By Mrs Devaki Iyer, Pune
For a translation of this song in English, click the link poRpathaththinai
| பொன் பதத்தினை | உன்னுடைய மேலான திருப்பாதங்களை |
| துதித்து | போற்றிப் புகழ்ந்து |
| நல் பதத்தில் உற்ற பத்தர் | அந்த நலம்தரும் பாதங்களை (அந்த உயர்ந்த பதவி/ நிலையை) அடைந்த பக்தர்களுடைய |
| பொற்பு | சிறப்புகளை(மேலான பண்புகளை) |
| உரைத்து | எடுத்துச் சொல்லி |
| நெக்கு உருக்க | தானும் உருகிக் கேட்பவர்களையும் உருகச்செய்ய |
| அறியாதே | தெரிந்து கொள்ளாமல் |
| புத்தகப்பிதற்றை விட்டு | புத்தகங்களைமட்டும் படித்து வறட்டு வேதாந்தத்தால் அல்லாமல், |
| வித்தகத்து உனைத் துதிக்க | நுண் அறிவால்/ விவேகத்தால் உன்னை ஆராதிக்க |
| புத்தியில் கலக்கம் அற்று நினையாதே | அறிவில் எந்தக் குழப்பமும் இல்லாமல் உன்னை நினையாமலும், (குறியாகக் கொள்ளாமல்) |
| முன் படத்தலத்து | ஏற்கெனவே இப்பூமியில் வந்து பிறந்து |
| பின் படைத்த | பின்னும் பிறப்பதற்கான |
| கிர்த்யம் | (சம்ஸ்க்ருத க்ருத்யம்)(நல்ல, தீய) வினைகள் (செய்து) |
| முற்றி | (அவை) பழுத்து (அவற்றின் பயனாக) |
| முன்கடை | மீண்டும், மீண்டும் |
| தவித்து | (பிறந்து) துன்பப்பட்டு |
| நித்தம் உழல்வேனை | நிரந்தரமாக சுற்றிக்கொண்டிருக்கும் (பிறப்பு இறப்புச் சுழியில்) என்னை |
| முட்ட இக்கடைப்பிறப்பின் | முழுதுமாக இந்தக்கீழ்மையான பிறவி(இறப்பு)களின் |
| உள் கிடப்பதை தவிர்த்து | சுழற்சியில் உள் அகப்படுவதை இல்லாமல் செய்து |
| முக்தி சற்று எனக்கு அளிப்பது | வீடு பேற்றை கொஞ்சம் (முருகனுடைய சிறிய கருணைப்பார்வை போதும் நம்மைக்கடைத்தேற்ற) எனக்கும் கூட அருளும் |
| ஒரு நாளே | ஓர் நாள் வருமோ |
| வெற்பு அளித்த | (இமய)மலை பெற்ற |
| தன்பரைக்கு | எல்லாருக்கும் மேலான பார்வதி தேவிக்கு |
| இடப்புறத்தை உற்று அளித்த | தன் இடப்பாகத்தை அன்பு கொண்டு கொடுத்த |
| வித்தகத்தர் | மிகுந்த அறிவும் திறமையும் உடையவர் (வித்தகம்) |
| பெற்ற | உலகுக்கு அளித்த |
| கொற்ற மயில் வீரா | வெற்றியுடைய மயில் வாகனம் உடைய வீரனே |
| வித்தை தத்வ | சகல வித்தைகளுக்கும் தத்துவங்களுக்கும் இடமான (தன்னுள் கொண்ட) |
| முத்தமிழ் | இயல் இசை நாடகம் என்று மூன்று பிரிவு உடைய தமிழின் |
| சொல் அத்த சத்தம் | சொல்(பதம்), பொருள், சந்தம் என்பவற்றை விளக்கும் இலக்கணத்தை |
| வித்தரிக்கும் | விஸ்தாரமாக விளக்கிச் சொல்லும் (அகஸ்த்யருக்கும், நக்கீரருக்கும் உபதேசித்தது குறிக்கப்படுகிறது) |
| மெய்த்திருத்தணிப் பொருப்பில் | (அல்லது அந்தத்தமிழ் வழங்கும்) நிலையான திருத்தணி மலையில் |
| உறைவோனே | வசிக்கின்ற இறைவனே |
| கற்பக | கற்புக்கு இடமான மனதை உடைய |
| புனக்குறத்தி | தினைப்புனத்தில் இருந்த குறமகள் வள்ளியின் |
| கச்சு அடர்த்த | இறுக்கமான மார்க்கச்சம் அணிந்த |
| சித்ரம் உற்ற | அழகான |
| கற்புர திருத்தனத்தில் | கற்பூரம் மணக்கின்ற திருமார்பை |
| அணைவோனே | தழுவிக் கொள்பவனே |
| கைத்து | பகை கொண்டு |
| அரக்கர் கொத்து | அசுரர்களின் கூட்டம் |
| சினத்து | (சினந்து) கோபத்துடன் |
| வச்ரனுக்கு | வஜ்ராயுதத்தை உடைய இந்திரனுக்கு |
| அமைத்த | இட்ட |
| கைத்தொழு தறித்து விட்ட | கை விலங்குகளை நீக்கி விட்ட |
| பெருமாளே | பெரியவனே. |
Comments
Post a Comment