ஒருவரை ஒருவர் தேறி : J R. விளக்கவுரை
By Smt Janaki Ramanan, Pune
To read the meaning of the song oruvarai oruvar (ஒருவரை ஒருவர்) in English, click the underlined hyperlink.
முன்னுரை
"ஒருவரை ஒருவர் தேறி" என்று தொடங்கும் பழனி மலைத் திருப்பாடல். தனிமனிதத் துன்பங்கள் ஒருபுறம் இருக்க, நாகரீகம் அற்று நடக்கும் மனித சமூகம் அல்லவா நல்லவர்களைத் துன்புறுத்துகிறது என்று அங்கலாய்க்கிறர் அருணகிரியார். சமூக இடிபாடுகளைச் சுட்டிக் காட்டுகிறார். மதம் என்ற பெயரில் மதம் கொள்வோரைச் சாடுகிறார். பாவச் சுழலிலிருந்தும், இறுதியில் பிறவிச் சுழலிலிருந்தும் விடுபடுவதற்கு ஞான ஜோதியாம் முருகனை வேண்டுகிறார்.
ஒருவரை ஒருவர் தேறி அறிகிலர் மத விசாரர்
ஒரு குண வழியுறாத பொறியாளர்
உடல் அது சதமெனாடி களவு பொய் கொலைகளாடி
உர நமன் நரகில் வீழ்வர்
அது போய் பின் வருமொரு வடிவ மேவி
இருவினை கடலுளாடி
மறைவரின் அனைய கேரலம் அதுவாக
மருவிய பரமஞான சிவகதி பெறுக நீறு
வடிவுறு அருளி பாதம் அருள்வாயே
திரிபுரம் எரிய வேழ சிலை மதன் எரிய மூரல்
திரு விழி யருள் மெய்ஞ்ஞான குருநாதன்
திரு சரஸ்வதி மயேசுவரி தலைவர் ஒத
திருநடம் அருளும் நாதர் அருள் பாலா
சுரபதி அயனும் மாலும் முறையிட அசுரர் கோடி
துகள வரு மெய் ஒரான வடிவேலா
சுக குறமகள் மணாளன் என மறை பலவும் ஓதித் தொழ
முது பழனி மேவு பெருமாளே
Comments
Post a Comment