431. செறிதரும்


ராகம்: ஷண்முகப்ரியாதாளம்: ஆதி
செறிதரும் செப்பத் துற்பல வெற்பும்
பிறிதுமங் கத்தைக் குற்றவி ருப்புஞ்
சிகரிதுண் டிக்கக் கற்றத னிச்செஞ்சுடர்வேலும்
திரள்புயங் கொத்துப் பட்டவ னைத்துந்
தெளியநெஞ் சத்துப் புற்றும யக்கம்
திகழ்ப்ரபஞ் சத்தைப் புற்புத மொக்கும்படிநாடும்
அறிவறிந் தத்தற் கற்றது செப்புங்
கடவுளன் பத்தர்க் கச்சம றுத்தன்
பருள்பவன் பொற்புக் கச்சியுள் நிற்கும்பெருமானென்
றவிழுமன் புற்றுக் கற்றும னத்தின்
செயலொழிந் தெட்டப் பட்டத னைச்சென்
றடைதரும் பக்வத் தைத்தமி யெற்கென்றருள்வாயே
குறியவன் செப்பப் பட்டஎ வர்க்கும்
பெரியவன் கற்பிக் கப்படு சுக்ரன்
குலைகுலைந் துட்கக் சத்யமி ழற்றுஞ்சிறுபாலன்
குதலையின் சொற்குத் தர்க்கமு ரைக்குங்
கனகனங் கத்திற் குத்திநி ணச்செங்
குடர்பிடுங் கித்திக் குற்றமு கச்சிங்கமுராரி
பொறிவிடுந் துத்திக் கட்செவி யிற்கண்
துயில்கொளுஞ் சக்ரக் கைக்கிரி சுத்தம்
புயலெனும் பொற்புப் பெற்றநி றத்தன்ஜகதாதை
புனிதசங் கத்துக் கைத்தல நிர்த்தன்
பழையசந் தத்தைப் பெற்றம டப்பெண்
புகலுகொண் டற்குச் சித்திய ளிக்கும்பெருமாளே.

Learn The Song From Guruji




Kandar Alankaram in Shanmukhapriya followed by Thiruppugazh

Raga Shanmukhapriya (56th mela) prati madhyamam equivalent of Natabhairavi

Arohanam: S R2 G2 M2 P D1 N2 S    Avarohanam: S N2 D1 P M2 G2 R2 S


Raga Shanmukhapriya By Sanjay Subramanian



Paraphrase

செறிதரும் செப்பத்து உற்பல வெற்பும் (seRi tharum seppaththu uRpala veRpum) : ThiruththaNigai, the mountain with a pond in which the reddish kazhuneer flowers blossom densely every day; நெருக்கமாக வளர்கிற செம்மையான செங்கழுநீர் மலர் (தினமும் மலரும் சுனையுடன்) இருக்கும் திருத்தணிகை மலையும், வெற்பு (veRpu) : mountain;

பிறிதும் அங்கு அத்தைக்கு உற்ற இருப்பும் (piRithum angu aththaikku uRRa iruppum) : other similar abodes comparable to Thiruththangai; மற்றும் அத்தணிகை மலைக்குச் சமமான மற்றத் தலங்களும், அங்கு அத்தைக்கு உற்ற = அங்கு அதனைப் போன்ற;

சிகரி துண்டிக்கக் கற்ற தனிச்செஞ் சுடர் வேலும் (sigari thuNdikka kaRRa thanic senj chudar vElum) : Your unique, bright and sparkling spear which learnt to chop off hills like Mount Krouncha; கிரெளஞ்ச மலையைப் பிளக்கக் கற்றுக்கொண்ட ஒப்பற்ற செவ்வொளியுடன் கூடிய வேலும்,

திரள் புயம் கொத்துப் பட்ட அனைத்தும் (thiraL buyam koththup patta anaiththum ) : and the bunch of Your twelve strong shoulders - all these, திரண்ட பன்னிரு தோள்கள் கொத்தாக உள்ள எல்லாமும்,

