும் பல இடங்களில் வருகிறது). இப்படிக் குறைகள் உடைய எவரும் நாடாத பொருட்களை</td></tr>
<tr><td class="td1">படர் சடையில் புனை </td><td class="td2">(மேலே முடியப்பட்டுக் கீழே) விரிந்திருக்கும் தன் சடாமுடியில் அணிந்து கொண்டு</td></tr>
<tr><td class="td1">நடனப் பரமர்</td><td class="td2">ஆனந்த நடனம் புரியும் பரமசிவனுக்கு</td></tr>
<tr><td class="td1">ஒரு பாலா</td><td class="td2">ஒப்பற்றதொரு புதல்வன் அல்லவா நீ (எனவே என் குறைகளைப் பாராது, பாராட்டாது உன் திருப்பாதங்களில் ஏற்றுக்கொள்வாய் என்பதில் எனக்கு நம்பிக்கை)
</td></tr>
<tr><td class="td1">பல வயலில்</td><td class="td2">அங்குள்ள வயல்கள் பலவற்றில்</td></tr>
<tr><td class="td1">தரள(ம்) நிறை</td><td class="td2">முத்துக்கள் நிறைந்துள்ள (நீர் வளம் மிகுந்த)</td></tr>
<tr><td class="td1">பழனி மலைப் பெருமாளே= </td><td class="td2">பழநி மலையில் குடி கண்டுள்ள எம் ஐயனே.</td></tr>
</table>
<!-- Go to www.addthis.com/dashboard to customize your tools --><script type="text/javascript" src="//s7.addthis.com/js/300/addthis_widget.js#pubid=ra-5a756e49e8eaa960"></script>
</body>Uma Shankarihttp://www.blogger.com/profile/11875827154360557920noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1912487802559660431.post-1099271205283913702021-09-25T14:14:00.000+05:302021-09-25T14:14:16.038+05:30எட்டுடன் ஒரு — பதவுரை<head>
<style>
.td1 {
width: 25%;
}
.td2 {
width: 75%;
padding: 0.75em;
}
</style>
</head>
<body>
By Mrs Devaki Iyer, Pune
<p> For a translation of this song in English, click the link <a href="http://thiruppugazh-nectar.blogspot.com/2016/07/345.ettudan-oru.html" target="_blank"><u>ettudan</u></a>
<table lang="ta">
<tr><td class="td1">எட்டு உடன் ஒரு </td><td class="td2">எட்டும் ஒன்றும் சேர்ந்து ஒன்பது</td></tr>
<tr><td class="td1">தொளை வாயா</td><td class="td2">துவாரங்கள் வாய்க்கப் பெற்ற</td></tr>
<tr><td class="td1">அது பசு மண் கலம்</td><td class="td2">நிலை இல்லாத, சுடப்படாத மண்பாண்டத்தைப் போன்ற </td></tr>
<tr><td class="td1">இருவினை தோயா</td><td class="td2">நல்வினை தீவினை இவை இரண்டால் உண்டான உடல்</td></tr>
<tr><td class="td1">மிகு பிணி இட்டு இடைசெய</td><td class="td2">பல நோய்கள் வந்து இடையூறு செய்ய</td></tr>
<tr><td class="td1">ஒருபோதாகிலும் உயிர் நிலையாக</td><td class="td2"> இந்த உடலில் உயிர் சற்று நேரமாவது நிலைக்குமா</td></tr>
<tr><td class="td1">எப்படி உயர்கதி நாம் பெறுவது என</td><td class="td2">உயர்ந்த முக்தி நிலையை எப்படி முயன்று நாம் அடைவது என்று</td></tr>
<tr><td class="td1">எள் பகிரினும்</td><td class="td2"> சிறிய எள்ளின் துகள் அளவு கூட</td></tr>
<tr><td class="td1">இது ஓரார் தம தமது</td><td class="td2">இதைப்பற்றிச் சிந்திக்காதவர் அவரவர்கள்</td></tr>
<tr><td class="td1">இச்சையின் இடர் உறு </td><td class="td2">ஆசைகளால் துன்பம் மிகுந்த</td></tr>
<tr><td class="td1">பேராசை கொள் கடல்</td><td class="td2">பேராசை எனும் கடல்</td></tr>
<tr><td class="td1">அதிலே வீழ் முட்டர்கள் </td><td class="td2">அதனுள் விழுகின்ற அறிவில்லாத மூடர்கள்</td></tr>
<tr><td class="td1">நெறியினில் வீழாது அடலோடு </td><td class="td2">வழிகளில் விழுந்து விடாது வீரத்தோடு</td></tr>
<tr><td class="td1">முப்பதின் அறுபதின் மேலாம் அறு வரும் முற்றுதல் அறிவரு</td><td class="td2">இந்தப்ரபஞ்சத்தின், மனித உடலின் மூலக்கூறுகளான
(30+60+6 ) 96 தத்துவங்கங்களில் எதனாலும் அறிய முடியாத (இவற்றின் பிடியிலிருந்து/ ஆதிக்கத்தில் இருந்து விடுபட்ட நிலையிலேயே பெறப்படும்)</td></tr> <a name='more'></a>
<tr><td class="td1">ஞான உதய ஒளி வெளியாக</td><td class="td2">ஆத்மஞானமாகிற எந்தக்கட்டும் எல்லையும் இல்லாத ஒளி வெளிப்பட்டு விளங்க</td></tr>
<tr><td class="td1">முக்குணம் அது கெட</td><td class="td2">96 ல் அடங்கும் சத்வ ரஜோ தமோ குணங்களும் இல்லாமல் போய்</td></tr>
<tr><td class="td1">"நான் நான்" என வரு </td><td class="td2">நான் என்று இந்த உடலை (96 தத்துவங்களின் கூட்டாகிய) அபிமானிக்கும்</td></tr>
<tr><td class="td1">முத்திரை அழிதர</td><td class="td2">நாம ரூபங்களை இழந்து மனம் ஆன்மாவில் லயிக்கும் படியாக</td></tr>
<tr><td class="td1">ஆரா அமுது அன </td><td class="td2">தெவிட்டாத அமிர்தம் போன்ற</td></tr>
<tr><td class="td1">முத்தமிழ் தெரி கனிவாயால் </td><td class="td2">இயல் இசை நாடகம் என்னும் மூன்றுடன் கூடிய தமிழை ஆராய்ந்து உரை செய்யும் உனது பழம்போல் சிவந்ததும் இனியதும் ஆன திரு வாயால்</td></tr>
<tr><td class="td1">அருளுவது ஒரு நாளே</td><td class="td2">உபதேசம் கொடுக்கும் அந்த நன்னாள் என்றோ?</td></tr>
<tr><td class="td1">திட் என எதிர் வரு மாகாளியின் ஒடு</td><td class="td2">திடீர் என திடமாக தன்னை எதிர்த்து வாதாட வந்த மகா காளியோடு</td></tr>
<tr><td class="td1">திக்கிட தரிகிட தீதோம் என ஒரு சித்திர வெகு வித வாதாடிய </td><td class="td2">இந்த வித ஜதிகளோடு ஒப்பற்ற ஆச்சரியகரமான பலப்பலவிதங்களில் பந்தயம் இட்டு நடனம் புரிந்த</td></tr>
<tr><td class="td1">பதமலர் ஆளன்</td><td class="td2">திருப்பாத மலர்கள் உடைய சிவபெருமான்</td></tr>
<tr><td class="td1">செப்புக என முனம் </td><td class="td2">எனக்குச் சொல்வாயாக எனக்கேட்க அன்றொரு நாள்</td></tr>
<tr><td class="td1">ஓதாது உணர்வது </td><td class="td2">(வெறும்) கல்வியினால் மட்டும் அறிந்து விட முடியாத, உள் உணர்வினால் அடையப்படும்</td></tr>
<tr><td class="td1">சித் சுக பர வெளி ஈதே என </td><td class="td2"> ஆத்ம ஆனந்தமாகிய, கருவி கரணங்கள் எல்லாம் கடந்த மேலான நிலை இதுதான் என்று</td></tr>
<tr><td class="td1">அவர் தெக்ஷிண செவிதனிலே</td><td class="td2"> அவருடைய வலக்காதில்</td></tr>
<tr><td class="td1">போதனை அருள் குருநாதா</td><td class="td2">உபதேசம் செய்து அருளிய (சிவ) குருநாதனே</td></tr>
<tr><td class="td1">மட்டு அற அமர் பொரு </td><td class="td2">அளவற்ற வீரத்துடன் போர் புரிந்த</td></tr>
<tr><td class="td1">சூராதிபன் உடல்</td><td class="td2">சூரபத்மனுடைய உடல்</td></tr>
<tr><td class="td1">பொட்டு எழ முடுகி</td><td class="td2">எரிந்து விடும் படி, வேகத்துடன்</td></tr>
<tr><td class="td1">வை வேலால் எறிதரு மல் புய </td><td class="td2">கூர்மையான வேல் ஆயுதம் செலுத்திய மல் யுத்தத்திலும் வல்ல தோள்கள் உடையவனே</td></tr>
<tr><td class="td1">மரகத மா தோகையில் நடம் இடுவோனே</td><td class="td2">பச்சை வண்ணமுடைய தோகை மயில் பறவையுடன் நிருத்தம் புரிபவனே</td></tr>
<tr><td class="td1">வச்சிர கர தல</td><td class="td2">கையில் வச்சிராயுதம் தரித்த</td></tr>
<tr><td class="td1">வானோர் அதிபதி</td><td class="td2">தேவர்கள் அரசனான இந்திரனை</td></tr>
<tr><td class="td1">பொற்பு உறு கரி பரி </td><td class="td2">பெருமை பொருந்திய ஐராவதம் எனும் யானையும் அமிர்தத்துக்காகக் கடையும் போது பால் கடலில் இருந்து கிடைத்த உச்சைஸ்ரவஸ் என்னும் குதிரையும் </td></tr>
<tr><td class="td1">தேரோடு </td><td class="td2">மாதலி எனும் சாரதி செலுத்தும் அழகிய தேர்</td></tr>
<tr><td class="td1">அழகுற வைத்திடு </td><td class="td2">இவற்றோடு பாதுகாப்பாக இருக்கச்செய்து</td></tr>
<tr><td class="td1">மருமகனே </td><td class="td2">அவன் மகளான தேவயானையை மணந்து அவனுக்கு மருமகனும் ஆனவனே (இங்ஙனம் அவனை கௌரவித்தவனே)</td></tr>
<tr><td class="td1">வாழ் அமரர்கள் </td><td class="td2">அழிவின்றி என்றும் வாழ்கின்ற தேவர்கள்</td></tr>
<tr><td class="td1">பெருமாளே </td><td class="td2">தலைவனே.</td></tr>
</table>
<!-- Go to www.addthis.com/dashboard to customize your tools --> <script type="text/javascript" src="//s7.addthis.com/js/300/addthis_widget.js#pubid=ra-5a756e49e8eaa960"></script>
</body>Uma Shankarihttp://www.blogger.com/profile/11875827154360557920noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1912487802559660431.post-63675547728611443682021-09-23T20:49:00.011+05:302021-09-24T10:01:34.872+05:30தேவேந்திர சங்க வகுப்பு — தேவகி அய்யர் உரை<head>
<style>
.td1 {
width: 25%;
}
.td2 {
width: 75%;
padding: 0.75em;
}
</style>
</head>
<body>
By Mrs Devaki Iyer, Pune
