Posts

Showing posts from February, 2013

49. மூளும் வினை

ராகம் : சங்கரானந்தப்ரியா அங்க தாளம் (1½ + 2½ + 2½ + 2½) மூளும்வினை சேர மேல்கொண்டி டாஐந்து பூதவெகு வாய மாயங்கள் தானெஞ்சில் மூடிநெறி நீதி யேதுஞ்செ யாவஞ்சி யதிபார மோகநினை வான போகஞ்செய் வேனண்டர் தேடஅரி தாய ஞேயங்க ளாய்நின்ற மூலபர யோக மேல்கொண் டிடாநின்ற துளதாகி நாளுமதி வேக கால்கொண்டு தீமண்ட வாசியன லூடு போயொன்றி வானிங்க ணாமமதி மீதி லூறுங்க லாஇன்ப அமுதூறல் நாடியதன் மீது போய்நின்ற ஆநந்த மேலைவெளி யேறி நீயின்றி நானின்றி நாடியினும் வேறு தானின்றி வாழ்கின்ற தொருநாளே

48. மூப்புற்றுச் செவி

ராகம்: மாயாமாளவ கௌளை தாளம்: ஆதி (2 களை) மூப்புற் றுச்செவி கேட்பற் றுப்பெரு மூச்சுற் றுச்செயல் தடுமாறி மூர்க்கச் சொற்குரல் காட்டிக் கக்கிட மூக்குக் குட்சளி யிளையோடும் கோப்புக் கட்டியி னாப்பிச் செற்றிடு கூட்டிற் புக்குயி ரலையாமுன் கூற்றத் தத்துவ நீக்கிப் பொற்கழல் கூட்டிச் சற்றருள் புரிவாயே

47. முனைச்சங் கோலிடு (அனிச்சங் கார் முகம்)

ராகம்: காபி தாளம்: 1½ + 6 அனிச்சங் கார்முகம்....நெறிபாரா வினைச்சண் டாளனை வீணணை நீணிதி தனைக்கண் டாணவ மானநிர் மூடனை விடக்கன் பாய்நுகர் பாழனை யோர்மொழி பகராதே விகற்பங் கூறிடு மோகவி காரனை அறத்தின் பாலொழு காதமு தேவியை விளித்துன் பாதுகை நீதர நானருள் பெறுவேனோ

46. முந்துதமிழ் மாலை

ராகம் : செஞ்சுருட்டி அங்க தாளம் (7½) 1½ + 2½ + 2 + 1½ முந்துதமிழ் மாலை கோடிக் கோடி சந்தமொடு நீடு பாடிப் பாடி முஞ்சர்மனை வாசல் தேடித் தேடி யுழலாதே முந்தைவினை யேவ ராமற் போக மங்கையர்கள் காதல் தூரத் தேக முந்தடிமை யேனை யாளத் தானு முனைமீதே திந்திதிமி தோதி தீதித் தீதி தந்தன தான தானத் தான செஞ்செணகு சேகு தாளத் தோடு நடமாடுஞ் செஞ்சிறிய கால்வி சாலத் தோகை துங்கஅநு கூல பார்வைத் தீர செம்பொன்மயில் மீதி லேயெப் போது வருவாயே

45. மனத்தின் பங்கு

ராகம்: பேகடா மிஸ்ர சாபு (1½ + 2) மனத்தின்பங் கெனத்தங்கைம் புலத்தென்றன் குணத்தஞ்சிந் த்ரியத்தம்பந் தனைச்சிந்தும் படிகாலன் மலர்ச்செங்கண் கனற்பொங்குந் திறத்தின்தண் டெடுத்தண்டங் கிழியத்தின்றிங் குறத்தங்கும் பலவோரும் எனக்கென்றிங் குனக்கென்றங் கினத்தின்கண் கணக்கென்றன் றிளைத்தன்புங் கெடுத்தங்கங் கழிவாமுன் இசைக்குஞ்செந் தமிழ்க்கொண்டங் கிரக்கும்புன் றொழிற்பங்கங் கெடத்துன்பங் கழித்தின்பந் தருவாயே

44. மங்கை சிறுவர்

ராகம் : ஹம்சானந்தி தாளம் : ஆதி திஸ்ர நடை(12) மங்கை சிறுவர் தங்கள் கிளைஞர் வந்து கதற வுடல்தீயின் மண்டி யெரிய விண்டு புனலில் வஞ்ச மொழிய விழஆவி வெங்கண் மறலி தன்கை மருவ வெம்பி யிடறு மொருபாச விஞ்சை விளையு மன்று னடிமை வென்றி யடிகள் தொழவாராய்

43. பூரண வார கும்ப

Image
ராகம் : சங்கரானந்தப்பிரியா தாளம் : 2 + 1½ + 1½ பூரண வாரகும்ப சீதப டீரகொங்கை மாதர் விகாரவஞ்ச லீலையி லேயுழன்று போதவ மேயிழந்து போனது மானமென்ப தறியாத பூரிய னாகிநெஞ்சு காவல்ப டாதபஞ்ச பாதக னாயறஞ்செ யாதடி யோடிறந்து போனவர் வாழ்வுகண்டு மாசையி லேயழுந்து மயல்தீரக் காரண காரியங்க ளானதெ லாமொ ழிந்து யானெனு மேதைவிண்டு பாவக மாயிருந்து காலுட லூடியங்கி நாசியின் மீதிரண்டு விழிபாயக் காயமு நாவுநெஞ்சு மோர்வழி யாகஅன்பு காயம் விடாம லுன்ற னீடிய தாள்நினைந்து காணுதல் கூர்த வஞ்செய் யோகிக ளாய்விளங்க அருள்வாயே

Story of Gajendra and Lord Vishnu

Image
To read the story of Gajendran in Tamil, click the underlined link. King Indradyumna was a great devotee of Lord Vishnu who renounced royal life after entrusting the kingdom to his ministers and retired to the forest where he remained absorbed in the meditation of Lord Vishnu. One day, Sage Agastya came to see the king but the king did not notice him. The ascetic became furious and cursed to turn into a mad elephant. Realizing what had happened, Indradyumna begged for forgiveness. The Sage mitigated the impact of the curse stating that as ‘Elephant Gajendra’ he would continue to remain devout to Lord Vishnu and one day, by the Lord's grace, he'd be liberated. Actually, Sage Agastya had noticed that the great King, despite the greatness of his good deeds, still has traces of Ahamkara in him. He felt that the king had to be taught the hard way that self is to be renounced and surrendered to the Lord for attaining moksha. Gajendra ruled over all the other elephants in

42. புகரப் புங்க

ராகம் : ரஞ்சனி ஆதி (திஸ்ர நடை) புகரப் புங்கப் பகரக் குன்றிற் புயலிற் றங்கிப் பொலிவோனும் பொருவிற் றஞ்சச் சுருதிச் சங்கப் பொருளைப் பண்பிற் புகல்வோனும் திகிரிச் செங்கட் செவியிற் றுஞ்சத் திகிரிச் செங்கைத் திருமாலும் திரியப் பொங்கித் திரையற் றுண்டுட் டெளிதற் கொன்றைத் தரவேணும்

41. பரிமள களப

ராகம் : தேவகாந்தாரி தாளம் : சதுஸ்ர அட (12) பரிமள களபசு கந்தச் சந்தத் தனமானார் படையம படையென அந்திக் குங்கட் கடையாலே வரியளி நிரைமுரல் கொங்குக் கங்குற் குழலாலே மறுகிடு மருளனை யின்புற் றன்புற் றருள்வாயே