Posts

Showing posts from September, 2019

வந்து வந்து வித்தூறி : J R விளக்கவுரை

By Smt Janaki Ramanan, Pune To read the meaning of the song vanthu vanthu ( வந்து வந்து வித்தூறி ) in English, click the underlined hyperlink. முன்னுரை "வந்து வந்து வித்தூறி" என்று தொடங்கும் தில்லைத் திருத்தலப் பாடல். வந்து வந்து பிறக்கிறான் மனிதன். வாழத் தெரியாமல் நொந்து நொந்து வாழ்கிறான். பின் வெந்து வெந்து மடிகிறான். அந்த ஜனன மரண சுழற்சியிலிருந்து தன்னை விடுவிக்கத் தயாளன் முருகன் வர வேண்டும் என அருணகிரியார் ஏங்கிப் பாடும் பாடல். மனித குலமே சம்சார சாகரத்தில் தத்தளித்துக் கொண்டிருப்பதாலே, அருணகிரியார் வேண்டுவது மனித குலம் உய்யத் தான். ஞானிகள், இவ்வாறு, இறைவனுக்கும், மனிதனுக்கும் பாலமாய் அமைந்து நம்மைப் பக்குவப் படுத்தப் பாடு படுகிறார்கள். முருகன் எப்படி தரிசனம் தர வேண்டும் என்பதை வண்ணக் காட்சியாய் நம் முன்னே விரிக்கும் பாடல். கந்தனை வந்தனை செய்து கொண்டு, பாட்டின் பொருள் பார்ப்போமா?

அமுதுததி விடம் : J R விளக்கவுரை

By Smt Janaki Ramanan, Pune To read the meaning of the song amutha uthathi ( அமுத உததி ) in English, click the underlined hyperlink. முன்னுரை அமுதுததி விடம் உமிழு ' என்று தொடங்கும் திருச்செந்தூர் பாடல். தர்மச் செயல்களை தள்ளிப் போட்டுக் கொண்டே போவது எதுவரை? அந்த தர்மதேவனே அழைத்துச் செல்ல வரும் வரையிலா? சிந்திக்கச் சொல்கிறார் அருணகிரியார். வாழ்வு முழுவதும் சுயநலக் கோட்டைகள் கட்டி சுகவாழ்வு வாழ்ந்து விட்டால் இறுதிக் கணங்கள் நெருங்க நெருங்கத் தினைஅளவு கூடத் தான தர்மமோ, மற்ற புண்ணியச் செயல்களோ செய்ய வில்லையே என்ற பதைப்பு வரலாம். அப்பொழுது எதையும் சொல்லவோ செய்யவோ முடியாதபடி காலம் கடந்து விடலாம். அதனால் இன்றே, இப்பொழுதே, நன்றே செய்யத் தொடங்கி விட வேண்டும் என்று குறிப்பால் உணர்த்துகிறார். இறுதிக் கணங்களை ஒளி, ஒலிக் காட்சி போல் விஸ்தாரமாய்ச் சொல்வது நம்மை நடுங்க வைப்பதற்காக இல்லை. அந்தக் கணங்களை நினைத்து, இந்தக் கணமே திருந்தத் தான். இதற்கு மாறாக ஒரு இன்பக் காட்சியாக, சிவனின் ஆனந்த தாண்டவத்தைக் காட்டுவது நம் நெஞ்சில் நம்பிக்கை சேர்க்கத் தான். சிவனை நினைத்தாலே கால

துன்பங் கொண்டு : J R விளக்கவுரை

By Smt Janaki Ramanan, Pune To read the meaning of the song thunbam kondu( துன்பங் கொண்டு ) in English, click the underlined hyperlink. முன்னுரை "துன்பங் கொண்டு " என்று தொடங்கும் திருச்செந்தில் திருத்தலப் பாடல். மாயத் திரையின் பின்னணியில் நடக்கும் நாடகங்களை எல்லாம் "மயக்கம்" என்ற சொற் பிரயோகத்தால் தெளிவு படுத்தி விடுகிறார் அருணகிரிநாதர். வேரோடிய பெண்ணாசை போன்ற ஆசைகளை மனம் எளிதில் விடுவதில்லை தான். ஆனால், இது ஒரு மயக்க நிலை தெளிந்து விடும் பொழுது நெஞ்சத்தில் ஒரு அமைதி பூக்கும். மயக்கம் தெளிவிக்கத் தான் நீலக் கடலோரம் நின்று கஞ்சமலர்ப் பாதம் காட்டுகிறான் கருணையின் வடிவமான கந்தன்.