அந்தோ மனமே — J.R. கருத்துரை
By Smt Janaki Ramanan, Pune
For a comple translation/explanation of the song 'anthO manamE' in English, please click the underlined hyperlink.
சீரான சிராப்பள்ளியில் கோயில் கொண்டிருக்கும் குமரா சரணம். "அந்தோ மனமே" என்று தொடங்கும் திருச்சிராப்பள்ளிப் பாடலில் "சிராப்பள்ளி் என்பார் மனமேதினி நோக்கிய பெருமாளே," என்கிறார் அருணகிரியார். அதாவது, திருச்சிராப்பள்ளி, திருச்சிராப்பள்ளி, என்று திரும்பத் திரும்பச் சொல்வோரின் உள்ளத்தையே தன் கோயிலாகக் கொண்டு விடுகிறானாம் முருகன்! எத்துணை தலப் பெருமை! "திருச்சிராப்பள்ளி என்னலும் தீவினை நரிச்சிராது நடக்கும் நடக்குமே" என்கிறார் அப்பர் பெருமானும். அதாவது, சிராப்பள்ளி என்று சொன்னதும் தீவினை ஓடி விடுமாம். அத்தகைய சீரும் பேரும் பெற்ற திருத்தலப் பாடலில், அலை பாயும் மனதை நிலைப்படுத்த வழிகள் சொல்கிறார் அருணகிரிநாதர்.
அந்தோ மனமே நமதாக்கையை நம்பாதே
இத அகித சூத்திரம் அம்போருகன் ஆடிய பூட்டிது
இனிமேல் நாம் அஞ்சாது அமையா கிரி யாக்கையைப்
பஞ்சாடிய வேலவனார்க்கியல் அங்கா குலம் வா
இனி தாக்கையை ஒழியாமல் வந்தோம்
இதுவே கதி யாட்சியும் இந்தா மயில் வாகனர் சீட்டிது
வந்தாளுவம் நாம் என வீக்கிய சிவநீறும்
வந்தே வெகுவா நமை ஆட் கொளும்
மைந்தா, குமரா எனும் ஆர்ப்பு உய மறவாதே
திந்தோ திமி தீதத மாத் துடி
தந்தா தன னா தன தாத்தன செம் பூரிகை
பேரிகை ஆர்த்தெழ மறை ஓத
செங்கா டெனவே வரு மூர்க்கரை சங்கார சிகாமணி வேற்கொடு
செண்டாடி மகா மயில் மேற் கொளு முருகோனே
Comments
Post a Comment