Posts

Showing posts from September, 2015

மயில் விருத்தம் – 1: சந்தான புஷ்ப

ராகம் : ஹம்சத்வனி தாளம் : கண்டசாபு சந்தான புஷ்பபரி மளகிண் கிணீ முகச் சரணயுக ளமிர்தப்ரபா சந்த்ரசே கரமூஷி காரூட வெகுமோக சத்யப்ரி யாலிங்கனச் சிந்தா மணிக்கலச கரகட கபோலத்ரி யம்பக விநாயகன்முதற் சிவனைவலம் வருமளவில் உலகடைய நொடியில்வரு சித்ரக் கலாபமயிலாம் மந்தா கிநிப்பிரப வதரங்க விதரங்க வனசரோ தயகிர்த்திகா வரபுத்ர ராஜீவ பரியங்க தந்திய வராசலன் குலிசாயுதத் திந்த்ராணி மங்கில்ய தந்து ரக்ஷாபரண இகல்வேல் விநோதன் அருள்கூர் இமையகிரி குமரிமகன் ஏறுநீ லக்ரீவ ரத்னக் கலாப மயிலே.

வேல் விருத்தம் – 1: மகரம் அளறிடை

ராகம் : ஹம்சத்வனி தாளம் : கண்டசாபு மகரம்அள றிடைபுரள உரககண பணமவுலி மதியும்இர வியுமலையவே வளரெழிலி குடருழல இமையவர்கள் துயரகல மகிழ்வுபெறு மறுசிறையவாஞ் சிகரவரை மனைமறுகு தொறுநுளைய மகளிர்செழு செநெல்களொடு தரளம் இடவே செகசிரப கிரதிமுதல் நதிகள்கதி பெற உததி திடர்அடைய நுகரும் வடிவேல் தகரமிரு கமதமென மணமருவு கடகலுழி தருகவுளும் உறுவள் எயிறுந் தழைசெவியும் நுதல்விழியும் உடையஒரு கடவுள்மகிழ் தருதுணைவன் அமரர்குயிலுங் குகரமலை எயினர்குல மடமயிலும் எனஇருவர் குயமொடமர் புரியுமுருகன் குமரன்அறு முகன்எதிரும் விருதுநிசி சரர்அணிகள் குலையவிடு கொடியவேலே.

மயில் விருத்தம் காப்பு (சந்தன பாளித)

ராகம் : நாட்டை தாளம் : ஆதி சந்தன பாளித குங்கும புளகித சண்பக கடகபுயச் சமர சிகாவல குமர ஷடாநந சரவண குரவணியுங் கொந்தள பாரகி ராதபு ராதநி கொண்க எனப்பரவுங் கூதள சீதள பாதம் எனக்கருள் குஞ்சரி மஞ்சரிதோய் கந்தக்ரு பாகர கோமள கும்ப கராதிப மோகரத கரமுக சாமர கர்ண விசால கபோல விதானமதத் தெந்த மகோதர மூஷிக வாகன சிந்துர பத்மமுகச் சிவசுத கணபதி விக்ந விநாயக தெய்வ சகோதரனே.

11. வீரவாள் வகுப்பு

ராகம் : பீம்பளாஸ் தாளம் : கண்டசாபு (2½) பூவுளோ னுக்குமுயர் தேவர்கோ னுக்கும்எழு பூவில்யா வர்க்கும்வரு துன்புதீர்த் திடுமே பூதசே னைக்குள் ஒரு கோடிசூர் யப்பிரபை போலமா யக்கரிய கங்குல்நீக் கிடுமே பூதிபூ சிப்பரமர் தோலைமேல் இட்டதொரு போர்வைபோல் நெட்டுறைம ருங்குசேர்த் திடுமே போரிலே நிர்த்தம்இடு வீரமா லக்ஷ்மிமகிழ் பூசைநே சித்துமலர் தும்பைசாத் திடுமே பாவரு பக்கொடிய சூரனார் பெற்றபல பாலர்மா ளத்தசைகள் உண்டுதேக் கிடுமே பாநுகோ பப்பகைஞன் மேனிசோ ரக்குருதி பாயவே வெட்டியிரு துண்டமாக் கிடுமே பாடுசேர் யுத்தகள மீதிலே சுற்றுநரி பாறுபேய் துய்த்திடநி ணங்களூட் டிடுமே பாடிஆ டிப்பொருத போரிலே பத்திரக பாலிசூ லப்படையை வென்றுதாக் கிடுமே ஆவலா கத்துதிசெய் பாவலோர் மெய்க்கலிக ளாமகோ ரக்களைக ளைந்துநீக் கிடுமே யாருமே அற்றவன்என் மீதொர்ஆ பத்துறவ ராமலே சுற்றிலும்இ ருந்துகாத் திடுமே ஆடல்வேள் நற்படைகள் ஆணையா வுக்குமுதல் ஆணையா வைத்துவலம் வந்துபோற் றிடுமே ஆலகா லத்தைநிகர் காலசூ லத்தையும றாதபா சத்தையும்அ ரிந்துபோட் டிடுமே மேவலார் முப்புரமும் நீறவே சுட்டஒரு மேருவாம் விற்பரமர் தந்தபாக் கியவான

