Posts

Showing posts from July, 2019

வலிவாத பித்தமொடு : J R விளக்கவுரை

By Smt Janaki Ramanan, Pune To read the meaning of the song valivaatha pitthamodu ( வலிவாத பித்தமொடு ) in English, click the underlined hyperlink. முன்னுரை "வலிவாத பித்தமொடு " என்று தொடங்கும் திருவண்ணாமலைத் திருத்தலப் பாடல். ஆன்மாவின் ஒளியாய் அறுமுகவன் அகத்தில் வீற்றிருக்கிறான். அஞ்ஞான இருள் அடர்ந்து இருக்கும் வரை ஜீவன் அவனைக் கண்டு கொள்ளாமல் இருக்கிறது. பஞ்சபூதங்களால் ஆன உடல், பஞ்ச இந்த்ரியங்களின் 'உதவியுடன், ஆசைகளை, வேண்டாத வினைகளை, நோய்களை தன்னுளே இழுத்துக் கொண்டு அவதிப் படுகிறது. ஒன்றல்ல, இரண்டல்ல, எண்ணிலா நோய்கள். மருத்துவ உலகத்தையே மலைக்க வைக்கும் நோய்கள். புதிது, புதிதாய் நுழைந்து விடும் நோய்கள். இவற்றிலிருந்து எப்போது விடுதலை என, மனித குலத்தின் சார்பில், வினா எழுப்பி, விடையாக வருபவன், விடையேறும் விமலனின் புதல்வன், முருகன் என்று தீர்ந்து தெளிகிறார் அருணகிரியார். அந்த இன்ப வாரிதிக்கு நம்மை அழைக்கும் பாடல். நம் துன்பத்தை எல்லாம் தீர்ப்பதல்லவா திருப்புகழ்!

நினது திருவடி : J R விளக்கவுரை

By Smt Janaki Ramanan, Pune To read the meaning of the song ninathu thiruvadi ( நினது திருவடி ) in English, click the underlined hyperlink. முன்னுரை அருணகிரிநாதர் திருவண்ணாமலை கோபுரத்தின் மீது ஏறி தனது உயிரை மாய்த்துக் கொள்ள கீழே விழுந்த பொழுது காப்பாற்றி, 'முத்தைத்தரு' என்று அடி எடுத்துக் கொடுத்த முருகப்பெருமான், அவரை 'வயலூருக்கு வா!' என்று பணித்தார். மகிழ்ச்சி அடைந்த அருணகிரியார் இத்தலத்திற்கு வருகை புரிந்தார். அங்கு முருகன் காட்சி தராததால் அசரீரி பொய்யோ? என்று உரக்கக் கூறினார். அவர் முன் முருகபெருமானின் அண்ணன் விநாயகர், பொய்யா கணபதி தோன்றி, சுப்ரமணியசுவாமியை திருக்கல்யாணக் கோலத்தில் காட்சி தரும்படி அருளினார். அருணகிரிநாதருக்காக முருகன் தன் வேல் கொண்டு குத்தி ஒரு தீர்த்தக் குளம் ஏற்படுத்தினார். அதில் தீர்த்தமாடிய அருணகிரி நாதருடைய நாவில் முருகன் வேல் கொண்டு ஓம் என்ற பிரணவ மந்திரம் எழுதிய பின்னர் அவர் கவிபாடும் ஆற்றலும் அறிவும் பெற்றார். இன்ப மயமான இளங்குமரனைப் பாடும் சந்தமயமான "நினது திருவடி" என்னும் திருப்புகழின் ஊற்றுக் கண் திறக்கிறது.

இருக்கும் காரண மீறிய : J R விளக்கவுரை

By Janaki Ramanan, Pune. For a complete paraphrase of the song, with its meaning in English, click the underlined hyperlink : இருக்கும் காரண மீறிய முன்னுரை திருச்செந்தூரில் மேவிய எம்பெருமானே சரணம். "இருக்கும் காரண மீறிய" என்று தொடங்கும் இனிய பாடல். "உருக்கம் பேசிய" என்ற பாடலின் பகுதி. எவருக்கும் அடங்காத தீய சக்திகளின் ஒட்டுமொத்த வடிவங்களான அசுரர்களை அழிக்க மூர்த்திகள் அம்பிகை இவர்களின் ஆற்றலை எல்லாம் உள்ளடக்கிய சிவசக்தி அம்சமாக அவதாரம் செய்தவன் முருகன் அவர்களின் தனித்தனி ஆற்றல்களை எல்லாம் இணைத்துக்கொண்டு தனிப்பெரும் ஆற்றலாய் வந்ததாலே எல்லா கடவுளரும் இவனை மையப்புள்ளியாக கொண்டிருப்பதால் வேதத்தின் சாரமான மெய்ப்பொருள் முருகன் தான் எனத் தெளிவு படுத்துகிறார் அருணகிரியார். பெரும்பான்மையான பாடல்களில் அசுரர்களை வென்று தேவர்களை காத்தவன் என்றும் பிரணவப் பொருள் சொன்னவன் என்றும் இந்தக் கருத்தைத்தான் அவர் வலியுறுத்துகிறார்.