தெளிய நெஞ்சத் துப்பு உற்று (theLiya nenjath thuppuRRu) : clearly form a vision in my mind! தெளிவாக நெஞ்சத்திலே தரிசனம் செய்து அறிவு பெற்று,

மயக்கம் திகழ் ப்ரபஞ்சத்தைப் புற்புதம் ஒக்கும்படி நாடும் அறிவறிந்து (mayakkam thigazh prapanjaththaip puRputham okkum padi nAdum aRivaRinthu) : I must seek the true knowledge which teaches that this delusory world is like a mere bubble in the water; மயக்கம் நிறைந்துள்ள இந்த உலகை நீர்க்குமிழிக்கு சமமானது என்று ஆராய்ந்து உணரும் அறிவை அடைந்து,

அத்தற்க்கு அற்றது செப்புங் கடவுளன் (aththaRku aRRathu seppum kadavuLan) : that You are the God who preached to Lord SivA the significance of detachment; சிவபிரானுக்கு பற்றற்ற பிரணவப் பொருளை உபதேசித்த கடவுள் நீ என்றும்,

பத்தர்க்கு அச்சம் அறுத்து அன்பருள்பவன் (paththarkku accham aRuththu anbu aruLbavan) : that You destroy Your devotees' fear and shower love on them graciously; அடியார்க்கு அச்சத்தை அகற்றி அன்பை அருள்பவன் நீ என்றும்,

பொற்புக் கச்சியுள் நிற்கும் பெருமான் என்று (poRpuk kacchiyuL niRkum perumAn enRu) : and that You stand majestically in this beautiful place Kachchi (kAnjeepuram). அழகிய கச்சியில்(காஞ்சீபுரத்தில்) நின்றருளும் பெருமான் நீ என்றும்,

அவிழும் அன்புற்றுக் கற்று (avizhum anpuRRuk kaRRu) : My love should pour from a serene heart, after I learn the ways of worshipping; நெகிழ்ந்து உருகும் அன்பின் வசமாகி, திருவருள் நெறியைப் பயின்று,

மனத்தின் செயல் ஒழிந்து (manaththin seyal ozhinthu) : all other activities of my mind should cease; மனத்தின் செயலெல்லாம் நீங்கப் பெற்று,

எட்டப் பட்டதனைச் சென்று அடை தரும் (ettap pattathanaic chenRu adai tharum) : at that stage, whatever is within my mind's reach should be attainable; அந்த நிலையில் எட்டப் படுவதான பொருளைச் சென்று அடைகின்ற

பக்வத்தைத் தமியெற்கு என்று அருள்வாயே (pakvaththai thamiyeRku enRu aruLvAyE) : and when will You grant me that kind of maturity? மனப் பக்குவத்தை அடியேனுக்கு என்றைக்குத் தந்தருள்வாயோ?

குறியவன் செப்பப் பட்ட எவர்க்கும் பெரியவன் (kuRiyavan seppap patta evarkkum periyavan) : He was of a short stature (VAmanan) but He was taller than all those people of fame; வாமன வடிவமாகிக் குறுகி, ஆனால் சொல்லப்படும் யாவரினும் பெரியவர் ஆனவரும்,

கற்பிக்கப்படு சுக்ரன் குலை குலைந்து உட்கக் சத்யமிழற்றுஞ் சிறுபாலன் (kaRpikkappadu sukran kulai kulainthu utka sathyam izhaRRum siRu bAlan) : The little boy (PrahlAdhan) stated, in his childish babble, only the truth to the utter dismay of his teacher Sukran who became very scared; கல்வி கற்றுக் கொடுக்கவந்த சுக்கிராச்சாரியார் உள்ளம் நடுநடுங்கி அஞ்சும்படி, உண்மையையே உரைத்த சிறு குழந்தை பிரகலாதனின்

குதலையின் சொற்குத் தர்க்கம் உரைக்குங் கனகன் (kuthalaiyin soRkuth tharkkam uraikkum kanagan) : all the words from his child were refuted by HiraNyan; மழலைச் சொல்லிற்கு எதிர்வாதம் பேசிய

அங்கத்தில் குத்தி நிணச் செங் குடர் பிடுங்கி (angaththiR kuththi niNa cheng kudar pidungi) : He (Vishnu) pierced all the limbs of HiraNyan's body and plucked out his reddish intestines, ஹிரண்யனுடைய உடலைக் குத்தி, மாமிசம் நிறைந்த சிவந்த குடலைப் பிடுங்கி,

திக்குற்ற முகச் சிங்க முராரி (thikkuRRa muga singa murAri ) : with the hair around His face reaching all the eight directions; Narasimha came with a lion's face and a human body; He destroyed the demon Muran and therefore was known as MurAri; எட்டுத் திசைகளிலும் பிடறி மயிர் பறக்கும் சிங்க முகத்தை உடைய நரசிம்மரும், முரன் என்ற அரக்கனைக் கொன்ற முராரியும்,

பொறி விடுந் துத்திக் கட்செவியிற் கண் துயில் கொளுஞ் ( poRi vidum thuththik katcheviyiR kaN thuyilkoLum) : Slumbering on AdhisEshan, the serpent with sparkling hoods, ஒளிவீசும் படப் பொறிகளை உடைய பாம்பு ஆதிசேஷன் மீது துயில்பவரும், துத்தி (thuththi) : the spots on the neck of a cobra, பாம்பின் படப் பொறி; கட்செவி (katchevi ) : serpent;

சக்ரக் கைக்கிரி (chakrak kaik giri) : and holding a wheel (Sudharsanam) in His hand and resembling a mountain, சக்ராயுதத்தைக் கையிலே தாங்கும் மலை போன்றவரும்,

சுத்தம் புயலெனும் பொற்புப் பெற்ற நிறத்தன் (suththam puyal enum poRpup peRRa niRaththan) : He has the complexion of the pure rainy cloud; தூய மேகம் போன்ற அழகிய நிறத்தை உடையவரும், பொற்பு = அழகு வாய்ந்த.

ஜக தாதை (jaga thAthai) : and is the father of the entire world; உலகுக்கெல்லாம் தந்தையும்,

புனித சங்கத்துக் கைத்தல நிர்த்தன் (punitha sangaththu kaiththala nirththan) : He holds in His other hand the sacred conch-shell (PAnchajanyam) and is the dancer (who danced on the hood of the giant-snake, KALingan). பாஞ்ச ஜன்யம் என்ற பரிசுத்தமான சங்கைக் கரத்திலே கொண்டவரும், (காளிங்கன் என்ற பாம்பின் தலையில்) நடனமாடியவரும்,

பழைய சந்தத்தைப் பெற்ற மடப்பெண் (pazhaiya santhaththaip peRRa madap peN) : பழைய (Pazhaiya) : Ancient / Primordial, something that has existed before time, tracing back to the absolute origin of the universe. When the ocean of milk was churned, the Asuras stole the nectar of immortality (Amrita), threatening to throw the universe into eternal chaos. Lord Vishnu took the form of Mohini to restore cosmic balance.
Mohini is the Cosmic Dance of Illusion (Maya). She is the ancient, eternal pulse of the universe wrapped in the form of a gentle, innocent maiden.
பழைய = காலத்திற்கும் அப்பாற்பட்ட, பிரபஞ்சத் தோற்றத்திற்கு முந்தைய ஆதி வடிவம்.சந்தம்: பிரபஞ்ச நடனம், ஆதி நாதம் (ஓம்காரம்) அல்லது இறைவனின் பிரபஞ்ச அதிர்வைப் பெற்ற: அந்த ஆதி அதிர்வைத் தன்னுள் தாங்கி நிற்கும் பேறு பெற்றவள்; மடப்பெண்: அறியாமை கொண்டவள் அல்ல, மாறாக உலகியல் கபடங்கள் அற்ற, அகந்தை இல்லாத, தூய்மையான கன்னி.

