Posts

Showing posts from February, 2022

மூல மந்திரம் — பதவுரை

By Mrs Devaki Iyer, Pune For a translation of this song in English, click the link moolamanthiram மூலமந்திரம் வேதத்தின் மூலமான மூலமந்திரமான சிவ பஞ்சாக்ஷரமோ, முருகனின் ஷடாக்ஷரத்தையோ ஓதல் இங்கு இலை நியமமாக செபிக்கும் பழக்கம் என்னிடம் இல்லை ஈவது இங்கு இலை பிறருக்கு, தேவை என்று வருபவர்க்குக் கொடுக்கும் பழக்கமும் இல்லை நேயம் இங்கிலை உன்னிடம் மாறாத அன்பு ( அல்லது எவரிடத்தும் அன்பு செய்யும் பாங்கு) என்னிடத்தில் இல்லை மோனம் இங்கு இலை மனம் அடங்கியதன் அடையாளமான மௌனம் (மனன சீலம்) என்னிடம் இல்லை ஞானம் இங்கு இலை (ஞானத்தின் வெளிப்பாடான மேற்சொன்ன எதுவும் இல்லை ஆதலால்) மெய் உணர்வு இல்லவே இல்லை என்பது வெளிப்படை

வசனமிகவேற்றி — பதவுரை

By Mrs Devaki Iyer, Pune For a translation of this song in English, click the link vachana miga வசனம் மிக ஏற்றி வாக்கால் உச்சரித்து பல ஆவ்ருத்திகள் (எண்ணிக்கையில்) உரு ஏற்றி மறவாதே (அம்மந்திரத்தால் குறிக்கப்படும் இறைவடிவத்தை) மனதை விட்டு அகலாமல்தியானித்து மனது துயர் ஆற்றில் ஆற்றின் ஓட்டம்போலத் தொடர்ந்து வரும் துன்பங்களாலான இவ்வுலக நினைவுகளில் மனம் உழலாதே சென்று துன்பப்படாமல் (காத்து, அடக்கி) இசைபயில் புகழ்வாய்ந்த/ ப்ரசித்தமான ஷடாக்ஷரம் ('சரவண பவ' எனும்முருகனுக்கு உரிய) ஆறு எழுத்து அதாலே மந்திரத்தை மேற்சொன்ன முறையில் ஜபிப்பவர்க்கு இக பர சௌபாக்கியம் இவ்வுலக வாழ்க்கை இன்பங்களும் அதோடு கூட மோக்ஷத்தையும் அருள்வாயே கொடுத்து விடுகிறவன் அல்லவா நீ (நாம ஜபத்தின் பலனை, "எந்தை புகலூர் பாடுமின் புலவீர்காள் / இம்மையே தரும் சோறும் கூறையும் ஏத்தினால் இடர் கெடலும் ஆம்/ அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே" என்பார் சுந்தர மூர்த்தி நாயனார்.) பசு பதி உடல் பற்று/ உலகப்பற்று க்களால் கண