நால்வர் வரலாறு: விகடன் பத்திரிகையிலிருந்து

திருத்தொண்டர்கள் அறுபத்து மூவரில் சைவ நால்வர் எனும் சிறப்புக்கு உரியவர்கள் அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர். இந்த நால்வரில், தொண்டு வழியைக் காட்டியவர்- அப்பர் ஸ்வாமிகள். குழந்தையாக இருந்து, இறைவனை அடையும் வழியைக் காட்டியவர்- சம்பந்தர். தோழனாக இருந்து, தோழமை வழியைக் காட்டியவர்- சுந்தரர். அடிமையாக இருந்து, இறைவனை அடையும் 'தாஸ’ மார்க்கத்தைக் காட்டியவர்- மாணிக்கவாசகர். இந்த நான்கு வழிகளில் எந்த வழியைப் பின்பற்றினாலும், அங்கே நம்மை எதிர் கொள்ள ஆண்டவன் தயாராக இருப்பான். அதை நமக்கு உணர்த்துவதே நால்வர் வரலாறு.

மக்கட்கு கூற : J.V விளக்கவுரை

By Smt Janaki Ramanan, Pune To read the meaning of the song makkatkku koora ( மக்கட்கு கூற ) in English, click the underlined hyperlink. முன்னுரை "மக்கட்கு கூற அரிதானது" என்று தொடங்கும் காஞ்சிபுரம் திருத்தலப் பாடல். சிவனார் மனம் குளிர ப்ரணவத்தின் பொருளை அவருடைய இரு செவியிலும் உபதேசம் செய்துவிட்டான் பால குமாரன். வேதனாராய் இருந்தும், அதன் சாரமான "ஓம்" காரத்தின் பொருள் தெரியாமல் பிரம்மன் இருந்தது, வெட்கமும், வேதனையும் தரும் விஷயம் என்று விட்டான். அந்த ப்ரணவப் பொருள்தான் என்ன? அது ஏட்டிலே படிக்கக் கிடைப்பதில்லை. உடற் கூட்டின் தத்துவங்களுக்கும், புற உலகின் தத்துவங்களுக்கும் அப்பாற்பட்டதாய் இருக்கிறது. அதையே உபதேசம் செய்து விட்ட முருகன்தான் பரப்ரம்மமான, முழுமுதற்கடவுள் என உணர்த்தும் பாடல். "நான்" என்பதெல்லாம் கரைந்த பின் கிடைக்கும் மோட்சமே அவன்தான் என அறுதியிட்டுச் சொல்லும் பாடல்.

சேவல் விருத்தங்கள் : பதவுரை

By Devaki Iyer, Pune காப்பு : கொந்தார் குழல் பதவுரை கொந்தார் குழல் பூங்கொத்துக்கள் சூடிய கூந்தலில் வண்டு ஓடும் வட்டமிடுகின்ற வண்டுகளின் இயல் கொண்டே ரீங்காரத்தையே சுருதியாகக்கொண்டு ஏழ் இசை மருள இசைக்கு அடிப்படையான ஏழு ஸ்வரங்களும் அதன் இனிமையில் மயங்கும்படியாக குதலை மொழிந்து அருள் மழலை போல் பேசுகின்ற கவுரி வெண்மை நிறம் கொண்ட பார்வதி சுதந்தரி இன்னொருவருக்குக் கட்டுப்படாதவள் குமாரன் பெற்ற மகன் இதம் பெறு மனம்மகிழ்கின்ற பொன் செந்தாமரை கடம் பொன்போன்ற அழகும் மேன்மையும் பொருந்திய சிவந்த தாமரை மலர்ந்துள்ள குளங்களையும் நந்தாவனம் உள மலர்ச்சோலைகளையும் உடைய செந்தூர் திருச்செந்தூர் (முதலிய) எங்கும் உளான் தலங்களில் உறைபவன் திலக மயிலில் பறவைகளிலே முதன்மையான மயிலை வாகனமாக உடைய குமரன் என்றும் இளையோனாகிற முருகனின் வரிசை பெறு/td> கொடியில் இடம்பெற்ற பெருமையை உடைய சேவல் தனைப்பாட அந்தச்சேவலின் புகழைப் பாடுவதற்கு வந்தே சமர் பொரு எதிர்த்துப் போராட வந்த மிண்டாகிய கய மா முக னைக் கோறி கஜ முகாசுரனைக் வஞ்சகனான கஜ முக அசுரனைக்கொன்று வன் கோடு ஒன்றை ஒடித்து வலிமையான இரண்டு தந்தங்க

