Posts

Showing posts from September, 2018

தசையும் உதிரமும்: JR கருத்துரை

By Smt Janaki Ramanan, Pune To read the meaning of the song thasaiyum uthiramum in English, click the underlined hyperlink. முன்னுரை வடிவும் இளமையும் வளமையும் கொண்ட குமரா சரணம். "தசையும் உதிரமும் " என்று தொடங்கி, இசையாய், கலிதையாய், அம்பிகையையும் அருமை மைந்தனையும் அருணகிரியார் பாடும் பாடல் அருணை நகரில் அன்று ஆட்கொண்டான் மைந்தன். ஆறுதல் சொன்னாள் அன்னை. மீண்டும் பிறந்து வந்தது போன்ற அந்த அரிய தருணங்களை நினைத்து நினைத்துப் போற்றிப் பாடும் பொதுப் பாடல்.

தமரும் அமரும் : J R விளக்கவுரை

By Smt Janaki Ramanan, Pune To read the meaning of the song thamarum amarum ( தமரும் அமரும் ) in English, click the underlined hyperlink. முன்னுரை கழைக் கூத்தாடிகள் ஒரு ஆதாரத்தை விட்டு விட்டு, கண் இமைப்பதத்குள் இன்னொரு ஆதாரத்தைப் பற்றிக் கொண்டு சாகசம் காட்டுவார்கள். வாழ்விலோ, நாம் ஒவ்வொரு முறையும் ஆதாரம் என்று பற்றிப் பிடித்துக் கொண்டு ஆசுவாசப்படும் மனைவி, மக்கள், உற்றம், சுற்றம் என்பதெல்லாம் தாமே கழன்று கொள்ளும் பரிதாப நிலை வந்தால் என்ன செய்வோம்! சாஸ்வதம் சரவணன் திருவடிகள் தான் என உணர்த்துகிறார் அருணகிரிநாதர். மரண பயம் போக்கும் மநதிரம் சொல்கிறார். திரும்பத் திரும்பச் சொல்வதெல்லாம், மயங்கிக் கிடக்கும் மனித குலத்துக்காகத்தான்.