எழுபிறவி — JR விளக்கவுரை
By Smt Janaki Ramanan, Pune
To read the meaning of the song ezhu piravi (எழுபிறவி) in English, click the underlined hyperlink.
முன்னுரை
எழுபிறவி என்று தொடங்கும் திருப்புகழ் பொதுப் பாடல். திருத்தல யாத்திரை சென்று அந்தந்தத் தலங்களின் முருகனை திருப்புகழ் பாடல்களால் போற்றி வணங்கிய அருணகிரிநாதர், தல யாத்திரை முடித்துக் கொண்டு , திருவண்ணாமலை திரும்பிய பின்னரும், ஆர்வம் அடங்காமல், முருகனைப் பாடிய பாடல்கள், பொதுப் பாடல்களில் அடங்கும்.
எழுபிறவி நீர் நிலத்தில் இருவினைகள் வேர்பிடித்து
இடர்முளைகளே முளைத்து வளர் மாயை
எனும் உலவையே பணைத்து விரக குழையே குழைத்து
இருள் இலைகளே தழைத்து மிக நீளும்
இழவு தனையே பிடித்து மரணபழமே பழுத்து
இடியுமுடல் மாமரத்தின்
அருநிழல் இசையில் விழ ஆத பத்தி அழியுமுனமே எனக்கு
இனியதொரு போதகத்தை அருள்வாயே
வழுவு நெறி பேசு தக்கனின் இசையுமக சாலையுற்ற
மதி இரவி, தேவர் வஜ்ர படையாளி
மலர்க் கமல யோனி சக்ர வளை மருவு பாணி
விக்ரமறைய எதிர் வீர உக்ரர்
அழகிய கலாப கற்றை விகடமயிலேறி
எட்டு அசலமிசை வாகையிட்டு வரும் வேலா
அடல் அசுரர் சேனை கெட்டு முறிய மிக மோதி வெட்டி
அமரர் சிறை மீளவிட்ட பெருமாளே
Comments
Post a Comment