நரையொடு— பதவுரை

By Mrs Devaki Iyer, Pune

For a translation of this song in English, click the link naraiyodu

நரையொடு பல் கழன்றுவயோதிகத்தால் முடிகள் வெளுத்தும், பற்களும் விழுந்து,
தோல் வற்றிதோலும் எண்ணெயின்றி வற்றிச் சுருக்கம் எடுத்து
நடை அற மெத்த நொந்து கால் எய்த்துநடக்கமுடியாது முடங்கிப் போய் கால்கள் வலி மிகுந்துக களைத்து விட
நயனம் இருட்டி நின்றுகண்கள் ஒள் இழந்து பார்வை போய்
கோல் உற்று நடை தோயாகையில் கம்பு ஒன்று துணையாகி, (பழைய கம்பீர) நடை தொய்ந்து/ தளர்ந்து போய்விட
நழுவும் விடக்கைநாள் தோறும் நம் கைப்பிடியில் இருந்து தப்பி ஓடும் (நம் கட்டுப்பாட்டுக்கு அப்பால்) இந்த மாமிச உடலை
ஒன்று போல் வைத்து அப்படி நேராமல் ஒரேபோல் (இளமையாக) வைக்க முயன்று
நமது என மெத்த வாழ்வு உற்றுஎன்னுடையது என்று அபிமானித்த தேகமும் சேர்த்த செல்வங்களுமாக வாழ்ந்து,
பின் நடலை படுத்தும் இந்த மாயத்தைஇயலாமையால் துன்பப்படும் இந்த மாயையான / நிரந்தரம் இல்லாத வாழ்க்கையை
நகையாதேநம்பி ஏமாறாமல் இதன் நிலையாமை கண்டு இது வெறும் விளையாட்டு என்று இகழாமல் (மெய் என்று எண்ணி)
விரையொடு பற்றிநல்ல தேன் உண்டு மலரின் மணத்துடன்
வண்டு பாடுற்றதேனுண்ட களிப்பில் வண்டுகள் ரீங்காரமாய் வட்டமிடும்
மிருக மதம் அப்பி வந்த ஓதிக்கும் கஸ்தூரி பூசிய (மனதை மயக்கும் மணமுடைய) கூந்தலையும்
மிளிரும் மையைச் செறிந்தஒளி பொருந்திய, மை இட்ட
வேல் கண்கும்வேலைப் போன்று அகன்றும் நுனியில் கூரியவையுமான கண்களையும்
வினையோடு மனதில் கபடத்தோடு
மிகு கவின் இட்டு மிகவும் அழகு செய்து கொண்டு
நின்ற மாதர்க்கு தெருவில் வந்து நிற்கும் விலை மாதர்கள்
இடை படு சித்தம் ஒன்றுவேன்நடுவே மனம் லயிக்கப்பெறும் நான்
உற்று உன் விழுமியஅவற்றில் மனம் செலுத்தி மேலான உன்
பொன் பாதங்கள் பாடல்குபொன் போன்ற திருவடிகளைப் போற்றிப் பாடுவதற்கு
வினவாதோ முனையும்படிச் செய்வாயா
உரையொடு சொல் தெரிந்த மூவர்க்கும் பொருளும் சொல்லும் நன்கு அறிந்த (சொற்களை அழகுறப் பொருள் படுமாறு கவி புனையும் திறன் உடைய) திருமுறைகள் அளித்த அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவருக்கும்
ஒளி பெற மிகுந்த புகழைப் பெறும் வண்ணம்/(ஞானம் அடையும்படி)
நல் பதங்கள் போதித்தும்அந்த மூவருக்கும் தானே தன் பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசித்ததோடு, பாடல் முதலடியும் எடுத்துக் கொடுத்து ( திரு நாவுக்கரசரை சமணமதத்தில் இருந்து சூலை கொடுத்து மீட்டார். "கூற்று ஆயினவாறு" முதல் பாடலுக்கு முன் அவர் பாடியதே இல்லை. சம்பந்தரை 2 1/2 வயதில் உமை அன்னையின் பாலைக்கொடுத்து " தோடு உடைய செவியன்- என் உள்ளம் கவர் கள்வன்" என அக்குழந்தையைப்பாட வைத்தார். சுந்தரரை திருநாவலூரில் திருமணப்பந்தலில் ஓலை காட்டித் தடுத்து ஆட்கொண்டு, திருவெண்ணெய் நல்லூர் அருள் துறையில், அவர் தன்னைக்கூறிய வசைச்சொல்லான "பித்தா" என்றே தொடங்கப்பணித்தார்.)
ஒரு புடைதன் இடப்பக்கத்தில்
பச்சை நங்கையோடு உற்று பச்சை நிறத்து மங்கையான உமையோடு சேர்ந்து
உறுபலி கொண்டு போய் உற்றும்வீடு தோறும் பிச்சை ஏற்றுத் திரிந்தும்
உவரி விடத்தை உண்டு சாதித்தும்கடலில் (அமிர்தத்தை வேண்டி பால் கடலை தேவர் -அசுரர் கடைந்தபோது முதலில்) வந்த ஆலகால விஷத்தை உட்கொண்டு சாகாமல் வாழ்ந்து காட்டித்தன்னை நிலை நிறுத்தியும்
உலவிய முப்புரங்கள் வேவித்தும்=நில்லாமல் சஞ்சரிக்கக்கூடிய மூன்று மதில்களையும் ஒரே அம்பு எய்தி ஒரே சமயத்தில் அழிந்து போகும்படி எரித்தும்
உறநாகம் அரையொடு கட்டிதாருகா வனத்து ரிஷிகள் ஏவிய கொடிய விஷ நாகத்தை அடக்கித்தன் இடுப்பில் கட்டிக்கொண்டு
அந்தமாய் வைத்தும்அதையே தனக்கு அலங்காரமாக்கியும்
அவிர்சடை வைத்த கங்கையொடு ஒக்கவிரிந்த தன் ஜடையில் தேவநதி கங்கையோடுகூட
அழகு திருத்தி இந்து மேல் வைத்தும்அதை முடிந்து அழகாக அதன் மேல் பிறைச்சந்திரனையும் சூடி
அரவு ஓடே அறுகு ஒடு நொச்சி தும்பை மேல் வைத்தஅங்கும் ஒருபாம்பும் அருகம்புல், நொச்சி, தும்பைப்பூ என்று எளிதில் எங்கும் கிடைக்கும் புல், இலை, பூ இவை சூட்டிக்கொள்ளும் (பரம வைராகி யான)
அரி அயன் நித்தம் வந்து பூசிக்கும்(செல்வத்துக்கு அதிதேவதை லக்ஷமியின் கணவரான) திருமாலும் (கல்விக்கு அதிதேவதையான சரஸ்வதியின் கணவர்) பிரம்மாவும் தினமும் வந்து வழிபாடு செய்யும்
அரன் நிமலர்க்குகுற்றமே அணுகாத தூயவரான பரம சிவனுக்கு
நன்றி போதித்த நல்ல உயர்ந்த தத்துவங்களை உபதேசித்த
பெருமாளே எங்கள் பிரானே.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே