Posts

Showing posts from September, 2017

வள்ளி சன்மார்க்கம்

முருகன் வள்ளியின்பால் நடத்தியது வெறும் காதல் அல்ல. இது இறைவன் பக்குவ ஆன்மாக்களுக்கு தானே வந்து அருளும் நிலை. வள்ளி சன்மார்க்கம் என்றால் வள்ளி கடைப்பிடித்த நன்னெறி. அவள் முருகன்பால் மேற் கொண்ட தீவிர அன்பு நெறி. இது, அடியார்களை முருகப்பெருமான் வலிந்து ஆட்கொள்ளும் பேரருள் திறத்தைப் புலப்படுத்துகிறது. வள்ளி பக்குவப்பட்ட ஆன்மாவின் வடிவம். யான், எனது என்ற செருக் கற்று இறைவன் திருவடிகளில் சரணடைந்தது வள்ளியின் தன்மையாகும். இதனையே 'வள்ளி சன்மார்க்கம்’ என்றும், வள்ளி அனுஷ்டித்த நன்னெறி என்றும் போற்றுகிறார் அருணகிரிநாதர். போகியாய் இருந்து உயிர்க்கு போகத்தைப் புரிதல் இறைவனின் தன்மை. வேலவனின் இச்சா சக்தியாக திகழ்வது வள்ளி. ஆதலின், உலகில் இல்வாழ்க்கை நடத்தற்பொருட்டு முருகன் தன்னுடைய ஒரு திருமுகத்தால் வள்ளியம்மையுடன் பேசி மகிழ்ந்து அமர்ந்திருக்கின்றான்; இது உலக உயிர்கள் நன்மை அடைவதன் பொருட்டாகும்.

ஸ்ரீஐயப்பன் நாமாவளி - நினைவிலும் ஐயப்பா

Guruji Shri A.S.Raghavan is well known for singing melodious namavali s on gods other than Murugan too. He has set them to musical tunes that build a scintillating crescendo, being based on raagas that at once melt the heart. Here's one of the Ayyappa namavalis that he would sing in special bhajans. ராகம் : சுப பந்துவராளி தாளம் ஆதி நினைவிலும் ஐயப்பா! கனவிலும் ஐயப்பா! நீல வண்ண கட்டழகா நீ வருவாய் ஐயப்பா சபரிமலை தெய்வமே! என் சாஸ்தாவே ஐயப்பா அஞ்சேல் எனக் காத்திடுவாய் ஐயப்பாவே ஐயப்பா நித்ய வஸ்துவாய் எங்கும் நிறைந்தவனே ஐயப்பா - உன் தத்வ ரூப காட்சி காண தனித்து வந்தேன் ஐயப்பா

கல்வியின் பயனும் பிடி தோய் மலையும்

Taken from K.V.Jagannathan's book on Anuboothi இறைவன் அருளை லட்சியமாக கொள்ளாத கல்வி யாவும் போலி கல்வியே. கல்வி இறைவனோடு சார்தற்குரிய நெறிகளை தெளிவிக்க வேண்டும். இல்லையாயின் அது கல்வி ஆகாது. மனத்தை ஒருமைப்படுத்தி நல்ல நெறியில் செலுத்தி நடுநிலையில் நிற்கும்படி செய்வதே கலையும் கல்வியும். கலை பயிற்சியால் மனம் செருக்கும் கலக்கமும் அடையுமானால் அந்த கல்வி தீங்கானதே. கலையே பதறிக், கதறித் தலையூடு அலையே படுமாறு, அதுவாய் விடவோ? கொலையே புரி வேடர் குலப் பிடிதோய் மலையே, மலை கூறிடு வாகையனே. "கலையானது பதற்றம் கொண்டு பயனற்ற ஆரவாரம் செய்து தலை கிறுகிறுத்து அலையும் படி உள்ள ஒன்றாகி விடலாமா? சமயவாதிகளுடன் வாதம் செய்து பிணக்குதல்செய்து சாஸ்திர நூல்களை மனக் கலக்கத்துடன் சத்தம் போட்டு பேசி அப்படிப்பட்ட வாத பிரதிவாதத்தில் நான் சிக்கலாமா? கொலையே விரும்பி செய்யும் வேடர் குலத்தில் பெண் யானையை போல வளர்ந்த வள்ளிநாயகி அணைந்த மலை போன்ற பெருமாளே! கிரௌஞ்ச மலையைப் பல கூறாகப் பிளந்த வெற்றி மாலை சூடிய முருகா!!"

குருவாய் வருவாய் அருள்வாய்

உருவாய் அருவாய், உளதாய் இலதாய் மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய், அருள்வாய் குகனே. உருவாய் ( uruvaay ) : ஆறுமுகமும் பன்னிருதோளும் கொண்ட தடஸ்த நிலையிலும் ('மேனியாகி கருணை கூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டே ஒரு திருமுருகன் வந்து அங்கு உதித்தனன் உலகம் உய்ய') ,