12. பழனி வகுப்பு

ராகம் : மத்யமாவதி தாளம் : சதுச்ர துருவம் கண்ட நடை (35) எந்தவினை யும்பவமும் எந்தவிட மும்படரும் எந்தஇக லும்பழியும் எந்தவழு வும்பிணியும் எந்தஇகழ் வுங்கொடிய எந்தவசி யுஞ்சிறிதும் அணுகாமலே எந்தஇர வுந்தனிமை எந்தவழி யும்புகுத எந்தஇட முஞ்சபையில் எந்தமுக மும்புகலும் எந்தமொழி யுந்தமிழும் எந்தவிசை யும்பெருமை சிதறாமலே வந்தனைசெய் துன்சரண நம்புதல்பு ரிந்தஅருள் வந்தநுதி னந்தனிலும் நெஞ்சில்நினை வின்படிவ ரந்தரஉ வந்தருள்இ தம்பெறுவ தன்றிநெடு வலைவீசியே வஞ்சவிழி சண்டன்உறு கின்றபொழு துங்குமர கந்தஎன நன்கறைய வுந்தெளிவு தந்துயிர்வ ருந்துபய முந்தனிமை யுந்தவிர அஞ்சலென வரவேணுமே தந்தனன தந்தனன டிண்டிகுடி டிண்டிகுடி குண்டமட குண்டமட மண்டமென நின்றுமுர சந்திமிலை பம்பைதுடி திண்டிமமு ழங்கும்ஒலி திசைவீறவே தண்டஅமர் மண்டசுரர் மண்டைநிண மென்றலகை யுண்டுமிழ்தல் கண்டமரர் இந்திரன்வ ணங்குபத தண்டைசிறு கிங்கிணிபு லம்பிடவ ரும்பவனி மயில்வாகனா செந்தளிரை முந்துபடம் என்றுளம ருண்டுநிறை சந்தனவ னங்குலவு மந்திகுதி கொண்டயல்செ றிந்தகமு கின்புடைப துங்கிடவ ளைந்துநிமிர் மடல்சாடவே சிந்தியஅ ரம்பைபல வின்கனியில்

6. வேடிச்சி காவலன் வகுப்பு

ராகம் : நீலாம்பரி கண்டசாபு (2½) உதரகம லத்தினிடை முதியபுவ னத்ரயமும் உகமுடிவில் வைக்கும்உமை யாள் பெற்ற பாலகனும் உமிழ்திரை பரப்பிவரு வெகுமுக குலப்பழைய உதகமகள் பக்கல்வரு சோதிச் சடானனும் உவகையொடு கிர்த்திகையர் அறுவரும் எடுக்கஅவர் ஒருவரொரு வர்க்கவணொர் ஓர்புத்ரன் ஆனவனும் உதயரவி வர்க்கநிகர் வனகிரண விர்த்தவிதம் உடையசத பத்ரநவ பீடத்து வாழ்பவனும் உறைசரவ ணக்கடவுள் மடுவிலடர் வஜ்ரதர னுடையமத வெற்புலைய வேதித்த வீரியனும் உறைபெற வகுத்தருணை நகரின்ஒரு பத்தனிடும் ஒளிவளர் திருப்புகழ்ம தாணிக்ரு பாகரனும் உரககண சித்தகண கருடகண யக்ஷகணம் உபநிடம் உரைத்தபடி பூசிக்கும் வானவனும் ஒருவனும் மகிழ்ச்சிதரு குருபரனும் உத்தமனும் உபயமுறும் அக்நிகர மீதிற்ப்ர பாகரனும் அதிமதுர சித்ரகவி நிருபனும் அகத்தியனும் அடிதொழு தமிழ்த்ரயவி நோதக் கலாதரனும் அவரைபொரி யெட்பயறு துவரைஅவல் சர்க்கரையொ டமுதுசெயும் விக்நபதி யானைச் சகோதரனும் அவுணர்படை கெட்டுமுது மகரசல வட்டமுடன் அபயமிட விற்படைகொ டாயத்த மானவனும் அருணையில் இடைக்கழியில் உரககிரி யிற்புவியில் அழகிய செருத்தணியில் வாழ்கற்ப காடவியில் அறிவும்அறி தத்துவமும் அபரி

9. கடைக்கணியல் வகுப்பு

ராகம் : ஹிந்தோளம் தாளம்: ஆதி திச்ர நடை (12) அலைகடல் வளைந்து டுத்த எழுபுவி புரந்தி ருக்கும் அரசென நிரந்த ரிக்க வாழலாம் அளகைஅர சன்த னக்கும் அமரரர சன்த னக்கும் அரசென அறஞ்செ லுத்தி யாளலாம் அடைபெறுவ தென்று முத்தி யதிமதுர செந்த மிழ்க்கும் அருள்பெற நினைந்து சித்தி யாகலாம் அதிரவரும் என்று முட்ட அலகில்வினை சண்டை நிற்க அடல்எதிர் புரிந்து வெற்றி யாகலாம் இலகிய நலஞ்செய் புட்ப கமுமுடல் நிறம் வெளுத்த இபஅர செனும்பொ ருப்பும் ஏறலாம் இருவரவர் நின்றி டத்தும் எவர்எவர் இருந்தி டத்தும் ஒருவன்இவன் என்று ணர்ச்சி கூடலாம் எமபடர் தொடர்ந்த ழைக்கில் அவருடன் எதிர்ந்துள் உட்க இடிஎன முழங்கி வெற்றி பேசலாம் இவையொழிய வும்ப லிப்ப தகலவிடும் உங்கள் வித்தை யினையினி விடும்பெ ருத்த பாருளீர் முலையிடை கிடந்தி ளைப்ப மொகுமொகென வண்டி ரைப்ப முகையவிழ் கடம்ப டுத்த தாரினான் முதலிபெரி யம்ப லத்துள் வரையசல மண்ட பத்துள் முநிவர்தொழ அன்று நிர்த்தம் ஆடினான் முனைதொறு முழங்கி யொற்றி முகிலென இரங்க வெற்றி முறைநெறி பறந்து விட்ட கோழியான் முதியவுணர் அன்றுபட்ட முதியகுடர் நன்று சுற்று முதுகழுகு பந்தர் இட்ட வேலினான

8. புய வகுப்பு

ராகமாலிகை அங்கதாளம் (26) 2 + 1½ + 2 + 4 + 1½ + 1½ + 2 + 2 + 1½ + 1½ + 1½ + 2½ + 2½ ராகம் : யமுனா கல்யாணி வசைதவிர் ககன சரசிவ கரண மகாவ்ருத சீல சால வரமுநி சித்தரை அஞ்சல் அஞ்சல் என்று வாழ்வித் துநின்றன மணிவட மழலை உடைமணி தபனிய நாணழ காக நாடி வகைவகை கட்டும ருங்கு டன்பொ ருந்து ரீதிக் கிசைந்தன வருணித கிரண வருணித வெகுதரு ணாதப சோதி யாடை வடிவுபெ றப்புனை திண்செ ழுங்கு றங்கின் மேல்வைத் தசைந்தன வளைகடல் உலகை வலம்வரு பவுரி வினோதக லாப கோப மயில்வத னத்துவி ளங்கும் அங்கு சங்க டாவிச் சிறந்தன வரைபக நிருதர் முடிபக மகர மகோததி தீயின் வாயின் மறுகவி திர்த்தயில் வென்றி தங்கு துங்க வேலைப் புனைந்தன மதியென உதய ரவியென வளைபடு தோல்வி சால நீல மலிபரி சைப்படை கொண்டு நின்று ழன்று சாதிக்க முந்தின மனகுண சலன மலினமில் தூியஅ தீதசு காநு பூதி மவுனநி ரக்ஷர மந்தி ரம்பொ ருந்தி மார்பிற் றிகழ்ந்தன வகைவகை குழுமி மொகுமொகு மொகென அநேகச மூக ராக மதுபம்வி ழச்சிறு சண்ப கஞ்செ றிந்த தாரிற் பொலிந்தன