<p> For a translation of this song in English, click the link <a href="https://thiruppugazh-nectar.blogspot.com/2015/03/devendra-sanga-vaguppu.html" target="_blank"><u>devendira sanga vaguppu</u></a>
<table lang="ta">
<tr><td class="td1">தரணியில் அரணிய </td><td class="td2">பூமியில் கோ ட்டைகளுடன் பாதுகாப்பாக இருந்து</td></tr>
<tr><td class="td1">முரண் இரணியன்</td><td class="td2"> தன்னிடம் பகை கொண்டு எதிர்த்த இரண்யகசிபுவின்</td></tr>
<tr><td class="td1">உடல் தனை நக நுதி கொடு </td><td class="td2">உடலை தன் கூரிய கை நகங்களால்</td></tr>
<tr><td class="td1">சாடு </td><td class="td2">தாக்கிக் கொன்ற</td></tr>
<tr><td class="td1">ஓங்கு நெடும் கிரி </td><td class="td2">பெரிய நரசிம்ம அவதாரம் எடுத்தவள்</td></tr>
<tr><td class="td1">ஓடு ஏந்து பயங்கரி</td><td class="td2">கையில் பிரம்ம கபாலமாகிய மண்டை ஓடு ஏந்திய அச்சமூட்டும் உருவம் உடையவள்</td></tr>
<tr><td class="td1">தமருக பரிபுர ஒலி கொடு </td><td class="td2">உடுக்கை, கால் சிலம்பு, இவற்றின் ஓசைக்கு ஏற்ப (அதைத்தாளமாகக்கொண்டு)</td></tr>
<tr><td class="td1">நடநவில் சரணிய</td><td class="td2">இனிமையாக நடனமிடும் திருப்பாதங்கள் உடையவள்;</td></tr><a name='more'></a>
<tr><td class="td1">சதுர்மறை</td><td class="td2">நான்கு வேதங்களில் புரிகின்ற (தமருகத்துக்கு ஏற்ப அவள் நடம்புரிகிறபோது ஒலிக்கும் சிலம்போசையே வேதம்)</td></tr>
<tr><td class="td1">தாதாம்புய</td><td class="td2">மகரந்தம் பொருந்திய (பாத) கமலங்கள் உடையவள் </td></tr>
<tr><td class="td1">மந்திர</td><td class="td2">மந்திரங்கள் வடிவாகவும் (மந்திர மாத்ருகா ரூபிணி) </td></tr>
<tr><td class="td1">வேதாந்த</td><td class="td2">வேதத்தின் முடிந்த முடிவான பரம் பொருளும் ஆன</td></tr>
<tr><td class="td1">பரம்பரை</td><td class="td2"> உயர்ந்தவற்றுள் எல்லாம் உயர்ந்தவள்</td></tr>
<tr><td class="td1">சரிவளை</td><td class="td2"> கைகளில் ஒலிக்கும் வளையல்களும்</td></tr>
<tr><td class="td1">விரிசடை</td><td class="td2">விரிந்த சடாமுடியும்</td></tr>
<tr><td class="td1">எரிபுரை வடிவினள்</td><td class="td2"> நெருப்புக்கங்கு போல் சிவந்த நிறம் கொண்டு</td></tr>
<tr><td class="td1">சததள முகுளித</td><td class="td2"> தாமரை மொட்டுப்போல் குவிந்ததும்</td></tr>
<tr><td class="td1">தாம </td><td class="td2">மாலைகள் அணிந்ததும் ஆன</td></tr>
<tr><td class="td1">அம்குசம்</td><td class="td2">அழகிய தனங்களும்</td></tr>
<tr><td class="td1">மென் திருதாளாந்தர</td><td class="td2">மென்மையான திருப்பாதங்களும் கொண்ட</td></tr>
<tr><td class="td1">அம்பிகை</td><td class="td2"> தாயானவள்</td></tr>
<tr><td class="td1">தருபதி</td><td class="td2"> கற்பக விருட்சம் உள்ள அமராவதிக்கு அரசனான தேவேந்திரனையும்</td></tr>
<tr><td class="td1">சுரரொடு</td><td class="td2">மற்ற தேவர்களையும்</td></tr>
<tr><td class="td1">சருவிய அசுரர்கள்</td><td class="td2">எதிர்த்த அரக்கர்களின்</td></tr>
<tr><td class="td1">தட மணி முடி</td><td class="td2">பெரிய, ரத்தினங்கள் பதித்த கிரீடங்கள்</td></tr>
<tr><td class="td1">பொடிதான் ஆம்படி</td><td class="td2">தூளாகப் பொடிந்து போகுமாறு</td></tr>
<tr><td class="td1">செங்கையில் வாள் வாங்கிய</td><td class="td2"> தன் அழகான (சிவந்த) கையில் வாளை வீசிய</td></tr>
<tr><td class="td1">சங்கரி </td><td class="td2">சங்கரனின் துணைவி, (எப்பொழுதும் நன்மையே செய்பவள்)</td></tr>
<tr><td class="td1">இரண கிரண</td><td class="td2">பொன்னிறக் கதிர் வீசும்</td></tr>
<tr><td class="td1">மட மயில் </td><td class="td2">மெல்லிய, மயில் போன்ற சாயல் உள்ளவள்</td></tr>
<tr><td class="td1">ம்ருகமத புளகித</td><td class="td2">கஸ்தூரி தடவப்பெற்று புளகாங்கிதம் கொண்ட</td></tr>
<tr><td class="td1">இளமுலை இளநீர்</td><td class="td2">இளநீர் போன்றதும் (பருத்த) இளமையானதுமான தனபாரங்களை</td></tr>
<tr><td class="td1">தாங்கி நுடங்கிய</td><td class="td2">சுமப்பதினால் வருந்துகின்ற (ஸௌ.ல. 79-நிஸர்க க்ஷீணஸ்ய ஸ்தனதடபரேன க்லமஜூஷோ.. இயற்கையாகவே மெலிந்த உன் இடை, இந்த ஸ்தனபாரத்தால் மிகுந்த வருத்தம் அடைகிறது.)
