வசனமிகவேற்றி — பதவுரை

By Mrs Devaki Iyer, Pune

For a translation of this song in English, click the link vachana miga

வசனம் மிக ஏற்றி வாக்கால் உச்சரித்து பல ஆவ்ருத்திகள் (எண்ணிக்கையில்) உரு ஏற்றி
மறவாதே (அம்மந்திரத்தால் குறிக்கப்படும் இறைவடிவத்தை) மனதை விட்டு அகலாமல்தியானித்து
மனது துயர் ஆற்றில் ஆற்றின் ஓட்டம்போலத் தொடர்ந்து வரும் துன்பங்களாலான இவ்வுலக நினைவுகளில் மனம்
உழலாதே சென்று துன்பப்படாமல் (காத்து, அடக்கி)
இசைபயில் புகழ்வாய்ந்த/ ப்ரசித்தமான
ஷடாக்ஷரம் ('சரவண பவ' எனும்முருகனுக்கு உரிய) ஆறு எழுத்து
அதாலே மந்திரத்தை மேற்சொன்ன முறையில் ஜபிப்பவர்க்கு
இக பர சௌபாக்கியம் இவ்வுலக வாழ்க்கை இன்பங்களும் அதோடு கூட மோக்ஷத்தையும்
அருள்வாயே கொடுத்து விடுகிறவன் அல்லவா நீ (நாம ஜபத்தின் பலனை, "எந்தை புகலூர் பாடுமின் புலவீர்காள் / இம்மையே தரும் சோறும் கூறையும் ஏத்தினால் இடர் கெடலும் ஆம்/ அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே" என்பார் சுந்தர மூர்த்தி நாயனார்.)
பசு பதி உடல் பற்று/ உலகப்பற்று க்களால் கண்டுண்ட இவ்வுயிர்களு க்கெல்லாம் தலைவனான (அக்கட்டுக் களை அறுக்கவல்ல)
சிவாக்யம் உணர்வோனே சிவ பெருமானிடம் சென்று சேர்க்கும் நூல்களை (சைவாகமங்களை) நன்கு அறிந்தவனே (உபதேசம் புரிய வல்லவனே.)
பழநி மலை வீற்று இந்தப் பழநி எனும் சிவமலையில் அமர்ந்து
அருளும் வேலா பக்தர்களுக்கு அருள் புரியும் வேலவனே
அசுரர்கிளை வாட்டி தாரகன், சூரபத்மன், சிங்கமுகன் போன்ற அசுரர்களுடைய குலத்தையே போரில் வதைத்து அழித்து
மிக வாழ நன்றாக மீண்டும் வாழும்படி
அமரர் தேவர்களை
சிறைமீட்ட அவ்வசுரர்களின் பிடியில் இருந்து விடுவித்த
பெருமாளே தலைவனே

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே