| விடும் கைக்கு ஒத்த | உயிர்களைச் சற்றும் இரக்கம் இன்றி விட்டுப் பறிக்கின்ற (அல்லது தன்னைச் செலுத்துகின்ற) கையைப் போன்ற வலிமையானதும் கருத்ததும் ஆன) |
| கடா உடையோனிடம் அடங்கி | எருமைக் கடாவைத் தன் வாகனமாக உடைய எமனிடத்து அகப்பட்டு, |
| கைச்சிறையான அநேகமும் | கை வசப்பட்ட பலவித செல்வங்களும் |
| விழுங்கப்பட்டு அறவே | முற்றிலுமாக உணவு முதலியவற்றில் செலவழிந்து/ அல்லது பொது மகளிரால் கவரப்பட்டு |
| அறல் ஓதியர் விழியாலே | ஆற்றுப் படுகையில் காணப்படும் கரிய நெளிந்த கோடுகள் போல உள்ள கூந்தலை உடைய பெண்களின் கண்களால் (ஈர்க்கப்பட்டு) |
| விரும்பத்தக்கன போகமும் மோகமும் | விரும்பியவாறு அனுபவித்த இந்திரிய சுகங்களும் |
| விளம்பத்தக்கன | பெருமையாகச் சொல்லிக் கொள்ளக்கூடிய |
| ஞானமும் மானமும் | கல்வி, கேள்வியினால் அடைந்த அறிவும் குடிப்பிறப்பு முதலான பல பெருமைகளும், தலை நிமிர்ந்து நடக்கக்கூடிய பெருமிதமும் எல்லாம் |
| வெறும் சுத்த சலமாய் | விலையில்லாத வெறும் தண்ணீர் போல மதிப்பு இழந்து விடுமாறு |
| வெளியாய் உயிர் விடுநாளில் | இந்த உயிர் உடலை விட்டு வெளியே போய்விடும் சமயத்தில் |
| இடும் கட்டைக்கு | சிதை எனப்படும் அடுக்குக்கட்டைகளுக்கு |
| இரையாய் அடியேன் உடல் கிடந்திட்டு | உணவாக இந்த என் உடம்பை அதில் படுக்க வைத்து |
| தமரானவர் கோ என | என் உறவினர் ஓலமிட்டு அழுது |
| இடம் கட்டிச் சுடுகாடு புகா முனம் | பாடை முதலியவற்றைக்கட்டி சுடுகாட்டுக்கு எடுத்துக்கொண்டு போவதற்கு முன்பாகவே (நான் உயிரோடு வாழும் போதே) |
| மனதாலே இறந்திட்டு | விருப்பு வெறுப்புக்களுக்கு இடமான மனம் இறந்து விட (விருப்பு வெறுப்பற்று) அதனால் |
| பெறவே கதியாயினும் | இந்த உலக நடப்பில் இருந்து விலகிய ஜீவன் முக்தி நிலையோ அல்லது |
| இருந்திட்டுப் பெறவே மதியாயினும் | அதனினும் உயர்ந்ததான இவ்வுலகத்தில் இருந்து கொண்டே அனைத்தையும் உனது செயலாக, விளையாட்டாகக் காணும் பக்குவமாகிய விஞ்ஞானத்தையோ |
| இரண்டில் தக்கது ஒர் ஊதியம் | இவ்விரண்டில் எனக்குத் தகுந்த ஒரு சம்பளம் |
| நீ தர இசைவாயே | எனக்குத்தர சம்மதிப்பாயாக |
| கொடுங்கைப்பட்ட | மிக உறுதியான |
| மரா மரம் ஏழுடன் | ஏழு ஆச்சா மரங்களோடு |
| நடுங்க சுக்ரீவனோடு அமராடிய | பயந்த தன் தம்பி சுக்ரீவனோடு போர்புரிந்த |
| குரங்கை செற்று | வாலி என்னும் வானரத்தையும் வீழ்த்தி, |
| மகா உததி தூள் எழ | பெரும் கடல் வற்றி மணல் ஆகும்படிச் செய்த (இராமன் சமுத்திர ராஜன் வழிவிட இணங்காத போது, வில்லை வளைத்ததுமே கடல் வற்ற, பின் அவன் வெளிப்பட்டு நள நீலர்கள் வரத்தைக்கூறிப் பாலம் கட்டும் வழி சொன்னதனால் சமுத்திரம் பழையபடி ஆனது) |
| நிருதேசன் குலம் கண் பட்ட | அசுரேசனான ராவணனின் குலத்தைச் சேர்ந்தவர்கள் |
| நிசாசரர் கோ என | இரவில் (அதிக பலம் பெற்று) நடமாடும் ராட்சசர்கள் கதறும்படியும் |
| இலங்கைக்குள் தழலோன் எழ | அவன் தலைநகரான இலங்காபுரியில் அக்னி பகவான் ஓங்கி எழும்படியும் |
| நீடிய குமண்டை | பெரும் கர்வம் கொண்ட |
| குத்திர ராவணனார் | (கீழான) வஞ்சகம் உடைய ராவணன், அவனைச்சேர்ந்தவர்கள் |
| முடி அடியோடே பிடுங்க | தலைகள் மீதி இல்லாமல் விழுந்துபடவும் |
| தொட்ட சர அதிபனார் | தொடுக்கப்பட்ட அம்புகளுக்கு உரியவரான இராமபிரானான திருமால் |
| அதி ப்ரியங்கொள் | மிகுந்த அபிமானம் கொள்ள |
| தக்க நன் மா மருகா | தகுதியான (வீரத்தில் அவருக்குக் குறையாத, மேலான) நல்ல பெருமை பொருந்திய மருமகனே |
| இயல் ப்ரபஞ்சத்துக்கு | இந்தப் பெரிய அண்டத்திலே |
| ஒரு பாவலனார் என விருது ஊதும் | ஒப்பற்ற தனித்துவம் வாய்ந்த புலவர் என்று கட்டியம் கூறிப் போற்றப்படும் |
| ப்ரசண்ட சொல் | தங்கு தடை இன்றி அருவியாய்ப்பாயும் நாவன்மை பெற்ற ஞான சம்பந்தராய் வந்த |
| சிவ வேத சிகாமணி | சைவத்துறையின் தலை ஆபரணமாய் திகழும் |
| ப்ரபந்தத்துக்கு ஒரு நாதா | சைவ நூல்களுக்கு ஒப்பற்ற தலைவனே |
| சதாசிவா | உண்மையில் நீ வேறு சிவன் வேறு அல்ல, நீயே அனுக்ரஹ மூர்த்தியான சதாசிவன் ஆவாய் |
| பெரும்பற்றப்புலியூர்தனில் மேவிய பெருமாளே | சிதம்பரத்தில் பெருமையோடு உறையும் எம் தலைவா |
Comments
Post a Comment