நச்சரவ மென்று — JR விளக்கவுரை
By Smt Janaki Ramanan, Pune
To read the meaning of the song nachcharava mendru (நச்சரவ மென்று) in English, click the underlined hyperlink.
முன்னுரை
"நச்சரவ மென்று" என்று தொடங்கும் காஞ்சிபுரம் திருத்தலப் பாடல். மற்றுமொரு அகத்துறைப் பாடல். அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகனைத் தலைவனாகவும், முருக பக்தனை தலைவியாகவும் உருவகம் செய்துச் செந்தமிழ்த் தேனாய் மலரும் திருப்புகழ் பாடல். முருகனுக்காக பக்தன் ஏங்கும் ஏக்கத்தை ஓரளவுக்குக் காட்டுகின்ற வழிமுறை தான் இந்த அகத்துறை. சிற்றின்பம் சொன்னால் "சட்"டெனப் புரிந்துவிடுவதாலே இதைச் சொல்லிப் பேரின்ப நிலைக்குக் கூட்டிச் செல்லும் முயற்சி. திரும்பத் திரும்ப எடுத்துச் சொன்னால் தானே மனித மனம் திருந்துகிறது! அதனால், வெவ்வேறு பாடல்களில், வெவ்வேறு விதமாகச் சொல்கின்ற நயம்.
தத்ததன தந்த தத்ததன தந்த
தத்ததன தந்த தனதான
நச்சரவ மென்று நச்சரவ மென்று
நச்சுமிழ் களங்க மதியாலும்
நத்தொடு முழங்க னத் தொடு முழங்கு
நத்தினை வழங்கு கடலாலும்
இச்சை உணர்வின்றி இச்சை என வந்த
இச்சிறுமி நொந்து மெலியாதே
எத்தனையி நெஞ்சில் எத்தன முயங்கி
இத்தனையில் அஞ்சலென வேணும்
பச்சை மயில் கொண்டு பச்சை மற மங்கை
பச்சை மலை எங்கும் உறைவோனே
பத்தியுடன் நின்று பத்தி செயுமன்பர்
பத்திர மணிந்த கழலோனே
கச்சிவர் குரும்பை கச்சவர் விரும்பு
கச்சியில் அமர்ந்த கதிர்வேலா
கற்பக வனங் கொள் கற்பக விசும்பர்
கைத்தளை களைந்த பெருமாளே
Comments
Post a Comment