சிரமங்க அங்கை — JR கருத்துரை
By Smt. Janaki Ramanan, Pune
For a detailed exposition of the thiruppugazh song, click: siramanga mangai
வள்ளிமலையின் வாழ்வே சரணம். முருகனின் தண் கழல் பட்டுப் Uட்டுக் குளிர்ந்த , சிறந்த, அழகினை அள்ளிச் சொரிகின்ற வள்ளிமலை. அதைத் தன் தமிழால், பக்தியால் நனைக்கின்றார் அருணகிரி நாதர்.
"சிரம் அங்கம் அங்கை" என்று தொடங்கும் பாடல்.
மரை வெம் கயம் பொருந்திட வண்டினம் குவிந்து இசை ஒன்ற
மந்தி சந்துடனாடும் வரை
வரையின் கண் வந்துவண் குற மங்கை
பங்கயம் வரநின்று கும்பிடும் பெருமாளே
சிரம் அங்கை கண் செவி வஞ்ச நெஞ்சு
செஞ்சலம் என்பு திண் பொருந்திடு மாயம்
சில இன்ப துன்பம் ஒன்றிற வந்து,
பின் செந்தழலின் கண் சிந்திட ஆவி
விரைவின் கண் அந்தகன் பொர வந்ததென்று
வெந்துயர் கொண்டு அலைந்து அலைந்து அழியா முன்
வினை ஒன்றும் இன்றி நன் இயல் ஒன்றி
நின் பதம் வினவென்று அன்பு தந்தருள்வாயே
அரவின் கண் முன் துயில் அருள் கொண்டல்
அண்டர் கண்டு அஞ்ச வந்திரு சூரன்
அகலம் பிளந்தணைந்து அகிலம் பரந்திரங்கிட
அன்று உடன்று கொன்றிடும் வேலா
Comments
Post a Comment