10. மயில் வகுப்பு

ராகம் : ராகமாலிகை             தாளம் : சதுச்ர ஏகம் ராகம் : பைரவி ஆதவனும் அம்புலியும் மாசுறவி ழுங்கியுமிழ் ஆலமரு வும்பணியி ரண்டும் அழுதே ஆறுமுகன் ஐந்துமுகன் ஆனைமுகன் எங்கடவு ளாமெனமொ ழிந்தகல வென்று விடுமே ஆர்கலிக டைந்தமுது வானவர்அ ருந்தஅருள் ஆதிபக வன்துயில்அ நந்தன் மணிசேர் ஆயிரம் இருந்தலைக ளாய்விரிப ணங்குருதி யாகமுழு துங்குலைய வந்த றையுமே ராகம் : நடபைரவி

7. சேவகன் வகுப்பு

ராகம் : மாண்ட் அங்கதாளம் (14½) 2 + 1½ 2 + 1½ + 2 + 1½ + 2 +2 இருபிறை எயிறு நிலவெழ உடலம் இருள்படு சொருபம் உடைக்கோ விடவே இறுகிய கயிறு படவினை முடுகி எமபடர் பிடரி பிடித்தே கொடுபோய் அருமறை முறையின் முறை முறை கருதி அதரிடை வெருவ ஒறுத்தால் வகையால் அறிவொடு மதுர மொழியது குழறி அலமரு பொழுதில் அழைத்தால் வருவாய்

5. பெருத்த வசன வகுப்பு

ராகம் : காபி தாளம் : ஆதி அருக்கன் உலவிய சகத்ர யமுமிசை யதிற்கொள் சுவையென அனைத்து நிறைவதும் அவஸ்தை பலவையு மடக்கி யகிலமும் அவிழ்ச்சி பெறஇனி திருக்கு மவுனமும் அசட்டு வெறுவழி வழக்கர் அறுவரும் அரற்று வனபொருள் விகற்ப மொழிவதும் அழுக்கு மலவிருள் முழுக்கின் உழல்வதை யடக்கி யவநெறி கடக்க விடுவதும் ராகம் : சந்திரகௌன்ஸ் எருக்கும் இதழியு முடிக்கும் இறைகுரு எமக்கும் இறையவன் எனத்தி கழுவதும் இரட்டை வினைகொடு திரட்டு மலவுடல் இணக்கம் அறவொரு கணக்கை யருள்வதும் இருக்கு முதலிய சமஸ்த கலைகளும் இதற்கி தெதிரென இணைக்க அரியதும் இறக்க எனதெதிர் நடக்கும் யமபடர் கடக்க விடுவதொர் இயற்கை யருள்வதும் ராகம் : ரஞ்சனி நெருக்கு வனவுப நிடத்தின் இறுதிகள் நிரப்பு கடையினில் இருப்பை யுடையதும் நெருப்பு நிலம்வெளி மருத்து வனமென நிறைத்த நெறிமுறை கரக்கும் உருவமும் நினைப்பு நினைவது நினைப்ப வனும்அறு நிலத்தில் நிலைபெற நிறுத்த வுரியதும் நிலைத்த அடியவர் மலைத்தல் அதுகெட நிவிர்த்தி யுறஅநு பவிக்கு நிதியமும் ராகம் : வசந்தா உருக்கு திருவருள் திளைத்து மகிழ்தர உளத்தொ டுரைசெயல் ஒளித்து விடுவதும் ஒளிக்கும