</td></tr>
<tr><td class="td1">நூல் போன்ற மருங்கினள் </td><td class="td2"> நூல் போல மெலிந்த இடைப்பாகம் உடையவள்</td></tr>
<tr><td class="td1">இறுகிய சிறு பிறை </td><td class="td2"> உறுதியான மெல்லிய பிறைச்சந்திரன் போல</td></tr>
<tr><td class="td1">எயிறு உடை யம படர்</td><td class="td2">(கோரை)பற்களைக் கொண்ட எம தூதர்கள்</td></tr>
<tr><td class="td1">எனது உயிர் கொள்ள வரின்</td><td class="td2">என்னுடைய உயிரை பறித்துப் போக வரும் பொழுது</td></tr>
<tr><td class="td1">யான் ஏங்குதல் கண்டு</td><td class="td2"> நான் அஞ்சி கலங்குவதைப்பார்த்து (இரங்கி)</td></tr>
<tr><td class="td1">தான் ஏன்று கொளும் குயில்</td><td class="td2">என்னை ஏற்றுக்கொண்டு தன்னிடம் அழைத்துக்கொள்ளும் (ஆஸ்வாசப்படுத்தி) குயில் போன்ற இனிய பேச்சு உள்ளவள்</td></tr>
<tr><td class="td1">இடு பலி கொடு திரி</td><td class="td2">உணவுக்காக பிச்சை வாங்கி உழலும்</td></tr>
<tr><td class="td1">இரவலர் இடர் கெட </td><td class="td2">ஏழைகளின் துன்பம் தீரும்படி</td></tr>
<tr><td class="td1">இடும் மன கர தல</td><td class="td2">கொடுக்கின்ற கொடை உள்ளமும் திருக்கரங்களும் கொண்ட</td></tr>
<tr><td class="td1">ஏகாம்பரை</td><td class="td2">காஞ்சியில் அன்னபூனணியாக அமர்ந்திருக்கும் ஏகாம்பர நாதரின் துணைவி</td></tr>
<tr><td class="td1">இந்திரை</td><td class="td2">மோக்ஷம் அருள்பவள்</td></tr>
<tr><td class="td1">மோக அங்க</td><td class="td2">மனதைக்கவரும் அழகான அங்கங்கள் உடையவள் (தோள் கண்டார் தோளே கண்டார் என்று கம்பர் கூறியது போல ஒவ்வொரு அங்கமும் அழகின் எல்லை)</td></tr>
<tr><td class="td1">சுமங்கலி</td><td class="td2">நித்திய சுமங்கலி (நித்தியப் பரம் பொருளின் சக்தி அல்லவா?)</td></tr>
<tr><td class="td1">எழுதிய படம் என</td><td class="td2">திரையில் வரைந்த சித்திரம் போல் அசையாமல்,</td></tr>
<tr><td class="td1">இருள் அறு</td><td class="td2">அஞ்ஞானமாகிய இருளே சற்றும் அணுகாத</td></tr>
<tr><td class="td1">சுடர் அடி இணை தொழு மவுனிகள்</td><td class="td2">தன்னுடைய அறிவொளி ஆகும் திருப்பாதங்களை
தியானித்து வணங்கும் முனிவர்களுக்கு</td></tr>
<tr><td class="td1">ஏகாந்த சுகம் தரு</td><td class="td2">அந்தரங்கத்தில் ஆனந்தம் அளிக்கும்</td></tr>
<tr><td class="td1">பாச அங்குச சுந்தரி</td><td class="td2">பாசம் அங்குசம் கையில் ஏந்தி இருக்கும் பேரழகி</td></tr>
<tr><td class="td1">கரணமும்</td><td class="td2">கை,கால்,வாக்கு முதலிய புறக்கரணங்களும், மனம், சித்தம், புத்தி, அகங்காரம் ஆகிற அகக்கரணங்களும் (இவற்றால் நல்ல, தீய செயல் புரிகிறோம் அதன் விளைவுகள் பதிவாகி மறு பிறப்புக்குக்காரணம் ஆகிறது)
</td></tr>
<tr><td class="td1">மரணமும்</td><td class="td2">இந்த உடல் அழிந்து விடும் நிலையும்</td></tr>
<tr><td class="td1">மலம் ஒடும் </td><td class="td2">ஆத்மாவைப்பற்றிச் சுற்றி இருக்கும் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று அழுக்குகளும்</td></tr>
<tr><td class="td1">உடல் படு கடு வினை கெட</td><td class="td2">இவற்றால் ஏற்பட்ட உயிர்கள் படுகின்ற பிறவிச்சுழற்சி எனும் பெரும் துன்பத்தை அடியோடு போக்கிவிட (இல்லாமல் செய்ய)</td></tr>
<tr><td class="td1">நினை காலாந்தரி </td><td class="td2">கருணை உள்ளம் கொண்ட காலத்தைக் கடந்தவள்</td></tr>
<tr><td class="td1">கந்தரி நீலாஞ்சன</td><td class="td2">மை போல் கருத்த கழுத்தை உடையவள் (சிவனோடு கலந்திருப்பதால்)</td></tr>
<tr><td class="td1">நஞ்சு உமிழ்</td><td class="td2">வாயில் விஷத்தை உடைய</td></tr>
<tr><td class="td1">கனல் எரி கணபண </td><td class="td2">நெருப்பு கக்குகின்ற கூட்டமான படங்களையும்,</td></tr>
<tr><td class="td1">குண மணி</td><td class="td2"> உயர்ந்த ரத்தினங்கள்</td></tr>
