Posts

Showing posts with the label English meaning

85. போதகம் தரு

ராகம் : பந்துவராளி தாளம் : 1½+ 2 + 2 + 1½ + 2 போத கந்தரு கோவேந மோநம நீதி தங்கிய தேவாந மோநம பூத லந்தனை யாள்வாய்ந மோநம பணியாவும் பூணு கின்றபி ரானேந மோநம வேடர் தங்கொடி மாலாந மோநம போத வன்புகழ் ஸாமீந மோநம அரிதான வேத மந்திர ரூபாந மோநம ஞான பண்டித நாதாந மோநம வீர கண்டைகொள் தாளாந மோநம அழகான மேனி தங்கிய வேளேந மோநம வான பைந்தொடி வாழ்வேந மோநம வீறு கொண்டவி சாகாந மோநம அருள்தாராய்

83. பாரியான கொடை

ராகம் : பாகேஸ்வரி தாளம் : 1½ + 1½ + 1 + 1½ + 2 பாரியான கொடைக்கொண்ட லேதிரு வாழ்விசால தொடைத்திண்பு யாஎழு பாருமேறு புகழ்க்கொண்ட நாயக அபிராம பாவலோர்கள் கிளைக்கென்றும் வாழ்வருள் சீலஞால விளக்கின்ப சீவக பாகசாத னவுத்துங்க மானத எனவோதிச் சீரதாக எடுத்தொன்று மாகவி பாடினாலு மிரக்கஞ்செ யாதுரை சீறுவார்க டையிற்சென்று தாமயர் வுறவீணே சேயபாவ கையைக்கொண்டு போயறி யாமலேக மரிற்சிந்து வார்சிலர் சேயனார்ம னதிற்சிந்தி யாரரு குறலாமோ

82. பஞ்ச பாதகன்

ராகம் : ஹுசேநி அங்க தாளம் (8) 1½ + 2 + 1½ + 1 + 1½ + 1 பஞ்ச பாதகன் பாவிமுழு மூடன் வெகு வஞ்ச லோபியன் சூதுகொலை காரன்மதி பண்கொ ளாதவன் பாவகட லூடுநுழை பவுஷாசை பங்க ன் மோதியம் பாழ்நரகில் வீணின் விழ பெண்டிர் வீடுபொன் தேடிநொடி மீதில்மறை பஞ்ச மாமலம் பாசமொடு கூடிவெகு சதிகாரர் அஞ்சு பூதமுண் டாகடிய காரரிவர் தங்கள் வாணிபங் காரியம லாமலரு ளன்பர் பாலுடன் கூடியறி யாதபுக ழடியேனை அண்டர் மாலயன் தேடியறி யாதவொளி சந்த்ர சேகரன் பாவைவிளை யாடுபடி கந்த நாடுடன் கூடிவிளை யாடஅருள் புரிவாயே

80. திமிர உததி

Image
ராகம் : பைரவி திச்ர ஏகம் (எடுப்பு 1 இடம்) திமிர வுததி யனைய நரக செனன மதனில் விடுவாயேல் செவிடு குருடு வடிவு குறைவு சிறிது மிடியு மணுகாதே அமரர் வடிவு மதிக குலமு மறிவு நிறையும் வரவேநின் அருள தருளி யெனையு மனதொ டடிமை கொளவும் வரவேணும்

79. திடமிலி சற்குணமிலி

ராகம்: பந்துவராளி கண்ட சாபு (2½) திடமிலிசற் குணமிலி நற்றிறமிலியற் புதமான செயலிலிமெய்த் தவமிலிநற் செபமிலிசொர்க் கமுமீதே இடமிலிகைக் கொடையிலிசொற் கியல்பிலிநற் றழிழ்பாட இருபதமுற் றிருவினையற் றியல்கதியைப் பெறவேணும்

78. தலைவலி மருத்தீடு

ராகம் : செஞ்சுருட்டி தாளம் : சதுஸ்ர த்ருவம் கண்ட நடை தலைவலி மருத்தீடு காமாலை சோகைசுரம் விழிவலி வறட்சூலை காயாசு வாசம்வெகு சலமிகு விஷப்பாக மாயாவி காரபிணி யணுகாதே தலமிசை யதற்கான பேரோடு கூறியிது பரிகரி யெனக்காது கேளாது போலுமவர் சரியும்வ யதுக்கேது தாரீர்சொ லீரெனவும் விதியாதே உலைவற விருப்பாக நீள்காவின் வாசமலர் வகைவகை யெடுத்தேதொ டாமாலி காபரண முனதடி யினிற்சூட வேநாடு மாதவர்க ளிருபாதம் உளமது தரித்தேவி னாவோடு பாடியருள் வழிபட எனக்கேத யாவோடு தாளுதவ உரகம தெடுத்தாடு மேகார மீதின்மிசை வரவேணும்

77. தமரும் அமரும்

ராகம் : ஹமீர் கல்யாணி தாளம் : ஆதி திச்ர நடை (12) தமரு மமரு மனையு மினிய தனமு மரசும் அயலாகத் தறுகண் மறலி முறுகு கயிறு தலையை வளைய எறியாதே கமல விமல மரக தமணி கனக மருவு மிருபாதங் கருத அருளி யெனது தனிமை கழிய அறிவு தரவேணும்

76. தகர நறுமலர்

ராகம் : பூர்வி கல்யாணி அங்க தாளம் 1½ + 2 + 2 + 2 தகர நறுமலர் பொதுளிய குழலியர் கலக கெருவித விழிவலை படவிதி தலையி லெழுதியு மனைவயி னுறவிடு வதனாலே தனயர் அனைதமர் மனைவியர் சினெகிதர் சுரபி விரவிய வகையென நினைவுறு தவன சலதியின் முழுகியெ யிடர்படு துயர்தீர அகர முதலுள பொருளினை யருளிட இருகை குவிசெய்து ளுருகிட வுருகியெ அரக ரெனவல னிடமுற எழிலுன திருபாதம் அருள அருளுடன் மருளற இருளற கிரண அயில்கொடு குருகணி கொடியொடு அழகு பெறமர கதமயில் மிசைவர இசைவாயே

75. ஞானம் கொள்

ராகம் : பிலஹரி அங்க தாளம் (5½) 2½ + 1½ + 1½ ஞானங்கொள் பொறிகள் கூடி வானிந்து கதிரி லாத நாடண்டி நமசி வாய வரையேறி நாவின்ப ரசம தான ஆநந்த அருவி பாய நாதங்க ளொடுகு லாவி விளையாடி ஊனங்க ளுயிர்கள் மோக நானென்ப தறிவி லாம லோமங்கி யுருவ மாகி யிருவோரும் ஓரந்த மருவி ஞான மாவிஞ்சை முதுகி னேறி லோகங்கள் வலம தாட அருள்தாராய்

74. சுருதிமுடி மோனம்

ராகம் : நாட்டை குறிஞ்சி தாளம் : சதுச்ர த்ருவம் கண்ட நடை சுருதிமுடி மோனஞ்சொல் சிற்பரம ஞானசிவ சமயவடி வாய்வந்த அத்துவித மானபர சுடரொளிய தாய்நின்ற நிட்களசொ ரூபமுத லொருவாழ்வே துரியநிலை யேகண்ட முத்தரித யாகமல மதனில்விளை யாநின்ற அற்புதசு போதசுக சுயபடிக மாவின்ப பத்மபத மேஅடைய உணராதே கருவிலுரு வேதங்கு சுக்கிலநி தானவளி பொருமஅதி லேகொண்ட முக்குணவி பாகநிலை கருதவரி யாவஞ்ச கக்கபட மூடியுடல் வினைதானே கலகமிட வேபொங்கு குப்பைமல வாழ்வுநிஜ மெனவுழலு மாயஞ்செ னித்தகுகை யேஉறுதி கருதசுழ மாமிந்த மட்டைதனை யானஉன தருள்தாராய்

63. ஒருவரை யொருவர்

ராகம் : ஹிந்தோளம் தாளம் : திச்ர ரூபகம் (2+ 1½ + 1½) ஒருவரை யொருவர்தேறி அறிகிலர் மதவிசாரர் ஒருகுண வழியுறாத பொறியாளர் உடலது சதமெனாடி களவுபொய் கொலைகளாடி உறநம னரகில் வீழ்வ ரதுபோய்ப்பின் வருமொரு வடிவமேவி யிருவினை கடலுளாடி மறைவரி னனைய கோல மதுவாக மருவிய பரமஞான சிவகதி பெறுகநீறு வடிவுற அருளி பாத மருள்வாயே