புகலு கொண்டற்குச் (pukalu koNdaRku) : To Vishnu whose hue is like that of the blue cloud, புகழப் பெறும் நீல மேகம் போன்ற நிறத்தினருமாகிய திருமாலுக்கு , கொண்டல் (kondal) : cloud;

சித்தியளிக்கும் பெருமாளே. (siththi aLikkum perumALE.) : You granted heavenly bliss (at KAnchipuram), Oh Great One! வீடு பேற்றினை (திருமேற்றளீசுவரராக திருமாலுக்கு காஞ்சிபுரத்தில்) தந்தருளிய பெருமாளே.

தல வரலாறு

கோயிலில் இரண்டு தனித்தனி மூலஸ்தானத்தில் அருளும் சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

பாற்கடலில் பள்ளிகொண்டிருந்த மகாவிஷ்ணுவிற்கு, சிவ சாரூப நிலை பெற வேண்டும் என்ற ஆசை எழுந்தது. ஞானசம்பந்தர் அத்தலத்திற்கு வருகை தந்து பதிகம் பாடும் வரை அங்கிருந்து தவம் செய்தால் வேண்டியது சித்திக்கும் என்று இறைவன் வரமளித்தார். அதன்படி மகாவிஷ்ணு, வேகவதி தீர்த்தத்தில் நீராடி சிவனை நோக்கி கிழக்கு பார்த்து நின்ற கோலத்திலேயே தவம் செய்தார். சிவதல யாத்திரை சென்ற திருஞானசம்பந்தர், இத்தலம் வந்த போது தவக்கோலத்தில் நின்று கொண்டிருப்பது சிவன்தான் என எண்ணிக்கொண்டு, சிவனுக்கு பின்புறத்தில் தூரத்தில் நின்றவாறே பதிகம் பாடினார். அவரது பாடலில் மனதை பறிகொடுத்த விஷ்ணு, அப்படியே உருகினார். பாதம் வரையில் உருகிய நிலையில் பாடல் முடியவே அவரது பாதம் மட்டும் அப்படியே நின்று விட்டது. தற்போதும் கருவறையில் லிங்கமும், அதற்கு முன்பு பாதமும் இருப்பதை காணலாம். சம்பந்தரின் பாடலுக்கு உருகியவர் என்பதால் இவர்,"ஓதஉருகீஸ்வரர்' என்ற பெயர் பெற்றார்.

Story of King Mahabali

The Story of King Mahabali (மகாபலி சக்கரவர்த்தி கதை)EnglishThe Generous Emperor:King Mahabali (the grandson of Prahlada) was a righteous and highly generous Asura king. Under his rule, his subjects lived in total peace and prosperity. However, his power grew so immense that he conquered the heavens, displacing the Devas (gods). The mother of the gods, Aditi, prayed to Lord Vishnu to restore balance to the universe.The Vamana Avatar:Vishnu incarnated as Vamana, a dwarf Brahmin boy. He approached Mahabali during a grand sacrificial ritual and asked for a simple donation: just three paces of land measured by his own tiny feet. Gifted with extreme generosity, Bali happily agreed, ignoring his guru Sukracharya's warning that the boy was actually Vishnu.As soon as the promise was sealed, Vamana grew into a cosmic giant (Trivikrama). With his first step, he measured the entire earth. With his second step, he covered the heavens. Finding no place left for the third step, the righteous Mahabali bowed down and offered his own head. Pleased with Bali's absolute surrender, Vishnu stepped on his head, sending him to rule the underworld (Patala), while granting him immortality and the promise to guard his gates.

தமிழ்கொடைவள்ளல் அரசன்:பிரகலாதனின் பேரனான மகாபலி, அசுர குலத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும், மிகுந்த தர்மவானாகவும் கொடைவள்ளலாகவும் திகழ்ந்தான். அவனது ஆட்சியில் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். அவனது அதிகாரம் பெருகி, தேவர்களின் உலகத்தையும் அவன் கைப்பற்றினான். இதனால் கலக்கமடைந்த தேவர்கள், உலகச் சமநிலையைக் காக்க விஷ்ணுவிடம் முறையிட்டனர்.வாமன அவதாரம்:மகாபலியின் ஆணவத்தை அடக்கவும் தேவர்களைக் காக்கவும் விஷ்ணு வாமன அவதாரம் (குள்ளமான பிராமணச் சிறுவன்) எடுத்தார். மகாபலி நடத்திய யாக சாலைக்குச் சென்று, தன் காலடியால் வெறும் மூன்றடி நிலம் மட்டுமே தானமாகக் கேட்டார். மகாபலியின் குருவான சுக்கிராச்சாரியார் வந்திருப்பது விஷ்ணுதான் என்று தடுத்தும், கொடுத்த வாக்கிலிருந்து மாறாத மகாபலி தானம் தர ஒப்புக்கொண்டான்.தானம் கொடுத்தவுடன் வாமனர் 'திரிவிக்ரமனாக' பிரபஞ்ச வடிவம் எடுத்தார். முதல் அடியால் ஒட்டுமொத்த பூமியையும், இரண்டாம் அடியால் விண்ணுலகத்தையும் அளந்தார். மூன்றாவது அடிக்கு இடமில்லாததால், நேர்மை தவறாத மகாபலி தன் தலையையே தந்து வணங்கினான். அவனது சரணாகதியால் மகிழ்ந்த விஷ்ணு, அவனது தலையில் பாதம் வைத்து பாதாள உலகிற்கு அனுப்பி, அங்கு அவனுக்கு என்றும் அழியாத அரச பதவியையும் தன் ஆசியையும் வழங்கினார்.

The meaning of "குறியவன் செப்பப் பட்ட.... சித்தியளிக்கும் பெருமாளே"/kuRiyavan ....perumaLE

"Oh Supreme Lord Muruga! You are the ultimate benefactor who granted spiritual liberation to your maternal uncle, Lord Vishnu who reclines in deep cosmic slumber upon the glowing, spotted hoods of the great serpent Adisesha; who wields the immaculate Sudarshana Chakra in his mountain-like mighty hands; who boasts the mesmerizing dark complexion of a fresh rain-cloud; who is the Universal Father who bears the holy conch and danced effortlessly to tame the serpent Kaliya; who is the very same Lord who manifested as Mohini, the innocent maiden embodying the timeless, ancient rhythm of the cosmos.

பாற்கடலில் மாணிக்கக் கற்கள் பதித்த ஆதிசேஷன் என்னும் நாகத்தின் மீது கண்வளர்பவரும், மலை போன்ற கரத்தில் சுதர்சனச் சக்கரம் ஏந்தியவரும், காளமேகம் போன்ற அழகிய நீல நிறமுடையவரும், உலகிற்குத் தந்தையும் ஆனவர் திருமால். பாஞ்சஜன்யம் என்னும் புனிதச் சங்கு ஏந்தி காளிங்க நர்த்தனம் புரிந்தவரும், உலகை மயக்க ஆதி வேதங்களின் சந்த வடிவாக 'மோகினி' என்னும் பேரழகு மடப்பப் பெண்ணாக அவதரித்தவருமான அந்தத் திருமாலுக்கே, அவர் காஞ்சியில் தவமிருந்த போது பரம சித்தியையும் முக்தியையும் அருளிய பெருமிதம் மிக்க காஞ்சிப் பதிவாழும் முருகப் பெருமானே!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

ஏறுமயில்