Posts

Symbolism of Murugan Worship

உருவாய் அருவாய், உளதாய் இலதாய் மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய், அருள்வாய் குகனே. uruvAi aruvAi uLadhAi iladhAi maruvAi malarAi maNiyAi oLiyAy karuvAi uyirAik gadhiyAi vidhiyAi guruvAi varuvAi aruLvAi guganE! You are the Supreme Being, who has form, and who has no form! You are an existent being, and You are also an invisible being! You are the fragrance, and You are also the flower having the fragrance! You are the precious gem, and You are also its lustre! You are the cosmic embryo, and You are also the life that moves the embryo! jYou are the ultimate refuge and You lead the path of the destiny of jeevatmas towards salvation. May You be gracious enough to appear before me as the Preceptor, and bestow on me Your grace! Brahman is the Absolute Reality, the source of all things into which all things will eventually go back. It is a pure, blissful consciousness that is infinite, eternal, and unchanging. Advaita

மன்மதன் தத்துவம்

மன்மதன் என்றால் என்ன? ‘மன்மதன்’ என்றால் ‘மனதை கடைபவன்’ என்று அர்த்தம். ‘மதனம்’ என்றால் கடைவது. காதல் வயப்பட்ட ஒருவரின் மனதை மதனம் பண்ணுவதால் மன்மதனுக்கு இந்த காரண பெயர். திருமாலின் மனத்தில் இருந்து உண்டான மன்மதன், திருமாலின் நாபிக் கமலத்தில் இருந்து எழுந்த பிரம்மாவுக்கு தம்பிமுறை. மன்மதனுடைய புஷ்ப பாணங்கள் தாமரை, மல்லிகை, கருங்குவளை (நீலோத்பலம்), மாம்பூ, அசோக புஷ்பம் ஆகியவை தான்; நாணோ புஷ்பங்களில் ரீங்காரமிடும் வண்டுகள்; அவனுடைய தென்றல் தேரை இழுப்பது கிளி! மலர் அம்புகளை செலுத்தும் வில்லாகிய மனம் பஞ்சேந்திரியங்களால் ஆளப்படும் சமஸ்த ஜீவப் பிரபஞ்சத்தை காமத்தில் கட்டிப் போடுகிறது. அது எப்படி? ஐந்து பாணங்கள் ஐம்புலனைக் குறிப்பன. பஞ்ச இந்த்ரியங்களால் அநுபவிக்கப்படும் ஐந்து ஸூக்ஷ்ம பூதங்களான சப்தம், ஸ்பர்சம், ரூபம், ரஸம், கந்தம் என்கிறவை தன்மாத்ரை எனப்படும். லலிதா சஹஸ்ரநாமத்தில் பஞ்ச தன்மாத்ர சாயகம் என்று இவை குறிப்பிடப்படுகின்றன. ரூபம், ரஸம், கந்தம், ஸ்பரிசம் ஆகிய நான்கால் நம்முடைய நான்கு இந்திரியங்களை ஆகர்ஷிப்பது புஷ்பம். அதன் அழகு கண்ணுக்கும், அதில் சுரக்கிற தேனின் ரஸம் நாக்

பாற்கடல் கடைதல் - தத்துவ விளக்கம்

ஆடக மந்தர நீர்க்கு அசையாமல் உரம் பெற நாட்டி : பொன் மயமான மந்தர மலையை பாற்கடல் நீரில் அசையாதபடி வலிமையுடன் மத்தாகப் பொருத்தி வைத்து, ஒரு ஆயிரம் வெம் பகுவாய்ப் பணி கயிறாக : ஒப்பற்ற ஆயிரக் கணக்கான வெப்பம் மிகுந்த பிளவான நாக்குகளை உடைய பாம்பாகிய வாசுகியை (மத்தின்) கயிறாகச் சுற்றி, ஆழி கடைந்து அமுது ஆக்கி : பாற்கடலைக் கடைந்து அமுதத்தை வரவழைத்து, அநேகர் பெரும் பசி தீர்த்து அருள் ஆயன் : இந்திராதி தேவர்களுடைய மிகுந்த பசியை நீக்கி (மோகினியாக) அருள்புரிந்தவனும், ஆயர் குலத்தில் அவதரித்தவனுமான திருமால் (திருப்புகழ் பாடல் 420. வேடர் செழுந்தினை ) பாற்கடல் கடைந்த கதை ஒரு காலத்தில் இந்திரன் துர்வாச முனிவர் அளித்த மலர் மாலையை அலட்சியமாக தன்னுடைய யானைக்கு அணிவித்தான். யானை அதை தன் தும்பிக்கையால் பிய்த்து எறிந்ததை பார்த்த முனிவர் கடுங்கோபம் கொண்டு தேவர்களின் வலிமையும் அதிர்ஷ்டமும் மறைந்து போகும்படி சாபம் அளித்தார். அந்த சாபத்தின் மூலம் தேவர்கள் மிகவும் வலிமை குறைந்தவர்கள் ஆகி விட்டனர். எல்லா அண்ட சராசரமும் அசுரர்கள் ஆட்சிக்கு கீழ் வந்தது.

Jambukeswarar Temple At Thiruvanaikaval

Image
Jambukeswarar Temple at Thiruvanaikaval, a Suburb of Tiruchrirapalli, is on the northern bank of the river Kaveri at the Srirangam river island, being surrounded by the Kaveri and the Kollidam river, which splits itself here from the Kaveri. It was built by an early Chola King called Kochengat Cholan. According to the legend, Lord Shiva sent Goddess Parvati to perform ‘tapasya’ at the Jambu forest of Thiruvanaikaval, as He was offended by her mocking light heartedly his austerity. Parvati built a Shivalinga under the ‘venn naaval’ (white Jambu fruit) tree, with the water from River Ponni. After years of tapasya, Shiva appeared before Akilandeswari and gave her Shiva gnana (knowledge). Shiva stood facing west and gave Upadesa to Akilandeswari who stood facing east. Another legend says that two Shiva gana s, Malyavan and Pushpadanta, always fought with each other. Once, both of them cursed each other out of rage, as a result of which both descended onto earth, Malyavan as a spi

உயிர்கள் அனுபவிக்கும் ஐந்து உணர்வு நிலைகள்

காரிய அவத்தைகளும் காரண அவத்தைகளும் அவத்தை / அவஸ்தை என்பது உணர்வு நிலை. அநாதியாகவே ஆணவ மலத்துடன் கூடியிருத்தலால் தானே சுயமாக அறிய முடியாத ஆன்மா உடலில் கருவி கரணங்களுடன் கூடி ஐந்து உணர்வு நிலைகளில் நின்று அறிகின்றது; செயலாற்றுகின்றது. உயிர் அடையும் ஐந்து நிலை வேறுபாடுகள் காரிய அவத்தைகள் எனப்படும்.

மும்மலங்கள்

மும்மலங்கள் என்றால் என்ன? சைவ சித்தாந்தத்தின்படி இறைவனைச் சென்றடைவதே உயிர்களின் நோக்கம். ஆயினும் உயிர்கள் இறைவனைச் சேரவிடாமல் அவற்றின் அறிவை அறிவற்ற சடப்பொருள்களான ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்கள் மறைத்துக் கொண்டிருக்கின்றன. இதனால் ஏற்படுகின்ற அறியாமையே உயிர்களின் துன்பங்களுக்குக் காரணம் என்பது சைவ சித்தாந்தக் கருத்து. உயிர்களை மலங்களின் பிணைப்பிலிருந்து விடுவித்துத் தன்னுடன் சேர்த்துக்கொள்ள இறைவனின் அருள் வேண்டும்.

சைவ சித்தாந்தம் பகுதி 3 : பதியின் இயல்பு

Image
இறைவனின் இயல்பு என்றும் எக்காலத்தும் விளங்கிக் கொண்டும், நிலையானதாகவும், எல்லா அண்டங்களையும் பொருள்களையும் உயிர்களையும் படைத்து தன் அருளால் இயக்கிக் கொண்டும் இருப்பவர் இறைவன். அந்த ஒப்பற்ற உயர்ந்த இறைவனை சொல்லாலும் பொருளாலும் மனித அறிவாலும் கருவிகளாலும் அளக்கவோ கணக்கிடவோ முடியாது. அந்த பரம்பொருள் எல்லா ஆன்மாக்களிலும் உள் ஒளியாக இயங்கிக் கொண்டுள்ளது. சிருஷ்டி முழுவதிலும் ஊடுருவி நின்றும், அதே நேரம் அனைத்துக்கும் அப்பால் காலமற்று நிற்கும் பிரக்ஞையாக செயல் படுகிறது. சைவ சித்தாந்தம் எவ்வித மாற்றமும் அடையாமல், என்றும் ஒரு தன்மை உடையதாய் நிற்கும் பொருளான சத்தாய் நிற்பதையே இறைவனின் உண்மை இயல்பு என்று கூறுகிறது. அறிவுடைப் பொருள் 'சித்து' என்றும், அறிவில்லா பொருள் 'அசித்து' என்றும் சொல்லப் பெறும். உலகம் தோன்றுவதற்குக் காரணம் மாறாத இருப்புடன், தோற்றமும் மறைவும் அற்ற அனந்தமாக, ஆகாசம் போல் சர்வ வியாபகமாக, எங்கும் நீக்கமற நிறைந்து இருப்பது ஸத்/சத்து தான்.

சைவ சித்தாந்தம் பகுதி 2 : முப்பொருள் இயல்பு

அனாதி முப்பொருள் உலகில் உள்ள அனைத்துப் பொருள்களும் அழியும். அழியக் கூடிய அனைத்தும் பொய். அழியாதது பரம்பொருள் ஒன்றே. அதுவே மெய். அது தோன்றுதல், அழிதல், வளர்தல், தேய்தல் முதலிய மாற்றங்களுக்கு உட்படாது. சைவ சித்தாந்தம் நிலையில்லா உலகில் அனாதியான அடிப்படை பொருளாக, அழியாப் முப்பொருள்களாக பதி, பசு, பாசம் விளங்குகின்றன என்று கருதுகிறது. இந்த முப்பொருள்களுள் ஒன்றை மற்றொன்றின் காரியம் என்று இல்லாமல் மூன்றும் தனித் தனிப் பொருள்களே என்று சைவ சித்தாந்தம் உரைக்கிறது. மாறுபட்ட மூன்று தன்மைகளால் வேறுவேறாகத் தோன்றும் முப்பொருள்களும் தொடக்கம் இல்லாதவைை; தோன்றாமல், அழியாமல், எப்போதும் இருக்கின்றன. இதற்கு மூலக்ககூறாக இருப்பது சற்காரிய வாதம் .

திருவிளையாடல் புராணம்

திருவிளையாடல் புராணம் என்பது சிவபெருமான் பாண்டியர்களின் தலைநகரான கூடல்மாநகராம் மதுரையில் நிகழ்த்திய 64 அற்புத லீலைகளைப் பற்றிக் கூறும் நூலாகும். இறைவனார் உலக உயிரிகளிடத்து அன்பு கொண்டு அவர்களுக்கு அருள் செய்த கருணையை இந்நூலில் வரும் கதைகள் அழகாக விவரிக்கின்றன. திருவிளையாடல் புராண‌மானது தமிழ்கடவுளான முருகப்பெருமானால் அகத்தியருக்கு அருளப் பெற்றது. பின் அகத்தியரின் மூலம் இறைவனின் திருவிளையாடல்களை மற்ற முனிவர்கள் அறிந்து கொண்டனர் என்று இந்நூல் இறைவனின் திருவிளையாடல்கள் வெளிவந்த விதத்தை விளக்குகிறது.

சைவ சித்தாந்தம் : அறிமுகம் (பகுதி 1)

சைவ சித்தாந்தம் என்றால் என்ன? சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடுகின்றது சைவ சமயம். தன்னுள் இருக்கும் சிவத்தை அறிந்து மலநீக்கம் பெற்று சிவனடியை சேரும் வழி காட்டுவதே சைவ சித்தாந்ததின் நோக்கம். சித்தாந்தம் என்பது ஆராய்ந்து சிந்தித்து முடிந்த முடிவு. சைவ சித்தாந்தம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமூலரால் ஒரு தத்துவப் பிரிவாக உருவானது. சைவ சித்தாந்தம் வேதங்களையும், ஆகமங்களையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது. சைவ சமயத்தில் சமயக் குரவர் நான்கு பேர்களும் சந்தான குரவர்கள் நான்கு பேரும் உள்ளனர். சமயக்குரவராகிய நால்வர் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி, மாணிக்கவாசகர் ஆகியோர் ஆவர். இவர்கள் சைவ சமயத்தின் தேவாரம் மற்றும் திருவாசகத்தினை எழுதியவர்கள். சந்தான குரவர்கள் மடங்கள் ஸ்தாபித்து வழிமுறை பாடங்கள் வகுத்தார்கள். அந்த நால்வரில் முதலாமவர் மெய்கண்டார்; அவரின் சீடர் அருள் நந்தி சிவம்; அவரின் சீடர் மறைஞான சம்பந்தர். கடைசியாக உமாபதி சிவம். சைவ சமயத்தை விளக்கும் நூல்களில் சிறப்பானதாகக் கருதப்படுவது மெய்கண்டார் எழுதிய சிவஞான போதம் ஆகும். மெய்கண்டார் கிபி 13 ஆம் நூற்றா