<tr><td class="td1">அணி பணி</td><td class="td2">(பதித்த ஆபரணம், முகுடம்) அணிந்த (ஆதி சேஷனாகிய) பாம்பை</td></tr>
<tr><td class="td1">கன வளை </td><td class="td2">பெருமை மிக்க கங்கணமாகவும்</td></tr>
<tr><td class="td1">மரகத காசாம்பர கஞ்சுளி</td><td class="td2">பச்சைவண்ண ரவிக்கையும், காயாம்பூ வண்ண புடவையும்</td></tr>
<tr><td class="td1">தூசு ஆம் படி கொண்டவள்</td><td class="td2">தனது ஆடைகளாக அணிந்திருப்பவள் </td></tr>
<tr><td class="td1">கனை கழல்</td><td class="td2">(சிலம்பு) ஒலிக்கின்றன தன் திருவடிகளை</td></tr>
<tr><td class="td1">நினை அலர்</td><td class="td2">நினைக்காதவர்கள் (கர்வம், அகங்காரம் மிக்கவர்களை)</td></tr>
<tr><td class="td1">உயிர் அவி பயிரவி</td><td class="td2">உயிரை அழிக்கின்ற பயங்கர வடிவுடையவள்</td></tr>
<tr><td class="td1">கவுரி</td><td class="td2">வெள்ளை நிறம் கொண்டவள் (சரஸ்வதி போன்ற ரூபங்களில்)</td></tr>
<tr><td class="td1">கமலை</td><td class="td2">கமலாம்பாள் (திருவாரூரில் இந்த ரூபம்)</td></tr>
<tr><td class="td1">குழை காதார்ந்த செங்கழுநீர் தோய்ந்த</td><td class="td2">காதில் குண்டலங்கள் செங்கழுநீர் மலர்களாக விளங்க,</td></tr>
<tr><td class="td1">பெரும் திரு கரை </td><td class="td2">மிகுந்த அழகின் எல்லையாகின்ற</td></tr>
<tr><td class="td1">பொழி திருமுக</td><td class="td2"> திருமுகங்களில் இருந்து பெருகும் (தவ வதன சௌந்தர்ய லஹரி என்று ஆதி சங்கரர் வரிகள் நினை கூரத்தக்கது)</td></tr>
<tr><td class="td1">கருணையில் உலகு எழு கடல் நிலை பெற</td><td class="td2">உயிர்கள் பால் இரக்கம் எனும் காருண்யத்தால் ஏழுகடல்களால் சூழப்பட்ட உலகங்கள் நிலையாக நிற்குமாறு</td></tr>
<tr><td class="td1">காவு ஏந்திய</td><td class="td2">காப்பாற்றும் பொறுப்பைத் தாங்கிய ("நீ கண் திறந்ததால் தோன்றிய உலகங்கள் கண் மூடினால் அழிந்து விடும் என்கிற பயத்தால் எப்போதும் இமைக்காமல் விழித்து இருக்கிறாய்" - "நிமேஷோன் மேஷாப்யாம்" சௌந்தர்ய லஹரி 55 வது ஸ்லோகம்)
</td></tr>
<tr><td class="td1">பைங்கிளி</td><td class="td2">பசும் கிளி போன்றவள்</td></tr>
<tr><td class="td1">மா சாம்பவி தந்தவன்</td><td class="td2"> பெருமை பொருந்திய சம்பு எனும் சிவனின் மனைவி பெற்ற குழந்தை</td></tr>
<tr><td class="td1">அரண் நெடு வரை</td><td class="td2">கோட்டை போல வடதிசையில் படர்ந்து இருக்கும் நீண்ட மேரு மலையை (க்ரௌஞ்சம் அதன் பகுதி)</td></tr>
<tr><td class="td1">அடியொடு பொடி பட</td><td class="td2"> மிச்சம் இல்லாமல் தூளாகிப் போகும்படி</td></tr>
<tr><td class="td1">அலைகடல் கெட</td><td class="td2">அலைகளை உடைய கடல் காணாமல் போகும்படியும் (தண்ணீர் இருந்தால் தான் கடல், இல்லை என்றால் வெறும் பள்ளம்தானே)</td></tr>
<tr><td class="td1">அயில் வேல் வாங்கிய</td><td class="td2">கூர்மையான வேலைப் பின் இழுத்து வேகமாக ஏவிய</td></tr>
<tr><td class="td1">செந்தமிழ் நூலோன்</td><td class="td2">சிறந்த தமிழ் மொழி முற்றும் கற்றவன்</td></tr>
<tr><td class="td1">குமரன்</td><td class="td2">என்றும் இளைஞன்</td></tr>
<tr><td class="td1">குகன்</td><td class="td2">மனமாகிற குகையில் உறைகின்றவன் (எல்லார் இதயத்திலும் இருக்கின்றான் ஆனால் வெளிப்பட மாட்டான், வெளிப்பார்வை நீக்கி உள்முகமாக த்யானம் செய்பவருக்கு அல்லாமல்)</td></tr>
<tr><td class="td1">அறுமுகன்</td><td class="td2">ஆறு முகங்கள் உடையவன்</td></tr>
<tr><td class="td1">ஒரு பது ஒடு இரு புயன் </td><td class="td2"> பத்தோடு இரண்டு அதாவது பன்னிரண்டு (புஜங்கள்) தோள்கள் உடையவன்</td></tr>
<tr><td class="td1">பகை ஆம் மாந்தர்கள்</td><td class="td2">தன்னைப் பகைத்து எதிர்ப்பவர்களுக்கு</td></tr>
<tr><td class="td1">அந்தகன்</td><td class="td2">எமன் போன்றவன் (அழித்து விடுவான்)</td></tr>
<tr><td class="td1">அடல் மிகு</td><td class="td2"> மிகுந்த வலிமை உடைய</td></tr>
<tr><td class="td1">கட தட விகடித களிறு</td><td class="td2"> மத நீர் ஒழுகும் வேடிக்கை விநோதம் மிகுந்த ஆனை முக விநாயகர்</td></tr>
<tr><td class="td1">அனவரதமும் அகலாமாந்தர்கள்</td><td class="td2"> எப்போதும் மனதை விட்டு நீங்காதவர்கள்</td></tr>
<tr><td class="td1">சிந்தையில் வாழ்வாம்படி</td><td class="td2">மனதில் பெறும் பேறு (பாக்கியம்) ஆக</td></tr>
<tr><td class="td1">செந்திலில் அதிபதி என வரு</td><td class="td2">திருச்செந்தூர் ஆண்டவனாக வந்து</td></tr>
<tr><td class="td1">பொரு திறல் முருகனை </td><td class="td2">போர்த்திறமையில் வல்ல (சூரன் முதலியோரை வெற்றி கொண்ட) முருகப்பெருமானை</td></tr>
<tr><td class="td1">அருள் பட மொழிபவர்</td><td class="td2">அவர் அருள் புரியுமாறு அவர்தம் பெருமை கூறுவார்கள்;</td></tr>
<tr><td class="td1">ஆராய்ந்து வணங்குவர்</td><td class="td2">மிகுந்த சிரத்தையோடு தொழுபவர்கள்</td></tr>
<tr><td class="td1">தேவேந்திர சங்கமே</td><td class="td2">தேவேரந்திரனுடைய உலகத்தைச் சேர்ந்தவராவார்கள் </td></tr>
</table>
<!-- Go to www.addthis.com/dashboard to customize your tools --> <script type="text/javascript" src="//s7.addthis.com/js/300/addthis_widget.js#pubid=ra-5a756e49e8eaa960"></script>
Uma Shankarihttp://www.blogger.com/profile/11875827154360557920noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1912487802559660431.post-30724683043999151182021-09-23T12:12:00.003+05:302022-06-04T19:13:41.704+05:30கட்டி முண்டக<head>
<style>
.td1 {
width: 25%;
}
.td2 {
width: 75%;
padding: 0.75em;
}
</style>
</head>
<body>
By Mrs Devaki Iyer, Pune
<p> For a translation of this song in English, click the link <a href="http://thiruppugazh-nectar.blogspot.com/2017/01/479.kattimunda.html" target="_blank"><u>katti mudaka</u></a>
<table lang="ta">
<tr><td class="td1">கட்டி </td><td class="td2">சுவாசக்காற்றைத் தன் இச்சையாக ஓட விடாமல் கட்டுப்படுத்தி (தன் வசமாக்கி) வாசி (பிராணவாயுவைக் குதிரையாக உருவகித்து, அதை ஒழுங்குபடுத்தி ஜீவனின்/ மனிதனின் முன்வினைப்பதிவுகளாம் குண்டலினி எனும் மாயையை எழுப்பி மேல்நிலை எனப்படும் புருவ மத்திக்குள் இருக்கும் சதாசிவ அம்சமான ஜீவாத்மாவில் சேர்ப்பது, ராஜ யோகம் அல்லது வாசி யோகம் ஆகும்) யோகப்பயிற்சியால் (ஒன்றுக்கொன்று பின்னியது போல் இட வலப்புறம் ஓடும் இடா, பிங்கலா அல்லது சந்திர சூர்ய நாடிகளில் சாதாரணமாக சஞ்சரிக்கும் ஸ்வாசக் காற்றைக் குறிப்பிட்ட கால அளவையில் உள் இழுத்தல், உள்ளே நிறுத்தி வைத்துப் பின் மெது மெதுவே வெளிவிடுதல் போன்ற பயிற்சிகளால் முதுகுத்தண்டின் நடுவில் நேராக ஓடும் சுஷூம்னா- தமிழில் சுழுமுனை - நாடியில் செலுத்தி, மூலாதாரத்தில் பாம்பு போல் 2 1/2 அங்குலத்திற்குச் சுருண்டு உறங்கும் குண்டலினி என்னும் ஜீவனின் பூர்வ கர்மங்களின் பதிவை எழுப்பி)
</td></tr>
<tr><td class="td1">முண்டக </td><td class="td2"> மூலாதாரமாகிய கமலத்தில்</td></tr>
<tr><td class="td1">அரபாலி </td><td class="td2"> சிவபெருமானால் பாதுகாக்கப்படுகின்றன</td></tr>
<tr><td class="td1">அங்கி தனை </td><td class="td2"> (யோக) அக்கினியை</td></tr>
<tr><td class="td1">முட்டி (மூட்டி)</td><td class="td2">எழுப்பி</td></tr>
<tr><td class="td1">அண்டமொடு தாவி</td><td class="td2"> இடையில் உள்ள (ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அனாஹதம், விஷூத்தி ஆகிய) சக்கரங்கள்/நிலைகளைக் கடந்து</td></tr>
<tr><td class="td1">விந்து ஒலி கத்த</td><td class="td2"> அனாஹதத்வனி கேட்கும்படியாக</td></tr>
<tr><td class="td1">மந்திர அவதான </td><td class="td2"> பஞ்சாட்சரமான மந்திரத்தில் பூட்டப்பட்ட; அவதானம் என்றால் ஒரு கலையை கூர்மையாக கவனித்து கிரகித்தல்; </td></tr>
<tr><td class="td1">வெண் புரவி மிசை ஏறி</td><td class="td2"> தூய மனமாகிய வெள்ளைக்குதிரையில் ஆரோஹணித்து</td></tr>
<tr><td class="td1">கற்பகம் தெருவில் </td><td class="td2"> சுழுமுனை நாடி என்னும் இடை பிங்கலைக்கு இடைப்பட்ட நேரான, நினைத்ததை அடையும் திறனைத் (அஷ்ட மா சித்திகள் படிப்படியாக) தரும் பாதையில்,</td></tr>
<tr><td class="td1">கொண்டு </td><td class="td2">அக்குதிரையைச்செலுத்தி (மன ஒருமுகத்யானம் செய்து)</td></tr>
<tr><td class="td1">சுடர்</td><td class="td2">இடை, பிங்கலை, சுஷூம்னை ( சந்திர, சூர்ய, அக்னி) எனும் மூன்று நாடிகளும் சந்தித்துப் பிரகாசிக்கும்</td></tr>
<tr><td class="td1">பட்டி மண்டபமும் நாடி</td><td class="td2">ஆக்ஞை என்னும் புருவ மத்தியில் உள்ள ஆஞ்யா (ஆக்கினை) சக்கரத்தை அடைந்து அங்குள்ள (சதாசிவ அம்சமான) ஜீவ ஆன்மாவுடன் (அது அக்னி என்றும் குறிக்கப்படும்) அக்குண்டலினியை (மாயையை) இணைத்து
</td></tr> <a name='more'></a>
<tr><td class="td1">இந்து ஒடு கட்டி</td><td class="td2">அதன் மேலுள்ள சந்திர மண்டலம் எனும் வெளியில் மனதை அசையாமல் நிறுத்தி</td></tr>
<tr><td class="td1">விந்து பிசகாமல் </td><td class="td2">பிரம்மச்சரியம் காத்து விந்துவை வெளியேற விடாமல் காத்து</td></tr>
<tr><td class="td1">வெண் பொடி கொடு </td><td class="td2"> பற்றின்மை, விரக்தியாகிற தூய திருநீற்றால் </td></tr>
<tr><td class="td1">அசையாமல் </td><td class="td2">மனம் வேறு எங்கும் எதிலும் சஞ்சரிக்காமல் அடக்கி</td></tr>
<tr><td class="td1">சுட்டு வெம்புர(ம்) நிறாக</td><td class="td2">மூன்று புரங்கள் எனப்படும் ஆணவம், கன்மம், மாயை எனும் மூன்றையும் (நீறு) சாம்பலாகும்படி, சற்றும் மிகுதி இல்லாமல் பொசுக்கி</td></tr>
<tr><td class="td1">விஞ்சை கொடு </td><td class="td2"> விவேகத்தால்</td></tr>
<tr><td class="td1">தத்துவங்கள் விழச்சாடி</td><td class="td2">இந்த உடலோடு ஆன்மாவைக்கூட்டுகின்ற 96 வகை தத்துவங்களையும் தாக்கி அவற்றை வீழ்த்தி (அவற்றின் பிடியிலிருந்து விடுபட்டு)</td></tr>
<tr><td class="td1">எண்குணவர் சொர்க்கம்</td><td class="td2">எட்டுக் குணங்கள் ( தன்வயனாய் இருத்தல், தூய உடம்பினாதல், இயற்கையிலேயே அறிவுடைமை, முற்றும் உணர்தல், அளவற்ற ஆற்றல், அளவற்ற அறிவு, அளவற்ற கருணை,அளவற்ற ஆனந்தம் இவை இறைவன் இயல்பு) உடைய சிவபெருமானின் ஆனந்த நிலையமான கைலாயபதம்</td></tr>
<tr><td class="td1">கையுளாக </td><td class="td2">அடைந்து விட</td></tr>
<tr><td class="td1">எந்தை பதம் உற</td><td class="td2">அச்சிவ பெருமானின் திருப்பாதங்களில் மனம் ஒன்றி</td></tr>
<tr><td class="td1">துக்கம் வெந்து விழ</td><td class="td2"> பிறவியும் அதனால் வரும் துன்பங்களுமே துன்பப்பட்டு விலகிப்போக</td></tr>
<tr><td class="td1">ஞானம் உண்டு </td><td class="td2"> அந்த மேலான ஞானமாகிற அமிர்தத்தை அருந்தி,</td></tr>
<tr><td class="td1">குடில் வச்சிரங்கள் என</td><td class="td2">தேகம் (அழியா திவ்ய தேகம் கிடைக்கப்பெற்று) வைரம் போல் திடமும் ஒளியும் பெற</td></tr>
<tr><td class="td1">மேனி தங்கம் உற</td><td class="td2"> (அவ்) உடல் பொன் போல் ஒளி விட</td></tr>
<tr><td class="td1">சுத்த அகம் புகுத</td><td class="td2"> அந்த தெய்வீக உடலுடன் மோட்ச வீடாம் நின் திருச்சந்நிதியில் நுழைந்து</td></tr>
<tr><td class="td1">வேத விந்தையொடு</td><td class="td2">அதற்குரிய சந்த, ஸ்வரங்களோடு வேதமந்திரங்களால்</td></tr>
<tr><td class="td1">புகழ்வேனோ </td><td class="td2">உன்னைப் போற்றித்துதிக்கும்படியான பேறு பெறுவேனோ</td></tr>
<tr><td class="td1">எட்டு இரண்டு அறியாத </td><td class="td2">எட்டு என்ற எண்ணைக்குறிக்கும் அகரமாகிற சிவதத்துவத்தையும், இரண்டுக்குக் குறியீடான உகரமாம் சக்தியையும் இவர்களின் சேர்க்கையே இப்பிரபஞ்சமும், இந்த தேகமாகிற குடிலும், அதன் உள் உறையும் எட்டு இரண்டின் காட்டான 10ஐக்குறிக்கும் யகரமாம் ஆன்மா, சிவனின் கூறுதான் என்றும் அறியாது இருந்த </td></tr>
<tr><td class="td1">என் செவியில்</td><td class="td2">அடியேனுடைய காதுகளில்</td></tr>
<tr><td class="td1">எட்டு இரண்டும் </td><td class="td2">அந்தத் தத்துவங்களை</td></tr>
<tr><td class="td1">வெளியாக மொழிந்த </td><td class="td2">வெளிப்படையாக விளங்கும்படி உபதேசித்த</td></tr>
<tr><td class="td1">குரு முருகோனே</td><td class="td2">குருநாதனாய் வந்த முருகப்பெருமானே</td></tr>
<tr><td class="td1">எட்டு இரண்டு திசை ஓட செங்குருதி </td><td class="td2">பத்து திசைகளிலும் சிவந்த ரத்தம் ஆறாக ஓடும்படி</td></tr>
<tr><td class="td1">எட்டு இரண்டும் </td><td class="td2">எண்ணிரண்டு பதினாறு</td></tr>
<tr><td class="td1">உருவாகி </td><td class="td2">வடிவங்கள் எடுத்து</td></tr>
<tr><td class="td1">வஞ்சகர் மெல்(மேல்)</td><td class="td2">கபடம் சூது மிகுந்த,</td></tr>
<tr><td class="td1">எட்டிரண்டு திசையோர்கள்</td><td class="td2">பத்து (எண் திசைகளும் மேல், கீழ் என பத்து) புறங்களிலும் இருந்த அசுரர்கள்</td></tr>
<tr><td class="td1">பொன்ற</td><td class="td2">அழிந்துவிடும்படி</td></tr>
<tr><td class="td1">அயில் விடுவோனே</td><td class="td2"> கூர்மையான வேலை விடுத்தவனே</td></tr>
<tr><td class="td1">செட்டி என்று</td><td class="td2"> வளையல் வியாபாரி போல் வேடம் தரித்த</td></tr>
<tr><td class="td1">சிவகாமி தன் பதியில்</td><td class="td2">தன் காதல் மனைவி, மலயத்வஜ பாண்டியனுக்கு மகளாக அவதரித்து மீனாக்ஷியாக ஆண்ட அந்த மதுரையம்பதியில்</td></tr>
<tr><td class="td1">கட்டு செங்கை வளை</td><td class="td2">பெண்கள் தம் அழகான கைகளில் அணியும் வளைக்கட்டுகளை</td></tr>
<tr><td class="td1">கூறும் எந்தை இட </td><td class="td2">"வளையல் வாங்கலையோ" எனக்கூவி விற்று எம் (உலகத்) தந்தை முன்பு தாருகா வனத்து ரிஷிபத்தினிகளாக இருந்து இப்போது மதுரைவாசிகளாய் இருக்கும் அம்மாதர்களுக்குப் பூட்டி விட்ட</td></tr>
<tr><td class="td1">சித்தமும் குளிர </td><td class="td2">அந்தச் சிவனார் தம் சித்தமும் மகிழ்ந்து புளகாங்கிதம் அடையும்படி</td></tr>
<tr><td class="td1">அநாதி </td><td class="td2">ஆதி அந்தமில்லாத பிரணவத்தின்</td></tr>
<tr><td class="td1">வள் பொருளை</td><td class="td2"> வளமையான உட்பொருளை</td></tr>
<tr><td class="td1">நவில்வோனே</td><td class="td2">எடுத்து உரைத்தவனே</td></tr>
<tr><td class="td1">செட்டி என்று வன மேவி</td><td class="td2">தானும் தன் தந்தை போலவே வளையல் வணிகனாக (வேடம் பூண்டு) (வள்ளிப்பிராட்டி வாழ்ந்த) வள்ளி மலைக்காட்டில் சென்று</td></tr>
<tr><td class="td1">இன்ப ரச சத்தியின்</td><td class="td2"> இச்சா சக்தியின்</td></tr>
<tr><td class="td1">செயலினாளை</td><td class="td2">செயல் புரிபவளான வள்ளியை</td></tr>
<tr><td class="td1">அன்பு உருக தெட்டி வந்து </td><td class="td2">அவளிடம் மிகுந்த காதலினால் உருகி அவள் குலத்தவரான குறவர்களிடமிருந்து திருடிக் கொண்டு </td></tr>
<tr><td class="td1">புலியூரில் மன்றுள் </td><td class="td2"> சிதம்பரப்பதியில் வந்து இத்தில்லை அம்பலத்தில்</td></tr>
<tr><td class="td1">வளர் பெருமாளே</td><td class="td2">கீர்த்தியோடு வாழும் எங்கள் தலைவனே. </td></tr>
</table>
<!-- Go to www.addthis.com/dashboard to customize your tools --> <script type="text/javascript" src="//s7.addthis.com/js/300/addthis_widget.js#pubid=ra-5a756e49e8eaa960"></script>
Uma Shankarihttp://www.blogger.com/profile/11875827154360557920noreply@blogger.com0