Posts

Showing posts from August, 2017

தத்துவங்கள் என்றால் என்ன : பகுதி 3

Image
Read Part 1 and Part 2 பிரகிருதி மாயா தத்துவங்கள் பிரபஞ்சத்திற்கு முதற்காரணம் வெளிப்படா பேரியற்கையான வித்தியா தத்துவத்திலிருந்து வெளிப்பட்ட தோற்றமான பிரகிருதி ஆகும். பிரகிருதி மாயை தமிழில் மூலப்பகுதி எனப்படும். நம்முடைய உலகம் தோன்றுவது பிரகிருதி மாயையிலிருந்துதான். பிரகிருதியானது புருஷன் (ஆன்மா) எனப்படும் பிரக்ஞையின் சேர்க்கையால் சலனமடைந்து, அதன் ஆற்றல் உலகமாக உருவெடுக்கிறது. இதுதான் சிருஷ்டி, அதாவது படைப்பு. பிரகிருதி சாத்துவிகம், இராசதம், தாமதம் என்ற முக்குண வடிவானது. சத்வம் என்பது நடுநிலை வகிப்பது. ரஜஸ் என்பது விரிவடைவது, செயல்படுவது. தமஸ் என்பது அதற்கு எதிரிடையாக சுருங்குவது மற்றும் முடங்குவது. பிரகிருதியின் காரியமாகத் தோன்றும் தனு கரண புவன போகங்களும் முக்குணமயமானது. இவற்றில் பொருந்துகிற பிரகிருதி உயிர்களது உள்ளத்தை முக்குணவயப்படுத்தி இருபத்து நான்கு தத்துவங்களாக விரிந்து ஆன்மாக்களோடு பொருந்தி இன்ப துன்ப மயக்கவுணர்வுகளான உலக நுகர்ச்சியைத் தருகிறது. பிரகிருதி என்பது புருஷனின் அனுபவத்துக்கான ஒரு களமாக இருக்கிறது. அதே நேரத்தில் அனுபவத்துக்காக பிரகிருதியுடன் இணைய...

தத்துவங்கள் என்றால் என்ன : பகுதி 2

பிரபஞ்சத்தை ஆக்கும் மூலப்பொருளகளை வகைப்படுத்தி மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. தத்துவங்கள் என்றால் என்ன : பகுதி 1 ல் சிவ தத்துவத்தை அறிந்து கொண்டோம். முப்பத்தாறு தத்துவங்களின் இரண்டாவது பகுதியாகிய வித்தியாதத்துவத்தை இங்கு காண்போம். வித்தியா தத்துவம் வித்தியா தத்துவங்கள் சுத்த மாயை அல்லது விந்து என வழங்கப்படும் மகாமாயையுள் ஆணவ மலத்தோடு கலந்து அடங்கி நிற்பது. சுத்த மாயையுடன் ஆணவ மலம் கலப்பதால் சுத்த-அசுத்த (மிச்சிர) தத்துவங்களாக, பிரபஞ்சத்தின் அடிப்படை காரிய பொருளாக வித்தியா தத்துவங்கள் விளங்குகின்றன. பிரபஞ்சத்திலும் அதில் வாழும் மற்ற உயிரினங்கள் உள்ளும் ஆத்மா செயற்பாட்டுக்கான கருவிகளாக பொருந்தி இருக்க உதவுகின்றன. வினையிற்கட்டுண்ட ஆன்மாக்களுக்கு கன்மத்தை நுகர்வதற்கு களம் அமைப்பதோடு, அதை நுகர்வதற்கான காலம், நியதி, கலை, வித்தை, அராகம் என்னும் ஐந்து தத்துவங்கள் ஆன்மாவை எப்பொழுதும் நீங்காது பஞ்ச கஞ்சுகங்களாக சட்டைபோல் ஒன்றாய் ஒட்டி, போகங்களை அனுபவிக்கும் செயற்பாட்டுக் கருவிகளாக வித்தியா தத்துவங்கள் விளங்குகின்றன. ஆணவ மலத்துடன் கூடிய அசுத்த மாயை வினை விளைக்கின்ற காலம் எனும் ந...

தத்துவங்கள் என்றால் என்ன : பகுதி 1

சிவாகமங்கள் கூற்றுப்படி பரசிவம் ஒன்றே மெய்ப்பொருள். அது சத்-சித்-ஆனந்த (உண்மை, அறிவு, இன்பம்) வடிவாக இருக்கிறது. முழுமுதற் பொருளாகிய கடவுள் பொருளால் ஒன்றேயாயினும், சிவம், சக்தி எனத் தன்மையால் இரண்டாய் நிற்கும். எல்லாவற்றிற்கும் மேலான தன் சொரூப நிலையில் நிற்கும்பொழுது சிவம் பராபரம் என வழங்கப்படும். சிவம் பராபரமாய் நிற்கும்பொழுது, அதன் சக்தி பராபரை எனப்படும். பரப்பிரம்மத்தின் ஆற்றலால் உலகமும்(சகம்), உயிரும்(சீவன்) தோற்றத்திற்கு வருகின்றன. இறைவனுடைய பேரருளே படைப்புத் தொழிலாக, சக்தியின் மூலமாகப் விளையாட்டாக பரிணமிக்கின்றது. இந்த திருவருள் விளையாடல் எண்ணிலா உயிர்களின் பக்குவ நிலைக்கேற்ப அவற்றிற்கு வேறு வேறு வினைகளையும் தரும்; உலகெங்கும் பரவி உயிருக்குயிராய் நின்று, உயிருக்கு அறிவையும், ஆற்றலையும் அளித்து, படிப்படியாக உயிர்களைப் பக்குவமடையச் செய்து, வீட்டுப் பேற்றினையும் வழங்கும். உலகத் தோற்றத்தின் தொடக்க நிலையில் இயற்கை நிலையிலுள்ள பராபர சிவம், உயிர்களை உய்விக்க வேண்டும் என்கிற விருப்பத்துடன் ஆதிசிவனாய் நின்று தனது ஆற்றலாகிய ஆதிசக்தியின் வடிவமான மாயா சக்தியால் இந்த எண்ணத்தை நிறைவேற...

தினை ஏத்தி

தினைவேத் தியன்புசெய் வேந்தன் பதாம்புயத் திற்பத்திபுந் தினைவேத் தியமுகந் தேற்றினர் மாற்றினர் பாற்றினந்தீத் தினைவேத் தியர்நெறி செல்லாத விந்தியத் தித்தியினத் தினைவேத் தியங்குயிர் கூற்றாரி லூசிடுஞ் சீயுடம்பே Paraphrase தினை ஏத்தி அன்பு செய் வேந்தன் பதாம்புயத்தில் ( thinai eththi anbu sey vendhan pathaambuyaththil ) : At the lotus feet of my emperor who loves Valli, the lass who guards the Thinai fields, தினைப்புனம் காவல் காக்கும் வள்ளி மாதாவை காதல் புரியும் எம் அரசனின் திருவடி கமலங்களில்

நாத விந்து

ராகம் : செஞ்சுருட்டி தாளம்: 1½ + 4 + 1½ + 1 (8) நாத விந்துக லாதீ நமோநம வேத மந்த்ரசொ ரூபா நமோநம ஞான பண்டித ஸாமீ நமோநம வெகுகோடி நாம சம்புகு மாரா நமோநம போக அந்தரி பாலா நமோநம நாக பந்தம யூரா நமோநம பரசூரர் சேத தண்டவி நோதா நமோநம கீத கிண்கிணி பாதா நமோநம தீர சம்ப்ரம வீரா நமோநம கிரிராஜ தீப மங்கள ஜோதீ நமோநம தூய அம்பல லீலா நமோநம தேவ குஞ்சரி பாகா நமோநம அருள்தாராய்

ஏறுமயில்

ஏறுமயி லேறிவிளை யாடுமுக மொன்றே ஈசருடன் ஞானமொழி பேசுமுக மொன்றே கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுக மொன்றே குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே மாறுபடு சூரரை வதைத்தமுக மொன்றே வள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றே ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும் ஆதியரு ணாசல மமர்ந்த பெருமாளே.

தீப மங்கள ஜோதி நமோநம

Image
Shri T.S.Narayanan is one of the important venerable veterans of Bangalore Thiruppugazh Anbargal group who have made immeasurable contributions to the growth of the Thiruppugazh movement in Bangalore. A spiritual person that he is, he is immensely knowledgeable about Thiruppugazh. These days, advancing age prevents him from participating in various pujas and bhajans. However, he has happily shared with me many of his writings on Thiruppugazh and I take great pleasure in publishing them here. ஆண்டவனின் ஜோதி ஸ்வரூபத்தை கற்பூர ஹாரத்தி அளித்து போற்றுகிறோம். கற்பூரம் வெள்ளையானது. அது சுத்த தத்துவமுள்ள ஆன்மாவைக் குறிக்கிறது. கற்பூரத்தை ஏற்றியவுடன் அது தீபம் போல் எரிவது ஞானாக்கினியால் பாபம் நீங்கப் பெற்ற ஆத்மா புனிதம் பெற்று நிற்பதை குறிக்கும். கற்பூரம் இறுதியில் ஒன்றும் இல்லாது கரைந்து போவது போல ஜீவாத்மாவும் இறைவனுடைய அருட்ஜோதியில் கரைந்து அதனுடன் ஒன்று பட வேண்டும் என்பதற்காக கற்பூர ஆரத்தி எடுத்து 'தீப மங்கள ஜோதி நமோ நம' என்று பாடுகிறோம். ஞான ஒளி ஈந்தருளும் பெருமானை ' நிர்த்த...

How Sundaramoorthy Nayanar Brought A Dead Boy Back To Life

The story of how Saint Sundarar brought back to life an eight-year-old boy who had died a few years ago is one of the stories that appears in the Thiruvilaiyadal Puranam. When Sundarar was going to the temple at ThiruPukkoliyur (now known as Avinaasi), near present-day coimbatore, he heard two discordant notes coming from opposite houses – one echoing joy and the other sorrow. When Sundarar enquired, he found out that each of the houses had a son. The two sons had been friends and had gone to the river together. But while one boy was swallowed by a crocodile, the other boy had survived. And after three years, the parents of the surviving boy were happily conducting Upanayanam (Thread ceremony) for their son, while the parents of the dead were wailing over their departed son. Hearing this story, Sundarar went to the place where the boy was swallowed by the crocodile. He sang a pathigam (poem in praise of a deity consisting generally of ten stanzas ), worshiping Lord Shiva to resurrect...