மயில் விருத்தங்கள் : J R விளக்கவுரை

By Janaki Ramanan, Pune Click on the panel link to expand it and click once again to collapse. காப்பு : சந்தன பாளித வேல் விருத்தம், மயில் விருத்தம் படைப்புக்குக் கவசமாக வேண்டும் என்று வேலனையும், விக்ன விநாயகனையும் துதிக்கும் பாடல். மணமிக்க சந்தனம் பூசப்பட்டு, பரவசம் தரும் மங்கல குங்குமப் பூச்சால் அலங்கரிக்கப்பட்டு. எழிலான சண்பக மாலைகள் சூட்டப்பட்டு, வீரக் கடகம் அணிந்து மின்னும் திண்தோள்களுடன், வண்ணமயில் ஏறி வருகின்ற இளங் குமரா, ஆறுமுகா சரவணபவா!! குரா மலர் மாலைகள் சூடி கருமேகம் போன்ற அளகபாரத்துடன் எழில் சிந்தி நிற்பவளும், நாரதரமிருந்து ஷடாட்சர மந்திர உபதேசம் பெற்றவளும், இச்சா சக்தி ஸ்வரூபணியும், திருமால் திருமகளாய் உதித்து, வேடர் குலத்தில் வளர்ந்தவளும் ஆன முருக பக்தையாம் வள்ளியின் மணவாளா! கிரியா சக்தியாம் தெய்வானையின் நாயகா, கந்தனெனும் கருணைக் கடலே, உன் தண்மலர்ப் பாதங்கள் சரணம். கவசமாய் காப்பாய். எழிலாய் உயர்ந்து நிற்கும் க்ரிடம் போன்ற மத்தகத்துடன், அழகாக அசையும், துதிக்கையுடன் சாமரம் போல் வீசி வரும் செவிகளும் கொண்டு, பரந்த கன்னத்தில் மதநீர் பெருக வரும் கணபதியே! எம் தந்த

பஞ்ச பாதகன் : J R விளக்கவுரை

By Smt Janaki Ramanan, Pune To read the meaning of the song pancha paathagan ( பஞ்ச பாதகன் ) in English, click the underlined hyperlink. முன்னுரை "பஞ்ச பாதகன் " என்று தொடங்கும் பழநித் திருத்தலப் பாடல். சிறிதாகவோ, பெரிதாகவோ பாவங்கள் செய்வதையே மனித குலம் வழக்கமாகக் கொண்டிருக்கிறது. கலி முற்ற முற்ற இது கூடிக்கொண்டே போகிறது. மனிதர்கள் திருந்துவதற்காக, மகான்கள் உபதேசம் செய்வதும், அவர்களுக்காக இறைவனிடம் மன்றாடுவதுமாக இருக்கிறார்கள். அருணகிரியார் மனிதர்கள் செய்யும் ஒட்டுமொத்தப் பாவங்களையும் தன் மேல் இழுத்து போட்டுக்கொண்டு இறைவனிடம் மனித குலத்தின் சார்பில் மன்னிப்பு வேண்டுகிறார். தன்னைப் பஞ்ச பாதகன் என்றே சொல்லிக் கொள்கிறார். ஒரு தனி மனிதர், அதுவும்முருகனின் அருட்பார்வை பெற்றவர் அப்படி அத்தனை பாவங்களையும் செய்திருக்கவே முடியாது என்று நினைக்கிறார்கள் ஆன்றோர்கள். அவர் வேண்டுவதெல்லாம் மற்றவர்களுக்காகத்தான். கடந்த காலங்களில் கறைகள், குறைகள் அவருக்கும் இருந்தன. அவை கந்தன் கருணையால் களையப்பட்டன. அடிமனதில் அமைதியோடு தான் மேற்பரப்பின் கொந்தளிப்புகளை நாம் புரிந்து கொள்ளும் வகைய

இருளும் ஓர் கதிர் : J R விளக்கவுரை

By Smt Janaki Ramanan, Pune To read the meaning of the song iruLumor kathir ( இருளும் ஓர் கதிர் ) in English, click the underlined hyperlink. முன்னுரை "இருளும் ஓர் கதிர் அணுகொணாத" என்று தொடங்கும் சிதம்பரம் திருத்தலப் பாடல் ஞானியரும் யோகியரும் மெய் ஞான ஒளியில் குளித்தாலும், முந்திய வினைகளின் இருள் படலம் அவ்வப்பொழுது அவர்கள் வாழ்க்கையிலும் குறுக்கிடுவது உண்டு. இறைவனின் அளப்பரிய கருணை துணைக்கு வர அந்தக் காலக்கட்டங்களை – கஷ்டங்களை – எளிதாக அவர்கள் கடந்து விடுகிறார்கள். அப்படி இருளுக்கும் ஒளிக்கும் இடையே பந்தாடப்படும் பொழுது அறுமுகனின் அருள் வேண்டி அருணகிரியார் பாடும் பாடல். முருகன் முன்னே இருள் என்றும், ஒளி என்றும், இன்பம் என்றும், துன்பம் என்றும், நல்வினை என்றும், தீவினை என்றும் இரு துருவங்கள் ஏதுமே இல்லை. அந்தத் தெளிந்த நிலைக்குத் தன்னைக் கொண்டு சேர்க்க வேண்டுகிறார். யோக மார்க்கத்தின் ஆனந்த நிலைகளைச் சுட்டிக் காட்டி வழிகாட்டுவது அந்த யோகிக்குக் கை வந்த கலையல்லவா!

வந்து வந்து முன் தவழ்ந்து : J R. விளக்கவுரை

By Janaki Ramanan, Pune. For a complete paraphrase of the song, with its meaning in English, click the underlined hyperlink : வந்து வந்து முன் தவழ்ந்து முன்னுரை "வந்து வந்து முன் தவழ்ந்து" என்று தொடங்கும் திருச்செந்தூர் திருத்தலப் பாடல். சாஸ்வதம் என நம்பி உலகப் பற்றுக்களை உடும்புப் பிடியாக பிடித்துக் கொண்டிருக்கிறோம். அழகிய குழந்தை, அன்பான மனைவி, மாடமாளிகை, பரிவோடு கூடிநின்று அரண் அமைக்கும் சொந்த பந்தம், என்று வண்ணமயமாய் நிறைந்திருக்கும் வாழ்வை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இவற்றையெல்லாம் மறக்கும் அளவுக்கு நினைவாற்றல் இழப்பதற்கு முன் முருகன் கழல் பற்றத் தவிக்கும் அருணகிரியார், அந்தத் தவிப்பை நமக்குள்ளும் செலுத்தும் பாடல். ஒருநாள் இந்த உலக நினைவுகள் மங்கி மறந்து போகலாம், அந்த சுந்தரக் கந்தனையும் நினைக்காமல் விட்டுவிட்டால் அந்தரத்தில் அல்லவா ஊசலாட நேரிடும் என்று குறிப்பால் உணர்த்துகிறார்.

கொம்பனையார் : J R விளக்கவுரை

By Smt Janaki Ramanan, Pune To read the meaning of the song kombanaiyar ( கொம்பனையார் ) in English, click the underlined hyperlink. முன்னுரை அந்த ஆதிசக்தி நாயகி, போருக்குத் தயாராகும் செல்வப் புதல்வன் சரவணனுக்கு சக்திவேலாம் ஞானவேல் தந்து வாழ்த்தும் அற்புதமான பாடல். சிவசக்தி, தன் தாண்டவ ஜதிகளில் சிலம்புகளின் வேக கதிகளில் தீயோரைக் கலங்க வைப்பதை தீந்தமிழில் சொல்லும் பாடல், ஒருபுறம் தெய்வீகம், மறுபுறம் மானுடத்தின் மதியீனம், இறைவியை, இணையிலா வேலவனைத் தூய தமிழில் பாடிப் பக்தியில் திளைப்பதை விட்டு, அப்படியும், இப்படியுமாய், எப்படியெல்லாமோ வாழ்ந்ததை எண்ணி அருணகிரியார் வருந்தும் பாடல், மனித குலம் திருந்தத் தான் பாடுகிறார்.

புடவிக்கு அணி துகில் : J R விளக்கவுரை

By Janaki Ramanan, Pune. For a complete paraphrase of the song, with its meaning in English, click the underlined hyperlink : புடவிக்கு அணி துகில் முன்னுரை பன்னிரு கை வேலவனின் பால லீலைகள் ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல! அவன் நடத்திய அந்த நாடகங்களின் திருப்புமுனையாக அமைந்தது அவன் மேரு மலை விட்டுப் பழனிமலை வந்தது. அது பக்தர்களின் நம்பிக்கை மலையாய் உயர்ந்து என்றும் உலகத்தை காத்துக்கொண்டிருக்கிறது. இன்று பழனிமலையில் கூடும் கூட்டமே அதற்கு அத்தாட்சி. காரண காரியங்களைக் கடந்தவன் ஒரு காரணம் காட்டி பழனிமலை வந்ததைச் சொல்லும் அருமையான பாடல்.

கட்டி முண்டக : J R விளக்கவுரை

By Janaki Ramanan, Pune. For a complete paraphrase of the song, with its meaning in English, click the underlined hyperlink : கட்டி முண்டக எட்டு இரண்டு என்ற இரண்டு எண்களை வைத்துக் கொண்டு அருணகிரியார் சொற்சிலம்பம் ஆடி இருக்கிறார். அர்த்தம் பொதிந்த தரமான பகுதி. எட்டும் இரண்டும் பத்து என்பது கூட தெரியாத பேதையாக நான் இருந்தேன். உன் அருளால் எண்ணும் எழுத்தும் கற்ற பின், அடியார்களின் பக்தியின் வெளிப்பாடாக வரும், பரவசம், குரல் தழுதழுத்தல், விழிநீர் அரும்புதல், மெய் விதிர்விதித்தல், முதலான எட்டும் இரண்டும் ஆன பத்து பேரின்ப நிலைகள் பற்றி அறிந்தது இல்லையே முருகா ! எட்டும் இரண்டும் சேர்ந்த பத்து என்ற எண்ணுக்கு உரிய எழுத்து "ய". அது பஞ்சாட்சரத்தில் – நமச்சிவாய நாமத்தில் – ஆன்மாவைக் குறிக்கும் என்பதை அறிந்தவன் இல்லையே! அப்படி ஏதும் அறியாதவனாய் இருந்தவனை படிப்படியாய் உயர்த்தினாய். இந்த ஏழையின் செவியில், எட்டிற்கு உரிய எழுத்து அ, இரண்டிற்கு உரிய எழுத்து உ, இரண்டும் சேர்ந்து தருவது அ+ உ+ ம் – ஓம் என்னும் பிரணவப் பொருள், அதுதான் லிங்கம் எனப்படும் சிவலிங்கக் குறி, என்று தெளிந்த தேனாக ஞான உ

வேல் விருத்தம் விளக்கவுரை

By Mrs Shyamala Ramamurthy, with introduction by Mrs Janaki Ramanan முன்னுரை வேலனையும் , அவன் கை வேலயும் வேறுபடுத்திப் பாரப்பதற்கில்லை. மயில் வாகனனையும், அவன் மயிலையும் பிரித்துப் பார்ப்பதற்கில்லை. வேல் என்பது ஓர் ஆயுதம். மயில் என்பது ஒரு பட்சி என்று அவன் வேலையும், மயிலையும் எளிதாக எண்ணி விடுவதற்கில்லை. அவன் வேல் என்பது ஞானம். ஞானசக்தியை அதில் தேக்கி வைத்திருக்கிறான் தயாபரன். மயில் என்பது மந்திர ரூபம். தோகை விரிக்கும் பொழுது ப்ரணவத்தின் வடிவம். உயிர்களின் ப்ராண சக்தியை அதில் நிரப்பி இருக்கிறான் சரவணன். அவன் சங்கல்பமாக ஒன்றை நினைத்து விட்டால் வேலும் மயிலும் நொடியில் அதைச் செயல் படுத்தி விடுகின்றன. அவற்றின் வலிமைக்கும், வேகத்துக்கும் முன்னால் எந்த தீய சக்தியும் நிற்க முடிவதில்லை. அதே நேரம் பக்தர்களுக்குப் பரிவுடன் பரிந்து வருவதில், அவன் அபரிமிதக் கருணையின் வெளிப்பாடகவே அவை விளங்குகின்றன. ஆயிரம் ஆயிரம் திருப்புகழ் பாடல்களில் வேலையும், மயிலையும் குறித்து அருணகிரியார் பாடி இருந்தாலும், சிறப்புப் பாயிரமாய் வேல் விருத்தம், மயில் விருத்தம், என்ற பாமாலைகள் சூட்டிப் பரவசமாகிறார்.