தேவேந்திர சங்க வகுப்பு — தேவகி அய்யர் உரை

By Mrs Devaki Iyer, Pune

For a translation of this song in English, click the link devendira sanga vaguppu

தரணியில் அரணிய பூமியில் கோ ட்டைகளுடன் பாதுகாப்பாக இருந்து
முரண் இரணியன் தன்னிடம் பகை கொண்டு எதிர்த்த இரண்யகசிபுவின்
உடல் தனை நக நுதி கொடு உடலை தன் கூரிய கை நகங்களால்
சாடு தாக்கிக் கொன்ற
ஓங்கு நெடும் கிரி பெரிய நரசிம்ம அவதாரம் எடுத்தவள்
ஓடு ஏந்து பயங்கரிகையில் பிரம்ம கபாலமாகிய மண்டை ஓடு ஏந்திய அச்சமூட்டும் உருவம் உடையவள்
தமருக பரிபுர ஒலி கொடு உடுக்கை, கால் சிலம்பு, இவற்றின் ஓசைக்கு ஏற்ப (அதைத்தாளமாகக்கொண்டு)
நடநவில் சரணியஇனிமையாக நடனமிடும் திருப்பாதங்கள் உடையவள்;
சதுர்மறைநான்கு வேதங்களில் புரிகின்ற (தமருகத்துக்கு ஏற்ப அவள் நடம்புரிகிறபோது ஒலிக்கும் சிலம்போசையே வேதம்)
தாதாம்புயமகரந்தம் பொருந்திய (பாத) கமலங்கள் உடையவள்
மந்திரமந்திரங்கள் வடிவாகவும் (மந்திர மாத்ருகா ரூபிணி)
வேதாந்தவேதத்தின் முடிந்த முடிவான பரம் பொருளும் ஆன
பரம்பரை உயர்ந்தவற்றுள் எல்லாம் உயர்ந்தவள்
சரிவளை கைகளில் ஒலிக்கும் வளையல்களும்
விரிசடைவிரிந்த சடாமுடியும்
எரிபுரை வடிவினள் நெருப்புக்கங்கு போல் சிவந்த நிறம் கொண்டு
சததள முகுளித தாமரை மொட்டுப்போல் குவிந்ததும்
தாம மாலைகள் அணிந்ததும் ஆன
அம்குசம்அழகிய தனங்களும்
மென் திருதாளாந்தரமென்மையான திருப்பாதங்களும் கொண்ட
அம்பிகை தாயானவள்
தருபதி கற்பக விருட்சம் உள்ள அமராவதிக்கு அரசனான தேவேந்திரனையும்
சுரரொடுமற்ற தேவர்களையும்
சருவிய அசுரர்கள்எதிர்த்த அரக்கர்களின்
தட மணி முடிபெரிய, ரத்தினங்கள் பதித்த கிரீடங்கள்
பொடிதான் ஆம்படிதூளாகப் பொடிந்து போகுமாறு
செங்கையில் வாள் வாங்கிய தன் அழகான (சிவந்த) கையில் வாளை வீசிய
சங்கரி சங்கரனின் துணைவி, (எப்பொழுதும் நன்மையே செய்பவள்)
இரண கிரணபொன்னிறக் கதிர் வீசும்
மட மயில் மெல்லிய, மயில் போன்ற சாயல் உள்ளவள்
ம்ருகமத புளகிதகஸ்தூரி தடவப்பெற்று புளகாங்கிதம் கொண்ட
இளமுலை இளநீர்இளநீர் போன்றதும் (பருத்த) இளமையானதுமான தனபாரங்களை
தாங்கி நுடங்கியசுமப்பதினால் வருந்துகின்ற (ஸௌ.ல. 79-நிஸர்க க்ஷீணஸ்ய ஸ்தனதடபரேன க்லமஜூஷோ.. இயற்கையாகவே மெலிந்த உன் இடை, இந்த ஸ்தனபாரத்தால் மிகுந்த வருத்தம் அடைகிறது.)
நூல் போன்ற மருங்கினள் நூல் போல மெலிந்த இடைப்பாகம் உடையவள்
இறுகிய சிறு பிறை உறுதியான மெல்லிய பிறைச்சந்திரன் போல
எயிறு உடை யம படர்(கோரை)பற்களைக் கொண்ட எம தூதர்கள்
எனது உயிர் கொள்ள வரின்என்னுடைய உயிரை பறித்துப் போக வரும் பொழுது
யான் ஏங்குதல் கண்டு நான் அஞ்சி கலங்குவதைப்பார்த்து (இரங்கி)
தான் ஏன்று கொளும் குயில்என்னை ஏற்றுக்கொண்டு தன்னிடம் அழைத்துக்கொள்ளும் (ஆஸ்வாசப்படுத்தி) குயில் போன்ற இனிய பேச்சு உள்ளவள்
இடு பலி கொடு திரிஉணவுக்காக பிச்சை வாங்கி உழலும்
இரவலர் இடர் கெட ஏழைகளின் துன்பம் தீரும்படி
இடும் மன கர தலகொடுக்கின்ற கொடை உள்ளமும் திருக்கரங்களும் கொண்ட
ஏகாம்பரைகாஞ்சியில் அன்னபூனணியாக அமர்ந்திருக்கும் ஏகாம்பர நாதரின் துணைவி
இந்திரைமோக்ஷம் அருள்பவள்
மோக அங்கமனதைக்கவரும் அழகான அங்கங்கள் உடையவள் (தோள் கண்டார் தோளே கண்டார் என்று கம்பர் கூறியது போல ஒவ்வொரு அங்கமும் அழகின் எல்லை)
சுமங்கலிநித்திய சுமங்கலி (நித்தியப் பரம் பொருளின் சக்தி அல்லவா?)
எழுதிய படம் எனதிரையில் வரைந்த சித்திரம் போல் அசையாமல்,
இருள் அறுஅஞ்ஞானமாகிய இருளே சற்றும் அணுகாத
சுடர் அடி இணை தொழு மவுனிகள்தன்னுடைய அறிவொளி ஆகும் திருப்பாதங்களை தியானித்து வணங்கும் முனிவர்களுக்கு
ஏகாந்த சுகம் தருஅந்தரங்கத்தில் ஆனந்தம் அளிக்கும்
பாச அங்குச சுந்தரிபாசம் அங்குசம் கையில் ஏந்தி இருக்கும் பேரழகி
கரணமும்கை,கால்,வாக்கு முதலிய புறக்கரணங்களும், மனம், சித்தம், புத்தி, அகங்காரம் ஆகிற அகக்கரணங்களும் (இவற்றால் நல்ல, தீய செயல் புரிகிறோம் அதன் விளைவுகள் பதிவாகி மறு பிறப்புக்குக்காரணம் ஆகிறது)
மரணமும்இந்த உடல் அழிந்து விடும் நிலையும்
மலம் ஒடும் ஆத்மாவைப்பற்றிச் சுற்றி இருக்கும் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று அழுக்குகளும்
உடல் படு கடு வினை கெடஇவற்றால் ஏற்பட்ட உயிர்கள் படுகின்ற பிறவிச்சுழற்சி எனும் பெரும் துன்பத்தை அடியோடு போக்கிவிட (இல்லாமல் செய்ய)
நினை காலாந்தரி கருணை உள்ளம் கொண்ட காலத்தைக் கடந்தவள்
கந்தரி நீலாஞ்சனமை போல் கருத்த கழுத்தை உடையவள் (சிவனோடு கலந்திருப்பதால்)
நஞ்சு உமிழ்வாயில் விஷத்தை உடைய
கனல் எரி கணபண நெருப்பு கக்குகின்ற கூட்டமான படங்களையும்,
குண மணி உயர்ந்த ரத்தினங்கள்
அணி பணி(பதித்த ஆபரணம், முகுடம்) அணிந்த (ஆதி சேஷனாகிய) பாம்பை
கன வளை பெருமை மிக்க கங்கணமாகவும்
மரகத காசாம்பர கஞ்சுளிபச்சைவண்ண ரவிக்கையும், காயாம்பூ வண்ண புடவையும்
தூசு ஆம் படி கொண்டவள்தனது ஆடைகளாக அணிந்திருப்பவள்
கனை கழல்(சிலம்பு) ஒலிக்கின்றன தன் திருவடிகளை
நினை அலர்நினைக்காதவர்கள் (கர்வம், அகங்காரம் மிக்கவர்களை)
உயிர் அவி பயிரவிஉயிரை அழிக்கின்ற பயங்கர வடிவுடையவள்
கவுரிவெள்ளை நிறம் கொண்டவள் (சரஸ்வதி போன்ற ரூபங்களில்)
கமலைகமலாம்பாள் (திருவாரூரில் இந்த ரூபம்)
குழை காதார்ந்த செங்கழுநீர் தோய்ந்தகாதில் குண்டலங்கள் செங்கழுநீர் மலர்களாக விளங்க,
பெரும் திரு கரை மிகுந்த அழகின் எல்லையாகின்ற
பொழி திருமுக திருமுகங்களில் இருந்து பெருகும் (தவ வதன சௌந்தர்ய லஹரி என்று ஆதி சங்கரர் வரிகள் நினை கூரத்தக்கது)
கருணையில் உலகு எழு கடல் நிலை பெறஉயிர்கள் பால் இரக்கம் எனும் காருண்யத்தால் ஏழுகடல்களால் சூழப்பட்ட உலகங்கள் நிலையாக நிற்குமாறு
காவு ஏந்தியகாப்பாற்றும் பொறுப்பைத் தாங்கிய ("நீ கண் திறந்ததால் தோன்றிய உலகங்கள் கண் மூடினால் அழிந்து விடும் என்கிற பயத்தால் எப்போதும் இமைக்காமல் விழித்து இருக்கிறாய்" - "நிமேஷோன் மேஷாப்யாம்" சௌந்தர்ய லஹரி 55 வது ஸ்லோகம்)
பைங்கிளிபசும் கிளி போன்றவள்
மா சாம்பவி தந்தவன் பெருமை பொருந்திய சம்பு எனும் சிவனின் மனைவி பெற்ற குழந்தை
அரண் நெடு வரைகோட்டை போல வடதிசையில் படர்ந்து இருக்கும் நீண்ட மேரு மலையை (க்ரௌஞ்சம் அதன் பகுதி)
அடியொடு பொடி பட மிச்சம் இல்லாமல் தூளாகிப் போகும்படி
அலைகடல் கெடஅலைகளை உடைய கடல் காணாமல் போகும்படியும் (தண்ணீர் இருந்தால் தான் கடல், இல்லை என்றால் வெறும் பள்ளம்தானே)
அயில் வேல் வாங்கியகூர்மையான வேலைப் பின் இழுத்து வேகமாக ஏவிய
செந்தமிழ் நூலோன்சிறந்த தமிழ் மொழி முற்றும் கற்றவன்
குமரன்என்றும் இளைஞன்
குகன்மனமாகிற குகையில் உறைகின்றவன் (எல்லார் இதயத்திலும் இருக்கின்றான் ஆனால் வெளிப்பட மாட்டான், வெளிப்பார்வை நீக்கி உள்முகமாக த்யானம் செய்பவருக்கு அல்லாமல்)
அறுமுகன்ஆறு முகங்கள் உடையவன்
ஒரு பது ஒடு இரு புயன் பத்தோடு இரண்டு அதாவது பன்னிரண்டு (புஜங்கள்) தோள்கள் உடையவன்
பகை ஆம் மாந்தர்கள்தன்னைப் பகைத்து எதிர்ப்பவர்களுக்கு
அந்தகன்எமன் போன்றவன் (அழித்து விடுவான்)
அடல் மிகு மிகுந்த வலிமை உடைய
கட தட விகடித களிறு மத நீர் ஒழுகும் வேடிக்கை விநோதம் மிகுந்த ஆனை முக விநாயகர்
அனவரதமும் அகலாமாந்தர்கள் எப்போதும் மனதை விட்டு நீங்காதவர்கள்
சிந்தையில் வாழ்வாம்படிமனதில் பெறும் பேறு (பாக்கியம்) ஆக
செந்திலில் அதிபதி என வருதிருச்செந்தூர் ஆண்டவனாக வந்து
பொரு திறல் முருகனை போர்த்திறமையில் வல்ல (சூரன் முதலியோரை வெற்றி கொண்ட) முருகப்பெருமானை
அருள் பட மொழிபவர்அவர் அருள் புரியுமாறு அவர்தம் பெருமை கூறுவார்கள்;
ஆராய்ந்து வணங்குவர்மிகுந்த சிரத்தையோடு தொழுபவர்கள்
தேவேந்திர சங்கமேதேவேரந்திரனுடைய உலகத்தைச் சேர்ந்தவராவார்கள்

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே