Posts

Showing posts with the label tiruchendur

28. சேமக் கோமள

ராகம் : சுருட்டி தாளம் : 1½ + 2 சேமக் கோமள பாதத் தாமரை சேர்தற் கோதும நந்தவேதா தீதத் தேயவி ரோதத் தேகுண சீலத் தேமிக அன்புறாதே காமக் ரோதவு லோபப் பூதவி காரத் தேயழி கின்றமாயா காயத் தேபசு பாசத் தேசிலர் காமுற் றேயும தென்கொலோதான்

25. காலனார்

ராகம் : சஹானா/திலங் தாளம் : சதுஸ்ர ஏகம் (10) (கண்ட நடை) காலனார் வெங்கொடுந் தூதர்பா சங்கொடென் காலினார் தந்துடன் கொடுபோகக் காதலார் மைந்தருந் தாயரா ருஞ்சுடுங் கானமே பின்தொடர்ந் தலறாமுன் சூலம்வாள் தண்டுசெஞ் சேவல்கோ தண்டமுஞ் சூடுதோ ளுந்தடந் திருமார்பும் தூயதாள் தண்டையுங் காணஆர் வஞ்செயுந் தோகைமேல் கொண்டுமுன் வரவேணும்

24. கமல மாதுடன்

ராகம் : ஆனந்த பைரவி அங்க தாளம் (7½) 1½ + 2 + 2 + 2 கமல மாதுடன் இந்திரை யுஞ்சரி சொலவொ ணாதம டந்தையர் சந்தன களப சீதள கொங்கையில் அங்கையில் இருபோதேய் களவு நூல்தெரி வஞ்சனை அஞ்சன விழியின் மோகித கந்தசு கந்தரு கரிய ஓதியில் இந்துமு கந்தனில் மருளாதே அமல மாகிய சிந்தைய டைந்தகல் தொலைவி லாதஅ றம்பொருள் இன்பமும் அடைய ஓதியு ணர்ந்துத ணந்தபின் அருள்தானே அறியு மாறுபெ ரும்படி அன்பினின் இனிய நாதசி லம்புபு லம்பிடும் அருண ஆடக கிண்கிணி தங்கிய அடிதாராய்