423. அறிவிலாப் பித்தர்


ராகம்: சாரங்காஅங்கதாளம் (5½)
2½ + 1½ + 1½
அறிவிலாப் பித்த ருன்ற னடிதொழாக் கெட்ட வஞ்சர்
அசடர்பேய்க் கத்தர் நன்றியறியாத
அவலர்மேற் சொற்கள் கொண்டு கவிகளாக் கிப்பு கழ்ந்து
அவரைவாழ்த் தித்தி ரிந்து பொருள்தேடிச்
சிறிதுகூட் டிக்கொ ணர்ந்து தெருவுலாத் தித்தி ரிந்து
தெரிவைமார்க் குச்சொ ரிந்துஅவமேயான்
திரியுமார்க் கத்து நிந்தை யதனைமாற் றிப்ப ரிந்து
தெளியமோ க்ஷத்தை யென்றுஅருள்வாயே
இறைவர்மாற் றற்ற செம்பொன் வடிவம்வேற் றுப்பி ரிந்து
இடபமேற் கச்சி வந்தஉமையாள்தன்
இருளைநீக் கத்த வஞ்செய் தருளநோக் கிக்கு ழைந்த
இறைவர்கேட் கத்த குஞ்சொ லுடையோனே
குறவர்கூட் டத்தில் வந்து கிழவனாய்ப் புக்கு நின்று
குருவியோட் டித்தி ரிந்ததவமானைக்
குணமதாக் கிச்சி றந்த வடிவுகாட் டிப்பு ணர்ந்த
குமரகோட் டத்த மர்ந்தபெருமாளே.

Learn The Song



Raga Saranga (Janyam of 65th mela Kalyani)

Arohanam: S P M2 P D2 N3 S    Avarohanam: S D2 P M2 R2 G3 M1 R2 S

Paraphrase

அறிவிலாப் பித்தர் உன்றன் அடிதொழாக் கெட்ட வஞ்சர் (aRivilAp piththar undran adi thozhAk ketta vanjar) : Stupid fools, evil people who never worship Your feet, மெய்யறிவு இல்லாத பித்தர், உன் திருவடியைத் தொழாத கெட்ட வஞ்சகர்,

அசடர் பேய்க் கத்தர் (asadar pEyk kaththar) : idiots, indulging in devilish deeds, மூடர்கள், பேய்த்தன்மை கொண்ட செய்கையர், பேய்க் க(ர்)த்தர் = மூர்க்கத்தனமான செயல்களை செய்பவர்;

நன்றி அறியாத அவலர் (nandri aRiyAdha avalar) : and thankless miserable ones நன்றி இல்லாத பயனற்றவர்,

மேற் சொற்கள் கொண்டு கவிகளாக்கிப் புகழ்ந்து (mER soRkaL koNdu kavigaL Akki pugazhndhu) : these are the people on whom I wasted words by composing poems praising them! ஆகியோர் மீது வார்த்தைகளால் பாடல்கள் புனைந்து அவர்களைப் புகழ்ந்தும்,

அவரை வாழ்த்தித் திரிந்து பொருள் தேடி (avarai vAzhththith thirindhu poruL thEdi) : I went on heaping plaudits on them to make money. அவர்களை வாழ்த்தியும், அதன் பொருட்டு அலைந்து திரிந்து பொருள் சம்பாதித்தும்,

சிறிது கூட்டிக் கொணர்ந்து தெருவுலாத்தித் திரிந்து (siRidhu kUttik koNarndhu theru ulAththi thirindhu) : After collecting some amount, I started wandering in the streets சிறிதளவு சேகரித்த பொருளைக் கொண்டுவந்து, பொது மகளிர் வாழும் தெருக்களில் உலாவித் திரிந்து,

தெரிவைமார்க்குச் சொரிந்து அவமே யான் (therivaimArkku chorindhu avamEyAn) : in search of harlots on whom to shower all that money. I wasted my life. அப் பெண்களுக்கே அந்தப் பொருளை நிரம்பவும் வாரிக் கொடுத்து இப்படி காலத்தை நான் வீணாகக் கழித்துத்

திரியு மார்க்கத்து நிந்தை அதனை மாற்றி பரிந்து (thiriyu mArggaththu nindhai adhanai mAtrip parindhu) : Can You kindly help erase the resultant infamy that attaches to me, திரியும் போக்கினால் எனக்கு வருகின்ற அபவாதத்தை அகற்றி,

தெளிய மோக்ஷத்தை என்று அருள்வாயே (theLiya mOkshaththai endru aruLvAyE) : and dispel my disillusionment? When will You grant me liberation? அன்பு கூர்ந்து, நான் தெளிவு பெறுவதற்கான மோக்ஷ இன்பத்தை என்று எனக்கு அருளப் போகிறாய்?

இறைவர் மாற்றற்ற செம்பொன் வடிவம் வேற்றுப் பிரிந்து (iRaivar mAtratra sempon vadivam vEtrup pirindhu) : She separated Herself from Her Oneness with Lord SivA's pure golden form, சிவ பெருமானது மாற்றறியாத செம்பொன் வடிவம் வேறாகும்படி பிரிந்து

இடபமேற் கச்சி வந்த (idabamEr kachchi vandha) : mounted the Great Bull (Rishabam) and reached Kachchi (kAnjeepuram). ரிஷப வாகனத்தில் ஏறி காஞ்சீபுரத்துக்கு வந்த

உமையாள் தன் இருளை நீக்கத் தவம் செய்து அருள நோக்கிக் குழைந்த (umaiyAL than iruLai neekkath thavansey dharuLanOkkik kuzhaindha) :

She was UmA PArvathi who did penance (for having playfully closed the Lord's eyes) to get rid of her delusion of ignorance. He regarded Her penance with melting compassion. தன்னால் இறைவன் கண்மலரை மூடிய காரணமாக உண்டாகிய இருள் தொலையும் பொருட்டு தவம் செய்து உமையவள் விளங்க, அந்தத் தவத்தைப் பார்த்து அருளோடு மனம் குழைந்த இறைவர்;
ஏகாம்பரநாதர் கோயிலின் மூலஸ்தானத்தில் இருக்கும் சிவலிங்கம் காமாட்சி அம்பாள் பூஜித்த மணல் லிங்கமே ஆகும். அம்பாள் கட்டியணைத்தற்கான தடம் இன்னும் லிங்கத்தில் உள்ளது.

இறைவர் கேட்கத் தகுஞ்சொல் உடையோனே (iRaivar kEtkath thagunsol udaiyOnE) : That Lord SivA listened to Your worthy exposition of the VEdAs. கேட்டு மகிழத்தக்கதான உபதேசச் சொல்லை உடையவனே,

குறவர் கூட்டத்தில் வந்து கிழவனாய்ப் புக்கு நின்று (kuRavar kUttaththil vandhu kizhavanAy pukku nindru) : You appeared in the disguise of an old man among the tribe of hunters (at VaLLimalai); குறவர்களின் கூட்டத்துக்கு இடையில் வந்து, ஒரு கிழவன் வேடத்தைக் காட்டிப் புகுந்து நின்று,

குருவி ஓட்டித் திரிந்த தவமானை (kuruvi Ottiththi rindha thavamAnai) : there, You met the deer-like damsel, VaLLi, who was busy guarding the millet-field and driving away the birds; தினைப்புனத்தில் குருவிகளை ஓட்டித் திரிந்த தவம் நிறைந்த மானாம் வள்ளியை

குணமதாக்கிச் சிறந்த வடிவுகாட்டிப் புணர்ந்த (guNamadhAkki chiRandha vadivukAttip puNarndha) : and You enticed her completely, revealed to her Your Divine form and eventually married her. தன் வசப்படுத்தி, உன் சிறந்த தெய்வ வடிவம் காட்டி, அவளை மணந்தவனே,

குமரகோட்டத்து அமர்ந்த பெருமாளே.(kumarakOttath amarndha perumALE.) : You chose KumarakkOttam (kAnjeepuram) as Your abode, Oh Great One! குமரக்கோட்டம் என்ற காஞ்சீபுரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.

தல சிறப்பு: காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதர் ஆலயத்துக்கும், காமாக்ஷியம்மன் ஆலயத்துக்கும் நடு மத்தியில் குமரக்கோட்டம் என்கிற சுப்பிரமணியர் ஆலயம் இருக்கிறது. கச்சியப்ப சிவாச்சாரியார் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் "கந்த புராணத்தை' இயற்றினார். பின் அருகில் உள்ள குமரகோட்டம் முருகன் கோயிலில் அரங்கேற்றம் செய்தார்.

சிவபெருமான் கட்டளைப்படி அவர் அளித்த இரண்டு படி நெல்லைக் வைத்து பார்வதி தேவியாகிய காமாட்சி காமகோட்டத்தில் 32 அறங்களைச் செய்தார்.

மேலும், சுந்தரமூர்த்தி நாயனார் சங்கிலி நாச்சியாரை மணந்த போது "உன்னைப் பிரியேன்" என்று சிவனை சாட்சியாக வைத்து சத்தியம் செய்தார். அந்த சத்தியத்தை மீறியதால் அவர் கண் பார்வை இழந்தார். இழந்த பார்வையில் இடக்கண் பார்வையை சுந்தரர் இங்குப் பதிகம் பாடி பெற்றதாக வரலாறு.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே