சரக்கேறி — பதவுரை

By Mrs Devaki Iyer, Pune

For a translation of this song in English, click the link sarakkeri

சரக்கு ஏறி 96 மூலப்பொருள்கள், 36 கட்டு/மூட்டைகளாகக் கட்டி வைக்கப்படட்டுள்ள
இத்தப்பதி வாழ் இந்த (பதி என்பது ஆன்மாவின் ஆன்மா) உயிர் குடி கொண்டுள்ள
தொந்த குளிர்-வெப்பம், இன்பம்_-துன்பம்,மானம்-அவமானம் முதலிய இருமைகளுக்கு
பரிவோடு ஐந்து அன்புற்றவர் போலத் தோன்றுகின்ற ஐந்து புலன்களாகிற
சதிகாரர் புக்கு ஆன்மாவை முக்தி நெறியில் செல்லவிடாது தடுக்கும் வஞ்சனையாளர் புகுந்து கொண்டு
உலைமேவு நெருப்பின் மீது இருப்பது போன்ற அழிவுக்கு வழியான
இந்தச்செயல் மேவி புலன் இன்ப நுகர்ச்சிகளில்/உலகவியலில் ஈடுபட்டு
சலித்தே மெத்த அங்குமிங்கும் ஓடி (சலித்தல் = அசைதல்)
சமுசாரம்,பொன் உலக இன்பங்களையும், பொன் பொருளையும்
சுகித்தே நன்றாக அனுபவித்து
சுற்றத்தவரோடு மனைவி மக்கள் மற்றும் உறவினரோடு
இன்பத்தழைத்தே நாளும் பெருகும் சந்தோஷத்தோடு
மெச்ச அனைவரும் கொண்டாடும்படி
தயவோடு மிகுந்த பரிவோடு
இந்தக்குடி பேணி இந்தசொந்தபந்தங்களைப் பாதுகாத்து (முடிவில்)
குரக்கோணத்தின் கூர்மையான அலகை உடைய (கோணம் = மூக்கு)
கழு, நாய் உண்ப பிணம்தின்னிக் கழுகுகளும், நாய், நரி போன்ற விலங்குகளும் உண்ணும்படி
குழிக்கே வைத்து குழி தோண்டிப்புதைக்கப்படும்
சவமாய் நந்து பிணமாகி அழுகக்கூடிய
இக்குடில்கேநத்தி இந்த மாய உடல் மீதே பற்று வைத்து
பழுதாய் வீணாக
மங்கப்படுவேனோ அழிந்து விடுவேனோ
(முருகா அப்படி ஆகி விடாமல்)
குறித்தே முத்திக்கு வீடு பெறுவதையே குறிக்கோளாகக் கொண்டு,
மறா (மாறா) இன்ப அழியாத/குறையாத ஆனந்தமாம்
தடத்தே பற்றி முக்தி வழியைப்பிடித்துக்கொண்டு
சக மாயம் இவ்வுலகம் சார்ந்த
பொய்க்குலக்கால் பொய்யான, இன்று இருப்பது போல் தோன்றி நாளை மறையும்உலக விஷய பற்றுக்கள்
வற்ற வற்றி இல்லாமல் தொலையும் படி
சிவஞானம் சிவ ஞானம் ஆகிற (அதாவது சீவனே சிவன் எனும் முற்றிய அறிவு)
பொன் கழல் தாராய் உன்னுடைய மேலான திருப்பாததரிசனம் தந்து அருள்வாய்
புரக்காடு முப்புரங்கள் (காட்டில் பிடித்த தீ போல்)
அற்றுப்பொடியாய் மங்க எரிந்து சாம்பலாகி அழியச்செய்தவர்
கழைச்சாபத்து கரும்பை வில்லாக உடைய
ஐச்சடலான் உங்க அழகிய மேனி உடைய மன்மதனும் அழிய
புகைத்தீ பற்ற அவனையும் தீயில் எரித்தவர்
புகலோர் என்று பேசப்படும் சிவபெருமானார்
அன்புற்று இந்திரன் முதலிய தேவர்கள்தாரகாசுரனுக்கு அஞ்சியபொழுது அவர்கள் மீது கருணை கொண்டு
அருள்வோனே தோற்றுவித்தவனே
புடைத்தே நன்றாக அடித்து
எட்டுத் திசையோர் எட்டுத் திசையிலும்/எல்லா இடங்களிலும் இருப்பவர்கள் (திக்பாலர்கள் என்றும் ஆம்)
அஞ்ச பயம் அடையும் படி
தனிக்கோலத்துப் புகுஒப்பற்ற (பயங்கர) வடிவெடுத்து நினைத்த இடத்தில் செல்லக்கூடிய
சூர் மங்க சூர பத்மன் அழியும்படி
புகழ்ப்போர் சத்திக்குபோர் புரிவதில் வல்லமை பெற்ற அந்த உன் வேல் ஆயுதத்துக்கு
இரை ஆனந்தத்து (அவன் சதையை) உணவாக மிகவும் மகிழ்சியடையும்படி
அருள்வோனே கொடுத்தவனே
திருக்கானத்தில் அழகான அந்தத்தினைப்புனத்தில்
பரிவோடு மிகுந்த அன்போடு,
அந்தக் குறக்கோலத்துகுற வேடத்தில் வந்த
செயலாள் அஞ்ச லக்ஷ்மியான வள்ளி பயமுறவும்
திகழ் சீர் அத்திக்கு பெருமை பொருந்திய (தன் தமையனான) யானைக்கு
அழல், வா என்ப பயந்து அழாதே, நான் இருக்கிறேன் வாஎன்று கூறி
புணர்வோனே அவளை அணைத்துக்கொண்டவனே
சிவப்பேறுக்கு (அது போல) சிவப்பேறு எனும் முக்தி,
கடையேன் மிகவும் கீழ் நிலையில் உள்ள நானும்
வந்து உள் புக கூட (எப்படியோ) வந்து சேர்ந்து விடுமாறு
சீர் வைத்துக்கொளுசெய்து உன் புகழை (அடியார்க்கு எளியன் கருணை வடிவினன் என்னும்) தக்க வைத்துக்கொள்வாயாக
ஞானம் பொன்ஞானமாகிய செல்வத்துக்குப்பெயர் பெற்ற
திருக்காளத்தி திருக்காளஹஸ்தியில் எழுந்தருளி இருக்கும்
பெருமாளே முருகப்பெருமானே

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே