Posts

Showing posts from 2022

Jambukeswarar Temple At Thiruvanaikaval

Image
Jambukeswarar Temple at Thiruvanaikaval, a Suburb of Tiruchrirapalli, is on the northern bank of the river Kaveri at the Srirangam river island, being surrounded by the Kaveri and the Kollidam river, which splits itself here from the Kaveri. It was built by an early Chola King called Kochengat Cholan. According to the legend, Lord Shiva sent Goddess Parvati to perform ‘tapasya’ at the Jambu forest of Thiruvanaikaval, as He was offended by her mocking light heartedly his austerity. Parvati built a Shivalinga under the ‘venn naaval’ (white Jambu fruit) tree, with the water from River Ponni. After years of tapasya, Shiva appeared before Akilandeswari and gave her Shiva gnana (knowledge). Shiva stood facing west and gave Upadesa to Akilandeswari who stood facing east. Another legend says that two Shiva gana s, Malyavan and Pushpadanta, always fought with each other. Once, both of them cursed each other out of rage, as a result of which both descended onto earth, Malyavan as a spi

உயிர்கள் அனுபவிக்கும் ஐந்து உணர்வு நிலைகள்

காரிய அவத்தைகளும் காரண அவத்தைகளும் அவத்தை / அவஸ்தை என்பது உணர்வு நிலை. அநாதியாகவே ஆணவ மலத்துடன் கூடியிருத்தலால் தானே சுயமாக அறிய முடியாத ஆன்மா உடலில் கருவி கரணங்களுடன் கூடி ஐந்து உணர்வு நிலைகளில் நின்று அறிகின்றது; செயலாற்றுகின்றது. உயிர் அடையும் ஐந்து நிலை வேறுபாடுகள் காரிய அவத்தைகள் எனப்படும்.

மும்மலங்கள்

மும்மலங்கள் என்றால் என்ன? சைவ சித்தாந்தத்தின்படி இறைவனைச் சென்றடைவதே உயிர்களின் நோக்கம். ஆயினும் உயிர்கள் இறைவனைச் சேரவிடாமல் அவற்றின் அறிவை அறிவற்ற சடப்பொருள்களான ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்கள் மறைத்துக் கொண்டிருக்கின்றன. இதனால் ஏற்படுகின்ற அறியாமையே உயிர்களின் துன்பங்களுக்குக் காரணம் என்பது சைவ சித்தாந்தக் கருத்து. உயிர்களை மலங்களின் பிணைப்பிலிருந்து விடுவித்துத் தன்னுடன் சேர்த்துக்கொள்ள இறைவனின் அருள் வேண்டும்.

சைவ சித்தாந்தம் பகுதி 3 : பதியின் இயல்பு

Image
இறைவனின் இயல்பு என்றும் எக்காலத்தும் விளங்கிக் கொண்டும், நிலையானதாகவும், எல்லா அண்டங்களையும் பொருள்களையும் உயிர்களையும் படைத்து தன் அருளால் இயக்கிக் கொண்டும் இருப்பவர் இறைவன். அந்த ஒப்பற்ற உயர்ந்த இறைவனை சொல்லாலும் பொருளாலும் மனித அறிவாலும் கருவிகளாலும் அளக்கவோ கணக்கிடவோ முடியாது. அந்த பரம்பொருள் எல்லா ஆன்மாக்களிலும் உள் ஒளியாக இயங்கிக் கொண்டுள்ளது. சிருஷ்டி முழுவதிலும் ஊடுருவி நின்றும், அதே நேரம் அனைத்துக்கும் அப்பால் காலமற்று நிற்கும் பிரக்ஞையாக செயல் படுகிறது. சைவ சித்தாந்தம் எவ்வித மாற்றமும் அடையாமல், என்றும் ஒரு தன்மை உடையதாய் நிற்கும் பொருளான சத்தாய் நிற்பதையே இறைவனின் உண்மை இயல்பு என்று கூறுகிறது. அறிவுடைப் பொருள் 'சித்து' என்றும், அறிவில்லா பொருள் 'அசித்து' என்றும் சொல்லப் பெறும். உலகம் தோன்றுவதற்குக் காரணம் மாறாத இருப்புடன், தோற்றமும் மறைவும் அற்ற அனந்தமாக, ஆகாசம் போல் சர்வ வியாபகமாக, எங்கும் நீக்கமற நிறைந்து இருப்பது ஸத்/சத்து தான்.

சைவ சித்தாந்தம் பகுதி 2 : முப்பொருள் இயல்பு

அனாதி முப்பொருள் உலகில் உள்ள அனைத்துப் பொருள்களும் அழியும். அழியக் கூடிய அனைத்தும் பொய். அழியாதது பரம்பொருள் ஒன்றே. அதுவே மெய். அது தோன்றுதல், அழிதல், வளர்தல், தேய்தல் முதலிய மாற்றங்களுக்கு உட்படாது. சைவ சித்தாந்தம் நிலையில்லா உலகில் அனாதியான அடிப்படை பொருளாக, அழியாப் முப்பொருள்களாக பதி, பசு, பாசம் விளங்குகின்றன என்று கருதுகிறது. இந்த முப்பொருள்களுள் ஒன்றை மற்றொன்றின் காரியம் என்று இல்லாமல் மூன்றும் தனித் தனிப் பொருள்களே என்று சைவ சித்தாந்தம் உரைக்கிறது. மாறுபட்ட மூன்று தன்மைகளால் வேறுவேறாகத் தோன்றும் முப்பொருள்களும் தொடக்கம் இல்லாதவைை; தோன்றாமல், அழியாமல், எப்போதும் இருக்கின்றன. இதற்கு மூலக்ககூறாக இருப்பது சற்காரிய வாதம் .

திருவிளையாடல் புராணம்

திருவிளையாடல் புராணம் என்பது சிவபெருமான் பாண்டியர்களின் தலைநகரான கூடல்மாநகராம் மதுரையில் நிகழ்த்திய 64 அற்புத லீலைகளைப் பற்றிக் கூறும் நூலாகும். இறைவனார் உலக உயிரிகளிடத்து அன்பு கொண்டு அவர்களுக்கு அருள் செய்த கருணையை இந்நூலில் வரும் கதைகள் அழகாக விவரிக்கின்றன. இது வியாசர் இயற்றிய ஸ்கந்த புராணத்தில் உள்ள ஹாலாஸ்ய மகாத்மியம் என்னும் வடமொழி நூலிலிருந்து பரஞ்சோதி முனிவரால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட ஒன்று. திருவிளையாடல் புராணம் மதுரைக்காண்டம், கூடற்காண்டம், திருவாலவாய் காண்டம் என்று மூன்று காண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. கி.பி.16-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் மதுரை மாநகரை ஆண்ட வீரசேகர சோழன் என்பவர் பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணத்தை மதுரையில் அரங்கேற்றினார்.

சைவ சித்தாந்தம் : அறிமுகம் (பகுதி 1)

சைவ சித்தாந்தம் என்றால் என்ன? சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடுகின்றது சைவ சமயம். தன்னுள் இருக்கும் சிவத்தை அறிந்து மலநீக்கம் பெற்று சிவனடியை சேரும் வழி காட்டுவதே சைவ சித்தாந்ததின் நோக்கம். சித்தாந்தம் என்பது ஆராய்ந்து சிந்தித்து முடிந்த முடிவு. சைவ சித்தாந்தம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமூலரால் ஒரு தத்துவப் பிரிவாக உருவானது. சைவ சித்தாந்தம் வேதங்களையும், ஆகமங்களையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது. சைவ சமயத்தில் சமயக் குரவர் நான்கு பேர்களும் சந்தான குரவர்கள் நான்கு பேரும் உள்ளனர். சமயக்குரவராகிய நால்வர் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி, மாணிக்கவாசகர் ஆகியோர் ஆவர். இவர்கள் சைவ சமயத்தின் தேவாரம் மற்றும் திருவாசகத்தினை எழுதியவர்கள். சந்தான குரவர்கள் மடங்கள் ஸ்தாபித்து வழிமுறை பாடங்கள் வகுத்தார்கள். அந்த நால்வரில் முதலாமவர் மெய்கண்டார்; அவரின் சீடர் அருள் நந்தி சிவம்; அவரின் சீடர் மறைஞான சம்பந்தர். கடைசியாக உமாபதி சிவம். சைவ சமயத்தை விளக்கும் நூல்களில் சிறப்பானதாகக் கருதப்படுவது மெய்கண்டார் எழுதிய சிவஞான போதம் ஆகும். மெய்கண்டார் கிபி 13 ஆம் நூற்றா

பன்னிரு சைவம் மற்றும் முருகவேள் திருமுறைகள்

Image
சைவத் திருமுறைகள் பன்னிரு திருமுறைகள் தமிழ் சைவ சமயத்தின் அடிப்படை நூல்கள். இவை பல்லவர் காலத்திலும் அதன் பின்னரும் தோன்றிய சைவ சமய நூல்களின் தொகுப்பாகும். 10 ஆம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனின் ஆட்சியின்போது இவற்றை தொகுத்தவர் திருநாரையூரில் பிறந்த நம்பியாண்டார் நம்பி. இவர் மன்னனின் வேண்டுகோளின் பேரில் சிதம்பரம் கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த தேவாரங்களையும், வேறுபல சமய இலக்கியங்களையும் பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை பதினொரு திருமுறைகளாகத் தொகுத்தார்.

ஆதிமூலமே என்று கஜேந்திரன் அலறிய பொழுது ....

To read the story in English, click Story of Gajendra and Lord Vishnu பாற்கடலால் சூழப்பட்ட பர்வதம் த்ரிகூடம். அம்மலையின் அடிவாரத்தில் வருணன் உருவாக்கிய ருதுமத் என்ற ஒரு அழகிய தோட்டம். அதன் அருகில் மிக அழகிய குளம். அங்கு கம்பீரமும் வீரமும் மிகுந்த யானைகளின் அரசனான கஜேந்திரன் பெண் யானைகளுடனும் குட்டிகளுடனும் வசித்து வந்தது. முற்பிறவியில் அந்த யானை பாண்டிய மன்னன் இந்திரதும்யுனாக பிறந்து மஹாவிஷ்ணு மீது மிகவும் அதீத பக்தி கொண்டு வாழ்ந்து கொண்டிருந்தான். ஒரு சமயம் அவன் பூஜை செய்து கொண்டிருந்த போது காண வந்த அகத்திய முனிவரை வெகுநேரம் காக்க வைத்துவிட்டான். அதனால் கோபமடைந்த அகத்தியர், தன்னை மதிக்காமல் மதம் கொண்டு நடந்தலால் மதம் கொண்ட யானையாக மாறக்கடவது என்று சாபம் கொடுத்தார். மன்னன் முனிவர் தாள் படிந்து வேண்டி, அடுத்த பிறவியிலும் தான் பெருமாள் மேல் கொண்ட பக்தி தொடர வேண்டும் என்று வேண்ட, முனிவரும் அவ்வாறே அருளி, ஸ்ரீமந் நாராயணனே அவன் சாபத்தை தீர்ப்பார் என்று வரம் கொடுத்தார்.

மூல மந்திரம் — பதவுரை

By Mrs Devaki Iyer, Pune For a translation of this song in English, click the link moolamanthiram மூலமந்திரம் வேதத்தின் மூலமான மூலமந்திரமான சிவ பஞ்சாக்ஷரமோ, முருகனின் ஷடாக்ஷரத்தையோ ஓதல் இங்கு இலை நியமமாக செபிக்கும் பழக்கம் என்னிடம் இல்லை ஈவது இங்கு இலை பிறருக்கு, தேவை என்று வருபவர்க்குக் கொடுக்கும் பழக்கமும் இல்லை நேயம் இங்கிலை உன்னிடம் மாறாத அன்பு ( அல்லது எவரிடத்தும் அன்பு செய்யும் பாங்கு) என்னிடத்தில் இல்லை மோனம் இங்கு இலை மனம் அடங்கியதன் அடையாளமான மௌனம் (மனன சீலம்) என்னிடம் இல்லை ஞானம் இங்கு இலை (ஞானத்தின் வெளிப்பாடான மேற்சொன்ன எதுவும் இல்லை ஆதலால்) மெய் உணர்வு இல்லவே இல்லை என்பது வெளிப்படை

வசனமிகவேற்றி — பதவுரை

By Mrs Devaki Iyer, Pune For a translation of this song in English, click the link vachana miga வசனம் மிக ஏற்றி வாக்கால் உச்சரித்து பல ஆவ்ருத்திகள் (எண்ணிக்கையில்) உரு ஏற்றி மறவாதே (அம்மந்திரத்தால் குறிக்கப்படும் இறைவடிவத்தை) மனதை விட்டு அகலாமல்தியானித்து மனது துயர் ஆற்றில் ஆற்றின் ஓட்டம்போலத் தொடர்ந்து வரும் துன்பங்களாலான இவ்வுலக நினைவுகளில் மனம் உழலாதே சென்று துன்பப்படாமல் (காத்து, அடக்கி) இசைபயில் புகழ்வாய்ந்த/ ப்ரசித்தமான ஷடாக்ஷரம் ('சரவண பவ' எனும்முருகனுக்கு உரிய) ஆறு எழுத்து அதாலே மந்திரத்தை மேற்சொன்ன முறையில் ஜபிப்பவர்க்கு இக பர சௌபாக்கியம் இவ்வுலக வாழ்க்கை இன்பங்களும் அதோடு கூட மோக்ஷத்தையும் அருள்வாயே கொடுத்து விடுகிறவன் அல்லவா நீ (நாம ஜபத்தின் பலனை, "எந்தை புகலூர் பாடுமின் புலவீர்காள் / இம்மையே தரும் சோறும் கூறையும் ஏத்தினால் இடர் கெடலும் ஆம்/ அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே" என்பார் சுந்தர மூர்த்தி நாயனார்.) பசு பதி உடல் பற்று/ உலகப்பற்று க்களால் கண

சரக்கேறி — பதவுரை

By Mrs Devaki Iyer, Pune For a translation of this song in English, click the link sarakkeri சரக்கு ஏறி 96 மூலப்பொருள்கள், 36 கட்டு/மூட்டைகளாகக் கட்டி வைக்கப்படட்டுள்ள இத்தப்பதி வாழ் இந்த (பதி என்பது ஆன்மாவின் ஆன்மா) உயிர் குடி கொண்டுள்ள தொந்த குளிர்-வெப்பம், இன்பம்_-துன்பம்,மானம்-அவமானம் முதலிய இருமைகளுக்கு பரிவோடு ஐந்து அன்புற்றவர் போலத் தோன்றுகின்ற ஐந்து புலன்களாகிற சதிகாரர் புக்கு ஆன்மாவை முக்தி நெறியில் செல்லவிடாது தடுக்கும் வஞ்சனையாளர் புகுந்து கொண்டு உலைமேவு நெருப்பின் மீது இருப்பது போன்ற அழிவுக்கு வழியான இந்தச்செயல் மேவி புலன் இன்ப நுகர்ச்சிகளில்/உலகவியலில் ஈடுபட்டு சலித்தே மெத்த அங்குமிங்கும் ஓடி (சலித்தல் = அசைதல்) சமுசாரம்,பொன் உலக இன்பங்களையும், பொன் பொருளையும் சுகித்தே நன்றாக அனுபவித்து சுற்றத்தவரோடு மனைவி மக்கள் மற்றும் உறவினரோடு இன்பத்தழைத்தே நாளும் பெருகும் சந்தோஷத்தோடு

உடுக்கத் துகில் — பதவுரை

By Mrs Devaki Iyer, Pune For a translation of this song in English, click the link udukka thugil உடுக்க உடலை மூடவும், குளிர் வெம்மையில் இருந்து பாதுகாத்துக்கொள்ளவும் துகில் வேணும் ஆடைகள் வேண்டும் நீள் பசி தொடர்ந்து துன்புறுத்தும் பசி நோயை அவிக்கைக்கு நீக்குவதற்கு அ(ன்)ன அன்னமும் பானம் வேணும் நீர், திரவ பதார்த்தங்களும் வேண்டும் நல் ஒளிக்கு நன்கு ப்ரகாசிப்பதற்கு/அழகாகத் தோன்றுவதற்கு புன (பின்) நல்லாடை வேணும் மீண்டும்(பின்னும்) நல்ல (பட்டு முதலிய) ஆடைகள்/ (ஏற்கெனவே ஆடை தேவை என்பது சொல்லியாயிற்று எனவே, அத்தியாவசிய தேவைக்கு மட்டுமல்ல, கொஞ்சம் பகட்டுக்கு “பின்னும்” பட்டு ஆடை வேண்டும் என்பதே புனலாடை, (வடமொழியில் புன: பின்னும்) வேண்டும் மெய் உறு நோயை உடம்புக்கு ஏற்படும் பல பிணிகளை ஒழிக்க இல்லாமல் செய்ய பரிகாரம் வேணும் மாற்று/ மருந்துகள் வேண்டும் உள் இருக்க அகத்தில் /வீட்டில் குடும்பத்தைப்பராமரிக்க சிறு நாரி வேணும் ஒரு இளம் பெண் தேவை ஒர் படுக்க தனி வீடு வேணும் அப்படி இல்லறத்தனாக வாழ தனிமை தேவை. எனவே ஒரு எனக்கென்று தனியான, தொந்தர