Posts

Showing posts from February, 2018

விராலிமலை முருகன்

Image
மதுரை திருச்சி நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்டத்தில் திருச்சிக்கு 20 கிமீ முன்பாக அமைந்திருக்கிறது. தற்போது சிறு நகரமாக மாறிவிட்ட விராலி மலை முன்னர் வனப்பகுதியாக இருந்திருக்க வேண்டும். இந்த முருகன் மருத்துவ முருகனாம்! முருகன் வள்ளியை மணந்ததாகக் கூறப்படும் இக்கோயில் மயில்களால் சூழப்பட்டு மிக ரம்மியமாகக் காட்சியளிக்கும். பயந்த தனி வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமும் அல்லவா? மூலவர் சண்முகநாதன். அம்மன் வள்ளி தேவசேனா இருவருமாவர். திருவண்ணாமலையைப் போல, இதுவும் ஏராளமான சித்தர்களும், யோகிகளும், ஞானிகளும் வாழ்ந்த/ வாழும் பூமி. விராலிமலையில்தான் பரகாயப்பிரவேசம் என்னும் அரும் பெரும் சித்தியை அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் வழங்கியதாகப் புராணம் கூறுகிறது.

சுந்தரரின் தோழரும், அருணகிரி நாதரும்

You can read here the story of Paravai Nachiyar in English "பரவைக்கு எத்தனை" என்று தொடங்கும் பொதுப் பாடலில், தன் அடியார்களுக்காக எதையும் செய்யத் தயங்காத மாண்பு கொண்டவர் அந்த மகாதேவன் என்பதையும், சுந்தர மூர்த்தி நாயனாரின் நண்பனாகவே தன்னை ஆக்கிக் கொண்டவர், கந்தனின் தந்தை என்பதையும் பாடிப் பரவசம் ஆகிறார் அருணகிரியார். " பரவைக் கெத்தனை விசை தூது பகரற்கு உற்றவர் மாண் " ஒரு பெரிய புராணத்தையே உள்ளடக்கிய வரிகள். உரிமையால் பக்தன் உத்தரவிட, கருணையால் அதைச் செய்து முடிக்கும் பரமன். பாசமும் நேசமும் இருவருக்கும் பாலமிடும் எழிற் கோலம். பழைய சிவ அடிமை சுந்தரர் ப்ராரப்தம் முடித்து முக்தி பெற எடுத்த பிறவி. சிவபக்தைகள் இருவர், பரவை நாச்சியாராகவும், சங்கிலி நாச்சியாராகவும் பிறந்து, சுந்தரரைக் கை பிடிக்கக் காத்திருக்க, இறைவன் திருவருளால் இகபர சுகம் பெற, திருவாரூரில் பரவையையும், திருவொற்றியூரில் சங்கிலியையும் மணம் புரிந்து கொள்கிறார் வன் தொண்டர் சுந்தரர்.