168. எழுகு நிறை நாபி
ராகம் : ஹிந்தோளம் தாளம் : ஆதி எழுகுநிறை நாபி அரிபிரமர் சோதி யிலகுமரன் மூவர் முதலானோர் இறைவியெனு மாதி பரைமுலையி னூறி யெழுமமிர்த நாறு கனிவாயா புழுகொழுகு காழி கவுணியரில் ஞான புநிதனென ஏடு தமிழாலே புனலிலெதி ரேற சமணர்கழு வேற பொருதகவி வீர குருநாதா