Sevagan Vaguppu

இருபிறை எயிறு நிலவெழ உடலம்
இருள் படு சொருபம் உடைக் கோ விடவே

இறுகிய கயிறு பட வினை முடுகி
எமபடர் பிடரி பிடித்தே கொடு போய்

அருமறை முறையின் முறை முறை கருதி
அதரிடை வெருவ ஒறுத்தால் வகையால்

அறிவொடு மதுர மொழியது குழறி
அலமரு பொழுதில் அழைத்தால் வருவாய்

ஒருபது சிரமும் இருபது கரமும்
விழ ஒரு பகழி தொடுத்தோன் மருகா

உரமது பெரிய திரிபுரம் எரிய
உயர்கன கிரியை வளைத்தோர் புதல்வா

மருவளர் அடவி வனிதையர் பரவ
மரகத இதணில் இருப்பாள் கணவா

வளைகடல் கதற நிசிசரர் மடிய
மலையொடு பொருத முழுச்சே வகனே.


Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே