Posts

Showing posts with the label Thiruppugazh Videos

82. பஞ்ச பாதகன்

ராகம் : ஹுசேநி அங்க தாளம் (8) 1½ + 2 + 1½ + 1 + 1½ + 1 பஞ்ச பாதகன் பாவிமுழு மூடன் வெகு வஞ்ச லோபியன் சூதுகொலை காரன்மதி பண்கொ ளாதவன் பாவகட லூடுநுழை பவுஷாசை பங்க ன் மோதியம் பாழ்நரகில் வீணின் விழ பெண்டிர் வீடுபொன் தேடிநொடி மீதில்மறை பஞ்ச மாமலம் பாசமொடு கூடிவெகு சதிகாரர் அஞ்சு பூதமுண் டாகடிய காரரிவர் தங்கள் வாணிபங் காரியம லாமலரு ளன்பர் பாலுடன் கூடியறி யாதபுக ழடியேனை அண்டர் மாலயன் தேடியறி யாதவொளி சந்த்ர சேகரன் பாவைவிளை யாடுபடி கந்த நாடுடன் கூடிவிளை யாடஅருள் புரிவாயே

54. விந்ததினூறி

ராகம் : யமுனா கல்யாணி தாளம் : மிஸ்ர சாபு (2 + 1½) விந்ததி னூறி வந்தது காயம் வெந்தது கோடி யினிமேலோ விண்டு விடாம லுன்பத மேவு விஞ்சையர் போல அடியேனும் வந்துவி நாச முன்கலி தீர வண்சிவ ஞான வடிவாகி வன்பத மேறி யென்களை யாற வந்தருள் பாத மலர்தாராய்

34. தொந்தி சரிய

ராகம்: தோடி/அடாணா அங்க தாளம் (7½) 1½ + 1½ + 2 + 1½ + 1 தொந்தி சரிய மயிரே வெளிறநிரை தந்த மசைய முகுகே வளையஇதழ் தொங்க வொருகை தடிமேல் வரமகளிர் நகையாடி தொண்டு கிழவ னிவரா ரெனஇருமல் கிண்கி ணெனமு னுரையே குழறவிழி துஞ்சு குருடு படவே செவிடுபடு செவியாகி வந்த பிணியு மதிலே மிடையுமொரு பண்டி தனுமெ யுறுவே தனையுமிள மைந்த ருடமை கடனே தெனமுடுகு துயர்மேவி மங்கை யழுது விழவே யமபடர்கள் நின்று சருவ மலமே யொழுக வுயிர் மங்கு பொழுது கடிதே மயிலின்மிசை வரவேணும்

20. ஏவினை நேர்விழி

ராகம் : வலசி/பந்துவராளி தாளம் : ஆதி ஏவினை நேர்விழி மாதரை மேவிய ஏதனை மூடனை நெறிபேணா ஈனனை வீணனை ஏடெழு தாமுழு ஏழையை மோழையை அகலாநீள் மாவினை மூடிய நோய்பிணி யாளனை வாய்மையி லாதனை யிகழாதே மாமணி நூபுர சீதள தாள்தனி வாழ்வுற ஈவது மொருநாளே

1. கைத்தல நிறைகனி

Image
With inputs from Mrs. Shyamala Ramamurthy, Pune. ராகம்: நாட்டை தாளம்: ஆதி கைத்தல நிறைகனி அப்பமொடவல்பொரி கப்பிய கரிமுகன் அடிபேணிக் கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ கற்பக மெனவினை கடிதேகும் மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன் மற்பொரு திரள்புய மதயானை மத்தள வயிறனை உத்தமி புதல்வனை மட்டவிழ் மலர்கொடு பணிவேனே